இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

49. இஹ்ஸான்


“மேலும் நிச்சயமாக நாம் மனிதனை படைத்தோம்.
அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது
என்பதையும் நாம் அறிவோம்.
அன்றியும் அவன் பிடரி நரம்பை விட
நாம் அவனுக்கு சமமாக இருக்கிறோம்” - திருக்குர்ஆன் 50:16

*****

பள்ளிவாசல்.

மினாரின் உச்சியில் சில புறாக்கள் பறந்து கொண்டிருந்தன.

இஷா தொழுகையை முடித்துவிட்டு வலது ஓரம் அமர்ந்திருந்தார் மௌலானா ஃபஸ்லுல் ஹக். வயது எழுபது. மத்திம உயரம். கனிந்த செவ்வாழைப் பழம் போலிருந்தார். நரைத்த வெள்ளி ரோமங்களால் ஆன யானைத்தந்த தாடி. மூன்றாவது பரிமாணத்தை ஊடுருவி பார்க்கும் ஆன்மிகக் கண்கள். குர்ஆனிய உதடுகள்.

தொடர்ந்து நான்காயிரம் தடவைகள் திகர் எடுத்தவர் நிறுத்தினார். தனது வலது பக்கப் பிடரி நரம்பின் பக்கம் திரும்பினார்.

“இப்பிரபஞ்சத்தில் சாந்தியும் சமாதானமும் உருவாக்குபவனே… என் திக்ரை காதுற வந்துவிட்டாயா?”

“போனால்தானே வர? நான் சதா உன் பிடரி நரம்பின் அருகில்தான் இருக்கிறேன். உன் வணக்க முறைகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்!”

“என்னை ரசிக்கும் நேரத்தில் மற்ற விஷயங்களைக் கோட்டை விட்டு விடாதே!”

“ஒரே மைக்ரோ நொடியில் கோடி இடங்களில் இருப்பவன் நான். உன்னை ரசிக்கும் போதே ஓர் ஆப்பிரிக்கச் சிறுவனுக்கு உணவளித்தேன். வாஷிங்டன் டிசியில் ஒரு விமான விபத்தை தவிர்த்தேன். இந்தியாவில் ஒரு மூமீனை ஒரு மதவெறியனிடமிருந்து காப்பாற்றினேன். முந்தின நொடியைப் போல இந்த நொடியும் நகரப் பிரபஞ்சத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்!”


“இரு உன்னை ஒரு தடவை முழுமையாக பார்த்துக் கொள்கிறேன்!”

இறைவன் லட்சம் வர்ணங்களில் பம்பரமாய்ச் சுழன்றான்.

“அடடா… நீ என்ன அழகு?”

“என்னில் எதைக் கண்டு ரசித்தாய் ஃபஸ்லுல்?”

“ஒரு க்ளைடாஸ்கோப் சாகசமாய் ரெங்குகிறாய்!”

“இதுவும் நானல்ல!”

“பிறிதொன்றாய் இருந்தும் பக்தி கண்களுக்கு நீயாகிறாய்!”

“இரவுச் சாப்பாடு சாப்பிட நீ போகவில்லையா?”

“பசிக்கவில்லை ரஹ்மானே!”

“காதலி பெயரை ஜில்லியன் தடவைகள் முணுமுணுக்கும் காதலன் ஆகிவிட்டாய். நான் எத்தனை பேர்களுக்கு காதலியாக இருப்பது?”

“கோடி கோடி ஜீவராசிகளின் காதலன் நீ!”

“என்னிடம் முத்தம் கித்தம் கேட்டுவிடப் போகிறாய்!”

“கேட்டால் நீ மறுக்கப் போகிறாயா என்ன?”

இறைவன் சிரித்தான். “நான் பௌதிக காதலின் தன்மைகளுக்கு அப்பாற்பட்டவன்!”

“நாங்கள் பௌதிகத்தில் ஒரு கால் அபௌதிகத்தில் ஒரு கால் வைத்து உன்னை நேசித்து விட்டுப் போகிறோம்!”

“உன்னுடைய பேச்சில் கவிதை ரசம் சொட்டுகிறது!”

