இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

53. பணத்தைத் தேடி ஓடலாமா?


ஐயாயிரம் சதுர அடியில் மூன்று மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது அந்த பங்களா. போர்டிகோவின் உள்வாசலில் புனிதகாபா பளிங்குக்கல் செவ்வக ஓடு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது. வெளிவாசலில் ‘ரசூல் பீவி மன்ஜில்’ என்கிற பல்வர்ண பெயர்ப்பலகை பளபளத்தது.

ஊஞ்சலில் அமர்ந்து கால்களால் தரையை உதைத்து உதைத்து ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார் மிஷ்பா அஷ்ரப். வயது 59. 170 செமீ உயரம். சம்மர் கிராப்பிய தலை கேசம். மீசையுடன் இணைந்த அழகிய குறும்தாடி. பால் வெண்மையில் பளபளக்கும் பற்கள். சுருமா ஈஷிய கண்கள். ஜிப்பா கிப்ஸ் லுங்கி. கோவையில் ஒரு மிகப்பெரிய வெட் கிரைண்டர் தொழிற்சாலை நடத்துகிறார். மூத்தமகன் அமெரிக்காவில் மனைவி மக்களுடன் இருக்கிறான். இரண்டாவது மகன் எம் பி ஏ முடித்துவிட்டு தந்தையின் வியாபாரத்துக்கு துணை நிற்கிறான்.

சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் ரசூல் பீவி. மிஷ்பா அஷ்ரப்பின் மனைவி, வயது 52. காயல்பட்டினவாசி. உயரம் 160 செமீ. சங்கீதக் குரல். நீரிழிவு நோயாளிகளுக்கான பானம் என்சூரை ஒரு மெலாமைன் கோப்பையில் நிறைத்துக் கொண்டு வந்து கணவரிடம் நீட்டினாள் ரசூல்பீவி.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப் இண்டஸ்ட்ரியலிட்!”

“வஅலைக்கும் ஸலாம் காயல்பட்டினத்தின் பேரழகியே!”

“யாரு நான் பேரழகியா? நிஜ பேரழகிகள் எல்லாம் உங்க கூடச் சண்டைக்கு வந்திரப் போராங்க!”

“ மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சொர்க்க கண்ணழகிகளை வேண்டாம் என்பேன். என் ரசூல் பீவியே போதும் என்பேன்!”

“இன்னும் இரவுகளில் என்னை தொந்திரவு செய்கிறீர்கள்!”

“நீ என் ஹலாலான மனைவி. தாம்பத்யத்திற்கு தேவையான சக்தியும் விருப்பமும் உன்னிடமும் இருக்கிறது என்னிடமும் இருக்கிறது. உன்னைத் தொந்தரவு செய்தால் என்ன? அல்லாஹ் நம் காதலைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைவான்!”


“ எதிர்பாராதவிதமாக நான் கர்ப்பமுற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”

“மகள் பிறந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன்!”

“பேரக்குழந்தைகள் தவழும் வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுறதைப் பார்!”

சிரித்தார் மிஷ்பா அஷ்ரப்.

“நீ என்சூர் குடித்தாயா?”

“குடிக்காவிட்டால் மடியில் படுக்க வைத்து சங்கில் புகட்டி விடுவீர்கள். அந்த அவஸ்தைக்கு பயந்து நானேக் குடித்து விட்டேன்!”

“ஆயிரம் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை எடுத்துக்கொள். அதில் ஓரிருவர்தான் வாலிப வயது வனப்பை தொடர்கிறார்கள். மீதி பேரெல்லாம் வாடிவதங்கி சுருங்கிய கத்தரிக்காய் ஆகி விடுகிறார்கள்!”

“காலையில் இந்த ஆராய்ச்சி தேவையா? உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அதனால் உங்களுக்குத் தேவதையாகத் தெரிகிறேன். அதே நான், உங்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டால் சைத்தான் போல தெரிவேன்!”

“மனோதத்துவம் பேசுகிறாய்?”

யாரோத் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது.

திரும்பினார் மிஷ்பா அஷ்ரப்.

இளையமகன் ஷுஐபு நின்றிருந்தான். அம்மா ஜாடை. அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“அத்தா!”

“என்னப்பேன்?”

“அம்பதாயிரம் வெட்கிரைண்டர்களுக்கு கொட்டேஷன் கேட்டிருக்காங்க ஒரு வட இந்தியக் கம்பெனி!”

“சரி!”


“அந்தக் கம்பெனியின் பெயர் என்ன?”

“மார்த்தா அண்ட் மார்த்தா!”

“எத்தனைக் கம்பெனிகள் கொட்டேஷன் அனுப்புவார்கள் என எதிர் பார்க்கிறாய்?”

“எட்டு நிறுவனங்கள் நம்மையும் சேர்த்து!”

“இந்த ஆர்டர் நம்மை விட்டு போகக் கூடாது மகனே!”

