இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

51. முனாபிக்


ஸ்கூட்டியில் சீறி பாய்ந்தாள் ஃபமிதா ஷஹர். வயது 22. உயரம் 150 செமீ. ரோஜா குல்கந்து உருவத் தோற்றம். பின்னுக்கு நீண்ட தலைக்கேசம். ஆயிஷா நாச்சியார் கண்கள்.

ஒரு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி ஸ்டாண்டிட்டாள் ஷஹர்.

லட்டு உருண்டைகள் கொண்ட டப்பாவை எடுத்துக் கொண்டாள். அந்த வீட்டுக்குள் நடந்தாள் ஃபமிதா ஷஹர்.

சாச்சி முனிபா ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளது மகளும் மருத்துவர் மருமகனும் மருத்துவர்.

வாலிபத்தில் பேரழகியாக திகழ்ந்தவள்.

“சாச்சி! அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம். ஃபமிதா ஷஹரா? வா… என்ன இவ்வளவு தூரம்?”

முனிபாவின் முகத்துக்கு நேராகவும் ஃபமிதாவின் முதுகுக்கு நேராகவும் ராகீலா நின்றிருந்தாள். ராகீலா 65 வயது முதியவள். முனிபா வீட்டில் வேலை பார்ப்பவள்.

“இளங்கலை பல் மருத்துவத்தை தங்கப் பதக்கம் வென்று முடித்துள்ளேன்!”

“பல் டாக்டர் தானே? மெயின் மருத்துவ படிப்புகளை விட டென்டல் ஒரு படி கீழ்தானே?”


“அப்படி யார் சொன்னது? ஒரு இதயத்தின் பிரச்சினைகளை சரி பண்ண படித்தால் அவர் கார்டியாலஜிஸ்ட். ஒரு மனிதனின் 32 பற்களின் பிரச்சனைகளைச் சரி பண்ண படித்தவன்/ ள் ஒரு டென்டிஸ்ட். பல் பராமரிப்புக்கும் இருதய ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. நான் தொடர்ந்து எம்டிஎஸ் மற்றும் பிஹெச்டி பண்ணுவேன்!”

ஃபமிதாவுக்கு தெரியாமல் உதட்டைச் சுழித்தாள் முனிபா.

ஒரு இழிவான முகபாவத்தை ராகீலாவிடம் காட்டினாள். நாக்கை நீட்டி வழிப்பம் செய்தாள். உடலை ஒரு மாதிரி ஆட்டி காட்டினாள். கண்களால் ஜாடை செய்தாள்.

‘என்னவோ பெருசா படிச்சுக் கிழிச்ச மாதிரி பீத்திக்கிறா?’

“லட்டு எடுத்துக்கங்க சாச்சி!”

“கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்டா?”

“இல்ல… வேற கடை…”

“எனக்கு தான் சுகர் இருக்கே.. லட்டு வேணாம்மா!”

“எப்பவாவது ஒரு நாள் ஒரு லட்டு சாப்பிட்டால் ஒண்ணும் ஆய்டாது. சாப்பிடுங்க சாச்சி!”

லட்டை எடுத்து ஊட்டினாள் ஃபமிதா ஷஹர்.

இடது கையில் அப்படியேத் துப்பி விரல்களை மூடிக்கொண்டாள் முனிபா.

“என் எதிர்காலம் சிறக்க அல்லாஹ்விடம் துஆ பண்ணுங்க சாச்சி!”

பற்களை நறநறவென கடித்தாள் முனிபா. “துவாதானே பண்ணிடலாம்…”

“நான் புறப்படுகிறேன் சாச்சி!”

“இம்!”

மீண்டும் 500 ரூபாய் நோட்டுகளை எண்ண ஆரம்பித்தாள் முனிபா. வெளி வாசலுக்கு நடக்கும் ஃபமிதாவை பின் தொடர்ந்தாள் ராகீலா.

திரும்பி ராகீலாவை பார்த்துவிட்டாள் ஃபமிதா.


