இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

55. சந்தூக்கு


பூனைமலை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்.

கேனன் இஒஎஸ் ஆர் 5 மார்க் டிஜிட்டல் கேமிரா நின்றிருந்தது.

தலையில் ‘நான் ஒரு கேமரா ஓவியன்’ வாசகங்கள் கூடிய தொப்பி அணிந்து நின்றிருந்தார் கேமிராமேன்.

ஆங்காங்கே ரிப்ளக்டர்கள்.

படப்பிடிப்பின் ஒட்டுமொத்த ஒலியையும் பதிவு செய்யும் ஒலிப்பதிவுக் கருவி.

இயக்குனர் சாரா புதியவன் நடிகர் கிருஷ்ணராஜாவிடம் காட்சியைப் பற்றி விளக்கினார்.

“காட்சிப்படி நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைக் குளிக்க வைத்துக் கபன் துணி போர்த்தி சந்தூக்கில் கிடத்தி பள்ளிவாசலுக்கு ஜனாசா தொழுகைக்குத் தூக்கி வருகிறார்கள்!”

“சின்னச் சந்தேகம். கபன்துணி என்றால் என்ன? சந்தூக்கு என்றால் என்ன? ஜனாசா தொழுகை என்றால் என்ன?”

“நல்லடக்கம் செய்யவிருக்கும் ஒரு இஸ்லாமியனின் உடலை முழுவதும் போர்த்தும் காடாதுணி கபன் துணி. சந்தூக்கு என்பது நான்கு முனைகளில் நான்கு அல்லது எட்டு பேர் பிரேதத்தை சுமந்து செல்லும் மரப்பல்லாக்கு. ஜனாஸா தொழுகை இறந்தவருக்காக நடத்தப்படும் அஞ்சலி தொழுகை!”

“புரிகிறது, காட்சியைச் சொல்லுங்கள்!”


“உங்களை கபன்துணி போர்த்தி சந்தூக்கில் உறவினர்கள் தூக்கி வரும் போது பள்ளிவாசலின் வெளிவாசலில் மறிக்கப்படுகிறீர்கள். மறிப்பவர்கள் உங்கள் இரு மூத்த மகன்கள். ‘இறந்த செய்தியை எங்களுக்கு சொல்லாமல் சவ அடக்கம் செய்ய எங்கத்தாவை ஏன் பள்ளிக்குக் கொண்டு வந்தீர்கள்’ என சண்டை இடுகிறார்கள்!”

“சரி… நான் இந்தச் சண்டைக்கு இடையே சந்தூக்கில் அமைதியாக படுத்திருக்க வேண்டும் இல்லையா?”

“ஆமாம்! இந்த ‘மாஷா அல்லாஹ்’ படம் உங்கள் சினிமா கேரியருக்கான செகன்ட் இன்னிங்ஸ்!”

இருபது பேர் ஊர்வலம்.

எட்டு பேர் சந்தூக்கை தூக்கி வர, பள்ளியின் வெளிவாசலில் இரு மகன்களாய் நடிக்கும் நடிகர்கள் ஊர்வலத்தை இடைமறிக்கின்றனர்.

“ஸ்டார்ட்! கேமிரா! ஆக்ஷன்!”

காட்சி ஓடும் போது ஒரு கர்ணக்கடூரகுரல் சாரா புதியவனை உலுக்கியது.

“நிறுத்துங்க இந்த ஷுட்டிங்கை!”

“கட்! கட்!” இயக்குனர் குரல் வந்த திசைக்கு திரும்பினார்.

தலைகேசத்துக்கும் தாடிக்கும் ஆரஞ்சு நிற டை அடித்த 70 வயது முதியவர் காட்சியமைப்புக்குள் தோன்றினார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்! யார் நீங்க?”

“நான் இந்த பள்ளிவாசல் முத்தவல்லி!”

“என்ன விஷயம்? ஷூட்டிங்கை ஏன் இடைமறிக்கிறீர்கள்?”

“நீ இந்த படத்தின் டைரக்டரா?”

“ஆமா!”

“உன் பேர் என்ன?”


“சினிமாவில் என் பெயர் சாரா புதியவன். இயற்பெயர் காஜாமைதீன். சொந்த ஊர் கடையநல்லூர். இது என் நான்காவது படம். இந்தப் படம் மூலம் இஸ்லாமியரின் வாழ்வியலை வெகுஜனப் பார்வைக்குக் காட்சிப்படுத்தப் போகிறேன்!”

