இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

41. வாஸ்து சாஸ்திரப்படி வீடு


அந்த வீடு 1200 சதுர அடியில் தரைத்தளமும், 600 சதுர அடியில் முதல் தளமும், 600 சதுர அடியில் இரண்டாவது தளமும் கட்டப்பட்டிருந்தது. மொட்டை மாடியில் சின்டெக்ஸ் வாட்டர் டேங்க்.

புத்தம் புதிதாய்க் கட்டப்பட்ட வீட்டுக்கு அன்று காலைதான் புதிதாய் குடி வந்திருந்தனர் கமாலுதீன் குடும்பத்தார்.

கமாலுதீன் 50 வயதான பணக்கார முஸ்லிம். அவர் ஒரு வடிகட்டின கஞ்சன். இஸ்லாமியர்களில் டேஷ் என்கிற பிரிவை சேர்ந்தவர். டேஷ் பிரிவினர் இஸ்லாமியர்களில் 10 சதவீதம் இருப்பர். பெரும்பாலும் கீமான் கட்சி பாணி இளைஞர்களே... டேஷ் பிரிவினர் இமாம்களை மதிக்க மாட்டார்கள். இமாம்கள் புரோகிதர்கள். இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேப் புரோகிதர்கள் எதற்கு? எனக் கூறி இமாம்களின் இருப்பை மறுதலிப்பர்.

அவர்கள் வாயில் ‘ஷிர்க்’ ‘பித்அத்’ ‘ஹராம்’ வார்த்தைகள் அதிகம் புழங்கும். இறந்தவர்களுக்கு மௌலுது ஓதினால் அது ஷிர்க். கபர்களில் ஜியாரத் பண்ணினல் அது ஷிர்க். சுன்னத் கல்யாணம் ஷிர்க். தர்கா சென்று வருதல் ஷிர்க். புது வீட்டுக்குப் பால் காய்ச்சினால் ஷிர்க். பெரிய மனுஷி ஆன பெண்ணுக்கு விழா நடத்தினால் ஷிர்க். நாகூர் கந்தூரி ஏர்வாடி கந்தூரி ஷிர்க். நபிகள் நாயகத்திற்கு ஸலவாத்து ஓதுதல் ஷிர்க். ஹதீஸ்களை ஒப்புக் கொள்ள மாட்டோம் எனப் பிடிவாதம் பிடிப்பர். மொத்தத்தில் இந்த டேஷ் பிரிவினர் எகனைக்கு மொகனை பேசுபவர்கள். விதாண்டாவாதம் இவர்களது சுவாசம். ஆனால், இவர்கள் தங்களை ‘தூய்மை வாதிகள்’ என அழைத்துக் கொள்வர்.

தெருவில் நின்று கமாலுதீன் புதிய வீட்டை முழுமையாக ஒரு முறை பார்த்தார் அபூ தல்ஹா. அபூ தல்ஹா கமாலுதீனுக்கு எதிர்பிரிவைச் சேர்ந்தவர். கமாலுதீன் எதையெல்லாம் ஆகாது என்கிறாரோ, அதனை எல்லாம் ஆகும் என்பார் அபூ. அபூவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.


கமாலுதீன் எதிரணி என்று விலகிப் போக மாட்டார். அவருடன் பேசி ஒரண்டை இழுப்பார். ஒரண்டையின் கடைசியில் கமாலுதீன் தலைக்கு மேல் இருகைகளைக் குவித்து “எப்பா அபூ, என்னை விட்ருப்பா… டோட்டல் சரணாகதி உன்னிடம்..” என மிழற்றுவார்.

பெயின்ட் வாசனை அடித்த புது வீட்டுக்குள் பிரவேசித்தார் அபூ தல்ஹா.

“உள்ள வரலாமா? உள்ள வரலாமா? உள்ள வரலாமா?”

“வந்திட்டு என்ன கேள்வி. வா… வா.”

“அஸ்ஸலாமு அலைக்கும் கமாலுதீன்!”

