இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

23. முஸ்லிம் பூசாரி


முஸம்மிலும் அபிமன்யுவும் நண்பர்கள். வயது 17. இருவரும் பிளஸ் டூ படிக்கிறார்கள். கணக்கில் அதிக மதிப்பெண் பெறத் தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்று வருகின்றனர்.

இருவரும் பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வழியில் இருந்த தேநீர் விடுதியில் இருவரும் இறங்கி, தேநீர் அருந்தினர். தேநீர் அருந்த ஒரு இமாம் டிவிஎஸ் 50ல் வந்திறங்கினார்.

தலையில் தலைப்பாகை. சுருமா ஈஷிய புருவங்களும் கண்களும். குடைமிளகாய் மூக்கு. மீசை இல்லாத மேல் உதடு. மருதாணி வைத்து சாயம் ஏற்றிய ஒழுங்கற்ற தாடி. வெள்ளை நிற குர்தா வெள்ளை நிற பைஜாமா. குர்தா பையில் தெரியும் தஸ்பீஹ்மணி மாலை.

"அஸ்ஸலாமு அலைக்கும் இமாம்..."

"வ அலைக்கும் ஸலாம்... நீ பவாஸ் பாய் பையன் தானே?"

"ஆமாம் இமாம்!. நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். மேத்ஸ் டியூஷன் போயிட்டு வரேன்!"

"நல்லா படிப்பா… நீ சுயமாய் சிந்திப்பவன். உனக்காக துஆ பண்ணுகிறேன்”

“நன்றி இமாம்”

இமாம் கிளம்பி போனார். அவர் போனதும் அபிமன்யு முஸம்மிலிடம் ஓடி வந்தான். “இவர் முஸ்லிம் பூசாரிதானே?”

சிரித்தான் முஸம்மில். “இரு மதங்களிலும் இறைவனை வழிபடும் விதங்கள் வேறுவேறு. எங்கள் இமாம் ஆறு வருடங்கள் குர்ஆனையும் ஹதீஸையும் படித்து ஆலிம் பட்டம் பெற்றவர். ஆலிம் பட்டம் பெற்ற பின் அவர் ஏதாவது ஒரு பள்ளிவாசலில் இமாமாவார். ஐந்து வேளை தொழுகைகளையும் முன்னின்று கிப்லா நோக்கி நடத்தி கொடுப்பார்… ‘முஸ்லிம் பூசாரி’ என்கிற வார்த்தை பிரயோகமே தப்பு”


“ மன்னித்துக்கொள் முஸம்மில்”

“அறியாமல் கேட்டாய். விளக்கம் சொன்னேன். இப்ப புரிஞ்சிருப்ப…”

“முஸ்லிம் மதத்தில் புழங்கும் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக வார்த்தைகளுக்கான அர்த்தத்தை சொல்வாயா”

“முதலில் முஸ்லிம் மதகுருக்கள் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பார்ப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மத அறிஞர்களை உலமாக்கள் என்பர். உலமாக்கள் இறையியலிலும் இறை தத்துவத்திலும் நிபுணர்கள். உலமா பன்மையினர் குறித்த சொல். ஆலிம் ஒருமையைக் குறிக்கும் சொல். உலமா ப்ளூரல். ஆலிம் சிங்குலர்…”

“ஓஹோ”

“முல்லா நசுருதீன் கதைகளைக் கேட்டிருப்பாய், அதில் ‘முல்லா’ என்ற வார்த்தை இஸ்லாமியப் புனித நூல் திருக்குரானையும் இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் காக்கும் ஆசிரியர் எனப் பொருள்… ‘மௌலவி’ என்கிற பெர்ஷியன் வார்த்தை இஸ்லாமிய ஆசிரியரைக் குறிக்கும். ‘ஷேக்’ என்கிற அரபு வார்த்தை மூத்தவர்களை மரியாதைப்படுத்தும் வார்த்தை. மதரஸா ஆசிரியரை ‘உஸ்தாத்’ என்றும் ‘ஹென்டு’ என்றும் கூட அழைப்பர். பெண் உஸ்தாத்தை ‘உஸ்தாத்பி’ என்பர்…”

“ஆண்பால் ஆலிம் என்றால் பெண்பால் ஆலிமாவா”

“ஆமாம், இஸ்லாமிய மத ஆசிரியர்களைக் கீழ்க்கண்டவாறு அழைப்பர் அபிமன்யு.

