இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

24. எடை


மணி நண்பகல் 12.

பரபரத்தேன் “வகிதாI மணியாய்டுச்சு… கிளம்பு முஹம்மது அர்ஹானை போய்க் கூட்டிட்டு வரணும்”

பேரன் முஹம்மது அர்ஹானுக்கு வயது இரண்டே கால். சரியாகப் பேச்சு வரவில்லை. ஆனால் உச்சபட்ச குறும்பு.

மருத்துவர் அறிவுரைப்படி அவனை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு யூரோ கிட் பிளே ஸ்கூலில் சேர்த்தோம். காலையில் மகன் நிலாமகன் கொண்டு போய் விட்டு விடுவான். மதியம் 12.30மணிக்கு நானும் வகிதாவும் போய் அர்ஹானை வீட்டுக்குக் கூட்டி வர வேண்டும்.

ஸ்கூட்டியைக் கிளப்பினேன் பின்னால் வகிதா அமர்ந்தாள்.

மனாஸ் கார்டனிலிருந்து பதினைந்து நிமிஷ தூரம் அர்ஹானின் பிளே ஸ்கூல். பிளே ஸ்கூல் வாசலில் ஏராளமான பெற்றோர்களும் தாத்தாமார்களும் தத்தம் குழந்தைகளைத் தத்தம் பேரன் பேத்திகளைக் கூட்டிச் செல்லக் காத்திருந்தனர்.

குட்டிப்பையை முதுகில் சுமந்தபடி அர்ஹான் வெளிப்பட்டான். அவனது தலையில் பொம்மைகள் வரைந்த ஹெல்மெட்டை மாட்டினாள் வகிதா.

எங்கள் இருவருக்கும் இடையே அர்ஹான் அமர்ந்து கொண்டான்.

“ஸ்கூல்ல என்னடா சொல்லிக் குடுத்தாங்க அர்க்கு குட்டி?”

“உய் உய்… க்யோ… குர்… பபம்…” என்றான் அர்ஹான்.

“ஓஹோ அப்படியா? அதான் சொல்லிக் குடுத்தாங்களா பட்டுக்குட்டி?”

அர்ஹானுக்கு மருமகள் மற்றும் சம்பந்தியம்மா முகச் சாயல். அவன் சிரித்தால் அவனது அழகிய பல்வரிசை பளீரிடும்.

“தங்கக்குட்டி பவளக்குட்டி எது கேட்டாலும் க்ளுக்குன்னு சிரிக்கும்”


வாலாங்குளம் சாலையில் வரும்போது அந்தத் தள்ளுவண்டி பழக்கடையைப் பார்த்தேன். கடந்த மூன்று மாதங்களாக போகும் போது வரும் போதெல்லாம் அந்தக் கடையை நோட்டமிடுவேன், தள்ளுவண்டியின் நான்கு பக்கங்களிலும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட தகரப்பலகை தொங்கும்.

அதில் -

‘உங்கள் வியாபாரத்துக்காக இறைவன் தராசை அமைத்தான். நீங்கள் நிறுவையில் கூட்டிக் குறைத்து வரம்பை மீறாதீர்கள். ஆகவே எடையைக் குறைத்திடாது நியாயமாக நிறுத்திடுங்கள் (55-7 வசனம்)’

‘நீங்கள் அளக்கையில் சரியாக அளந்திடுங்கள். நிறுக்கையில் சரியாக நிறுத்திடுங்கள். இச்செயல் உங்களுக்கு நற்பலனைத்தரும் (17-35 வசனம்)’

‘வாங்கும் போது அதிகமாக அளந்தும் நிறுத்தும், விற்கும் போது குறைவாக நிறுத்தும் அளந்தும் மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கும் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான் (83-1, 3வசனம்)’

‘அளவையில் ஏமாற்றி வாழ்ந்த மத்யன் ஊர்மக்கள் ஷுஐப் நபிகளின் அறிவுரையை புறகணித்தனர். விளைவு ஒட்டுமொத்த மத்யன் மக்களும் கொடிய இடியோசையில் மடிந்தனர்’.

என்று வாசகங்கள் பச்சை நிறத்தில் பெயின்ட் பண்ணப்பட்டிருந்தன.

