இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

56. வெள்ளிக்கிழமை தோறும்...!


விடியற்காலை மணி 4.30.

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் நூர்சேட்.

“ யா அல்லாஹ்!” சுவற்றில் இருக்கும் நாட்காட்டியைப் பார்த்தார் சேட்.

நாட்காட்டி 11.07.2025 வெள்ளிக்கிழமை என்றது.

“எனது வாழ்நாளில் இன்னொரு வெள்ளிக்கிழமையைப் பரிசளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி!” எழுந்தார். பக்கத்தில் தூங்கும் மனைவியை வெறித்தார்.

நூர்சேட்டுக்கு வயது 50. மகள் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் வசிக்கிறாள். மகனுக்குத் திருமணமாகவில்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். நூர்சேட் லெதர் பேக், ரெக்ஸின் பேக் மொத்த விற்பனையாளர்.

மனைவியை இதமாக எழுப்பினார். “இன்னைக்கி வெள்ளிக்கிழமை தூங்கலாமா? எந்திரி எந்திரி!”

இயந்திர மனுசி போல எழுந்தமர்ந்தாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா”

“வஅலைக்கும் ஸலாம்!”

“தூங்கும் மகனை எழுப்பி டீ போடு. பல் துலக்கி விட்டு டீ குடிப்போம். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக குளிப்போம். நானும் மகனும் பள்ளிக்கு பஜ்ர் தொழப்போகிறோம். நீ வீட்டில் தொழு!”

அம்மா எழுப்ப லேசான எரிச்சலுடன் மகன் எழுந்தான்.

அழகிய முகமன் பரிமாற்றம்.


தந்தையும் மகனும் பல் துலக்கினர். தலைக்கு ஷாம்பும் முகத்திற்கு பேஷ் வாஷும் இட்டு குளித்தார் நூர்சேட்.

குளிக்கும் போது நாகூர் ஹனீபாவின் பாடலைச் சப்தமாகப் பாடினார்.

“அல்லாஹ்வை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடிவரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்!”

தலையைத் துவட்டியபடி குளியலறையிலிருந்து வெளிப்பட்டார்.

வெள்ளை பைஜாமாவும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து கொண்டார். தலையில் வெள்ளை நிற துணித்தொப்பி. அத்தர் பூசிக் கொண்டார்.

மகனுடன் பள்ளிக்குப் புறப்பட்டார்.

இமாமுடன் சேர்ந்து மொத்தமே 11 பேர் தான் தொழுதனர்.

இருவரும் வீடு திரும்பும் போது சேட்டின் மனைவி குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்தாள். வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு சாம்பிராணி புகை கமழ்ந்தது.

மகன் மட்டன் ஸ்டாலுக்கு போய் ஒரு கிலோ தொடைக்கறியைத் தனிக்கறியாக வாங்கி வந்தான். நூர்சேட் ஒரு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து 25 இருபது ரூபாய் நாணயங்கள் மாற்றினார்.

பிரியாணிக்குத் தேவையான வெள்ளைப்பூண்டு, வெங்காயம், தக்காளியை அரிந்து முந்தின நாளே பத்திரப்படுத்தி இருந்தாள் கதீஜா.

“யாநபி ஸலாம் அலைக்கும்
யா ரசூல் ஸலாம் அலைக்கும்
யாஹபீப் ஸலாம் அலைக்கும்
ஸலவாத்துல்லா அலைக்கும்!”

பாடல் வீடு முழுக்க ஒலித்தது. காலையில் தலைக்கறி தக்கடியும் இனிப்பு சுத்திரியானும் செய்தாள் கதீஜா.

நூர்சேட்டின் வியாபார நண்பர் சின்னராசு வாசலின் அழைப்பு மணியை அமுக்கினார். கதவைத் திறந்து விட்டார் நூர்சேட்.

“வணக்கம் நூர்சேட் பாய்!”

“மகிழ்ச்சி. வாருங்கள் உள்ளே சின்னராசு!”

“என்ன… இன்னைக்கி உங்க வீட்ல விசேஷமா? வீட்டுக்குள்ள நுழையும் போதே சமையல் வாசனை தூக்குது?”


“இன்று வெள்ளிக்கிழமை…”

“வெள்ளிக்கிழமை கடைக்கு லீவு விடுவீங்க. வாராவாரம் வர்ற வெள்ளிக்கிழமைக்கு எதற்கு இத்தனை ஆரவாரம் கொண்டாட்டம்?”

“வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை தொழுவோம். ஸோ வெள்ளிக்கிழமை ஏழைகளின் பெருநாள். எங்களுக்கு வருடத்திற்கு எத்தனை பண்டிகைகள் என நினைக்கிறீர்கள்?”

“ரம்ஜான் பக்ரீத் என இருபண்டிகைகள் மட்டுமே எனக்கு தெரியும்?”

“வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமைகள் இல்லையா? ஈகைத்திருநாள், தியாகத்திருநாளுடன் சேர்ந்து 54 பண்டிகைகள் கொண்டாடுகிறோம்!”

“ஆஹா!”

“இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். . 'நாம் பிறப்பால் பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டார்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான்.. மக்கள் நம்மையே பின் தொடர்கிறார்கள். எவ்வாறெளில் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆ என்றால் யூதர்கள் சனிக்கிழமை அன்றும், கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்றும் வார வழிபாடு நடக்கின்றனர்’

அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் புகாரி 876 அத்தியாயம் 11 ஜும்ஆத் தொழுகை!”

