இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

50. சதகா செய்யலாம்...!

ரம்ஜான் பெருநாளுக்கு இன்னும் பத்து நாட்கள் அவகாசம்.

அத்தா காமில் முகமதுவும் அம்மா ஃபம்யாவும் வரவேற்பறையில் அமர்ந்து ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா அம்மா!” என்றபடி வந்தாள் 14 வயது சிறுமி சல்மா.

இரண்டு இறக்கைகளைப் பொருத்திவிட்டால் சல்மா ஒரு தேவதை ஆகி விடுவாள். உலகின் அனைத்துப் பூக்களையும் அரைத்துச் செய்யப்பட்ட பல்வர்ண நறுமணக் கலவை சல்மா.

“வஅலைக்கும் ஸலாம் சல்மா!”

“என்ன இரண்டு பேரும் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?”

“இந்த வருடம் நாம் கொடுக்க வேண்டிய ஜக்காத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் மகளே!”

“ஜக்காத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கத்தா!”

“இஸ்லாமியர்களின் பிரதான ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவரின் செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஜக்காத்தாக கொடுக்க வேண்டும். நிசாப் மதிப்பு 87கிராம் தங்கம் வைத்திருந்தாலும் ஜக்காத் கட்டாயம். ஈத் தொழுகைக்கு முன் ரமலான் மாதம் இறுதிக்குள் கொடுக்க வேண்டிய நன்கொடையே ஜக்காத். ஜக்காத் என்றால் சுத்திகரிப்பு என்கிற பொருளும் உண்டு செல்லம்!”


“இந்த வருஷம் எவ்வளவு ரூபாய் ஜக்காத் செய்ய இருக்கிறீர்கள் அத்தா?”

“ஒரு இலட்சத்தி இருபத்தியேழாயிரம் ரூபாய் பட்டுரோஸ்!”

“இந்தப் பணத்தை என்ன மாதிரியாக வினியோகிக்கப் போகிறீர்கள் அத்தா?”

“நூற்றி இருபத்தியேழு ஏழை முஸ்லிம்களின் பட்டியல் தயாரித்து ஆளுக்கு ஆயிரம் ஜக்காத் கொடுக்க இருக்கிறோம்!”

“கொடுக்கும் சந்தோஷம் எனக்கும் கிடைக்க வேண்டுமே?”

“ஜக்காத்தை உன் தங்கக்கையால் கொடு!”

உதடு பிதுக்கினாள் சல்மா “அது சரி வராது அத்தா?”

“பின்ன?”

“வேறொரு திட்டம் வச்சிருக்கேன்!”

“என்ன திட்டம்?”

தனது படுக்கையறைக்கு குழி முயலாய் ஓடினாள் சல்மா. 30 நொடி கரைசலில் திரும்பி வந்தாள். அவளது கையில் பெரிய மண் உண்டியல்.

“என்னம்மா இது?”

“கடந்த ஒரு வருஷமா நான் காசு சேர்த்து வச்ச உண்டியல் இது. இந்த உண்டியல்ல நீங்க தினம் கொடுத்த பாக்கெட் மணி நானா நானி மற்றும் விருந்தாளிகள் கொடுத்த அன்பளிப்பு தஞ்சமடைஞ்சிருக்கு!”

“இந்த உண்டியலை என்ன செய்யப் போற?”

“பிஸ்மில்லாஹ்!” என்றபடி உண்டியலை அத்தா அம்மா முன் உடைத்தாள்.

நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் சிதறின.


ரூபாய் நோட்டுகளை நீவிநீவி அடுக்கினாள். பின் மொத்தத்தையும் எண்ணினாள். ரூபாய் 8657 இருந்தது.

“பரவாயில்லையே சிறுகசிறுக எட்டாயிரத்தி சில்லரை சேத்ருக்கியே.. சபாஷ்டா வெல்லக்குட்டி!”

“இந்தப் பணத்தை நான் தனியா ஜக்காத் தரப்போகிறேன்!” பகபகவென சிரித்தார் அத்தா.

“உனக்கு ஜக்காத் கடமை இல்லை மகளே… நீ கொடுக்க முடியாது!”

“ஆஹா… கைச்சேதப்பட்டேனே…”

“மகளே! சல்மா என்றால் அழகானவள் இளமையானவள் என பொருள். ஸஹாபி ஒருவரின் பெயர் கூட சல்மாதான். ஆனால் இன்று சல்மா என்றால் கருணை வடிவானவள் என்பதனை கண்டு கொண்டோம்!”

“அத்தா! வேற வழியே இல்லையா? என் கையால் நான் யாருக்கும் உதவ வேற வழியே இல்லையா?”

“கவலைப்படாதே. நீ சதகா செய்யலாம். ஒரு மனிதன் இறந்தால் அவனது மற்ற செயல்கள் அனைத்தும் நின்றுவிடும் மூன்றைத் தவிர. ஒன்று - சதகா ஜாரியா, இரண்டு - ஒருவர் விட்டு செல்லும் அறிவு (அதன் மூலம் மற்றவர் பயனடைவர்), மூன்று - இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கம் உள்ள அவர்களின் குழந்தை - என்றார்கள் நபிகள் நாயகம்…”

“சதகா யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாமா?”

