இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

58. தாபியீன்கள்


வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டு தந்தை முஸ்தபாவும் 15 வயது மகன் ஆரிப் முகமதுவும் வீடு திரும்பினர்.

கைகால் முகத்தை கழுவி விட்டு இருவரும் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

நெய்ச்சோறும் மட்டன் குழம்பும்.

முஸ்தபா ஒரு நல்லி எலும்பை எடுத்து உறிஞ்சினார்.

“அத்தா!”

“என்னப்பேன்?”

“இன்னைக்கி இமாம் பயான் பண்ணும் போது நாதாக்கள் தபஅத்தா பிஈன்கள் தாபியீன்கள் என வரிசையாக இறை நல்லடியார்களைப் பற்றி பட்டியல் கூறினார். தாபியீன்கள் என்றால் யார்? அவர்களைப் பற்றி முழுமையாக விளக்கம் கூற முடியுமா உங்களால்?”

“நல்லது சாப்பிட்டு முடி. தாபியீன்கள் பற்றி விளக்கமாக் கூறுகிறேன்!”

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

அத்தாவின் காலடியில் அமர்ந்தான் ஆரிப். “இப்ப சொல்லுங்கத்தா!”


“தாபியீன்களை ஆங்கிலத்தில் ‘Tabi’ Un என்பர். ‘Tabieen’ எனவும் கூறுவர்.

தாபியீன்கள் நபி நாயகத்தை நேரில் சந்திக்காதவர்கள். ஆனால், நபித்தோழர்களை நேரடியாகச் சந்தித்தவர்கள். அவர்களிடமிருந்து இஸ்லாமிய அறிவைப் பெற்றவர்கள்... பொதுவாக, தாபியீன்கள் மத அறிஞர்களாகவும் இஸ்லாமியச் சட்ட வல்லுநராகவும் இருப்பர்”

“நபித்தோழர்கள் என்பவர்கள் யார்?”

“ நபிகள் நாயகத்துடன் சேர்ந்து இருந்தவர்கள். நபிகள் நாயகத்துடன் நேருக்கு நேர் பேசியவர்கள். வெறுமனே நபிகள் நாயகத்தின் முகத்தைப் பார்த்திருப்பவர்கள். நபிகள் நாயகத்தோடு இருந்தும் கண்பார்வை இல்லாததால் அவரைத் தரிசிக்க முடியாமல் போனோர், நபிகள் நாயகம் செய்த போர்களில் கலந்திருத்தல். நபிகள் நாயகம் பேச்சை மனனம் செய்தோர். இவையே நபித்தோழராக இருப்பதற்கான அடிப்படைத்தகுதிகள். நபிகள் நாயகத்தின் இறுதி ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஒரு கணக்கு நபி தோழர்கள் மொத்தம் 114000 என கூறுகிறது. மாலிக் பின் நவேரா நபிகள் நாயகத்தை நேருக்கு நேர் சந்தித்தவர். ஆனால் நபிகள் நாயகம் மறைவுக்குப் பின் பொய் நபி சாஜாவுடன் கூட்டு சேர்ந்தார். ஆகையால், அவருக்கு நபிதோழர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. சையதினா ஓவைஸ் கர்னி ஏமன் நாட்டை சேர்ந்தவர். தாயின் உடல் சுகவீனம் காரணமாக அவரால் நபிகள் நாயகத்தை நேரில் சந்திக்க இயலவில்லை. இருந்தாலும் அவருக்கு நபித்தோழர் அந்தஸ்து வழங்கப்பட்டது!”

“நபிதோழர்களில் சிறந்தவர்கள் யார்?”

“இமாம் அலி பி அபிதாலிப் மற்றும் அவரது மகன்கள் இமாம் அல் ஹசன், இமாம் அல் ஹுசைன்...”

“நபி நாயகத்தை நேரில் பார்த்த சிறுவர்களுக்கு தனியாக ஏதாவது ஒரு பெயர் இருந்ததா?”

“ஆம் இருந்தது. அவர்கள் ஸஹாபா அல் ஷிகார் என அழைக்கப்பட்டனர்!”

“நபித்தோழராக இருப்பது இஸ்லாமில் மிகப்பெரிய அந்தஸ்தா?”

“பின்ன?- ‘என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவனைக் கண்ட முஸ்லிமையும் நரகம் நெருங்காது’ என்கிறார் நபிகள் நாயகம் ஆதாரம் திர்மிதி மிஷ்காத்!”

“தாபியீன்களின் தகுதி என்ன?”

“தாபியீன்கள் ஸஹாபாக்களுக்கு அடுத்து தலைமுறை. தாபியீன் என்பவர் நபித்தோழர் யாரையாவது நேரில் கண்ணால் பார்த்திருக்க வேண்டும். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி வாழ்ந்து மரணத்திருக்க வேண்டும். கவாரிஷியாக்களை பின்பற்றுவோர் தாபியீன்களாக இருக்க முடியாது!”

“ஓஹோ!”


