இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

22. தங்க மோதிரம்


நிக்காஹ் முடிந்தது.

மணமகன் அய்யூப்கானும் மணமகள் நாடியாவும் மேடையில் ஜோடி சேர்ந்து நின்றிருந்தனர்.

மணமகன் நீலநிற புல்சூட்டில் இருந்தான். கால்களில் சர்ச்சில் அண்ட் கம்பனி ஷு. தலையில் அஜ்மீர் ஷரீப் இஸ்லாமிக் தொழுகைத் தொப்பி. தொப்பியில் ஏராளமான எமப்ராய்டரி வேலைகள். தாடியை ட்ரிம் செய்திருந்தான். கண்களில் சுருமா ஈஷியிருந்தான்.

இளம் சிவப்பு நிறப் பட்டுப்புடவை கட்டியிருந்தாள் மணமகள் நாடியா. தலையில் சாட்டின் துணி மரூன் நிற ஸ்கார்ப் அணிந்திருந்தாள். கழுத்தில் நெக்லஸ், கைகளில் வளையல்கள், இடது மணிக்கட்டில் வாட்ச். மணமக்களுக்குப் பின்னால் மணமகளின் இளையதங்கை ஹுமைரா நின்றிருந்தாள். பரிசுப் பொருட்களையும் மொய் கவர்களையும் வாங்கி வைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாள்.

ஒவ்வொருவராய் வந்து பரிசளித்துக் கைகுலுக்கினர் முசாபஹா கொடுத்தனர். கொடுத்த பின் ஒளிப்படத்திற்கும் விடியோவுக்கும் போஸ் கொடுத்தனர்.

பரிசுப்பொருள் கொடுக்க நீண்ட வரிசையில் நண்பர்களும் உறவினர்களும்.

ஏர்கூலர் மணமக்களின் முதுகுக்கு பின் நின்று குளிர்மை வீசியது.

வரிசையை மீறி ஓர் இளைஞன் தடபுடவென்று மணமக்களிடம் வந்தான்.

“ஹே… தீபக் நல்லசாமி வாடா...”

‘விரும்பின பொண்ணையேக் கட்டிக்கிட்ட… சந்தோஷம்தானடா...”

வெட்கிச் சிரித்தான் அய்யூப்கான்.


“நான் உனக்கு இரணடு பரிசுப்பொருட்கள் கொண்டு வந்திருக்கிறேன்…. என்ன வென்று யூகி”

“கல்யாண மாப்பிள்ளைக்குக் கண்டதை யூகிக்கிற வேலை எல்லாம் தரலாமா? நீயேச் சொல்லுடா…”

சிரித்தான் நல்லசாமி.

“வைரக்கல் பதிச்ச பத்துகிராம் தங்கமோதிரமும் நாற்பதாயிரம் ரூபா பெறுமானமுள்ள பட்டுவேட்டியும் பட்டுச் சட்டையும்…”

“இவ்வளவு காஸ்ட்லியா எதுக்குடா கிப்ட் எல்லாம் வாங்கற?”

“அத விடு… உன் இடது மோதிர விரலை நீட்டு. மோதிரத்தை மேடையிலேயேப் போட்டு விடுறேன்...”

“பட்டுவேட்டி, பட்டுச்சட்டை?”

“நீ ஹனிமூன் போறப்ப அணிஞ்சு பாத்துக்க”

கிப்ட் பேக்கிலிருந்து மோதிரத்தை எடுத்தான் நல்லசாமி. தலைக்கு மேலே உயர்த்திக் காட்டினான். வைரம் டாலடித்தது.

நீட்டிய விரலில் மோதிரத்தை நுழைக்கும் மைக்ரோ நொடியில்…

ஒரு கை நல்லசாமியின் தோளில் கை வைத்தது. “மோதிரத்தை போடாதே தம்பி…”

சுழன்று திரும்பினான் நல்லசாமி.

மருதாணி பூசிய தாடி வைத்த பெரியவர் முறுவலித்தார்.

“என் நண்பனுக்குப் பரிசு கொடுக்றதை நீங்க ஏன் தடுக்கிறீங்க பெரியவரே”

“காரணமிருக்கு. இஸ்லாமிய ஆண்களுக்கு தங்க ஆபரணங்கள் அணிவதும், பட்டு ஆடைகள் உடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளன தம்பி”

“புரியலப் பெரியவரே...”

“மற்றவர்கள் பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கு நாம் தடையாய் நிற்க வேண்டாம். பின்னுக்கு வாருங்கள் விளக்கமாகப் பேசலாம்...”

