இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

42. கால் கட்டு எங்கே?


பொன்விழா ஜமாஅத் பள்ளிவாசல் உக்கடம் அன்பு நகரில் அமைந்திருந்தது. பள்ளியின் முதல் தளம் கட்டும் பணி ஒளிவேகமாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.

பள்ளியின் இடதுபுறம் மதரஸா இருந்தது.

அன்பு நகரில் நானும் என் மகன் - மருமகள் குடும்பமும் வாடகை வீட்டில் இருந்த போது அந்த பள்ளிக்கு ஜும்ஆ தொழப் போவேன்.

மகன் ஜி எம் நகரின் மனாஸ் கார்டனில் சொந்த வீடு கட்டி குடியேறின பிறகும், கடந்த இரண்டு வருடங்களாக நான் பொன்விழா ஜமாஅத் பள்ளிக்குதான் ஜும்ஆ தொழப் போவேன். காரணம், பள்ளி இமாம் மௌலானா எஸ். மிக்தாம் ஹுஸைன் கலீமி ஆமிரியின் பயான். ஹைடெக் இமாம் அவர். பயான் பக்கங்களை டிடிபி செய்து எடுத்து வருவார். பயான் பண்ணும் போது தனது திறன்பேசியில் பயானை பதிவு செய்வார். பயான் பதிவை எனக்கு வாட்ஸப்பில் அனுப்பிவிடுவார். முதல் முறை காதுகுளிர பள்ளியில் நேரடியாக பயான் கேட்கும் நான் இரண்டாவது முறை வாட்ஸப்பில்,கேட்பேன். சில சமயம் அவரின் பயான் கருத்துகளை நான் சிறுகதையாய் எழுதுவதும் உண்டு.

ஜும்ஆ தொழுகைக்கு நான் நண்பகல் 12 30 மணிக்கு போய் விடுவேன். தொழும் பிரதான ஹாலின் இடது பக்க சுவரை ஒட்டி அமர்ந்து கொள்வேன். ஜும்ஆ தொழ வரும் 500 தொழுகையாளிகளையும் உன்னிப்பாய் கவனித்து அவர்களின் உடல்மொழி ஆளுமை ஆராய்வேன்., நரம்புத் தளர்ச்சி காரணமாக உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டு வரும் பென்சில் போன்ற உடலமைப்பு கொண்ட 38 வயது தொழுகையாளி. மொடமொட வெள்ளை கதர் சட்டை கதர் வேஷ்டி வெள்ளி மோதிரம் தங்கமுலாம் பூசிய கைகடிகாரத்துடன் நளினமாக தொழுமிடத்துக்கு நடந்து வருவார் ஒரு தொழுகையாளி.

என்னை விட, கனத்த சம வயதுள்ள தொழுகையாளி லுங்கியுடன் வருவார். எனக்கு அவர் பெயர் தெரியாது. அவருக்கு என் பெயர் தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி டெஸிபல் இல்லாமல் சலாம் சொல்லிக் கொள்வோம். கோதுமை அல்வா உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தனது ஐந்து வயது மகனுடன் தொழ வருவார்.

அன்பு நகர் சலூனில் பணிபுரியும் இரு வடஇந்திய இளைஞர்கள். மளிகைக் கடை நண்பர் ஒருவர். எங்கள் பழைய வீட்டின் உரிமையாளர் ஒருவர். அவரின் மேல் வாசனை பத்தி நறுமணம் வீசும். முக்கால்கை மடித்து விடப்பட்ட சட்டையுடன் முத்தவல்லி பயானுக்கு பின் அறிவிக்க வேண்டிய செய்திகளை துண்டு சீட்டுகளாய் இமாமிடம் கொண்டு போய்k கொடுப்பார்.


பள்ளி நிர்வாகி ஒருவர் நின்று கொண்டு முன் தொழுமிடம் நிரம்பினால் கூடுதல் தொழுகையாளிகளை முதல் தளத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பார். தொழுகைக்குபின் சந்தா வசூலிக்க டேபிள் மேஜையும் ரசீது புத்தகங்களும் காத்துக்கொண்டு இருக்கும். சில தொழுகையாளிகள் கூடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் தொப்பிகளை எடுத்து அணிந்து கொள்வர். பள்ளியின் இரு மோதினார்களில் ஒருவர் பள்ளியின் மின்விசிறிகளை குழல் விளக்குகளை உயிர்ப்பிப்பார்.

சட்டென்று இமாம் தனது அறையிலிருந்து குறிப்புகளுடன் வாட்டர் பாட்டிலுடன் அழகிய அணில் போல் குதித்து வெளிவருவார். தொழுகையாளிகளுக்கு இடையே தொந்தரவு இல்லாமல் நடந்து தனது இடம் போவார். பயான் ஆரம்பிக்கும். வழக்கமான தொழுகையாளிகளுக்கு நடுவே ஒரு 70 வயதான தொழுகையாளி என் கண்களை கவர்ந்தார். துணி தொப்பி. நரைத்ததாடி வெள்ளை ஜிப்பா. வெள்ளை கைலி. நான் இடது பக்க சுவரில் சாய்ந்து உட்கார்வேன் என்றால் அவர் வலது பக்க சுவரில் சாய்ந்து தஸ்பீஹ் மணி மாலையை உருட்டிக் கொண்டிருப்பார்.