“வஅலைக்கும் ஸலாம் அபூ…”

“வீட்டுக்கு குடி வந்துட்டீங்க போல…”

“ஆமா..”

‘‘வீடு கட்ட எவ்வளவு செலவாச்சு…?”

“அரைக் கோடி!”

“இவ்வளவு அழகா வீடு கட்டியிருக்கியே ஒரு விழா வச்சு ஒரு அய்நூறு பேருக்கு கறிச் சோறு போட்டிருக்கலாமில்ல?”

“வயிறு நிறையத் தின்னுட்டு வீட்டைக் குறை சொல்லவா?”

“ஊரெல்லாம் பலன் சொல்லுமாம், பல்லி கழனி பானைக்குள்ள விழுமாம் துள்ளி என்பார்கள். நீங்கல்லாம் ஊருக்கு ஒண்ணு பேசுவீர்கள் பெர்சனலா வேறொண்ணு செய்வீங்க…”

“அப்படி என்ன நான் செஞ்சதை நீ பாத்த?”


“வீட்டுக்கு அஸ்திவாரம் போடும் போது இந்து மதச் சகோதரரான கொத்தனார் பூமி பூஜை போட அனுமதிச்சியே அது ஷிர்க் இல்லையா?”

”அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல!”

பூமி பூஜை நடந்த விடியோ கிளிப்பிங்கை காட்டினார் அபூ. “அப்டின்னா இது?”

“அது வந்து… வீடு கட்டின கொத்தனார் சித்தாள் எல்லாம் இந்து மதச் சகோதரர்கள்.. அவங்களைப் பூமி பூஜை பண்ண நான் அனுமதிக்கலைன்னு வச்சுக்க, வீடு கட்டும் போது ஏதாவது ஒரு விபத்து நடந்தால், பூமி பூஜை நடத்தாதினாலதான் விபத்து நடந்ததுன்னு என் தலையை உருட்டுவாங்க. அதனால அனுமதிச்சேன்!”

“பூமி பூஜை மங்கலகரமான விஷயம். பிற மத நம்பிக்கைகளை மதிப்போம். ஆனா இதெல்லாம் இணை வைப்புன்னு சொல்லிக்கிட்டே இதைச் செய்தீங்க பாருங்க… அதான் சகிக்கல…”

“உன் விடியோவை எரேஸ் பண்ணு அபூ…”

“ஒரு விடியோன்னா அழிச்சிரலாம் பத்து பதினைஞ்சு இருக்கே!”

“வேறு எதைஎதை விடியோ எடுத்து தொலைச்ச?”

“நேத்து நடுராத்திரி ரகசியமா ஒரு இமாமையும் ஏழெட்டு ஓதுற பிள்ளைகளையும் வச்சு மௌலிது ஓதின பாரு… வீட்டு வாசல்ல நின்னு மாடிப்படில நின்னு மொட்டை மாடில நின்னு மெளலிது ஓதுற சப்தம் கேக்குதான்னு காதைத் தீட்டி நின்னே பாரு… கண்கொள்ளாக் காட்சி!”

“இல்லையே…”

“இதோ விடியோ!”

“ஹிஹி… பொண்டாட்டி ஆசை தவிர்க்க முடியல…”

“இமாமை வச்சு தரைத்தள நடுவுல நின்னு முதல்தளத்தில நின்னு இரண்டாவது தளத்தில நின்னு பாங்கு சொல்ல வச்சியே அது மச்சினி ஆசையா?”

“அட ஆமாம்ப்பா… அழகான மச்சினிச்சி… அவ சொல்லைத் தட்ட முடியுமா?”

“புதுசா கட்டின வீட்டுக்கு கண் திருஷ்டி படாம இருக்க ஆயத்துல் குர்ஸி எழுதின தாயத்தை வீட்டு நிலை வாசல்ல தொங்கவிட்டியே அது…”

”அது என் மகனோட விருப்பம் அபூ…”

“எனக்கு வீட்டைச் சுத்திக் காண்பிக்க மாட்டியா கமாலுதீன்?”