“ஆஹா… உங்களை மறந்துட்டேன் ராகீலா நன்னி… லட்டு எடுத்துக்கங்க… நான் பிடிஎஸ் பாஸ் பண்ணிட்டேன்!”

“எனக்கு ஒரு நாள் பல்செட் கட்டிவிடும்மா…”

“ப்ரீயாகவே செஞ்சு தரேன்.. நீட் எழுதுற வரைக்கும் ஒரு டென்டல் கிளினிக்லதான் வேலை பாக்கப் போறேன்”

“நன்றி செல்லம்… உனக்கொரு விஷயம் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்!”

“சொல்லுங்க நன்னியம்மா!”

“உங்க சாச்சிக்கு அவளோட மகள் மருமகன் தவிர யாரும் உங்க குடும்பத்ல டாக்டரா இருக்க கூடாதுன்னு நரி விருப்பம். நீ பிடிஎஸ் படிச்சது அவளுக்கு படுஅதிருப்தி. இன்னும் ஒரு மாசத்துக்கு நிம்மதியா தூங்க மாட்டா. அவ சட்டில மொஹல் பிரியாணி இருந்தாலும் அடுத்தவங்க சட்டியில கம்பங்கூழ் இருக்கவும் பொறுக்க மாட்டா உன் சாச்சி…”

“அப்படியா?”

“நீ கொடுத்த லட்டை தின்னாளா அவள்? நீ ஊட்டி விட்டதை கூட இடது கைல துப்பி மறைச்சிட்டா..”

“ஓஹோ!”

“நீ பேசும்போது அவ என்கிட்ட காட்டின எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் பார்த்திருந்த நொந்து நூலா போயிருப்ப…”

“கத்தியால குத்தினாலும் தாங்கிப்பேன் குத்துறது சாச்சியாச்சே?”

“உங்க சாச்சி மாதிரி கேரக்டர்களை இஸ்லாம் என்ன பெயரிட்டு அழைக்குது தெரியுமா?”

“தெரியாது!”

“உங்க சாச்சி ஒரு முனாபிக்!”

“அப்டின்னா?”

“யர்பூ என்கிற மணல் எலி ஒன்று இருக்கிறது. அது இரு இடங்களில் குழி தோண்டி உள்ளே இரண்டையும் இணைத்து ஒரு வளையாக ஆக்கிக் கொள்ளும். எதிரியைக் கண்டால் ஒரு குழிக்குள் நுழைந்து இன்னொரு குழி வழி ஓடிவிடும். ஒரு குழி பெயர் நாபிகா. இன்னொரு குழி பெயர் காசிஆ. நாபிகா என்கிற வார்த்தை முனாபிக் என மாறியது!”

“எங்க சாச்சியை பெரிய வார்த்த எல்லாம் சொல்லி அவதூறு பண்ணாதீங்க நன்னிம்மா!”

“நான் உங்க சாச்சிகிட்ட 22 வருஷமா வேலை பாக்றேன்… யார் வளர்ச்சி கண்டும் உங்க சாச்சி சந்தோஷப்பட்டதில்லை. பொறாமை பொறாமை பொறாமை தான். முனாபிக்குக்கான அடையாளங்களை சொல்கிறேன் கேள்…”

கண்களை அகலத்திறந்தாள் ஃபமிதா ஷஹர்.

“முனாபிக்குகள் என்னென்ன செய்வார்கள் என பட்டியலிடுகிறேன் கேள்… பொய்கள் பேசுவார்கள். வாக்குறுதி மீறுவார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்வார்கள். வாதத்தில் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். குணக்கொலை நிகழ்த்துவார்கள். சண்டையை ஆரம்பித்து வைத்துவிட்டு நடிப்பார்கள். சோம்பலான நாடக இறைவணக்கங்கள் செய்வார்கள். ஆடம்பர ஆடை அலங்காரப் பேச்சு தூய்மையற்ற இதயம் கொண்டவர்கள். மொத்தத்தில் இரட்டை முகம் இரட்டைப் பேச்சு… இந்த அத்தனைக் கெட்டக் குணங்களும் உன் சாச்சியிடம் மண்டிக் கிடக்கிறது!”

