இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

52. ஒருவன் குரல்


சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்.

பள்ளிவாசலின் இடது புறம் மதரஸா இணைந்திருந்தது.

முதன்மைப் பள்ளிவாசலின் முதல் தளம் கட்டப்பட்டு பணி நிறைவுறும் நிலையில் இருந்தது.

வெள்ளிக்கிழமை மணி நண்பகல் 12.15 மணி.

ஜுஆம்மா தொழுகைக்கு நேரம் இருந்ததால் தொழுகையாளிகள் சிலர் கூடியிருந்தனர்.

ஓட்டி வந்த ஸ்போர்ட்ஸ் சைக்கிளை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் அப்பாஸ் அப்ரிதி. முன் சக்கரத்துக்குள் சங்கிலி இட்டுப் பூட்டினான்.

அப்ரிதிக்கு வயது 28. பருமன் ஆன உடல். கலைந்த தலைமுடி. மேல் வரிசைப் பற்கள் முழுவதும் தெற்றி அணில் போல் வாயைக் கூம்பலாய் வைத்திருந்தான்.

பட்டை மீசை. குயுக்தியாய் யோசிக்கும் கண்கள். பேண்ட்டை இடுப்புக்கு மேல் உயர்த்தியிருந்தான். கால் பக்கத்தைச் சுருட்டியிருந்தான். பட்டை பெல்ட். கழுத்து வரை பட்டன் போடப்பட்ட சட்டை. பாத்ரூம் செருப்பு அணிந்திருந்தான். சட்டை பாக்கட்டில் துணித்தொப்பி வீங்கிய வயிறு.

ஒளு செய்யப் போன அப்ரிதி மஸ்ஜித்தின் இரு மோதினார்களில் ஒருவரைப் பார்த்து விட்டான். “அஸ்ஸலாமு அலைக்கும். பீகார்லயிருந்து மோதினார் வேலைக்கு கோயம்புத்தூருக்கு வந்திட்டீங்களாக்கும். நீங்களா வரீங்களா, மத்திய அரசு விரும்பி உங்களை எல்லாம் அனுப்புதா?”

அரைகுறையாகப் புரிந்து கொண்ட மோதினார் நம்பர் ஒன், “நைநை” என மறுத்தார்.

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது மோதினார்!”

தர்மசங்கடமாய்ச் சிரித்தார் மோதினார் நம்பர் ஒன்.

“ஒரு மஸ்ஜித்ல ரெண்டு மோதினார் இருக்கீங்களே… ஒரே உறைல இரு கித்தாப்புகள். உங்களுக்குள்ள முட்டல் மோதல் வரல”


“வராது அவர் அஸ்ஸாம். நான் பீகார் ரெண்டு நார்த் சண்டை போட்டுக்குமா?”

“இப்பத்தான் குளிச்சிட்டு ஈரத்துணியோட வரீங்க… எப்ப ரெடியாகி பாங்கு சொல்லுவீங்க?”

“பாங்கு சொன்னா சரியான நேரத்திலப் பாங்கு சொல்லிடுவேன்!”

“பாங்கு சொன்னா சரிதான்!” நோன்புக்கஞ்சி காய்ச்சும் தேக்ஸா பக்கம் போனான் அப்ரிதி.

“இன்னைக்கிக் கறிக்கஞ்சியா, சாதாக்கஞ்சியா?”

கஞ்சி தயாரிப்பவர் “சாதாக் கஞ்சிதான்!”

“நேற்றைக்கி கஞ்சில உப்பு அதிகம்!”

உள்வாசலில் போய் நின்று கொண்டான் அப்ரிதி. அப்ரிதியைக் கடந்து ஒரு தொழுகையாளி உள்ளேப் போனார்.

அப்ரிதி குரலை உயர்த்தி, “எவ்வளவு உரிமையா மஸ்ஜித்துக்குள்ள வரத் தெரியுது? ஆறு மாசமாச் சந்தாவைக் கட்டாம இழுத்தடிக்கிறியே நியாயமா? கஞ்சிக்குப் பணம் குடுத்தியா? டெய்லி ஒரு பெரிய சட்டியைத் தூக்கிட்டுக் கஞ்சி வாங்க வரியே வெக்கமாயில்ல?”

அந்தத் தொழுகையாளி வாய்க்குள் முணுமுணுத்தார். “இந்தக் கிறுக்கன் மானத்தை வாங்குறானே?”

இன்னொரு தொழுகையாளி உள்ளேப் போனார்.