அந்தத் தள்ளுவண்டியில் சப்போட்டா பழம், ஆப்பிள் பழம், திராட்சைப் பழம், பெரிய இலந்தைப் பழம் குவிந்திருந்தன.

பழவியாபாரத்தைக் கவனித்தபடி நின்றிருந்தார் ஒரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர். தலையில் அழுக்கு தொப்பி சால்ட் அண்ட் பெப்பர் தாடி ஜிப்பா கைலி.

‘இந்த முஸ்லிம் பெரியவர், வியாபாரத்துக்கு இறை வசனத்தை பணயம் வைக்கிறார். இறைவசனத்தை நம்பி நிறைய முஸ்லிம்கள் இந்தப் பெரியவரிடம் பழம் வாங்குவார்கள். முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் இவரின் நேர்மையை நம்பி வியாபாரம் செய்வார்கள். இது ஒரு வியாபரத் தந்திரம். இறங்கி வியாபாரியை ஆழம் பார்ப்போம்’


வண்டியை நிறுத்தி ஸ்டாண்டிட்டேன். பேரனை வகிதா தூக்கிக் கொண்டாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும் பழக்கடைக்காரரே”

“வஅலைக்கும் ஸலாம்”

“உங்க பேரென்ன?”

“ஷா நவாஸ்”

“சொந்த ஊர்?”

“பாலக்காடு. கோயம்புத்தூர் வந்து செட்டிலாகி முப்பது வருஷமாகுது”

“பாய். இந்த திருக்குர்ஆன் வசனங்களை எழுதி வண்டியில் யார் பொருத்தியது?”

“நான்தான்”

“நான் சொல்றேனேன்னு கோவிச்சிக்காதிங்க பாய்… எனக்கு வயசு 64 ஆகுது இதுவரைக்கும் ஒரு நாணயமான தள்ளுவண்டி வியாபாரியை நான் பார்த்ததில்லை”

பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கிட்டார்.

“மாதுளம் பழம் இருக்கா பாய்?”

“இல்லை… அதோ அந்தப் பழக்கடைல மாதுளம்பழம் விக்கிறாங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க, கிலோக்குப் பத்து இருபது குறைச்சுப்பார் கடைக்காரர்”

பக்கத்து கடையிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

“திராட்சைப் பழம் கிலோ என்ன விலை?”

“அம்பது ரூபா, அந்தக் கடைல என்ன விலை சொன்னாங்க?”

“அதே அம்பது ரூபாய் பாய்…“

“ரெண்டு பேரும் விக்றது ஒரே திராட்சைதான். அவர்கிட்டேயேத் திராட்சை வாங்கிக்கங்க..” அனுப்பி விட்டு என்னிடம் திரும்பினார் ஷா நவாஸ்.

“நல்ல வியாபாரிகள் நூறு பேர் இருக்காங்க. அது உங்க கண்களுக்குத் தெரியல.. திருமறை வசனங்களை எழுதிப் போட்டது வியாபார தந்திரமல்ல - தினம் தினம் வியாபாரத்தை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த எனக்கான அறிவூட்டல் அது”

ஷா நாவாஸின் இடதுகைப் பக்கம் ஒரு கூடை இருந்தது. அதில் அழுகிய பழங்களை பொறுக்கி போட்டிருந்தார்.

“அழுகின பழங்களை நல்ல பழங்களுடன் வச்சு விற்க விரும்பல. அதான் அழுகினதைத் தனியே பொறுக்கி எடுத்திட்டேன். கால்நடைகளுக்குப் போடுவேன்...”

“பழங்கள் என்ன விலை?”

“சப்போட்டாப் பழம் கிலோ 35ரூபாய். திராட்சைப் பழம் கிலோ 45ரூபாய். பக்கத்துக் கடை வியாபாரத்தைக் கெடுக்கக் கூடாதுன்றதுக்காக அம்பது ரூபான்னு சொன்னேன். ஆப்பிள் பழம் கிலோ எண்பது ரூபாய். பெரியஇலந்தை பழம் கிலோ முப்பது ரூபாய்”

“எல்லாக் கடைகளையும் விட கிலோவுக்கு அஞ்சு அஞ்சு ரூபாய் குறைச்சு விக்குறீங்க”

“குறைந்த லாபம் போதும்”

“உங்களைப் பத்திச் சொல்லுங்களேன் ஷா நவாஸ்..”

