இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்


திருத்தம் பொன் சரவணன்


தமிழ் மூலச் சொற்கள் - பகுதி 1

“நீர் இன்றி அமையாது உலகு” என்பது ஐயன் வள்ளுவர் வாக்கு. “தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்” என்பது மொழியியல் ஆய்வாளர் வாக்கு.

கட்டுமானப் பணிகளில், பழைய சுவர்கள், கதவுகள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளிலிருக்கும் சிறிய அளவிலான மேடு, பள்ளங்களை மக்குப்பசை (Putty) கொண்டு சரி செய்து சமமானதாக்கி, அதன் பிறகு அதில் தேவையான நிறப்பூச்சுகளைப் பூசி புதிதாக்கிக் கொள்வது போன்று, தமிழ் மொழியில் பயன்பாட்டிலிருக்கும் பல சொற்களை, ஆங்கிலம் நேரடியாகவோ அல்லது இலத்தீன மற்றும் கிரேக்க மொழிச் சொற்களின் வழியாகவோப் பெற்றுக் கொண்டு, அதில் சிறிய அளவில் மாற்றம் செய்து, உலகம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெற்ற புதிய ஆங்கில மொழிச் சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் பயன்பாட்டிலிருக்கும் பல சொற்களின் மூலச் சொல் தமிழ் மொழிச் சொல்தான் என்பதை இங்கு சில உதாரணங்களுடன் விளக்கும் வகையில் இத்தொடர் அமைகிறது.


Demand

Demand என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாகத் தேவை, வேட்கை, விருப்பம் போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக வேண்டு, கேள், அழை போன்ற பொருட்களையும் தருகிறது. தவண்டை என்ற தமிழ்ச் சொல்லுக்கு, வறுமை, பற்றாக்குறை, உடுக்கை போன்ற பொருட்களைத் தமிழ் அகராதி சுட்டுகிறது. பற்றாக்குறையேத் தேவையாக அமைகிறது. அதாவது, இல்லாத ஒன்றை அடைவதே விருப்பம், வேட்கை எனப்படும். அது மட்டுமின்றி, உடுக்கை என்பது ஒலித்தல் சார்ந்த பொருள் என்பதால், ஒலி, அழை என்ற வினைகளுக்கும் அது பொருந்தக் கூடியதே. ஆராய்ந்து பார்க்கும் போது, தவண்டை என்ற தமிழ்ச்சொல்லானது பெயர்ச் சொல்லாக இருந்து, பற்றாக்குறை அதாவது தேவை, வேட்கை ஆகியவற்றையும், வினைச்சொல்லாக இருந்து ஒலி, அழை, விரும்பு, வேண்டு, கேள் ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.

சுருக்கமாக,

தவண்டை = (1). பற்றாக்குறை > வேட்கை, விருப்பம், தேவை, வேண்டு, கேள். (2). உடுக்கை > ஒலி, அழை >>> Demand

எனவே, Demand என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் தவண்டை என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்தலாம்.

எடுத்துக் காட்டு

(1) He demanded a big money = அவர் பெரும் பணத்தைத் தவண்டைத்தான்.

(2) Gold has always a demand = தங்கத்திற்கு எப்போதும் தவண்டை


Want

Want என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாகத் தேவை, விருப்பம், வறுமை, குறைபாடு போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக விரும்பு, தேவைப்படு போன்ற பொருட்களையும் தருகிறது. வேண்டு என்ற தமிழ்ச் சொல்லுக்கு விரும்பு, கேள், தேவைப்படு போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. இல்லாத ஒன்றை, அதாவது வறுமை அல்லது குறைபாட்டினைச் சுட்டுவதே விருப்பம், வேட்கை எனப்படும். ஆராய்ந்து பார்க்கும்போது, வேண்டு என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து விரும்பு, கேள், தேவைப்படு ஆகியவற்றையும் பெயர்ச்சொல்லாக இருந்து தேவை, விருப்பம், வறுமை, குறைபாடு ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.

சுருக்கமாக,

வேண்டு = விரும்பு, கேள், தேவைப்படு > விருப்பம், தேவை, வறுமை, குறைபாடு >>> Want

எனவே, Want என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் வேண்டு என்ற தமிழ் ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.

எடுத்துக் காட்டு

(1) She wanted to eat fruits = அவள் பழங்களை உண்ண வேண்டினாள்.

(2) Wanted tailor = தையலர் வேண்டும்.

Need

Need என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச் சொல்லாகத் தேவை, விருப்பம், தேடல் போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக விரும்பு, தேவைப்படு, தேடு போன்ற பொருட்களையும் தருகிறது. நேடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு விரும்பு, தேடு, தேவைப்படு போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. இல்லாத ஒன்றைத் தேடுவதே விருப்பம், வேட்கை, தேவை எனப்படும். ஆராய்ந்து பார்க்கும் போது, நேடு என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து விரும்பு, தேடு, தேவைப்படு ஆகியவற்றையும் பெயர்ச் சொல்லாக இருந்து தேவை, விருப்பம், தேடல் ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.

சுருக்கமாக,

நேடு = விரும்பு, தேடு, தேவைப்படு > விருப்பம், தேவை, தேடல் >>> Need

எனவே, Need என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் நேடு என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.

எடுத்துக் காட்டு

(1) Everyone needs food = ஒவ்வொருவரும் உணவை நேடுகிறார்.

(2) No need to ask me = என்னைக் கேட்க நேடில்லை.


Require/ Requirement

Requirement என்ற ஆங்கிலச் சொல்லானது தேவை, விருப்பம் போன்ற பொருட்களையும், Require என்ற ஆங்கிலச் சொல்லானது வேண்டு, தேவைப்படு போன்ற பொருட்களையும் குறிக்கும். அருங்குறை என்ற தமிழ்ச் சொல்லுக்கு விருப்பம், தேவை என்ற பொருளை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, அருங்குறை என்ற தமிழ்ச்சொல் ஆனது பெயர்ச்சொல்லாக இருந்து தேவை, விருப்பம் ஆகியவற்றையும், வினைச்சொல்லாக இருந்து வேண்டு, தேவைப்படு ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.

சுருக்கமாக,

அருங்குறை = விருப்பம், தேவை > விரும்பு, வேண்டு, தேவைப்படு >>> Requirement / Require

எனவே, Require / Requirement என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் அருங்குறை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.

எடுத்துக் காட்டு

(1) Monthly requirement = மாத அருங்குறை.

(2) Why do you require money? = ஏன் நீ பணத்தை அருங்குறைக்கிறாய்?


Necessity

Necessity என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாக, கட்டாயத் தேவை என்ற பொருளைக் குறிக்கிறது. நத்தாசை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வலுவான விருப்பம், பேராசை போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. வலுவான விருப்பமே, கட்டாயத் தேவையாக அமைகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, நத்தாசை என்ற தமிழ்ச்சொல் ஆனது பெயர்ச்சொல்லாக இருந்து வலுவான விருப்பம் அதாவது கட்டாயத் தேவையைக் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.

சுருக்கமாக,

நத்தாசை = வலுவான விருப்பம் > கட்டாயத் தேவை >>> Necessity

எனவே, Necessity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் நத்தாசை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.

எடுத்துக் காட்டு

(1) Help them in necessity = அவர்களுக்கு நத்தாசையில் உதவுக.

(2) He questioned the necessity for the change = மாற்றத்திற்கான நத்தாசையை அவன் கேட்டான்.

(இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்)



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p9a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License