“இதெல்லாம் நான் கேட்டேனா? யாரை கேட்டு எங்கள் பள்ளிவாசலில் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்? பள்ளியின் சந்தூக்கை நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?”

“படப்பிடிப்புக்கு உங்கள் பள்ளிவாசலின் பொருளாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றுள்ளோம். பள்ளிவாசலின் வளர்ச்சி நிதிக்கு 25000 ரூபாய். ஹதியா கொடுத்துள்ளோம்!”

“ஒரு பள்ளியில் முத்தவல்லி பெரியவரா, பொருளாளர் பெரியவரா”

“அல்லாஹ் பெரியவன்!”

“உங்கள் படப்பிடிப்பு குழுவில் எத்தனை காபிர்கள் இருப்பார்கள்?”

“அமில வார்த்தையை வீச வேண்டாம். இருபதுக்கும் மேற்பட்ட பிற சமயச் சகோதரர்கள் எங்கள் படப்பிடிப்புக் குழுவில் இருக்கிறார்கள்!”

“அவர்கள் எங்கள் பள்ளிக்குள் அத்துமீறி பிரவேசித்தது ஹராமான செயல். சந்தூக்கை அவர்கள் தொட்டு தூக்கியது நஜீஸ்!”

தயாரிப்பாளர் ஓடி வந்தார். அழகிய முகமன் பரிமாற்றம்.

“நாங்கள் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள். க்ரவுட் பண்டிங் மூலம் பணம் சேர்த்து இந்த படம் எடுக்கிறோம்…”

“சினிமா ஷைத்தானின் கண்கள்… சினிமா எந்த வடிவத்திலும் பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம்!”

“ஆங்கிலேயரின் ஆட்சியின் போது ‘ஆங்கிலம் கற்பது ஹராம்’ என பத்வா கொடுத்தீர்கள். உங்களை போன்ற பழைமைவாதிகளுக்கு ஓவியம் ஹராம் - இசை ஹராம் - இலக்கியம் ஹராம் - புகைப்படம் ஹராம் - கவிதை ஹராம். ஹராம்ஹராம் எனக் கூவிக் கொண்டே வெகுஜன ஊடகங்களிலிருந்து விலகி தனித்து நிற்கிறீர்கள். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கென தனி டிவி சானல் இருக்கிறதா? தினசரி இருக்கிறதா? எப்எம் ரேடியோ இருக்கிறதா? கண்ணிருந்தும் பார்க்காதவர்களாய் காது இருந்தும் கேளாதவர்களாய் வாயிருந்தும் பேசாதவர்களாய் நூறு வருடம் பின்தங்கி நிற்கிறோம். மலையாளத்தில் மிக அருமையான இஸ்லாமிய படங்கள் வருகின்றன. தமிழில் அது போல் வராததற்கு உங்களைப் போன்றோரின் துர்நடத்தைகள் தான் காரணம்!”

“தமிழ் சினிமா எடுத்து அதில் இஸ்லாமியர்களை குத்தாட்டம் போடச் சொல்கிறீங்களா?”

“எந்த விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. உலகம் முழுக்க ஆயிரம் மில்லியன் பேர் சினிமா பார்க்கிறார்கள்… கத்தியால் அறுவை சிகிச்சை செய்து ஒரு உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம். அதேக் கத்தியை வைத்துக் கொலையும் பண்ணலாம்!”

“எனக்குப் பாடம் நடத்துகிறீர்களா?”

“கசக்கும் உண்மையைச் சொன்னோம். ‘மாஷா அல்லாஹ்’ கதையைக் கேளுங்கள். கேட்டபின் நீங்களே மனம் மாறுவீர்கள்!”

“தேவையில்லை… கற்பனையால் நிஜத்தைச் சொல்லும் உத்தி எனக்குப் பிடிக்காது!”

“இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

“என் அனுமதி இல்லாமல் பள்ளிவாசலில் ஷுட்டிங் நடத்தியதற்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கிறோம். காபிர்கள் கைபட்ட சந்தூக்கை இனி நாங்கள் பயன்படுத்த மாட்டோம். எங்கள் சந்தூக்கை போலவே அச்சுஅசலாய் ஒரு புது சந்தூக்கு செய்து கொடுத்து விடுங்கள்!”