“உறவினர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்… நாம்தான் சகித்துப் போவனும் நன்னிம்மா!”

“நரகத்தின் அடித்தளத்தில் முனாபிக் எனும் நயவஞ்சகர்கள் வெந்து சீரழிவார்கள்!”

“ஓ!”

“முனாபிக்குகள் மந்தையில் கள்ள ஆடுகள். முனாபிக்குகள் வேஷதாரிகள். முனாபிக்குகள் போலி முஸ்லிம்கள். முனாபிக்குகள் பாசாங்குகாரர்கள் நயவஞ்சகர்கள் பொய் சத்தியம் செய்பவர்கள். அராஜக ஆட்சியாளர்களோடு கூட்டு சேர்வார்கள். ஒரு முனாபிக்கை முதலாளி என அழைக்கக் கூடாது….”

சிரித்தாள் ஃபமிதா ஷஹர்.


“என்ன நன்னிம்மா உங்களுக்கும் எங்க சாச்சிக்கும் சண்டையா? எங்க சாச்சியை கழுவிக்கழுவி ஊத்றீங்க? ஆண்களில் முனாபிக் இருக்கலாம் பெண்களிலுமா முனாபிக் இருக்கிறார்கள்?”

“நியாயமான காரணமின்றி விவாகரத்தும் திருமணமும் கோரும் பெண்கள் முனாபிக்குகளே!”

“அவ்வளவுதானே நான் போகலாமா?”

“முனாபிக்குகள் குழப்பமான மனம் உடையவர்கள் இன்பத்தின் மயக்கத்தில் திளைப்பவர்கள். தற்பெருமை கொண்டவர்கள். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்வார்கள். பதட்டமான தடுமாற்ற மனதுடனேயேத் திரிவார்கள். நயவஞ்சகம் பேச்சிலும் நடத்தையிலும் மட்டும் செய்ய மாட்டார்கள். கண்களாலும் செய்வார்கள். கண் ஜாடை, கண் சிமிட்டல், உதடு சுழிப்பு மூலம் நெகட்டிவ்விட்டியைப் பரப்புவார்கள்!”

“ஓவ்!”

“நயவஞ்சகர்களுக்குக் கீழ்படியாதே, அவர்களைப் புறக்கணி, அவர்களிடம் வாக்குவாதம் பண்ணாதே அவர்களின் துர்நடத்தையை இழிவாகப் பேசு, அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதே”

“நயவஞ்சகத்தை எப்படிச் சாத்வீகமாக வெல்லலாம்?”

“40 நாள் தினசரிக் கூட்டுத் தொழுகை. பரோபகாரம் இரவில் பிரார்த்தனை. ஜிஹாத் திக்ர் துஆ அன்சாரி மீதான அன்பு. அலி இப்னு அலி தாலிப் மீதான அனபு…”

“பேசி முடிச்சிட்டீங்களா நன்னியம்மா. நெருங்கிய உறவுகளில் யார் முனாபிக் என்கிற ஆராய்ச்சி தேவையற்றது. பொறாமையும் சுயநலமும் இல்லாத மனிதர்கள் ஏது? இளங்கலை பல் மருத்துவத்தில் நான் தேர்வான விஷயத்தை இனிப்புடன் பகிர்ந்து கொள்ள சாச்சியிடம் வந்தேன். சாச்சியின் உள்ளக்கிடக்கை இறைவன் அறிவான். சாச்சியின் மகள் மருமகன் தவிர நான்கைந்து பேர் நம் குடும்பத்தில் மருத்துவராய் உள்ளனர். இரண்டு மூன்று பேர் மருத்துவம் படித்தும் வருகின்றனர். யார் முன்னேற்றத்தையும் யாரும் குறுக்கேப் படுத்துத் தடுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்”

உள்ளே... முனிபாவின் காலடியில் ஊர்ந்து வந்த நட்டுவாக்கலி முனிபாவின் கால் விரலில் கொடுக்கால் ஒரு போடு போட்டது.

முனாபிக் முனிபா வானம் வெடிக்க வலி தாளாது ஊளையிட்டாள்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p51.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License