இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

44. சுரண்டல்கள்


முகையதீன் ஆண்டவர் பள்ளி (சுன்னத்துல் ஜமாஅத்) முத்தல்லி அறை.

இருக்கையில் அமர்ந்திருந்தார் முத்தவல்லி நயினார் முகமது.

அவர் எதிரே -

புகார் மனு கொடுத்த நூருல் ஆலமீனும் குற்றம் சாட்டப்பட்ட ஆபிதீன் பாயும் நின்றிருந்தனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி!”

“வஅலைக்கும் ஸலாம்… நீங்க தானே புகார் கொடுத்தது?”

“ஆமாம்!”

“என்ன வேலை செய்றீங்க?”

“மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 35 வருடம் வேலை செய்துவிட்டு 2018 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். நான் ஒரு எழுத்தாளர். பூங்கொத்தில் நிறைய எழுதுவேன். என் கல்லூரி விரிவுரையாளர் மகனும் பிசியோதெரபிஸ்ட் மருமகளும் சேலத்தில் செட்டில் ஆனார்கள். நாங்கள் முதலில் பண்பு நகரில் வாடகைவீட்டில் குடியிருந்தோம்.

அதன்பின் இதோ நிற்கிறாரே ஆபிதீன்பாய்… இவர் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட். இவர் பாத்திமா நகரில் மனைகள் பிரித்து விற்று வருகிறார். நாங்கள் இவரிடம் இரண்டு சென்ட் மனை வாங்கினோம். மனை விற்கும் போது மனை டிடிசிபி அப்ரூவல் பெற்றது எனக்கூறி சில ஆவணங்களை காட்டினார். பில்டிங் அப்ரூவல் வாங்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் பாத்திமா நகருக்கு டிடிசிபி அப்ரூவல் கிடையாது என ஆதாரப்பூர்வமாய் கூறிவிட்டனர். டிடிசிபி அப்ரூவல் இல்லாததால் வங்கிக் கடன் வட்டி 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக எகிறியது. பில்டிங் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டியதால் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சொத்து வரி கட்டினோம்…”

“உண்மையா ஆபிதீன் பாய்?”

“யார் சொன்னது? இதோ டிடிசிபி அப்ரூவல்!”

வாங்கிப் பார்த்தார் முத்தவல்லி.

நூருல் ஆலமீன் குறுக்கிட்டான். ”முந்தைய ஆட்சியில் இவர் ஆட்களைப் பிடித்து டிடிசிபி அப்ரூவலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்துள்ளார். ஆட்சி மாறியதும் அப்ரூவல் கிடப்பில் போனது!”

“இவர் சொல்வது உண்மையா?”

உதடுகளைக் கடித்துக் கொண்டார் ஆபிதீன் பாய்.


“ஆபிதீன் பாய் யாரையும் மதிக்க மாட்டார். மாநகராட்சி அதிகாரிகளோ காவல்துறை அதிகாரிகளோ, விசாரணைக்கு கூப்பிட்டால் போக மாட்டார். பள்ளிவாசல் முத்தவல்லி பத்து தரம் அழைத்தும் பதினோராவது தடவை தான் வந்துள்ளார்!”

ஆபிதீன் பாய் மிரட்சியாய் கண்களை ஓட்டினார்.

“நகரைச் சுற்றி இருக்கும் அனைவரிடனும் சண்டை நகரின் பின்புறத்தை மூடிவிட்டார். நகரின் முன்புறத்தை அலங்கார வளைவாய் கட்டி தன்னகப்படுத்தி உள்ளார். திறந்தவெளி சாக்கடை கால்வாயை பாதியில் மறித்து வைத்துள்ளார். நகரில் 150 மனைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீத்த்தை விற்று விட்டாலும் நகரின் ஜமீன்தாரர்களாக பண்ணையாளர்களாக இவரும் இவரது உறவினர்களும் சுற்றி வருகின்றனர்!”

“இவ்வளவு இழிவாகவா நடந்துப்பீங்க ஆபிதீன் பாய்?”

“இவர் எங்களை ஏமாற்றியதே நம் மத நம்பிக்கையை வைத்துத்தான். மனைகளை விற்கும் போது, எங்களிடம் இவர் அடிக்கடி கூறிய வாக்கியம். ‘நானும் முஸ்லிம் நீங்களும் முஸ்லிம்கள் ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் ஏமாற்றுவானா?’ என்பதுதான். மதநம்பிக்கையை காசாக்கிய நம்பிக்கை துரோகி இவர்!”