“இந்துக்களாகிய எங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டு நாள்!”

“ஓஹோ!”

“உங்கள் வெள்ளிக்கிழமை தொழுகை அவ்வளவு புனிதமான விஷயமா?”

“ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பு போல குளித்துவிட்டுப் பின்னர் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டை குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்பு உடைய ஆட்டை குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியை குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் ஒரு முட்டையை குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள் என்கிறார் எங்கள் நபிகள் நாயகம். ஜும்ஆ தொழுகைக்குக் குளிப்பதும், பல் துலக்குவதும், நறுமணம் பூசிக் கொள்வதும் சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வதும் சிறப்பு…”

“முஸ்லிம்கள் ஒவ்வொரும் ஜும்ஆ தொழுகையுடன் கூடிய வெள்ளிக்கிழமையை ஏழைகளின் பெருநாளாகக் கொண்டாடுகிறார்களா?”

“ சிலர் கொண்டாடுகிறார்கள் பலர் கொண்டாடுவதில்லை!”

“வாரத்தில் 35 கட்டாயத் தொழுகைகள் உள்ளன. ஜும்ஆக்கு மட்டும் எதற்கு விசேஷக் கொண்டாட்டம் என நினைத்திருப்பார்களோ?”

“இருக்கலாம்!”

“மத்தவங்களை விடுங்க பாய். நீங்கள் எப்படி ஏழைகளின் பெருநாளைக் கொண்டாடுவீர்கள், அதனைச் சொல்லுங்கள்!”


“வியாழன் இரவு அன்றே என் கை, கால்கள் பரபரக்கும். நள்ளிரவில் தஹ்ஹஜத் தொழுது விட்டு பஜ்ரு தொழுகைக்காக காத்திருப்போம். காலை குளித்து பல் துலக்கி புத்தாடை உடுத்தி பஜ்ரு தொழுகை தொழப் போவோம்.. மனைவி திருக்குர்ஆன் முழுமையாக ஒரு தடவை ஓதி விடுவார்கள். காலை உணவுக்கு பின் மனைவி பிரியாணி சமைக்க ஆரம்பித்து விடுவார். நண்பகல் 12 மணிக்கு இரண்டாவது புத்தாடை அணிவேன். தலைக்கு துருக்கித் தொப்பி. தொழுகை விரிப்பும் எடுத்துக் கொள்வேன். எங்கள் வீட்டைச் சுற்றி ஐந்து பள்ளிவாசல் உள்ளன. தூரத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நடந்து போவேன். ஒளு செய்துவிட்டு பள்ளியின் முதல் தொழுகையாளியாக பள்ளிக்குள் பிரவேசிப்பேன். இமாம் பயான் ஆரம்பிக்கும் வரை திக்ர் எடுத்துக் கொண்டிருப்பேன். தொழுகைக்கு வரும் ஒவ்வொரு தொழுகையாளியின் வெளிப்புறத் தோற்றத்தை உள்புறமனப்பாங்கை ஊன்றிக் கவனிப்பேன். இமாமின் பயானை ஊன்றிக் கவனிப்பேன். தொழுது முடித்த பின் பக்கெட் ஏந்தி வரும் மோதினாரின் பக்கெட்டில் 100 ரூபாய் இடுவேன். தொழுகை முடிந்ததும் நெருங்கிய நண்பர்களை முஸாபஹா செய்வேன்.. டேபிள் போட்டு அமர்ந்து மதரஸா பணிக்கு ஹதியா வசூலிக்கும் நிர்வாகியிடம் 500 ரூபாய் கொடுத்து ரசீது பெறுவேன். வெளியில் நிற்கும் 25 மிஸ்கீன்களுக்கு தலா ஒரு 20 ரூபாய் நாணயம் வழங்குவேன். மகன் 11 ஏழைகளுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கி விட்டு வருவான். மனைவி பக்கத்து வீடுகளுக்குப் பிரியாணி கொடுத்து விடுவாள். அதன் பின், நான் என் மனைவி மகன் மூவரும் அமர்ந்து சாப்பிடுவோம்… மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு. பின் அஸர், மஹ்ரீப், இஷா தொழுகைகளைத் தொழுவோம். ஏழைகளின் பெருநாள் நிறைவு பெறும்!”

- ஜும்ஆ தொழுதுவிட்டு மிஷ்கீன்களுக்கு காசு கொடுக்கும் நூர்சேட்டை ஒரு குரல் தடுத்தது.

“ஒரு இரண்டு வயது குழந்தை நான்காவது மாடிலியிருந்து விழுந்து மரணக் காயப்பட்டு உள்ளது. அந்தக் குழந்தையின் உயிரைக் காக்க நீ என்ன தருவாய் நூர்சேட்?”

“நாற்பது வருடங்களாகத் தொழுது வருகிறேன். என்னுடைய பத்து வருடத் தொழுகை நன்மைகளை (அல்லாஹ் அந்த பத்து வருடத் தொழுகையை நன்மை என அங்கீகரித்திருந்தால்) குழந்தைக்கு ஹதியா செய்கிறேன்.. அல்லாஹ் அந்தக் குழந்தையை முழுமையாகக் குணப்படுத்தட்டும்….”

ஆமீன் ஆமீன் ஆமீன் என லட்சக்கணக்கான மலக்குகளின் குரல்கள் கோரஸாய் ஒலித்து எதிரொலித்து ஏழாம் வானம் தொட்டன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p56.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License