“உன் படைப்பின் மகத்துவமே இதுதான். நீ கொஞ்சம் ரசிக தன்மையை எங்களுக்குள் வைத்தாய். நாங்கள் அதனை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டோம்!”

“நீயும் நானும் பேசுவது உன் குடும்பத்துக்கு தெரியுமா?”

“சொன்னால் நம்ப மாட்டார்கள்!”

இருவரின் உரையாடலுக்குள் ஒரு மூன்றாவது குரல் குறுக்கிட்டது.


“அஸ்ஸலாமு அலைக்கும்!” மதரஸா மாணவன் முஹம்மது வஸீர்.

மூன்றாவது பரிமாணத்துக்கு திரும்பினார் ஃபஸ்லுல் ஹக்.

“வஅலைக்கும் ஸலாம்!”

“இரவு மணி 11 ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் வீட்டுக்கு போகவில்லையா?”

“விரும்பும் போது போவேன்!”

“ஒரு கேள்வி மௌலானா. நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது!”

“என்ன?”

“பல வருடங்களாக நீங்கள் உங்களுடனே பேசிக்கொள்கிறீர்களாம். பக்தி முற்றி பித்துப் பிடித்து விட்டது என்கிறார்கள். ஆன்மிகக் கிறுக்கர் என பட்டப்பெயர் சூட்டி உங்களை அழைக்கிறார்கள். நான் வரும்போது கூட நீங்கள் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… மருத்துவரைப் பார்க்கலாமில்லையா நீங்கள்?”

வெடிச் சிரிப்பு சிரித்தார் ஃபஸ்லுல் ஹக். வலது பிடரி நரம்புப் பக்கம் திரும்பி கண் சிமிட்டினார் ஹக். “பாத்தியா அல்லாஹ்வே… உன்னுடன் பேசும் நான் ஆன்மிகக் கிறுக்கனாம்!”

“உனக்குப் புரியாது வஸீர்!”

“நீங்கள் பேசுவதில் ஒரு திடமான உரையாடல் இருக்கிறது. ஒருவர் கைபேசியில் பேசினால் எதிர்முனையில் யாரோ ஒருவர் இருப்பதாகத்தானே அர்த்தம்? நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!”

“அல்லாஹ்விடம்!” முஹம்மதுவஸீருக்கு தூக்கி வாரிப் போட்டது.

“மெய்யாலுமா?”

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விடம்தான் பேசுகிறேன். என் எதிரில் உக்கார் வஸீர்!” அமர்ந்தான் முஹம்மது வஸீர்.

“இஹ்ஸான் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“இல்லை!” “அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போல வணங்குவது ‘முஷாஹதா’ எனப்படும். அல்லாஹ் நம்மை பார்ப்பது போல வணங்குவது ‘முராக்கபா’ எனப்படும். இவ்விரு வகை வணக்கங்களும் ‘இஹ்ஸான்’ எனப்படும். இஹ்ஸான் இல்லாமல் தீன் முழுமை அடையாது. இஹ்ஸானில் மூழ்கியோர் ‘முஹ்ஸின்’ எனப்படுவர். நான் ஒரு முஹ்ஸின் இளைஞனே… என் வணக்கமுறை முஷாஹதா!”

பிரமித்தான் முஹம்மது வஸீர்.

“அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போல வணங்க முடியவில்லை என்றால் வருத்தப்படாதே. ஒவ்வொரு சிந்தனையின் மீதும் இறைவனின் பார்வை இருக்கிறது என்னும் விழிப்புடன் உன் உள் மனதை நீ கண்காணிப்பதே முராக்கபா. முராக்கபா வணக்கமுறையே உன் வயதளவில் போதுமானது!”

“ஆஹா!” “மெய்ஞானம் ஓர் ஆழமான ஆன்மிக அனுபவம். அந்த அனுபவம் ஏற்படுத்தும் ஆன்மிக உறுதி நம்பிக்கைதான் உன்னத இறைஞானம்… மெய்ஞானத்தை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்!”

“விரிவாக சொல்லுங்கள் மௌலானா!”