“இது அநியாயம்!”

“எங்கள் பள்ளியில் நான் வைத்ததுதான் சட்டம். அபராதம் கட்டாவிட்டால் படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் சிறைப் பிடிப்போம். புது சந்தூக்கு செய்ய மூன்று நாட்கள் அவகாசம். நாங்கள் சொல்லும் ஆசாரி வைத்து நீங்கள் புது சந்தூக்கு வடிவமைத்துத் தர வேண்டும்!”


படப்பிடிப்புக் குழுவினர் ஒரு பக்கமும் முத்தவல்லி மற்றும் முத்தவல்லியின் கைத்தடிகள் ஒரு பக்கமும் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டனர்.

வாய்ச் சண்டை கைச்சண்டையாய் முற்றும் நிலையில் கிருஷ்ணராஜா குறுக்கே புகுந்தார்.

“நானும் சினிமா துறைல நாற்பது வருஷமா இருக்கேன். முப்பது படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கிறேன். இஸ்லாமியச் சினிமா எடுப்பது கயிறு மேல் நடனம். தடுமாறி எந்தப் பக்கம் விழுந்தாலும் சிங்கம் புலிக்கு இரைதான்!”

“நீங்க என்ன தனியா பேருரையாற்றுகிறீர்கள்?”

“மிஸ்டர் முத்தவல்லி கடைசியா ஒன்று சொல்றேன். அபராதம் அம்பதாயிரம் நானே கட்றேன். புது சந்தூக்கு தேக்கு மரத்தில் செய்து தருகிறோம். தீட்டுப்பட்ட உங்கள் பழைய சந்தூக்கை எங்களிடம் கொடுத்து விடுங்கள்!”

“தர முடியாது!”

“நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால் போலீஸுக்கு போன் செய்வேன். அவர்கள் உங்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவார்கள்”

“மிரட்டுகிறீர்களா?”

“அரசியல் நடப்பு புரிந்து கொள்ளுங்கள். அம்பதாயிரம் பணம் இப்போதேத் தருகிறேன். புது சந்தூக்கு மூன்றே நாட்களில்!”

முத்தவல்லி தனது சகாக்களுடன் தனியே போய் கிசுகிசுப்பாய் பேசினார்.

பத்து நிமிடம் கரைசலில் வந்து “சரி” என்றார்.

புது சந்தூக்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பள்ளிவாசலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு லாரியில் பழைய சந்தூக்கை ஏற்றினர்.

தயாரிப்பாளர் கிருஷ்ணராஜாவிடம், “இந்த பழைய சந்தூக்கை என்ன பண்ண போறீங்க?”

“இந்த மூணு நாட்கள்ல தமிழ்நாட்ல இருக்ற பள்ளிவாசல்கள் எல்லாவற்றையும் அலசி சந்தூக்கு இல்லாத பள்ளிவாசலை கண்டுபிடித்து விட்டேன். அந்தப் பள்ளி தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது. பள்ளி இருக்கும் நகர் மத நல்லிணக்கப் பேட்டை. அங்கேயே ஷூட்டிங்கை தொடரலாம். அந்தப் பள்ளி முத்தவல்லிக்கு படத்தில் ஒரு சிறு வேஷம் தருவதாக வாக்கு தந்திருக்கிறேன்!”


மத நல்லிணக்க பேட்டையில் ஷுட்டிங் முடிந்த இரவு.

கிருஷ்ணராஜா படத் தயாரிப்பாளரிடம், “மாஷா அல்லாஹ்வுக்கு பிறகு புதுசா எதுவும் இஸ்லாமியப் படம் எடுக்க மாட்டீர்கள்தானே?”

“ஒற்றை மரக்குயில் கூவுவது போல, வனாந்திரத்தில் ஒரு மகிழம்பூ மலர்வது போல, லட்சம் பழைமைவாதக் குரல்களில் உயர்ந்தொலிக்கும் ஏகாந்தக்குரல் போல தொடர்ந்து இஸ்லாமியப் படங்கள் எடுப்போம்- ஈரானியன் சினிமாத் தரத்தில்… இறைவன் நாடினால்!”

“இறைவன் அருள் புரிவானாகட்டும்!” என்றனர் கிருஷ்ணராஜாவும் சாரா புதியவனும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p55.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License