“பள்ளி விரிவாக்கத்துக்கு 40 மூட்டை சிமின்ட் ஹதியா தர்றதா சொல்லி மூணு மாசமாச்சு, சொன்னபடி சிமின்ட்டைத் தரவே இல்லையே ஏன்? வாக்குரைத்தபடி நடந்து கொள்ள மாட்டாயா?”

அந்த தொழுகையாளி பற்களை நறநறவெனக் கடித்தார்.


“நாளைக்குள்ள நாப்பது மூட்டை சிமின்ட்டை பள்ளிக்கு குடுத்து செட்டில் பண்ணனும்!”

ஒரு தொழுகையாளி தொப்பி இல்லாமல் வந்து பள்ளியின் கூடையில் இருக்கும் பிளாஸ்டிக் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டார்.

“நீ சொந்தமா ஒரு தொப்பி வச்சுக்க மாட்டாயா? நீ தவ்ஹீத்தா, நஜாத்தா, ஜாக்கா, பிஜே குரூப்பா? உளவு பாக்க, சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு வரியா?”

அந்தத் தொழுகையாளி பிளாஸ்டிக் தொப்பியாலேயே முகத்தை அடித்துக் கொண்டார்.

திடீரென்று ஒரு குண்டு தொழுகையாளி உள்ளே நுழைந்தார்.

“நீ பள்ளிக்குத் தொழ வரியா, இல்ல குசு போட வரியா? ஹீரோஷிமா, நாகசாகியை விட பயங்கரமா இருக்கு நீ போடுற பாம்!”

“நானென்ன வேணும்னா போடுறேன்… வருது… அடக்க முடியல…”

அமர்ந்திருந்த ஒரு தொழுகையாளி அப்ரிதியை நோக்கிச் சப்தம் போட்டார். “ஏ தாவூத் மகனே, லூஸ் பயலே, வாயைப் பொத்திக்கிட்டு மாடிக்கு தொழப்போ... இல்ல உன்னை முத்தவல்லிகிட்டச் சொல்லி கை கால்களைக் கட்டி கிணத்திலப் போடச் சொல்லிருவேன்!”

“ஆவ்… இசுக்கு புசுக்கு!”

மாடிப்படிக்கட்டுகள் ஏறி எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜிஆர் போல நின்றான் அப்ரிதி. “எப்பா தொழுகையாளிகளா, தொழுகை முடிஞ்சதும் இரண்டு பக்கெட்களை தூக்கிக்கிட்டு உங்ககிட்ட ஹதியா கேட்டு வராங்க பள்ளி நிர்வாகிகள்... நீங்க என்ன பண்றீங்க? ஒளிச்சு மறைச்சு அஞ்சு ரூபாக் காயினை போடுறீங்க. சிலர் கிழிஞ்ச பத்து ரூபா நோட்டைப் போடுறீங்க… திருத்துங்கப்பா…”

பெரும்பாலான தொழுகையாளிகள் கண்களை மூடித் திறந்தனர்.

“நம்ப மஸ்ஜித்துக்கு ஒருத்தர் தொழ வராரு. அவரு தன்னுடைய காஸ்ட்லியான செருப்பை எல்லாத் தொழுகையாளிகளும் செருப்பைக் கழட்டிப் போடுற இடத்திலக் கழட்டிப் போட மாட்டாரு… அதை தன் ஸ்கூட்டியின் பில்லியனின் அடில பதுக்குவாரு… சக தொழுகையாளிகளின மீது அவ்வளவு நம்பிக்கை!”

“இதெல்லாம் ஒரு குறைன்னு பேசுவியா ஓட்டைவாயா?”

“ஒரு தொழுகையாளி தன்னுடைய இரு மகன்களைக் தொழக் கூட்டிட்டு வருவார். அதுகளுக்கு வயசு நாலும் ஆறும். இரண்டும் தொழும் போது குறுக்கே நெடுக்கே ஓடி ரௌசு பண்ணுங்க!”

“சிறுசுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். ஒரு இமாம் தொழ வந்த சிறுவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடும் விடியோ பாக்கலையா நீ?”

“சில தொழுகையாளிகள் கால்ல வென்னி தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி இமாமின் பயான் முடிந்த பிறகுதான் வருவார்கள். தொழுகை முடிந்ததும் துஆ ஓதாமல் குறுக்கேப் புகுந்து ஓடி விடுவார்கள்… எதுக்கு ஓடுறாங்கன்னா... ஒரு கிலோ மாட்டுக்கறி கிரேவி வீட்ல ரெடியா இருக்கும். போய் சுடச்சுட வெட்டத்தான்!”

“அசிங்கப்படுத்துறானே...”

