இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

43. நன்மையின் பக்கம்


காலை 7 மணி. இரும்புக் கேட்டின் முன் கொக்கியில் தொங்கவிடப்பட்டுள்ள துணிப்பையில் மூன்று பால் பாக்கட்களை போட்டு விட்டுப் போனார் பால்காரர்.

பேப்பர்காரர் தினமலரை வாரமலர் இணைப்புடன் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போனார்.

போர்டிகோவில் பேரன் முஹம்மது அர்ஹானின் இரண்டுக்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

ராபிடோவிலிருந்து இறங்கினார் சம்பந்தி ரபீக் முஹம்மது. வயது 50. சிறிய மெலிந்த உருவம். அடர்ந்தி குறைந்த தாடி. பவர் கிளாஸ்.

முதுகுப்பை மட்டும் கொண்டு வந்திருந்தார்.

அவர் எனக்கு மகன் வழி சம்பந்தி. என் மகன் நிலாமகனுக்கும் அவரது மகள் பஹிமா ஆப்ரினுக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. அவர் நெடுஞ்சாலைத்துறையில் உயர் பொறியியலாளராக பணிபுரிகிறார். அவரின் மனைவி என் சகோதரி பேபிராணி கரூர் பள்ளப்பட்டி இஸ்லாமிய பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தலைமையாசிரியையாக பணிபுரிகிறார். சம்பந்தி ரபீக் முஹம்மதின் சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருமங்கலம். பள்ளப்பட்டியில் சொந்த வீடு கட்டி வசிக்கிறார்கள். பணி மாற்றம் காரணமாக ரபீக் முஹம்மது சென்னையில் பணிபுரிகிறார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!” என்றேன் வாய் நிறைய.

“வஅலைக்கும் ஸலாம்! முஹம்மது அர்ஹான் எங்கே?”


பேச்சு சப்தம் கேட்டு அர்ஹான் உள்வாசலுக்கு வந்தான். தாத்தாவைப் பார்த்துவிட்டு, பாசமாய் மிழற்றினான். அத்துடன் தாவி அவரது நெஞ்சில் படர்ந்தான்.

அம்மா வழித் தாத்தாவுக்கும் அத்தா வழித் தாத்தாவுக்கும் இடையே பாசப் போட்டி வைத்தால் ரபீக் முஹம்மதுதான் ஜெயிப்பார். பேரனைக் கொஞ்சுவார்.

பேரனுடன் மொசைக் தரையில் உருள்வார். ஸ்கூட்டி பெப்பில் அவனை முன்னிறுத்தி வெளியில் கூட்டிப் போவார். மொத்தத்தில் அவர் பேரனின் முன் ஐஸ்கிரீம் பொம்மையாய் உருகி ஓடுவார். தாத்தாக்களுக்குள் பொறாமை எப்படி வரும்? குற்றாலம் நீர்வீழ்ச்சியில் 10 நிமிடம் நின்று விட்டு, அடுத்தவர் குளிக்க வழி விடுவோம் இல்லையா? அப்படித்தான் நானும். தினமும் 24 மணி நேரமும் நான் அர்ஹானுடன் இருக்கிறேன். வாரத்துக்கு ஒரு முறையோ மாதத்துக்கு இருமுறையோ வரும் அம்மாவழி தாத்தா பேரனின் பாசமழையில் நனையட்டுமே?

சம்பந்திக்கு சுடச்சுட தேநீர் தயாரித்து வழங்கினாள் வகிதா.

தந்தையைக் கண்டதும் என் மருமகளின் முகம் நிலாவியது.

வாங்கி வந்த பலகாரங்களை மகளிடம் நீட்டினார் ரபீக் முஹம்மது.

“நல்லாருக்கியாம்மா?”

“நல்லாயிருக்கிகேன்த்தா!”

அவரது பையிலிருந்து இஹ்ராம் பெல்ட்டை எடுத்தார். “மச்சான்! இந்தாங்க நீங்க கேட்ட 44 இஞ்ச் சைஸ் இஹ்ராம் பெல்ட் மண்ணடில வாங்கினேன்… போட்டுப் பாருங்க!”