முத்தாரிஸ்

முஅதீப்

முராபி

முர்ஷித்

முஆலிம்

முஜ்தாஹித்

முஜாதித்…”

“ஓவ்”


“இமாம் என்பவர் யார் தெரியுமா? தொழுகைத் தலைவர், ஆன்மீக அறிவுரையாளர், இஸ்லாமியச் சட்டத் திட்டங்களின் நிபுணர்… சூபி ஆசிரியர்களை ‘ஷைய்க்’ என்று அழைப்பர். 1993ஆம் ஆண்டு அல்ஜீரியன் உள்நாட்டு போரில் 500 பெண் இமாம்கள் நியமிக்கப்பட்டனர் என்பது ஒரு செய்தி”

“அப்படியா?”

“ஆல் டைம் மிகச்சிறந்த நான்கு இமாம்களின் பெயர்களைக் கூறுகிறேன் கேள். ஒன்று - அபு ஹனிபா. இரண்டு - மாலிக். மூன்று - அல் ஷாபிஇ. நான்கு - இப்னு ஹன்பால். திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களும் கற்றுத்தரும் ஆசிரியர்களும் இஸ்லாமியரில் சிறந்தவர்கள் என்கிறார்கள் நபிகள் நாயகம்”

“மகிழ்ச்சி முஸம்மில்”

“எனக்கு ஒரு நபர் புதிய வார்த்தைகளைக் கற்றுத் தந்தார் என்றால், நான் அவருக்கு ஆயுட்கால பணியாள் என்கிறார் ஹஜ்ரத் அலி… கல்விக்கு அதிக முக்கியத்துவம் என்றென்றும் தருகிறது இஸ்லாம்…”

“இஸ்லாமியர்கள் இடையில் ஓய்ந்திருந்து இப்போது மீண்டும் கல்வியை முழுமூச்சாய் கற்கத் தொடங்கி விட்டார்கள் முஸம்மில்”

“முஸ்லிம்களின் மத விஷயங்களிலும் தனிப்பட்ட விஷயங்களிலும் சட்டப்படி தீர்ப்பு சொல்ல அதிகாரம் பெற்றவர்களை ‘முப்தி’ என்போம். துருக்கி நாட்டின் இமாம்களை ‘ஹோகா’ என்கிறார்கள். ‘அயத்துல்லா’ என்கிற வார்த்தை ஈரானில் இமாம்களை குறிக்கும். பெண் மத அறிஞர்களை உஸ்தாதா, ஷெய்கா, முவலிமா என்றும் அழைக்கிறார்கள். திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை ‘ஹாபிஸ்’ என்பர். இஸ்லாமிய நீதிபதிகளை ‘காஜிஸ்’ என்பர். இஸ்லாமிய ராணுவத் தலைவர்களை ‘சிபா சலார்’ என்றழைப்பர்…”

“சிறப்பான தகவல்”

“இந்து மத ஆசிரியர்களை பற்றிப் பார்ப்போமா அபிமன்யு? இந்து மத அழகிய முன்மாதிரிகளை ‘குரு’ என்பர். மத ஆசிரியர்களை சிக்சாகா, பதக்கா, அத்யபாகா, உபாத்யாயா என்பர். மதகுருமார்களை பண்டிட், பூஜாரி, புரோகித் என்றழைப்பர்…”

“எனக்கேத் தெரியாது முஸம்மில்”

“இப்பொழுது யூதர்களைப் பற்றிப் பார்ப்போமா?”

