இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

54. தீனிய்யாத்


திருநெல்வேலி பேட்டை ரஹ்மானியா பள்ளி.

‘கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம்’ என்கிற விளம்பரப் பதாகை வெளிவாசலில் கட்டப்பட்டிருந்தது.

அந்தப் பதாகையில், “01.05.2025 முதல் 31.5.2025 வரை, தினமும் காலை பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை ஆண்- பெண்கள் இருவரும் கலந்து கொள்ளலாம். வயது 9லிருந்து 17 வரை. அனுமதி இலவசம்” என்று இடம் பெற்றிருந்தன.

மரத்தடியில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி.

அவரைத் தொடர்ந்து மௌலானா சுல்தான் அலாவுதீன் பாஸி ஹழ்ரத்தும் மௌலானா அர்ஷத் காஷிபியும் வந்து சேர்ந்தனர்.

அவர்களிருவரும் ஷாகுல் ஹமீது ஜலாலிக்கு தீனிய்யாத் வகுப்பு நடத்துவதில் உதவி செய்ய வந்திருக்கின்றனர்.

தலையில் தொப்பியுடன் கையில் கித்தாப்புடன் சிறுவர்களும் ஹிஜாப் அணிந்த சிறுமிகளும் வர ஆரம்பித்தனர்.

உள்ளறையில் சிறுவர்களுக்கு தனியாக கம்பளமும், சிறுமிகளுக்குத் தனியாக கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தன.


பத்து வயது மெஹர் பானுவும் 12 வயது உஸ்மான் அலியும் ஷாகுல் ஹமீது ஜலாலியை பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்!”

“வலைக்கும் ஸலாம் என் செல்லங்களா!”

“சில கேள்விகள் கேட்கலாமா ஹஜ்ரத்?”

“ஒவ்வொருவரா கேளுங்கள்!”

“தீனிய்யாத் என்றால் என்ன?” மெஹர் பானு

“மதக்கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வி என்று பொருள். பள்ளிகளில் முழுப் பரிட்சைக்குப் பிறகு கோடைகால விடுமுறை விட்டிருப்பார்கள் இல்லையா? அந்த விடுமுறை காலத்தில் தீனிய்யாத் வகுப்புகள் நடத்துகிறோம். மொத்தம் 30 நாட்கள் 60 மணி நேரம்… மார்க்கத்தைப் பற்றி ஓரளவு தெரிந்தவருக்கும் மார்க்கத்தைப் பற்றி எதுவுமேத் தெரியாதவருக்கும் இந்த தீனிய்யாத் கோடைகால பயிற்சி முகாம் மிக மிக உதவியாக இருக்கும்!”

“இந்தப் பயிற்சி முகாம் நடத்த உங்களுக்குச் சம்பளம் தருவார்களா?”

“இல்லை.. இது மார்க்கச் சேவை”

“உங்களுக்கு உதவியாக வந்திருக்கிறவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?”

“ரியாலுள் ஜினான் அரபுக் கல்லூரியிலிருந்து!”

“தீனிய்யாத் பயிற்சி முகாமில் என்னென்ன சொல்லித் தருவீர்கள் ஹஜ்ரத்?”

“நல்ல கேள்வி, குர்ஆனை ஓதுவது சூரா மனப்பாடம், ஹதீஸ் -துஆ சுன்னத், ஹதீஸ் மனப்பாடம், கொள்கை மஸாயில் – கொள்கைகள், தொழுகை, மார்க்கச் சட்டங்கள் (அகாயித்), இஸ்லாமியப் பயிற்சி - இஸ்லாமியப் பொது அறிவு, பயான் துஆ, நபி வரலாறு, நற்பண்புகள் (அக்லாக்- குணநலங்கள்), மொழி - அரபியும் உர்துவும் அறிமுகம். தொழுகை நடத்தவும் பாங்கு ஓதவும் பயிற்சி!”

“பாங்கில் இரு வகைகள் உண்டா?”

“அதான் மற்றும் இகாமத். பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பது அதான். தொழுகை தொடங்குவதற்கு முன் சொல்லப்படும் வசனம் இகாமத்!”

“பள்ளியில் பாங்கு ஓதுபவருக்கு என்ன பெயர்?”

‘முஅத்தின்!”

“தினம் இரண்டு மணி நேரம் நாக்கு வரள வரள நாங்கள் உட்கார்ந்திருக்க வேண்டுமோ?”

“கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சமோசா, பிஸ்கட், தேனீர் வழங்கப்படும். தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டே நீங்கள் மார்க்கத்தை கற்றுக் கொள்ளலாம்…”

“ஒரு கோக்குமாக்கான கேள்வி!”

“கேளுங்கள்!”


“பொதுக்கல்வின்னா ஆறாம் வகுப்புக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்கும். தீனிய்யாத் பாடதிட்டம் தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்குமா?”

“இல்லை. பல பாடத்திட்டங்கள் உள்ளன. அன்வாரூஸ் ஸுஃப்பாவின் தீனிய்யாத் பாடத்திட்டம், ரவ்ளாத்துல் ஜன்னாத் பாடத்திட்டம் என பல பாடத்திட்டங்கள் உள்ளன. எங்களது பாடத்திட்டம் எல்லா நன்மையான விஷயங்களையும் கலந்து கட்டி செய்யப்பட்ட சித்ரான்னம். கூடிய விரைவில் பொதுப் பாடத்திட்டம் அமுலாகும் என நம்புகிறேன்!”