“வந்திட்டேன் இப்பச் சொலலுங்க...”


“இஸ்லாமிய ஆண்கள் தங்கநகை அணிஞ்சு பார்த்திருக்கியா?”

“மைனர் செயின், பிராஸ்லெட், மோதிரம், தங்கக் கடிகாரம் அணிந்த சில முஸ்லிம் நண்பர்கள் எனக்கு உண்டு. நிறைய இஸ்லாமியத் திருமணங்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளைக்கு ரோலக்ஸ் வாட்ச், மைனர் செயின் மோதிரம் பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறேன்”

“நீ சொல்லும் நபர்கள் வெறும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகள். ஈமான் கொண்டோர் இஸ்லாம் தடை செய்யப்பட்ட விஷயங்களைக் கனவிலும் கூடச் செய்யத் துணிய மாட்டார்கள்”

“நீங்க வேற… நிறைய மாப்பிள்ளைகள் தங்கத்தில அருநா கொடிகள் கேக்கிரான்க...”

“பேராசைக்காரர்கள்”

“சரி... தெரியாமத்தான் கேக்கிறேன். உங்க நபிகள் நாயகம் தங்க ஆபரணங்கள் அணிந்தாரா இல்லையா?”

“இல்லை அவர் வெள்ளியினால் ஆன முத்திரை மோதிரம்தான் அணிந்திருந்தார்”

“தடை ஆண்களுக்கு மட்டும்தானே...”

“ஆமாம்... பெண்கள் தங்கநகை அணிய ஒரு தடையும் இல்லை”

‘ஏனிந்தத் தடை?”

“தங்கம் செல்வத்தின் அடையாளம்… இஸ்லாமிய ஆண்கள் ஆடம்பரத்திலிருந்து விலகி நிற்க இஸ்லாம் கூறுகிறது. ஆடை அணிகலன் அணிவதில் இஸ்லாமிய ஆண்கள், இஸ்லாமியப் பெண்களை நகல் எடுக்கக்கூடாது. ஆண்களைப் பின்பற்றும் பெண்களையும், பெண்களைப் பின்பற்றும் ஆண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்”

“வேறெந்த உலோகத்தாலும் இஸ்லாமிய ஆண்கள் மோதிரம் அணியக் கூடாதா?”

“தங்கம் அல்லாத வெள்ளி, பிளாட்டினம், இரும்பு உலோகங்களில் இஸ்லாமிய ஆண்கள் மோதிரம் அணியலாம்”

“நாலஞ்சு மோதிரம் அணியலாமா?”

“தப்ஸ் அடிக்கும் பக்கீர்கள் இரு கைவிரல்களிலும் ஏழெட்டு வெள்ளிமோதிரங்கள் அணிந்திருப்பர். கழுத்தில் பாசிகளாலான மாலைகள்… இவர்கள் அஜ்மீர் பக்கீர்கள்... ஆனால் எனக்குத் தெரிந்த வரை இஸ்லாமிய ஆண்கள் ஒரே ஒரு வெள்ளி மோதிரம்தான் போடலாம். எடை நான்கு கிராம்களுக்கு மிகக் கூடது”

“வெள்ளி மோதிரங்களில் கல் பதிக்கலாமா?”

“தாராளமாகப் பதிக்கலாம். ரத்தினக்கல், பச்சைக்கல், கறுத்த உயிரகை கனிப்பொருள், பலவண்ண படிகக்கல்கள், பச்சைமணிக்கல், மரகதம், மாணிக்கக்கல் பதிக்கலாம்’

“ஓஹோI”

“இஸ்லாமிய முறையில் நோய் குணப்படுத்தும் முறை ஒன்று உள்ளது, அதனை ‘ருக்பா’ என்பர், குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஓதி நோயைக் குணப்படுத்துதல். இம்முறையில் குணப்படுத்துபவர்களை ருக்யா மருத்துவர்கள் எனக் கூறலாம். இவர்கள் ஏராளமான தங்கமில்லாத வேறு உலோக மோதிரங்களையும் மணிமாலைகளையும் அணிந்திருப்பர்…”

“அப்படி என்றால் இஸ்லாமிய ஆண்கள் தங்கத்தைத் தொட்டுப் பார்க்கக் கூட அனுமதிக்கபட மாட்டார்களா?”

“மறுமையில் சொர்க்கம் புகும் ஆண்களுக்குத் தங்கத்தால் ஆன ஆடை அணிவிக்கப்படும்”

“இம்மையில் இஸ்லாமிய ஆண்கள் பங்கரையாகத் திரிய வேண்டுமா?”