“நான் படிச்சது பத்தாம் கிளாஸ்தான். எனக்குத் திருமணமாகி 26 வருஷமாகுது. எனக்கு மூணு மகன்கள். மூத்தவன் ஆலிமுக்கு படித்து விட்டு இமாமாக இருக்கிறான். இரண்டாமவன் டிகிரி முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். மூன்றாமவன் தமிழ்ல பிஹெச்டி பண்ணிகிட்டு இருக்கான். மூத்தவனுக்கு கல்யாணமாய்ருச்சு. ரெண்டு வயசுல பேத்தி இருக்கா. இருபத்தியாறு வருஷ நேர்மையான சம்பாத்தியத்தில் ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு கட்டியிருக்கேன். பசங்களை படிக்க வச்சிருக்கேன். வியாபாரத்ல தில்லுமுல்லு செய்து பாவத்தைச் சம்பாதிக்க நான் தயாராய் இல்லை”

“உங்களிடம் டிஜிட்டல் தராசு இருக்கா?”

“இல்ல.. சாதா தராசுதான்”

“எங்க உங்க தராசை காட்டுங்க..”

காட்டினார். அரதபழசாக இருந்தது.

“எடைக்கற்களைக் கொடுங்க”

கொடுத்தார். ஒரு கிலோ, இரண்டு கிலோ, ஐந்து கிலோ எடைக்கற்கள்.

“எதிலயும் தொழிலாளர் அலுவலக எடைக்கான முத்திரை இல்லையே பாய்?”

“கற்களின் எடை துல்லியமா இருக்றதை சரி பார்த்துட்டேன்”

ஒரு வயதான யாசகப்பெண் கை நீட்டினார். நல்லதொரு ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார் ஷாநவாஸ்.

“பணக்காரர்கள் மட்டும்தான் ஆப்பிள் சாப்பிட வேண்டுமா, யாசகம் பெறுபவரும் சாப்பிடட்டுமே?”

“பாய்I எனக்கு நாலு பழங்களிலும் ஒவ்வொரு கிலோ கொடுங்க...”

நிறுத்துக் கொடுத்தார்.


வாங்கி சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு “எவ்வளவு பாய்?” என்றேன்.

“நூத்திதொண்ணூறு ஆகுது, நூத்தி எண்பது கொடுங்க...”

எண்ணிக் கொடுத்தேன்.

மீண்டும் பேரனை நடுவில் அமர வைத்து நானும் வகிதாவும் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

அடுத்த 15 நாட்களில் ஷா நவாஸிடம் வாங்கிய பழங்களை வீட்டு டிஜிட்டல் தராசில் எடை பார்த்தேன்.

ஒரு கிலோ எடை போட்டு வாங்கிய பழங்களில் 10நாள் டிஜிட்டல் நிறுவைகள் - 1,020கிகி, 1.023கிகி 1,100கிகி, 1,023கிகி, 1,010கிகி, 1,040கிகி 1.010கிகி, 1.050கிகி. 1.025கிகி, 1.100கிகி

ஒரு ஆடம்பர இஸ்லாமிய டிபாரட்மென்டல் ஸ்டோரில் ஒரு கிலோ எடை போட்டு வாங்கிய பொருட்களின் பத்துநாள் டிஜிட்டல் நிறுவைகள் - 0,900கிகி, 0.950கிகி, 0.850கிகி 0.925கிகி 0.910கிகி 0.940கிகி 0.875கிகி, 0.900கிகி., 0.975கிகி 0.960கிகி.

ஷா நவாஸ் மானசீகமாக வந்து சிரித்தார். “நான் அன்னாடங்காய்ச்சிதான். ஆனால் மார்க்க நெறிகளை பேணி அல்லாஹ்வின் பிரியங்களை டன் கணக்கில் பெற்றிருக்கும் பாக்கியவான் நான்”

ஷாநவாஸிடம் வாங்கிய திராட்சைப் பழத்தில் ஒன்றை வாய்க்குள் இட்டேன்.

சுவனத்துப் பழம் போலத் திதிதித்தித்தது திராட்சை.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p24.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License