“முகாமுக்கு எத்தனை மாணவர்கள் அனுமதிப்பீர்கள்?”

“அறுபது சிறுவர்கள் இருபது சிறுமிகள். கூடக்குறைய இருந்தாலும் பிரச்சனை இல்லை!”

“இன்னொரு முக்கியமான கேள்வி!”

“கேளுங்கள்!”

“இஸ்லாம் ஒரு கடல். முப்பது நாட்களில் அறுபது வருட சுவாசக் காற்றை ஒருவர் எப்படி சுவாசிக்க முடியும்? எல்லாவற்றிலும் அரைகுறையாய்ச் செய்யும் முயற்சிதானே, இந்தக் கோடைகால முகாம்!”

“ஒரு பெரிய ஐஸ்கிரீம் பார்லரின் முன் ஒருவர் நின்று வருபவருக்கும் போபவருக்கும் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் இலவசமாக தருவார். அதனை வாங்கிச் சுவைக்கும் பத்தில் எட்டு பேர் பார்லரின் ஐஸ்கிரீமை விலைக்கு வாங்கிச் சுவைப்பர். இது ஒரு யுக்தி. இது ஒரு அழகிய அறிமுகம். துப்பறியும் நாவலின் முதல் பக்கம் வாசகரை 200 பக்கங்கள் வரை இழுத்துச் செல்லும். முகாமுக்கு வரும் எண்பது பேரில் ஒரு பத்து பேர் தொடர்ந்து இஸ்லாமைக் கற்றாலேப் போதுமானது!”

“முகாம் முடிவில் என்ன தருவீர்கள்?”

“என் செலவில் உனக்கு ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கித் தருகிறேன். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவோம்!”

“எவ்வளவு பொறுமையாக பதவிசாக நளினமாக பதில் கூறுகிறீர்கள் ஹஜ்ரத்”

“தீனிய்யாத் பணி மேற்கொள்ளும் அனைவரும் என்னைப் போலதான் இருப்பார்கள். சாந்தியும் சமாதானமும் கொண்ட மார்க்கத்தை அதே இதம் பதத்தால் சொல்வதுதானே முறை? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பதினைந்து வருடங்களுக்கு முன் தீனிய்யாத் வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர் இன்று சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக இருக்கிறார்!”

“கேள்விகள் அவ்வளவுதான்.. நாங்கள் போய் அமர்கிறோம்!”

“நான் உங்களைச் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்!”

“கேளுங்கள்!”

“உன் பெயர் என்ன பேத்தி?”

“என் பெயர் மெஹர் பானு. ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். பாஸ் பண்ணி ஆறாம் வகுப்பு போக இருக்கிறேன்!”

“உன் பெயர் என்ன பேரனே?”

“என் பெயர் உஸ்மான் அலி வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறேன். பாஸ் பண்ணி எட்டாம் வகுப்பு போக இருக்கிறேன்!”

“உங்களிருவருக்கும் மார்க்கத்தைப் பற்றித் துளியும் தெரியாதா?”

“இல்லை. நாங்கள் இருவரும் தனித்தனியாக தினம் மதரஸா போய்க் கொண்டிருக்கிறோம்!”

“அப்புறம் ஏன் இங்கு வந்தீர்கள்?”

“புது அனுபவம் தேடி. புது நண்பர்கள் தேடி. கற்றுக் கொள்ளும் மனோபாவத்தை அதிகபடுத்த. கற்றுத் தரும் உங்கள் வித்வத்தை ஊக்கப்படுத்த!”

“மாஷா அல்லாஹ்… போய் அமருங்கள்!”

-முப்பது நாட்கள் ஷாகுல் ஹமீது ஜலாலி இஸ்லாமின் விழுமியங்களை, கோட்பாடுகளை தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவது போல பக்குவமாய் இளைய தலைமுறைக்கு ஊட்டினார்.


முப்பதாவது நாள் ஜலாலி உஸ்மான் அலியை எழுப்பினார்.

“உன்னால் பாங்கு சொல்ல முடியுமா?”

“இதோ சொல்றேன்!”

இருகட்டை விரல்களை இரு காதுமடல்களின் அடியில் வைத்து, “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (4தடவை) அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் (2 தடவை) அஷ்ஹது அன்ன முஹம்மதுன் ரசூலுல்லாஹ் (2தடவை) ஹய்யா அலாஷ் ஸலாஹ் (2தடவை) ஹய்யா அலாஷ் பலாஹ் (2தடவை) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (2 தடவை) லா இலாஹ இல்லல்லாஹ் (1 தடவை)…” பாங்கு சொன்னான் உஸ்மான் அலி.

ஷாகுல் ஹமீது ஜலாலியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.

“உன் பாங்கை பிலால் (ரலி) கேட்டிருந்தால் மிக மகிழ்ந்திருப்பார்!”

“இன்ஷா அல்லாஹ்… வருகிற வெள்ளிக்கிழமை ஜுஆம்மா தொழுகையை இமாமாக இருந்து நடத்திக் காட்டுகிறேன், அனுமதி தாருங்கள்!”

“குர்ஆன் முழுக்கப் பார்க்காமல் ஓதி காட்டுகிறேன்! என்றாள் மெஹர் பானு.

“தீனிய்யாத்தின் நோக்கம் நிறைவேறியது. இறைவனுக்கு நன்றி!” பரவசமாய் இரு கைகளை வானுக்கு உயர்த்தி மிழற்றினார் ஷாகுல் ஹமீது ஜலாலி.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p54.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License