“அதிகம் பேசாதே. நீ நமக்கு எதிரி பத்திரிக்கைல எழுதுபவன் தானே? நீ ஒரு உளவாளி. நம் முஸ்லிம் மக்களின் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்தத் துடிக்கிறாய்!”

“இது எதிரி பத்திரிக்கை என ஒதுக்கினால் உங்களுக்கு எந்தப் பத்திரிக்கை மிஞ்சும்? குளத்தோடு கோவிச்சுக்கிட்டு டேஷ் கழுவாம போன கதை தான் ஆகும்?”


“டிடிசிபி அப்ரூவலுக்கு இவர் என்னென்ன செய்திருக்க வேண்டும் நூருல் ஆலமீன்?”

“தார் சாலை போட்டிருக்க வேண்டும். தெருவிளக்கு போட்டிருக்க வேண்டும். இரு பூங்காக்கள் அமைத்திருக்க வேண்டும். நகரில் திறந்தவெளிச் சாக்கடையை மாநகராட்சியின் பிரதான பாதாள சாக்கடையுடன் இணைக்க வழி செய்திருக்கவேண்டும். இன்னும் பல வசதிகளை நகருக்கு இவர் செய்திருக்க வேண்டும்.!”

“இவைகளை செய்வதாக இவர் ஒத்துக்கொண்டால் புகார் மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு சமாதானமாக போய் விடுகிறீர்களா?”

“இவர் முதலில் இறங்கி வரட்டும்!”

“முத்தவல்லி இதுவரை அந்த பாத்திமா நகரில் 125 பேர் மனை வாங்கியிருக்கிறார்கள். இவரது புகார் மனுவில் எத்தனை பெயர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் இவருடன் வந்து புகாரை நேரடியாக ஆமோதித்து இருக்கிறார்கள்?”

“பாத்திமா நகரில் மனை வாங்கியோரில் பிரதானமானவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டவில்லை கைப்பணத்தை கட்டுகிறார்கள். அதனால் 4சதவீத கூடுதல் வட்டி அவர்களை பாதிக்கவில்லை. எங்கள் நகரைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. எந்த நகருக்கும் டிடிசிபி அப்ரூவல் இல்லை. அதனால் பாத்திமா நகருக்கு அப்ரூவல் இல்லாதது பற்றி பாத்திமா நகரில் மனை வாங்கியோர் கவலைப்படவில்லை. அவர்களின் அறியாமையை காசாக்குகிறார் ஆபிதீன் பாய்!”

“முத்தவல்லி! இந்த நூருல் ஆலமீன் இந்தப் பள்ளிவாசலுக்கு மூன்று வருடங்களாகத் தொழ வருகிறார். நான் 30 வருடங்களாக தொழ வருகிறேன். உங்களை போல பத்துக்கும் மேற்பட்ட முத்தவல்லிகளை பார்த்து விட்டேன். இவர் மாதம் நூறு ரூபாய் சந்தா கட்டுகிறார். நான் மாதம் 500 ரூபாய் கட்டுகிறேன். பள்ளி விரிவாக்கத்துக்கு 50 ஆயிரம் ஹதியா கொடுத்துள்ளேன். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்ற கதையா இருக்குது இந்தாளு கதை. நேற்று வந்த நாடோடி உங்களுக்கு முக்கியமா? இரண்டு தலைமுறையா தொழ வர்ற நாங்கள் முக்கியமா?”

“ஆபிதீன் பாய்… உரையாடலை மானிபுலேட் பண்ணாதீங்க….”

“முத்தவல்லி நீங்க என்ன நீதிமன்றமா அல்லது காவல் நிலையமா என்னை விசாரிக்க? விசாரணைக்கு நான் ஒத்து வரலைன்னா என்னை ஊர் விலக்கம் செய்வீங்களோ?”

எகத்தாளம் நையாண்டி கொப்பளித்தது.

“இறைவனின் மீதும் பள்ளித் தலைமை மீதும் தார்மீக பயம் இருக்க வேண்டும். இந்த எள்ளி நகையாடும் வேலை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்!”