“தகுதியான எம்மத ஏழைகளுக்கும் செய்யலாம். நீர் நெருப்பை அணைப்பது போல. சதகா பாவத்தை அணைக்கும் என்றார்கள் நபிகள் நாயகம். சதகா இரண்டு வகைப்படும். சதகா மற்றும் சதக்கத்துல் ஜாரியா பசித்தவனுக்கு உணவு, தாகித்தவனுக்குத் தண்ணீர், உடுக்கை இழந்தவனுக்கு உடை, வறுமையில் உள்ளவனுக்கு பணம், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதே சதகா எனும் தர்மம் ஆகும்!”

“ஆஹா!”

“நன்மையான ஒவ்வொன்றுமே தர்மம் தான். ஒருவர் தன் சகோதரரைப் பார்த்து புன்னகைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும், வழி தவறியவருக்கு வழி காட்டுவதும், கல் முள் எலும்பு முதலியவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும், மரம் நடுவதும் தர்மம் தர்மமே!”

“அத்தா! என் உண்டியல் பணம் முழுமையும் சதகா செய்ய விரும்புகிறேன்!”

“தாராளமாகச் செய்!”

“நம் ஊரில் மொத்தம் எத்தனைப் பள்ளிவாசல்கள் உள்ளன?”

“ஆறு!”

“ஆறு பள்ளிகளின் மோதினார்களுக்கு தலா 500 ரூபாய் தரப்போகிறேன். பள்ளிவாசல்களைக் கூட்டி கழிவறைகளைச் சுத்தப்படுத்தும் ஆறு பணியாளர்களுக்கு தலா 500 ரூபாய் தரப்போகிறேன்.”

“மூவாயிரம் ப்ளஸ் மூவாயிரம் ஆறாயிரம் ரூபாய் ஆச்சு. மீதி 2657 ரூபாய் இருக்கு. உனக்கான ரம்ஜான் காசு 343 போட்டு மீதி பணத்தை 3000 ஆக்கித் தருகிறேன்… என்ன செய்யப் போற?”

“என்னுடன் படிக்கும் மூன்று ஏழை மாணவிகளுக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் செலவில் சுடிதார் செட் வாங்கித் தரப் போகிறேன்!”

அம்மா சல்மாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “உன்னை மகளாகப் பெத்ததற்கு பெருமைப்படுறேன்டி செல்லம்!”

“இன்னும் பாக்கி இருக்கு அம்மா! அத்தா! பணம் செலவில்லாத ஒரு சதகாவும் செய்ய விரும்புகிறேன்!”

“சொல்லும்மா!”


“பெருநாளைக்குள்ள நம் மஹல்லாவில் 100 மரக்கன்றுகள் நட வேண்டும். அவைகளை என்னுடன் சேர்ந்து உங்கள் கடை ஊழியர்களும் பராமரிக்க வேண்டும்.”

“ஓகே டன்!” “தவிர விகற்பம் தோன்றாத அளவுக்கு 100 அந்நியச் சிறுமிகளைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைப்பேன்!”

“இளிச்சவாய் என கேலி செய்யாத அளவுக்கு பதவிசாய் புன்னகை செய்!”

“சரி!”

“ரம்ஜான் அன்று அனாதை இல்லத்தின் முதியோர் இல்லத்தின் ஒருநாள் உணவு செலவை ஸ்பான்சர் செய்வோம்… அது உங்க சதகா செலவா இருக்கட்டும் அத்தா!”

புன்னகைத்தார் அத்தா.

“அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கத்துடன் நாம் ஏழைகளுக்கு உதவினால் அதனை வில்லா என்பர். நாம் செய்யும் ஜக்காத்தும் சதகாவும் வில்லாவில் சேருமா சேராதா?”

“விருந்தோம்பல், பிறருக்கு உதவுதல், இயற்கையைப் பேணுதல், தோழமையை உச்சி முகர்தல், மதநல்லிணக்கம் போற்றுதல் இவைகளை எல்லாம் மதங்கள் சொல்லாமலேயே பின்பற்றுவோம். நன்மைக்குச் சொர்க்கம் வேண்டாம். இறைவனிடம் வியாபாரம் பேசாத அன்பு போதும். ஆன்மாவை பேரானந்தப்படுத்தவும் பிறப்பை மகிமைப்படுத்தவும் நன்மைகளின் பக்கம் நிற்போம்…”

“நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை அன்புடன் தேடுகிறது!” என்றார்.

அத்தா ரூமியின் குரலில். இறைவன் அபௌதிக முகம் கொண்டு சிரித்தான். லட்சம் வானவில்கள் கிளைத்தன. ஜில்லியன் பூக்கள் மலர்ந்தன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p50.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License