ஜீனத்தான முகம். ஆன்மிகக் கண்கள். ரோஜா அடித்த உதடுகள். பிரதான தொழுமிடத்துக்கு பக்கவாட்டு வராண்டாவில் இருபதுக்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழுவர். சிலருக்கு 45 வயது கூட இருக்காது முழு ஆரோக்கியம். அவர்கள் தரையில் மற்ற தொழுகையாளிகளுடன் சேர்ந்தே தொழலாம். இந்த 70 வயது தொழுகையாளிக்கு வலது காலில் மிகப்பெரிய பேன்டேஜ். பேன்டேஜில் இரத்தம் கசிந்திருக்கும். இடது காலை விட பூதாகரமாய் வீங்கி இருக்கும் வலது கால். வலியை சகித்து கொண்டு அவர் தரை விரிப்பில் தான் தொழுவார்.

யாராவது அவரிடம் பேசி அவரை பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழ சொல்லக் கூடாதா?

ஏறக்குறைய 20 ஜும்ஆ தொழுகைகளிலாவது அந்த 70 வயது தொழுகையாளியை நெருக்கமாக கவனித்து வந்தேன். இந்த ஜும்ஆவில் அவருடன் பேசிவிட வேண்டும். ஸலவாத் ஓதிய பிறகு தொழுகையாளிகளின் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

நான் வேகமாய் ஓடி அந்த முதியவரை மறித்தேன். “அஸ்ஸலாமு அலைக்கும். நான் மனாஸ் கார்டனில் குடியிருக்கிறேன். பெயர் ஆர்னிகா நாசர். எழுத்தாளர்!”

“வஅலைக்கும் சலாம்!” என்றார்.


“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டுமே?”

பேச வசதியாய் ஒரு பக்கம் ஒதுங்கினோம். பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொட்டி எண்ணிக் கொண்டிருந்தனர் பள்ளி நிர்வாகிகள்.

“உங்க பெயர் பாய்?”

“முஹம்மது முஸம்மில்!”

“உங்க சொந்த ஊர்?”

“பாலக்காடு மூன்று தலைமுறைகளுக்கு முன்னமே உக்கடம் பகுதியில் செட்டில் ஆகிவிட்டோம்!”

“என்ன தொழில் செய்கிறீர்கள்?”

“மகன்களுடன் லாரிபேட்டையில் பழைய இரும்புக்கடை வைத்திருக்கிறேன்!”

“உங்கள் வலது காலில் என்ன காயம்?”

“சுகர் புண் பெரிதாகிவிட்டது. டாக்டர் காலை எடுக்க வேண்டும் என்கிறார்”

“தரை விரிப்பில் அனைவருடன் சேர்ந்து தொழும்போது கால் காயம் அக்ரிவேட் ஆகுமே… புதிதாக ரத்தம் கசியுமே… எந்த மாத்திரை சாப்பிட்டாலும் குணமாகாதே..”

“அதனால்?”

“அதனால் நீங்கள் பாலிமர் இருக்கையில் அமர்ந்து தொழலாமே?”

என்னை அர்த்தபுஷ்டியாய் உன்னித்தார் முஸம்மில். “எனக்கு சேரில் அமர்ந்து தொழுவதில் உடன்பாடில்லை”

“சேரில் அமர்ந்து தொழுவது தவறு என்கிறீர்களா?”

“இல்லை. நான் யார் அதைs சொல்ல? ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவது நன்மையான விஷயம். அதற்குதான் அவர்களும் வருகிறார்கள். நானும் வருகிறேன். அவர்கள் சேரில் அமர்ந்து தொழுவது பற்றி நான் ஏன் ஆராய வேண்டும்?”

“தொழுகையில் உங்கள் உடலை சிரமப்படுத்தி இறைவனின் கருணையைக் கூடுதலாகப் பெற நினைக்கிறீர்களோ?” சிரித்தார் முஸம்மில்.

“என்னிரு கால்களிலும் கைகளிலும் புண்கள் வந்து இரத்தம் கசிந்தாலும் நான் தரையில் தான் தொழுவேன். ஜமாஅத்தார்கள் சுடும் மணலில் தொழுதால் நானும் அங்கு தான் தொழுவேன். இறைவனின் கருணை எல்லா மூமின்களுக்கும் சமமாய் கிடைக்கட்டும். எனக்கு எதுவும் பிரத்தியேகமாக தேவையில்லை!”

“ஆங்கில மருத்துவம் மேற்கொள்கிறீர்களா அல்லது சித்தாவா?”

“எல்லா மருத்துவமும் முயற்சி செய்து பார்த்து விட்டேன். சுகர் 450 இருக்கிறது!”

“என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னியுங்கள் பாய்!”

“என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி சகோதரரே!”

இருவரும் கைப்பேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம்.

அழகிய முகமன்கள் கூறி பிரிந்தோம். தத்தி தத்தி நடந்து ஜிப்பாவில் இருந்த பத்து ரூபாய் நாணயங்களை மிஸ்கின்களுக்கு போட்டார் முஸம்மில்.


- ஆறு மாதங்களுக்கு பிறகு -

ஜும்ஆ தொழுகைக்கு பிறகு முஸம்மிலை தேடினேன். இருந்தார். அழகிய முகமன் பரிமாற்றம் அவரது கால்கட்டு காணாமல் போயிருந்தது. வலது கால் புண் முழுமையாய் ஆறியிருந்தது.

“ஆஹா… சுகர் புண் குணமாய்ருச்சு போல. நீங்கள் தொழும் விதத்துக்காக இறைவன் உங்கள் மீது விசேஷ கருணையை பெருமழையாய் பொழிந்து விட்டான் போல…” சிரித்தார் முஸம்மில்.

“நான் அப்படி நினைக்கவில்லை. இறைவனின் விசேஷ கருணைக்கு நான் தகுதியானவன் இல்லை. கோடிக்கணக்கான ஈமான்தாரர்களில் நான் ஒரு சாதாரணன்!”

தொழுகை ஒரு இஸ்லாமியனை பக்குவப்படுத்தும் மகத்துவம் கண்டு பிரமித்தேன்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p42.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License