“அல்லாஹ் தன் அடியார்கள் மீது வள்ளண்மையும், அருட்கொடை மிளிர்வதையும் ரசிக்கிறான். தங்க நகை அணிவதுதான் ஆண்மையா? சுத்தமாக, ஆரோக்கியமாகப் புத்தாடை அணிந்து அத்தர் பூசி மிடுக்காய் இஸ்லாமிய ஆண் நகர்வலம் வரலாம்.”

“தங்க நகை கூடாது என்பதில் யாருக்காவது விதிவிலக்கு உண்டா?”

“விலக்கப்பட்ட பொருட்களில் நிவாரணம் கிடையாது என்கிறது இஸ்லாம்”

“பட்டு ஆடைகளும் இஸ்லாமிய ஆண்களுக்கு விலக்கப்பட்டவையா?”

“ஆமாம்… ஆண்மை பகட்டு ஆடையில் அல்ல. பெற்றோரை, மனைவி, மக்களைப் பேணிக் காப்பதில்… இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றுதலில் ஆண்மை பளிரிடுகிறது”

“ஆண்கள் தங்கநகை அணியகூடாது என்பதில் மருத்துவக் காரணங்கள் உண்டா?”’

“உண்டு... ஆண்கள் தங்கநகை அணிந்தால், ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்கிற தகவலும் உண்டு”

“தங்கம் அணியக்கூடாது, பிளாட்டினம் அணியலாம் என்கிறீர்கள் இரண்டும் சமமான விலை மதிப்பு உள்ளவைதானே?”

“விதாண்டாவாதம் எதற்கு? பிளாட்டினம் ஆடம்பரம் என்றால், அதனையும் அணியாமல் தவிர்க்கலாமே? வெள்ளிநகை நான்குகிராம் எடைக்குள் இருக்க வேண்டும் என்பதனை ஒத்துக்கொள்ள முடியாது. எத்தனைக் கிராம் வெள்ளிநகையும் அணியலாம் என்கிற பிரிவினர் எங்களிடம் உண்டு...”

“மகிழ்ச்சி. மார்க்க விஷயத்தை பற்றி ஏராளமான விஷயங்களை கூறி என்னைத் தெளிவுபடுத்துனீர்கள். மோதிரத்தை மணப்பெண்ணுக்கு அளித்து விடலாமா?”

“மோதிரத்தை மாப்பிள்ளையின் விரல் அளவுக்கு வாங்கியிருப்பீர்கள். தவிர, நீங்கள் மாப்பிள்ளையின் தோழர். மணப்பெண்ணுக்கு நீங்கள் பரிசளிப்பது எப்படிச் சரியா இருக்கும்?”

“அதுவும் சரிதான்”

தீபக் நல்லசாமி தனது சகாவை அழைத்துக் கொண்டு பைக்குக்கு பாய்ந்தான். பைக் சீறிப்பாய்ந்தது.


அடுத்த அரைமணி நேரத்தில் திரும்பினான் நல்லசாமி.

“நண்பாI உனக்கு வைரக்கல் பதித்த பிளாட்டினம் மோதிரமும், பனிரெண்டு ஆயத்தஆடை மேற்சட்டைகளும் காற்சட்டைகளும் வாங்கி உள்ளேன்”

சிரித்தான் அய்யூப்கான்.

“உனக்கேன் இவ்வளவு சிரமம்...”

“அல்லாஹ்வின் அருளால் நீயும், சகோதரியும் இரு குழந்தைகள் பெற்று நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்”

கை குலுக்கினான். க்ளிக்I க்ளிக்I ஒளிப்படங்கள் பிரசவித்தன.

வீட்டுக்கு வந்த தீபக் நல்லசாமி தன் கழுத்தில் இருந்த பத்து பவுன் புலிநக மைனர் செயினையும், 24கிராம் நான்கு மோதிரங்களையும், ஒரு தங்க கடிகாரத்தையும் கழற்றி மனைவியிடம் தந்தான். “பீரோல பூட்டி வை.”

“ஏங்க என்னாச்சு?”

“பெண்கள் மாதிரி ஆண்கள் நகை அணிவது ஆண்மைக்கு இழுக்கு என்பது எனக்குமான பாடம்தான்… இனி ஒருபோதும் ஒரு பொட்டு தங்கம் அணியமாட்டேன்” சூளுரைத்தான் நல்லசாமி.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p22.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License