“எனக்கு ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் நெருங்கிய சொந்தக்காரர். அவர் வக்பு போர்டு வரைக்கும் செல்வாக்கானவர். போன் போட்டு தருகிறேன். பேசுகிறீர்களா?”

“நான் ஏன் பேச வேண்டும்?”

“உங்க முதுகை முதலில் பாருங்கள் முத்தவல்லி!”

“என் முதுகையும் என்னிரு கைகளையும் பார்த்துக் கொண்டேதான் முத்தவல்லி பணி செய்கிறேன்!”

“எப்படிப் பேசினாலும் படிஞ்சு பேச மாட்டேங்தீங்க முத்தவல்லி. நூருல் ஆலமீனை கொஞ்ச நேரம் தனியா நிக்க சொல்லுங்க. நீங்களும் நானும் கொஞ்சம் பேசனும்!”

“நான் உங்களோட தனியா பேச விரும்பல…”

முத்தவல்லி நூருல் ஆலமீனிடம் திரும்பினார். “பாய்! பாத்திமா நகரில் மொத்தம் எத்தனை பேர் வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டி இருக்காங்க, வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க?”

“இரண்டு வகையிலும் சேர்த்து 61பேர் முத்தவல்லி!”

“வட்டி வித்தியாசத்தால் வங்கிக் கடன் வாங்கிய ஒவ்வொருவரும் அடையும் நஷ்டம் எவ்வளவு?”

“தோராயமாக நாலு லட்சம்!”

“ஆபிதீன் பாய்! நான் சொல்றதை பொறுமையாக் கவனியுங்க!”

“என்ன?”

“பாதிக்கப்பட்ட 61 பேருக்கும் தலா 2 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்திருங்க!”

“அட உங்கப்புரானே… எவன் வீட்டு காசை எவன் தரச் சொல்றது?”

“மரியாதையா பேசுங்க ஆபிதீன் பாய்!”

“அபராதம் இரண்டு லட்சம். மொத்தம் ஒரு கோடியே இருபத்திரெண்டு லட்சம்”


“இன்னும் மூன்று மாசம் டைம் தரேன். அதுக்குள்ள நீங்க தார்ரோடு, தெருவிளக்கு, பூங்கா, திறந்த வெளி சாக்கடை இணைப்பு, வாசல்கள் திறப்பு செய்திடல் வேண்டும்!”

“இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும் தெரியுமா?”

“நீங்கள் இந்த இடத்தை பவர் ஆப் அட்டர்னி வாங்கும்போது ஒரு சென்ட் இடம் ஒரு லட்சம்னு மனை உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் பண்ணுனீர்கள். இப்ப சென்ட் 16 லட்சம் ரூபாய்க்கு விக்றீங்க. 16 மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கிறது. மொத்தம் 64 கோடி ரூபாய். நீங்கள் இடத்துக்காரர்களுக்கு கொடுப்பது நாலு கோடி. உங்களுக்கு 8 கூடுதலாய் கிடைப்பது 60 கோடி. 60 கோடியில் தோராயமாக ஒன்றரை கோடி செலவு பண்ண வலிக்கிறதா?” நூருல் ஆலமீன் கூவினான்.

“தலை இருக்க வால் ஆடாதே!”

“நான் நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள் முத்தவல்லி?”

“நம்ம ஜமாஅத் பள்ளிவாசல் போர்டில் உங்க கயமைத்தனங்கள் பட்டியலிடப்படும்!”

ஆபிதீன் பாய் ஆங்காரமாய் தரையை உதைத்தபடி வெளியேறினார்.

முத்தவல்லி சொன்னதை தொழில் பங்குதாரரிடம் ஒப்பித்தார் ஆபிதீன் பாய்.

பங்குதாரர் உன்மத்தமானார். “மதத்தின் பெயரால் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவோம். போர்டில் கை வலிக்க அவன் எழுதி விட்டுப் போகட்டும். நாளையிலிருந்து நாம் ஜாக் பள்ளிக்கு தொழப் போவோம். புதுப் பள்ளிக்கு ஆயிரம் ரூபாய் சந்தா கொடுப்போம்!”

மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால் சுரண்டல்கள் உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரை தொடரும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p44.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License