“இன்சைடர்ஸ் வைத்து மற்ற கம்பெனிகளின் கொட்டேஷன்களை மோப்பம் பிடிக்கவா?”

“அதனை ஒரு போதும் செய்யாதே!”

“சரி!”

“எட்டு நிறுவனங்களின் புராடக்டோடு நம் புராடக்ட்டின் தரத்தை ஒப்பிட்டுப் பார். அவர்கள் லாபம் 20 சதவீதம் வைக்கிறார்கள். என்றால் நமது லாபத்தை 5 சதவீதமாக நிர்ணயி. தரத்தாலும் விலை குறைப்பாலும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடு. முன் பணம் கேட்காதே. ஆர்டரை டெலிவரி செய்த பின் பேமென்ட் பண்ணினால் போதும் என சொல்லு!”

“சரி!”

“அவர்களுக்கான ஆர்டரை நாம் தயார் செய்யும் போது பொருளின் புதிய தரத்தை அம்சங்களைச் சேர்!”

“சேர்க்கிறேன்!”

“இந்த ஆர்டர் கிடைத்தால் தொழிலாளர்களின் ஊக்கத்தொகையை உயர்த்து!”

“உயர்த்துகிறேன்!”

“தொழும்போது அல்லாஹ்விடம் இந்த ஆர்டர் கிடைக்க துஆ பண்ணு. நானும் பண்ணுகிறேன்!”

“ஓகே!”

“இரண்டரை லிட்டர் வெட்கிரைண்டர்தானே கேட்டிருக்காங்க!”

“ஆமாம்!”

“விலை என்ன கோட் பண்ணலாம்?”

“ஏழாயிரம் ரூபாய்!”

“ஐம்பாதாயிரம் வெட்கிரைண்டர்களுக்கு எவ்வளவு தொகை வருது?”

“முப்பத்தியைஞ்சு கோடி!”

“நமக்கு எவ்வளவு கிடைக்கும்?”

“ஒண்ணே முக்கால் கோடி நமக்கு கிடைக்கும்”

“மகிழ்ச்சி!”

“இந்த ஆர்டரைப் பிடித்துத் தர இடைத்தரகர்கள் வந்தால் என்ன செய்ய? இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை கமிஷன் கேட்பார்கள்!”

“இடைத்தரகர்களைத் தூக்கி எறி!”

“அத்தா! இந்த ஆர்டரை தகுதியின் அடிப்படையில் தரத்தின் அடிப்படையில் பெற்றேத் தீருவோம். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!”

மகன் போகும்வரை காத்திருந்தாள் ரசூல் பீவி.

“நான் ஒண்ணு சொன்னா நீங்க கோவிச்சுக்கக் கூடாது!”

“சொல்லு!”

“ஏழு தலைமுறைக்குத் தேவையான பணத்தை சம்பாதிச்சிட்டீங்க. இன்னும் பணம் பணம்னு தேடி ஓடினா எப்படி? அமைதிப்படுங்கள். இளைப்பாருங்கள், கூடுதல் இபாத்துகளை செய்து மறுமைக்குத் தயாராகுங்கள்!”


“இம்மை முதல் தாள் தேர்வு என்றால் மறுமை இரண்டாம் தாள் தேர்வு. இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற விரும்புகிறேன். ஹலாலான உணவு - ஹலாலான தாம்பத்யம் - ஹலாலான வருமானம் இறைவன் அனுமதிக்கிறான். நான் வியாபாரத்தை நியாயமான முறையில் செய்து பொருத்தமான லாபத்தை அடைகிறேன். இந்த ஒண்ணே முக்கால் கோடி லாபம் கிடைத்தால் பத்து ஏழைகளுக்குத் திருமணத்தை நடத்துவேன். இருபது ஏழை முஸ்லிம்கள் உம்ரா நிறைவேற்ற உதவுவேன். இஸ்லாமியர்களுக்கான ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க பிரதான பங்கு தருவேன். தொழுகை, நோன்பு, ஜக்காத், சதகாவுடன் கூடிய என் உழைப்பு ஊமை தூக்கத்துக்கு ஓலை வாங்கும் வரை தொடரும். முதுமையில் சுறுசுறுப்பான இயக்கம் இறைவனின் அருட்கொடை. ஹலாலான வியாபாரத்தை என் மகனுக்கு எத்தி வைக்கிறேன். என் மகன் என் பேரனுக்கு ஹலாலான வியாபாரத்தை எத்தி வைப்பான். ஹலாலான வியாபாரத்தில் கிடைக்கும் வெற்றியை இளைய தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறேன்!”

“ரைட்டோ கணவரே!”

“இன்றிரவு மேடம் ப்ரீயா?”

“ஏன்?”

“மல்லிகைப்பூ அல்வாவுடன் வருகிறேன். இன்ஷா அல்லாஹ் வி வில் ஹாவ் ரொமான்ஸ்!”

நாணிக் கோணினாள் ரசூல் பீவி.

“சரி கிழவா!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p53.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License