“முதல் மெய்ஞானம்… இல்முல்யகீன். நீ ஒரு பூட்டிய அறையில் இருக்கிறாய். உன் அம்மா சமையலறையில் சுடும் நெய் தோசையின் வாசனை உன் நாசியை துளைக்கிறது. தோசையை நீ நேராகப் பார்க்கா விட்டாலும் தோசையை வாசனை மூலம் அறிகிறாய்…”

“வாவ் உதாரணம்!”

“இரண்டாவது மெய்ஞானம் – ஐனுல்யகீன். நீ உன் அறைக்கதவை திறந்து கொண்டு சமையலறை போய் அம்மா நெய் தோசை சுடுவதை இரு கண்களால் காண்கிறாய். ஸோ தோசையை நேரடியாகப் பார்த்து விட்டாய்!”

“அடுத்த மெய்ஞானம்?”

“மூன்றாவது மெய்ஞானம் – ஹக்குல்யகீன் அம்மா சுட்ட நெய்தோசையை சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுதல். மூன்று படித்தரங்களை சொன்னேன்… புரிந்ததா?”

“புரிந்தது மௌலானா!”

“இஹ்ஸான் எனும் இறைபிரக்ஞை மூலம் நம் வாழ்வே வணக்கமாக அழகுபடுத்தப்படும். மனதை விட்டு பயமும் கலக்கமும் அகன்று நிஷ்களங்கமாகும்”


“இஹ்ஸான் நிலையை நான் எப்படி அடைவது?”

“இறைவன் எழுபது தாய்களுக்கு சமம். இறைவன் கண்காணிப்பவனாக (ராகிபாக) சிருஷ்டிகளை சூழ்ந்தவனாக (முஹீத்) ஆரம்பமானவனாக (அவ்வல்) முடிவானவனாக (ஆஹிர்) வெளியானவனாக (லாஹிர்) மறைவானவனாக (பாத்தின்) நெருக்கமானவனாக (கரீப்) மிக நெருக்கமானவனாக (அக்ரப்) ஜீவராசிகளுக்கு இருக்கிறான்! இல்முல்யகீன் என்கிற இறை நெருக்கத்தை இறைஞானிகளின் நட்பால் பெறலாம்”

“உங்களிடம் நான் பெறலாமா?”

“இன்ஷா அல்லாஹ் இறை விருப்பம் இருந்தால் முஹ்ஸீனாக உயர்த்தப்படுவாய். ‘விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும் உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம். அவை ஹக்குதான் என்று தெளிவாகின்றவரை காண்பிப்போம்’ என்கிறான் இறைவன்!”

ஃபஸ்லுல் ஹக்கின் வலது கையைப் பற்றி முத்தமிட்டான் முஹம்மது வஸீர் “மாஷா அல்லாஹ்!”

-இரண்டு வருடங்களுக்கு பிறகு -

பத்தாயிரம் தடவைகள் திக்ர் எடுத்த பின் வலது பிடரி நரம்பின் பக்கம் திரும்பினான் வஸீர். “யா அல்லாஹ்! நீயும் உன் வானவர் கூட்டமும் நலமா?”

“எங்களை நலம் விசாரிக்கும் அளவுக்கு ஆன்மிகப் படித்தரத்தில் உச்சம் தொட்டு விட்டாயா?”

“நான் உன் செல்லம் இல்லையா அல்லாஹ்?”

“விட்டால் என் மடியில் ஏறிக் கொஞ்சுவாய் போல...”

“விடேன்… கொஞ்சுகிறேன்!”

“இந்த அடியார்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை… மித மிஞ்சிய பக்தியால் என்னைப் பரவசப்படுத்துகிறார்கள்… இவர்களுக்கு கொடுக்கச் சொர்க்கத்தைத் தவிர, வேறென்ன இருக்கிறது என்னிடம்? (நொடி தாமதித்து) சாப்பிட்டாயா வஸீர்?”

“அம்மா சுட்ட 10 நெய் தோசைகள் சாப்பிட்டேன்!” வயிற்றைத் தொட்டுக் காட்டினான். ஆன்மிக அர்த்தம் தொக்கி நின்றது. இறைவன் ரோமாஞ்சனமாக இதழ் விரித்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p49.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License