“சில தொழுகையாளிகள் அல்லாஹ்வை வணங்குவார்கள், இறைத்தூதரை மதிக்க மாட்டாங்க… தொழுகையாளிகள் கூட்டத்தோடு சேந்து ஸலவாத் சொல்ல மாட்டாங்க... வாய் பிசின் போட்ட மாதிரி ஒட்டிக்கும்!”

பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் சிரித்தபடி ஓடி வந்தார்.


“அப்ரிதி! ஜுஆம்மா தொழ வர்ற தொழுகையாளிகளை இழிவுபடுத்தாதே…. உனக்குச் சில தொழுகையாளிகளின் நடவடிக்கை பிடிக்கலைன்னா தொழ வராதே….”

“நான் வருவேன்!”

“உன் வாய்க்குள்ள மிளகாப் பொடியைத் திணிக்க வேண்டியதுதான்!”

“மிளகாப்பொடியோட மாங்காய் வடுவையும் திணிச்சா கர்க்முர்க்குன்னு சாப்பிட்டுக்குவேன்!”

“நீ கிறுக்கா அல்லது கிறுக்கு மாதிரி நடிக்ற காரியக்காரனா?”

“மனுசப்பயலுக எல்லோரும் லூஸ்கள்தான்... ஒவ்வொரு விதத்தில...”

“மோதினார் பாங்கு சொல்லப் போரார்… இப்பவாவது அமைதிப்படு அப்ரிதி!”

அமைதியானான்.

மோதினார் பாங்கு சொன்னார்.

இமாம் குறிப்புகளுடன் வந்து பயான் சொல்ல ஆரம்பித்தார். அப்ரிதி அமைதியாக போய் முதல் தளத்தில் அமர்ந்தான்.

“தொழுகை முக்கியம்தான்… ஆனா தொழ வர்றவங்க கல்ப்பை சுத்தமா வச்சுக்கங்க!”

“லைப்பாய் சோப் போட்டு கல்ப்பை கழுவிக்கிரம்.. போதுமா?”

“வட்டி வாங்கி தொழில் பண்றவங்க பள்ளிக்குத் தொழ வராதிங்க!”

“போடா போடா… உங்கப்பனே என்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கான்டா.. உன் ட்ரீட்மென்ட் செலவுக்கு... பைத்தியக்காரப் பயலே!”

முத்தவல்லியின் அறைக்கு முன் இருபதுக்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் குழுமினர்.

“இந்த அப்பாஸ் அப்ரிதியின் அட்டூழியம் வரவர தாங்க முடியல. அவன் பள்ளிக்குள் நுழையக்கூடாதுன்னு தடை போடுங்க….”

முத்தவல்லி சிரித்தார்.

“அவன் எல்லா கசப்பான உண்மைகளையும் பப்ளிக்ல போட்டு உடைக்கிறான்ல...”

‘தொழுகையாளிகளின் உள்ளும் புறத்தை ஆராய அவனுக்கு யார் அனுமதி கொடுத்தது?”


“யாரும் அனுமதி கொடுக்கல…. அந்த உரிமையை அவனே எடுத்துக் கொண்டான்... அவன் இந்த மஹல்லாவின் மனசாட்சி!”

“ரொம்ப சந்தோஷப்படாதிங்க… நாளைக்கு உங்களையும் இமாமையும் பத்தி அவதூறு பேசுவான்!”

“நாங்கள் தவறு செய்யவில்லை. தவறு இருப்பது தெரிந்து அவன் சொன்னால் எங்களை நாங்கள் திருத்திக் கொள்கிறோம்!”

“நீங்கள் பேச வேண்டியவைகளை அவனை விட்டுப் பேசி வன்மம் தீர்த்துக் கொள்கிறீர்களா முத்தவல்லி?”

“ஒரு நாளும் அப்படி நான் செய்ய மாட்டேன்!”

“அப்பாஸ் அப்ரிதியை தொடர்ந்து நம் மஸ்ஜித்துக்குள் அனுமதித்தீர் என்றால் நாங்கள் இனிமேல் வேறு பள்ளிக்கு தொழப் போய் விடுவோம்!”

அப்ரிதியின் தந்தைக்கு கைபேசினார் முத்தவல்லி “அஸ்ஸலாமு அலைக்கும் இனி நம் பள்ளிக்கு உங்கள் மகன் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...”

வேறொரு பள்ளியில்….

அப்பாஸ் அப்ரிதி நின்று கொண்டு தொழுகையாளிகளின் நெகடிவ் அம்சங்களைப் போட்டு தாளித்துக் கொண்டிருந்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p52.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License