“சரி”

“யூத மத ஆசிரியனை ‘ராபி’ என்று அழைப்பர். ‘ரவ்’ என்கிற ஹிப்ரு வார்த்தையும் உண்டு. ஹஸ்ஸான், கோகனிம் என்கிற வார்த்தைகளும் மதகுருமார்களை குறிக்கும்”

“ராபி என்கிற வார்த்தையை ஏற்கனவேக் கேள்விப்பட்டிருக்கிறேன்”

“புத்த மதத்தில் மத ஆசிரியனை ‘லாமாஸ்’ என்பர். ‘பிக்கு’ என்கிற வார்த்தையும் உண்டு. பெண் ஆசிரியையை ‘பிக்குனி’ என்பர்”

“அட்டகாசமான தகவல்”

“ஜெயினர்கள் தங்கள் மத ஆசிரியர்களை ‘தீர்த்தங்கரா’ என்பர்”

“தீர்த்தங்கரா.. வாவ்”

“தாவோயிஸத்தில் மத ஆசிரியர்களை ‘லாவோஸி’ என்பர்”

“செம…”


“ஹஜ்ரத் என்கிற வார்த்தையில் மரியாதை, நெருக்கம், கண்ணியம் அடங்கியிருக்கிறது. துருக்கியில் ஹஜ்ரத் என்கிற வார்த்தையை ‘ஹஜ்ரெட்’ என உச்சரிப்பர். பாரசீகத்தில் ‘ஹத்ரத்’ என்கிற உச்சரிப்பும் உண்டு. ஹாபிழ், மௌலானா, ஹாபிஸ் என்கிற வார்த்தைகளும் இஸ்லாமிய மதஅறிஞர்களைக் குறிக்கின்றன”

“கிறிஸ்துவ மதத்தைப் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே முஸம்மில்?”

“கிறிஸ்துவத்தில் மத ஆசிரியர்களை ‘பாஸ்டர்’ என்பர். சுவிசேஷகர் ஆங்கிலத்தில் இவான்ஜலிஸ்ட் என்கிற வார்த்தைகளும் கிறிஸ்துவ மத ஆசிரியர்களைக் குறிக்கும். ரெவரன்ட், பார்சன், பாட்ரே, அபோஸ்டல், காஸ்பெல்லர், குருஸேடர், சர்ச்மேன், பாதர், புல்பிட்டீர், ஸரமோனைஸர், மிஷினர், அபே, மாங்க், அபாட், ஆர்ச் டெக்கான், மினிஸ்டர், ஜோஸர் போன்ற ஆங்கில வார்த்தைகளும் கிறிஸ்துவ மத ஆசிரியர்களைக் குறிக்கும்…”

“நீளமான பட்டியல்”

“என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு விஷயத்தைக் கருத்தில் கொள்கிறேன்”

“என்ன விஷயம்?”

“மதங்கள் ஆயிரம் இருக்கலாம் மத ஆசிரியர்கள் லட்சம் பேர் இருக்கலாம்… அவர்கள் மத விழுமியங்களையும் கோட்பாடுகளையும் நமக்குக் கற்றுத் தரலாம். மனித வாழ்க்கை ஒரு தேர்வு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி வினாத்தாள். விடைகள் பிரத்தியேகமானவை. இன்னொரு நபர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் விடைத்தாளைப் பார்த்து நீ காப்பி அடித்தால் உனக்கு பூஜ்யம் மதிப்பெண்தான். இறைவனை நமக்குள் தேடி அடைவோம்…. யூகங்களும் நம்பிக்கைகளுமே மதங்கள். என் மதம் உசத்தி, உன் மதம் தாழ்த்தி என சண்டை அனாவசியம். நன்மையை நாடினால், நாம் இறைவனின் பக்கம். தீமையை நாடினால் நாம் இறைவனுக்கு எதிர்பக்கம்”

“நீ இப்படிப் பேசுவது உன் குடும்பத்திற்கு, உன் இமாமுக்குத் தெரியுமா?”

“தெரியும். குறிப்பாக, நான் இமாமுடன் பல விஷயங்களை விவாதிப்பேன். இமாம் என் கருத்துக்களை மறுதலிக்க மாட்டார். என்னை ஆழமாகப் பார்த்து முறுவலிப்பார்”

“பெரும் மகிழ்ச்சி”

க்ளைடாஸ்கோப் வர்ணங்களாய் கிளைத்திருத்த இறைவன் புன்னகைத்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p23.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License