இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

45. தஜ்ஜால்


அப்துல் ஸலாம் தேனீர் விடுதி.

ஒரு பக்கம் சுடச்சுட தேனீர் தயாரிப்பும் மறுபக்கம் உளுந்தம் வடை சுடலும் நடந்து கொண்டிருந்தன.

தேனீர் விடுதிக்கு எதிரே இருமர பெஞ்ச்கள். பெஞ்ச்சுகளில் மக்கள் அமர்ந்து தினத்தந்தி, தினமலர் வாசித்தபடி தேனீர் உறிஞ்சினர்.

ஓட்டி வந்த ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார் ஹுஸ்னி ஜாபிர் காதரி.

காதரிக்கு வயது 35. சுருமா ஈஷிய கண்கள். தொழுகை அடையாளம் பூத்த நெற்றி. நடுவகிடு எடுக்கப்பட்ட தலைக்கேசம். மீசை இல்லாத கச்சிதத் தாடி. வெள்ளை நிற ஜிப்பா. அதே நிற குர்தா. கால்களில் காதிம் செருப்பு. புன்னகை முகம். கண்களுடன் சேர்ந்து யோசிக்கும் ரோமானிய மூக்கு. ரோஜா அடித்த உதடுகள். கைகால் நகங்களை செதுக்கலாய் கத்தரித்து இருந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் ஸலாம்!”

“வஅலைக்கும் ஸலாம் இமாம். இன்னைக்கி என்ன லேட்?”

“பள்ளியில் சிறுவேலை பார்த்துவிட்டு வந்தேன்!”

“உக்காருங்க… ரெண்டு உளுந்தம் வடை சாப்பிட்டு டீயக் குடிங்க!”

‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி உளுந்த வடையைக் கடித்தார் காதரி.

“கேள்விபட்டீங்களா இமாம்?”

“என்ன?”


“மக்காமதீனா ஜெத்தால வரலாறு காணாத பனியும் மழையும். காபா அருகில் தேங்கி நிற்கும் மழைநீரில் நிறைய ஹாஜிகள் சறுக்கி விளையாடியதைப் பார்த்தீர்களா? சிலர் காபா மழைத்தரையை முத்தமிட்டார்கள்!”

“ஆமாம், பார்த்தேன்!”

“கடந்த இரண்டு மூணு வாரத்ல ரெண்டு மூணு விமான விபத்துகள்!”

“ஆமா!”

“லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ 16 பேர் மரணம் ஒருலட்சம் பேர் தங்கள் வீடுகள் இழந்துள்ளனர்!”

“ஆமாம்!”

“இரண்டாயிரத்தி இருபத்தி மூணு அக்டோபரிலிருந்து இதுவரை இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 50000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் காயப்பட்டுள்ளனர்!”

“இஸ்ரேல் இராணுவத்தினர் மனித மிருகங்கள். உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்!”

“இதெல்லாம் பாக்கும்போது எனக்கு ஒண்ணு தோணுது இமாம்!”

“என்ன தோணுது!”

“உலகம் அழியப்போவதற்கான அறிகுறிகள் இவைதானோ?”

“நீ அளவுக்கதிமா யோசிக்ற ஸலாம்!”


“எனக்குத் தோணுறதைச் சொல்றேன்… தகுந்த விளக்கத்தை நீங்கதான் கொடுக்கனும் இமாம்!”

“சற்று அவதானித்துத்தான் உன் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்!”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு கனத்த காலடி அரவம் கேட்டது. அரவம் கேட்ட திசை திரும்பினார் காதரி.

ஒரு மனிதன் காதரி நோக்கி நடந்து வந்தான்.

அவனைப் பார்க்கும் மைக்ரோ நொடியில் வந்தவனுக்கு பின்னணியில் நெருப்பும் நீரும் சுழன்றடித்து மறைந்தன.

வந்தவன் சிவப்பு இரால் போல சிவந்திருந்தான்.

பச்சை நிறத் திராட்சைக் கண்கள். நெற்றி புடைத்திருந்தது. சுருள்தலைமுடி கேசம். கனத்த சரீரம் செம்பவள நிறமுகம். தாடி நுனியை ரப்பர் பான்ட்கள் சுற்றி ஐந்து குஞ்சங்கள் அமைத்திருந்தான்.

ஜீன்ஸும் ‘இதோ நெருங்கி விட்டேன்’ வாசகங்கள் கொண்ட பனியனும் அணிந்திருந்தான். கால்களில் புழுதி படிந்த ஷு.

வந்தவன் காதரியின் முகத்துக்கருகே முகம் வைத்து முறுவலித்தான்.

“யார் நீங்க?” என்றார் காதரி.

எதிராளியின் மீது அரளிப்பூ வாசைனயடித்தது.

“நான் கிழக்குதிசையிலிருந்து வருகிறேன்…”

“கிழக்குத்திசை என்றால்?”

“ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இவற்றில் எதாவது ஒரு நாட்டிலிருந்து!”

“நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள்!”

“எனக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியும்!”

“ஓ!”

“உலக நாடுகள் அனைத்தும் சுற்றி வந்திருக்கிறேன் மெக்கா, மதீனா தவிர!”

“ஏன் அங்கு போகவில்லை?”

“தோணவில்லை, போகவில்லை!”

“நீங்கள் முஸ்லிம்தானே?”

ஆமாம் என்றும், இல்லை என்னும் மையமாக தலையாட்டினான் வந்தவன்.

“உங்க பெயர்?”

“பெஹ்ஸாத் பாக்தாதி!”

“உங்கள் தொழில் என்ன?”

“இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன், நோயாளிகளை குணப்படுத்துவேன், மொத்தத்தில் பல்வேறு விதமான அற்புதங்களை நிகழ்த்துவேன்!”

“விளையாடாதீர்கள். உங்கள் உண்மையான தொழில் என்ன?”

“நான் ஒரு நாடோடி கிடைத்த வேலையைச் செய்வேன். இன்னும் 40நாட்கள் தான் இங்கிருப்பேன்!”

“அதன்பின்?”

“இன்னொரு நகரத்துக்குப் போய் விடுவேன்!”

“தேனீர் குடிக்கிறீர்களா?”

“கொடுங்கள்!”

உளுந்தம் வடையும் தேனீரும் வந்தன. மறைவாக உளுந்த வடை சாப்பிட்டான் வந்தவன்

“நன்றி.. உங்கள் பெயர் என்ன?”

“ஹுஸ்னி ஜாபிர் காதரி!”

“உங்கள் பணி என்ன?”

“சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாக இருக்கிறேன்!”

“வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் பயான் செய்வீர்கள் இல்லையா?”

“ஆமாம்!”

“இறுதிநாள் அருகாமையில் தஜ்ஜால் என்பவன் வருவான் என பயான் பண்ணி இருக்கிறீர்களா?”

“ஆமாம். தஜ்ஜாலுக்கு அல் மஸீஹ் என்கிற பெயரும் உண்டு. அவனை கிபி 661ல் தமீம் அல் தாரி என்கிற லக்கம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர் தஜ்ஜாலை சந்தித்து இருக்கிறார். அவருக்கு ‘துணிச்சலான தேசாந்தரி’ என்கிற பட்டப் பெயரும் உண்டு. தஜ்ஜாலை நாங்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்களும் நம்புகின்றனர்!”

“ஓ அப்படியா?”

“இப்போதைய திறன்பேசிகள்தான் தஜ்ஜால் என சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். தஜ்ஜாலுக்கு ஒற்றைக்கண்தான் இருக்கும். அவனது நெற்றியில் கே – எப்- ஆர் என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் என்பார்கள்!”

“இஹ்!”

“நபிகள் நாயகம் தஜ்ஜால் பற்றி பலமுறை எச்சரித்திருக்கிறார். அவன் நரகத்தையும் சொர்க்கத்தையும் கொண்டு வருவான். அவன் சொல்லும் சொர்க்கம் நமக்கு உண்மையில் நரகம். அவன் சொல்லும் நரகம் நமக்கு உண்மையில் சொர்க்கம்!”

“இதெல்லாம் நம்புகிறீர்களா என்ன?”


“இஸ்லாமின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நபிகள் நாயகம் எங்கள் ஆதர்சநாயகன்!”

“எனக்கு எரிச்சல் வருகிறது!”

“ஏன்?”

“நபிகள் பெயரைக் கேட்டாலே எனக்கொரு ஒவ்வாமை!”

‘இதற்கு மேல் நான் உங்களுடன் பேசவிரும்பவில்லை நீங்கள் போகலாம்!”

வந்தவன் சிரித்தான்.

“நீங்கள் போகச் சொன்னால், நான் போவதற்கு நான் என்ன உங்கள் அடிமையா?”

“வாக்கு வாதம் தவிர்ப்போம்!”

“மிகமிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டேன். எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. (நிறுத்தி கர்ணகடூர குரலில்) என் இன்னொரு பெயர் தஜ்ஜால்!”

தஜ்ஜால் என்கிற பெயரைக் கேட்டதும் ஹுஸ்னி ஜாபிர் காதரியின் முகம் இறுகியது.

“எனக்கும் இன்னொரு பெயர் இருக்கிறது (மிடுக்காக) முஹம்மது ஈஸா!”

ஈஸாவா? தஜ்ஜாலின் முகம் வெளிறியது.

முகத்தில் ஒற்றைக்கண்ணும் நெற்றியில் இறைமறுப்பாளன் வாசகமும் பூத்தன.

ஈஸா தஜ்ஜாலின் தலையைத் தொட, தஜ்ஜால் மரண ஓலத்துடன் காற்றில் கரைந்து மறைந்து போனான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p45.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License