இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

57. அல்காரீ


உமர் முக்தார் மெலாமைன் கோப்பையில் இருந்த தேநீரை உறிஞ்சியபடி ‘ரஹ்மத்’ இஸ்லாமிய அச்சு இதழை வாசித்துக் கொண்டிருந்தான்.

செதில்கள் நீக்கி துண்டாடி விரால் மீன் துண்டுகளை மஞ்சளும் உப்பும் இட்டு சுழற்றிக் கொண்டிருந்தாள் ரமீஜா.

“ரமீ!”

“என்னப்பா?”

“விரால் மீனைச் சுத்தப்படுத்ற வேலை முடிஞ்சிட்டா கொஞ்சம் இங்க வாயேன்!”

புடவை முந்தானையால் முக வியர்வையை ஒற்றியபடி வந்தாள் ரமீஜா.

“சொல்லுப்பா…”

“தினமும் அரை மணி நேரம் குர்ஆன் ஓதுற, பெண்கள் மதரஸாவில் ஓதரம்மா குர்ஆன் ஓதுது. நம்ம வீட்டுக்கு பாத்தியா ஓத வர்ற ஹஜ்ரத் குர்ஆன் ஓதுராரு. ஆனா யாருமே திருக்குர்ஆனை முழுமையாச் சரியான விதத்தில் ஓதலன்னு தோணுது. எங்க போனா குர்ஆன் கல்பு நனையுற மாதிரி ஓதுரதைக் கேக்கலாம்?”

தோள்களை குலுக்கி உதடு பிதுக்கினாள் ரமீஜா.

வாசலில் கனத்த காலடி அரவம் கேட்டது.

“யாரது?”

“அஸ்ஸலாமு அலைக்கும்!” ஆண் குரலும் பெண் குரலும் இணைந்த கோரஸ். ஆண் குரலில் நாகூர் இ.எம். ஹனீபா, டி.எம். சௌந்தரராஜன், யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்கள் கலந்திருந்தன. பெண்குரலில் பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, அனுராதா ஸ்ரீராம், அனுபமா, ஸ்வர்ணலதா, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே குரல்கள் கலந்திருந்தன.

“வஅலைக்கும் ஸலாம்!” என்றபடி வெளிவாசலுக்கு நடந்து போனான் உமர்முக்தார்.


ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் பச்சைநிற அங்கி அணிந்து நின்றிருந்தார். கைகளில் வெள்ளை மோதிரங்கள். கழுத்தில் பாசிமணி மாலைகள். தலையில் தலைப்பாகை.

அவருக்கு அருகில் ஒரு 30 வயது பெண் நின்றிருந்தார். அவர் கருப்பு நிற புர்காவும் ஹிஜாப்பும் அணிந்திருந்தார்.

இருவருமே கண்களில் சுருமா ஈஷியிருந்தனர்.

அவரவர் இடது தோளில் ஒரு ஜோல்னாப்பை தொங்கியது.

“நீங்கள் இருவருமே கணவன் மனைவியா?”

“ஆம்!”

“கோபித்துக் கொள்ளக்கூடாது. நீங்களிருவரும் முஸாபர் அல்லது பக்கீர் அல்லது மிஸ்கீன்களா?”

“இல்லை… ஏன்?”

“மிஸ்கீன் என்றால் உங்களுக்குத் தலா ஐம்பது ரூபாய் தர விரும்புகிறேன்!”

“எங்களுக்கு வேண்டாம்!”

“பின்னே? எதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்?”

“ஒரு இஸ்லாமியர் வீட்டுக்கு இன்னொரு இஸ்லாமியர் வர வலுவான காரணங்கள் தேவையா? குர்ஆன் ஓதுதலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தோம்!”

“இருவரும் உள்ளே வாருங்கள். எங்கள் வீடு உங்களை வரவேற்கிறது!”

இருவரும் உள்ளே நடந்து வந்தனர். இருவர் மீதும் அத்தர் வாசனையடித்தது.


வரவேற்பறையில் அவர்களை அமர வைத்து தானும் அமர்ந்தான் உமர் முக்தார்.

“உங்கள் பெயர்களை சொல்லுங்களேன்”

“என் பெயர் அல்காரீ அப்துல் ஸமது!” என்றார் ஆண்.

அவர், தனது மனைவியைச் சுட்டிக்காட்டி, “இவர் என் மனைவி இவரின் பெயர் அல்காரீ ருகைய்யா பேகம்!”

“மகிழ்ச்சி!”

ரமீஜா வந்து கணவனின் பின் நின்று கொண்டாள்.

“அல்காரீ என்றால் என்ன?”

“குர்ஆன் ஓதுவதில் திறமையான ஒருவரை காரீ என்கிறோம். அவர்கள் குர்ஆன் ஓதுவதற்கான விதிகளை (தஜ்வீத்) நன்கு அறிந்தவர்கள். அரபி எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும்? அரபி வார்த்தைகளை எப்படிப் பிரிக்க வேண்டும்? எந்த இடத்தில் நிறுத்தி ஓத வேண்டும்? - என்பதனை நன்கு புரிந்து கொண்டவர்கள் அல்காரீகள். மொத்தத்தில் அரபு மொழியை முறையாக உச்சரிப்பதில் வல்லவர்கள் அல்காரீகள். காரீ என்பது மரியாதைக்குரிய பட்டமாகும்!”

“ஆஹா! இரு அல்காரீகள் எங்கள் வீட்டுக்கு வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். உங்களை சந்திக்க வைத்ததற்கு இறைவனுக்கு நன்றி!”

ரமீஜா குறுக்கிட்டாள்.

“அல்காரீகள் குர்ஆனை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்களா?”