சட்டைக்கு மேலேயேப் போட்டுப் பார்த்தேன் சரியாக இருந்தது.

உம்ரா வழிகாட்டி இரு பிரதிகள், ஒரு லுங்கி, இரு தஸ்பீஹ்மணி மாலை, கறுப்பு பர்தா, ஹிஜாப், இஹ்ராம் மேற்துண்டு காற்துண்டு அடங்கிய பை நீட்டினார்.

“நன்றி மச்சான்!”

“ஏர்போர்ட்டுக்கு உங்களை வழியனுப்ப வந்து விடுவேன்!”

“மகிழ்ச்சி!”

உம்ரா நிறைவேற்றும் சடங்குகளை விவரித்தார்.

“நீங்கள் மெக்காவுக்கு அருகில் தானே வேலை பார்த்தீர்கள்?”

“ஜெத்தாவில் ஆறு வருடங்கள் வேலை பார்த்தேன்!”

“எத்தனை உம்ரா நிறைவேற்றி உள்ளீர்கள்?”

“பத்துக்கும் மேற்பட்ட உம்ராக்கள்!”

மகனின் திருமணத்துக்கு முன்னமே ரபீக் முஹம்மது எனக்கு தந்தை வழி உறவினர்தான். அம்மாவைப் போல மனைவி வேண்டும் என தேடிய என் மகனுக்கு மனைவியாக ரபீக் முஹம்மதின் மூத்த மகள் கிடைத்தாள்.

ரபீக்முகமது - பேபிராணி தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள். மூத்த மகள் பஹிமா ஆப்ரினை பல் மருத்துவம் படிக்க வைத்தனர். இரண்டாவது மகள் பாத்திமா சப்ரினை பொது மருத்துவம் படிக்க வைத்து வருகின்றனர். கணவன் - மனைவி இருவருமே விழித்திருக்கும் நேரமெல்லாம் மகள்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றியேச் சிந்திப்பர்.

ரபீக் முஹம்மது ஒரு வாரம் மூத்த மகளைப் பார்க்கப் போவார். ஒரு வாரம் மேல்மருத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் படிக்கும் இளைய மகளைப் பள்ளப்பட்டிக்குக் கூட்டிச் செல்வார்.

ரயில்வே ஷண்டிங் இன்ஜின் போல பயணம் பயணம் மேலும் பயணம். மாதத்தில் 2000 கிலோ மீட்டர் மகள்களுக்காகப் பயணம்.

ரயில் முன்பதிவு கிடைத்தால் ரயிலில் வருவார். முன்பதிவு கிடைக்கா விட்டால், பேருந்தில் வருவார். கோவைக்கு வந்தால் சோபாவில் படுத்துக் கொள்வார். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்.

“சென்னையில் உங்கள் தினசரி நடவடிக்கைகள் என்னென்ன?”

“அதிகாலையில் எழுந்து அதிகாலைத் தொழுகை அதன் பின் வாக்கிங். ஒரு வாடிக்கைகடையில் நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை. மதிய உணவு சமைத்து எடுத்துக் கொண்டு பணிக்குப் போதல். மாலை மஹரிப் தொழுகை. அதன் இஷா. இரவு 8:30 மணிக்கு டிபன். இரவு ஒன்பதரை மணிக்குத் தூக்கம்!” என்பார்.

“உங்களையும் சகோதரியையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மகள்களை நீங்கள் பார்த்துக் கொள்ளும் விதம் அபாரம். என் இஸ்லாமிய நீதிக்கதைகளில் என்ன கனவு கண்டேனோ, அதனை உண்மையாக்கும் விதத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். மகள்களுக்கு மார்க்கக் கல்வியும் பொதுக்கல்வியும் செவ்வனேப் புகட்டுகிறீர்கள். உங்கள் இரு மகள்களுக்கு இடையே போட்டி இல்லை. பொறாமை இல்லை!”