“இன்னும் என்னென்ன நொட்டைச் சொல்லப் போறியோ… வா… வந்து தொலை… எங்க வீட்டை உளவு பார்த்து விடியோ எடுத்த கையை சொடக்குன்னு உடைக்கனும்!”

ஒவ்வொரு அறையாய் பார்த்தபடி வந்தார் அபூ. கமாலுதீனின் குடும்பத்தாரின் ஸலாம்களை பெற்று பதில் ஸலாம் கூறினார் அபூ.

சமையலறையில் வந்து நின்றார் அபூ. ஆரஞ்சு நிற வண்ணம் பூசிய சமையலறை.

“சமையலறை எத்தனை சதுர அடில கட்டிருக்கு?”


“நானூறு சதுர அடி. ஆங்கில யூ வடிவ மாடுலார் சமையலறை. பெப்பர்ப்ரை கம்பெனிக்காரன்தான் மட்டு சமையலறையை அமைத்துக் கொடுத்தான். மொத்தம் ஒரு லட்சம் செலவாச்சு. பணி சூழலியலுடன் லே-அவுட் டிசைன் பிளேஸ்மென்ட் பார்த்து இந்தச் சமையலறை கட்டப்பட்டது. மூன்று எரிகருவி உள்ள கேஸ் அடுப்பு, மின்சார சிம்னி, பாத்திரங்களைக் கழுவும் வாஷ்பேசின், பாத்திரங்கள் அடுக்கி, நீர் சுத்தப்படுத்தும் கருவி, குளிர்சாதனப்பெட்டி, மின் அடுப்பு, பலசரக்கு சாமான்கள் அடுக்கும் செல்ப், வெட்டும் அளக்கும் கலக்கும் சமைக்கும் கருவிகள்…”

“எல்லாம் சரி கமாலுதீன்” குரலை இரகசியமாகக் குழைத்தார் அபூ “உன் வீட்டுச் சமையலறையை வாஸ்து நிபுணரை வச்சுத்தானேக் கட்ன?”

“எவன் சொன்னான்? எவன் சொன்னான்?”

“உன் சமையலறை தென்கிழக்கு திசை பார்த்து கட்டப்பட்டிருக்கு… சமையலறை கதவு கடிகார திசையில் நிற்கும் வகையில் அமைத்திருக்கிறாய்.. குளியலறையும் சமையலறையையும் ஒன்றாக நீ கட்டவில்லை. கிழக்கு அல்லது தெற்கில் ஜன்னல் அமைந்திருக்கிறாய். குளிர்சாதனப் பெட்டியை தென்கிழக்கு மூலையில் வைத்திருக்கிறாய். இவ்வளவு பேசும் நீ உன் புதிய வீட்டுச் சமையலறையை வடகிழக்கு, தென்மேற்கு திசையில் ஏன் அமைக்கவில்லை?”

“சூரிய வெளிச்சம் சமையலறைக்கு போதுமான அளவு வரட்டும் என்று தான் சமையலறையை தென்கிழக்குத் திசையில் வைத்தேன்!”

“நீயும் வாஸ்து நிபுணரும் பேசும் விடியோ காட்சி இதோ!”

“என்னைப் பழி வாங்கிடாத. கஞ்சத்தனம் பண்ணத்தான் இந்தப் பிரிவு அனுதாபியாக மாறினேன்!”

“கண்டா சைவ மனிதர், காணாட்டி பூனைதின்னி மனிதர்… பிறரை மகிழ்ச்சிபடுத்த, பிறருக்கு வயிறார உணவிட, மதம் அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இமாம்களையும், வலிமார்களையும், ஒலிமார்களையும் கண்ணியப்படுத்தி மகிழ்வோம். நபிகள் நாயகத்தை மனிதகுலத்தின் முன்மாதிரி மனிதராக மரியாதைப்படுத்துவோம். இஸ்லாமின் உட்பிரிவினர் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று கூடுவோம்! மாஷா அல்லாஹ்!”

கமாலுதீனின் மனைவி கொண்டு வந்த பீர்னியை குடித்தார் அபூ தல்ஹா.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p41.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License