“ மனப்பாடமாக குர்ஆனை காரீகள் ஓதினால் தப்பில்லை. ஆனால் காரீகள் குர்ஆனை மனப்பாடம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!”

“நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?”

“அல்காரீகள் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் அதிகம். நாங்கள் மலேசியாவில் இருந்து வருகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தர்காக்களையும் பார்க்க விழைகிறோம்!”

“நீங்கள் நாடோடிகளா?”

“இல்லை. மலேசியாவில் எங்களுக்கு நிலையான தங்குமிடம் இருக்கிறது!”

“தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள்!”

“எங்கள் மூதாதையர்கள் காயல்பட்டினத்தில் இருந்து மலேசியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். நாங்கள் உங்களை விட அருமையான தமிழ் பேசுவோம்.!”

“சிறப்பு!”

“காரீகள் பற்றி மேற்தகவல்கள் சொல்லுங்களேன்!”


“உலகின் நம்பர் ஒன் காரீ எகிப்தை சேர்ந்த அப்துல் பாசித் அப்துஸ் ஸமத். மரபு நெறியைப் பின்பற்றி, மனதைக் கவரும் ஒலியனுடன் கச்சிதமான தஜ்வீத்துடன் நாத ஒலி எழுப்புவார் ஸமத். இவர் 1950 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டுகளில் மிக பிரபலமானவர். இவருக்கு மௌரிச் சுல்தான் என்கிற பட்டம் உண்டு. இந்தியாவின் நம்பர் ஒன் அல் காரீ காயல்பட்டினம் ஏ.டி. ஹாஜியார்!”

“காரீயின் பணி என்ன?”

“மக்கள் முன்பாக திருக்குர்ஆன் ஓதுதல், பிறருக்கு குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல்!”

“ஓவ்!”

“உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறவர்களே என்கிறது அல்புகாரி ஹதீஸ் எண் 5027”

“காரீயின் பணி அவரது ஒலி, ஓதும் பாணி சமுதாயத்தின் ஆன்மிக உணர்வைத் தூண்டும் அளவுக்கு ஆழமானது!”

“வேறு பிரபலமான காரீகள் உள்ளனரா?”

“எகிப்தைச் சேர்ந்த முகமது சித்திக் மின்ஷாவி. மென்மையான எண்ணிக்கையைத் தவற விடாத ஓது முறை இவருடையது. இவரது ஓதுதல் ஒரு தியான நிலை. இவர் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாணியில் ஓதுவார். புக்கி யாரஹ்மான் அழகு ஓதல்கள். மூன்றாவதாக எகிப்தைச் சேர்ந்த மஹ்மூது கலீல் அலி ஹுசைரி. இவர் ஹாபிழ் மாணவர்களுக்கு குரு. நான்காவதாக சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் சாத் காமிதி. அழகான நாதமிக்க மனதை அமைதியூட்டும் ஓதல். யாஸீன், முல்க், காப் சூராக்கள் ஓதுவதில் வல்லவர்!”

“தொடர்ந்து கூறுங்கள்!”

“ஐந்தாவதாக சேக் மிஷாரி ராஷித் அல் பாஷி. குவைத்தை சேர்ந்தவர். நஷீத் இஸ்லாமிய பாடல்களும் பாடுவார். ஆறாவதாக மக்காவின் முன்னாள் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரகுமான் அல் சுதாய்ஸ். ஏழாவதாக ஷேக் சாத் அல் சுரைம். எட்டாவதாக எகிப்தைச் சேர்ந்த காரீ அஹ்மது நுவைனா. ஒன்பதாவதாக மக்கா இமாம் காரீ யாசர் அல் டோசரி. பத்தாவதாக காரீ ஷேக் அபுபக்கர் அலி சத்ரி. இவருக்கு பாசுரக் குரல்!”

“அல் காரீகளே! இன்று எங்கள் வீட்டில் தேங்காய் சோறும் விரால் மீன் குழம்பும். இருவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுங்கள். மஹ்ரீப் தொழுகைக்குபின் எங்கள் வீட்டில் இருவரும் சேர்ந்து குர்ஆன் ஓதுங்கள். எங்கள் வீடு இறையருளால் நிரம்பி வழியட்டும்!”

-இருவரும் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தனர்.


வீட்டுக்குள் ஆயிரக்கணக்கான பூக்களின் நறுமணம் கமழ்ந்தது. திருக்குர்ஆனை கேட்க கேட்க உமர் முக்தாரும் ரமீஜாவும் இரு புறாக்களாய் மாறி காபாவின் மீது பறந்தனர்.

அறை முழுக்க மலக்குகள் நிறைந்து பேரானந்த பரவச நிலை அடைந்தனர்.

மனக்கண்ணில் இறைசெய்தியை சொல்லும் நபி நாயகமும் அதனை எலும்பில் எழுதும் நபி தோழரும் தெரிந்தனர். மொஸார்ட் பீத்தோவான் இசை வழிந்தது. இரு ஜோடி காதுகளில் தேன் சுனாமி.

மூன்று மணி நேரம் ஓதுதலுக்கு பின் ஆனந்தக் கண்ணீர் கசிய பரவசித்தனர் உமர் முக்தாரும் ரமீஜாவும்.

“எங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்து எப்படி வந்தீர்கள் அல் காரீகளே?”’

“ஒரு முதிய தம்பதியினருக்குப் பல் செட் பொருத்தும் செலவை ஏற்றுக் கொண்டீர்கள். அதனால் உங்களைச் சிறப்பிக்க கனவு மூலம் எங்களுக்குச் செய்தி வந்தது! அதனாலே வந்தோம்….”

ஒரு கவ்வாலி பாட்டை பாடியபடி அல்காரீ ஜோடிகள் தெருமுனைக்கு நடந்து மறைந்தனர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p57.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License