“அவர்களின் ஒற்றுமை கம்பம் யானைக்கார வீட்டு மரபணுவிலிருந்து வந்தது மச்சான்”

“என்னைக்காவது நமக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?”

“குழந்தைகளில் ஆண் - பெண் பாகுபாடு எதற்கு? பஹிமாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் தலையில் தூக்கி வைத்துத்தான் கொண்டாடுவேன்!”

“உங்களின் அபூர்வ குணம் நம் மக்களில் மிக மிகக்குறைவு!”

“அப்படிச் சொல்ல முடியாது. கடந்த 15 ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான கல்வி விழிப்புணர்ச்சி வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு மார்க்கக் கல்வி, பொதுக்கல்வி மற்றும் அனுபவக் கல்வி மூன்றுமேத் தேவை. குழந்தைகள் வளர்ப்பில் நாம் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இறைவனின் கருணைப்பார்வை மிக மிக முக்கியம்…”

“நான் உங்களுக்கு ஒரு இனிமையான தகவல் கூற விரும்புகிறேன்!”

“சொல்லுங்கள்!”

“நான் ஒரு ஹதீஸ் படித்தேன்!”

“என்ன ஹதீஸ்?”

“இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களையும் சைகை செய்தார்கள் என ஹதீஸ் கூறுகிறது. ஹதீஸ் அறிவிப்பவர்: அனஸ் இப்னுமாலிக் (ரலி) நூல் திர்மிதீ 1837…”

ரபீக் முஹம்மது மெலிதாக சிரித்தார். அவரது கண்கள் மின்னின.

“பாதி வழிதான் பயணித்துள்ளோம். இலக்குக்கு இன்னும் நீண்ட தூரம்… மகள்கள் வளர்ப்பில் என்றுமே சொர்க்கம் நோக்கமாக எங்களுக்கு இருந்ததில்லை. மகள்களின் மீதுள்ள பாசம் தான் அவர்கள் எங்கள் மீது காட்டும் பாசம்தான் எங்களை வழிநடத்துகிறது. ஆசிரியர் மார்க்கு போட்டு விட்டால் போதுமா ஹெட் மாஸ்டர் மார்க் போட வேண்டுமே…”

“நன்கு பேசுகிறீர்கள் மச்சான்!”


“எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இறந்து போன தங்கையின் இரு மகள்களைத் தத்தெடுத்து தன்னிரு இரு மகள்களுடன் சேர்த்து வளர்த்து ஆளாக்கி மணம் செய்து வைத்தது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆறு மகள்கள். ஆறு மகள்களையும் படிக்க வைத்து ஆளாக்கி மணம் செய்துவித்து மகள்களின் குடும்பங்களுக்கு ஊழியம் செய்து வருகிறார் ஒரு தந்தை. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தன்னிடம் வேலை பார்க்க வந்த சிறுமியைப் படிக்க வைத்து ஆளாக்கி மணம் செய்து வைத்தது. நான் உங்கள் கண்களில் படுகிறேன். நம் கண்ணில் படாத ஆயிரம் நல்ல உதாரணங்கள் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு இடையே ஒளிந்துள்ளன. சொர்க்கம் நரகம் வியாபார கணக்கு பார்த்து பாசத்தை நாங்கள் எங்கள் மகள்கள் மீது கொட்டவில்லை கூடிய மட்டும் நன்மையின் பக்கமே இருப்பது எங்கள் இயல்பு!”

“மாஷா அல்லாஹ் மச்சான்!”

எனக்கு மெக்சிகோவில் கணவன் குழந்தையுடன் இருக்கும் மகள் ஜாஸ்மின் ஞாபகம் வந்தது.. “மகளே! உன் மேன்மைக்காக மேலும் நாங்கள் சிந்திப்போம்… இறைவன் மகத்தானவன்!” முணுமுணுத்தேன். பேரனோடு கொண்டாட்டத்தை தொடர்ந்தார் ரபீக் முஹம்மது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p43.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License