“இன்னொரு ஹதீஸ் கூறுகிறேன் கேள். ‘மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு சிறந்தவர்கள் அவர்களை அடுத்து வரும் தாபியீன்கள். அவர்களுக்கு பிறகு சிறந்தவர்கள் தபஅத்தாபிஈன்கள். பின்னர் ஒரு சமுதாயத்தினர் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவருடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் சாட்சியத்தை முந்திக் கொள்ளும்’ என்கிறார் நபிகள் நாயகம். ஆதாரம் ஸஹிஹுல் புகாரி 3651....”

“ஸஹாபாக்களும் தாபியீன்களும்தான் இறையடியார்களில் டாப் மோஸ்ட் இல்லையா?”

“உண்மை... ஸஹாபாக்களுக்கு அடுத்த உயரிய அந்தஸ்து தாபியீன்களுக்குத்தான். ஸஹாபாக்களிடமிருந்து பெற்ற அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட அறிவுகளை விளக்கங்களை அடுத்த தலைமுறைக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்த்தப் பெருமை தாபியீன்களுக்கு மட்டும் உரித்தானது!”

“தாபியீன்களின் பணிகள் என்னென்ன?”

“ஸஹாபாக்களிடமிருந்து கற்ற ஹதீஸ்களை அடுத்தத் தலைமுறைக்குக் கற்பிப்பது. ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் நூல் வர தாபியீன்களே அடிப்படைக் காரணம். மத்ஹபு இமாம்கள் மார்க்கச் சட்டம் இயற்ற தாபியீன்கள் கற்பித்துச் சென்ற மார்க்க விளக்கங்களே அடிப்படை. தாபியீன்கள் அத்துடன் நில்லாது வெளிநாடுகளுக்குச் சென்று இஸ்லாமைப் பரப்பவும், பிற மதத்தினரை இஸ்லாமுக்குக் கொண்டு வரவும் தாவா பணி செய்தனர். பலவந்தம் இல்லாத சாந்தியும் சமாதானமும் கொண்ட தாவா பணி அவர்களுடையது!”

“வேறு ஏதாவது கேள்விகள்?”

“தாபியீன்களுக்குச் சீருடை உண்டா?”

“சீருடை இல்லை. மக்களோடு மக்களாகக் கலந்திருப்பார்கள்...”

“தாபியீன்களாகத் திகழ ஏதாவது பள்ளிகள் உண்டா?”

“இஸ்லாமியப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து யாரும் தாபியீன்களாக வர முடியாது. ஆனால் காசாவில் அல்தாபியீன் பள்ளியும், ஹுதைபியா சர்வதேச பள்ளியும் தாபியீன்கள் பெயரால் அமைத்துள்ளன!”

“தாபியீன்களை ஒற்றை வாக்கியத்தில் வரையறுங்கள்!”

“தாபியீன்கள் பின்பற்றுபவர்கள் அல்லது பின் தொடர்பவர்கள்!”

“அத்தா! ஒரு முக்கியமான கேள்வி. தாபியீன்களில் பெஸ்ட் 10 பேர்களை கூறுங்களேன்!”

“பத்து பேர் பட்டியல் என்னிடம் இல்லை. ஏழு பேர் கூறுகிறேன்!”

“ஓகே!”

“முதலாமவர் சயீத் இப்னு அல்-முஸய்யில். இவர் இஸ்லாமிய சட்டத்திலும் ஹதீஸ் அறிவிலும் சிறந்து விளங்கினார்!”

“சபாஷ்!”

“இரண்டாமவர் உவைஸ் அல்- கரனி. இவர் தாபியீன்களில் மிகச்சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்!”

“ஆஹா!”

“மூன்றாமவர். அல்-ஹசன் அல்-பஸ்ரி. இவர் ஒரு சிறந்த அறிஞர், சொற்பொழிவாளர் மற்றும் இறையியலாளர் ஆவார்!”

“ஓவ்!”

“நான்காமவர் முஹம்மது இப்னு சிரின். இவர் ஒரு பிரபலமான தாபியீன் மற்றும் ஹதீஸ் அறிஞர்!”

“நைஸ்!”

“ஐந்தாமாவர் இப்ராஹிம் அல்-நஃகை இவர் கூஃபா நகரத்தின் சிறந்த அறிஞர்!”

“பிரமாதம்!”

“ஆறாமவர் அபூ ஹனீபா அல்-நுஃமான் இப்னு சாபித். இவர் ஹனபி மத்ஹப்பின் நிறுவனர் ஆவார்!”

“சிறப்பு!”


“ஏழாமவர் அமீர் இப்னு தீனார். இவர் மக்காவில் வாழ்ந்த ஒரு தாபியீன் ஆவார்!” - சரேலென ஆரிப்பின் மனக்கண்ணில் ஆயிரக்கணக்கான தாபியீன்கள் தோன்றினர். நீள அங்கியும் தலைப்பாகையும் மீசை இல்லாத நரைத்த தாடியும் கொண்டிருந்தனர்.

“நாங்கள் எங்கள் இறைப்பணியை முழுமையாக செய்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு மனக்குறை இருக்கிறது!”

“என்ன மனக்குறை?”

“நபிகள் நாயகம் காலத்தில் பிறந்து அவருடன் பேசி அவருடன் தொழுது அவரின் அறிவுரைகளை காதுறும் நபித்தோழராக நாங்கள் பிறக்கவில்லையே என்கிற மனக்குறைதான் எங்களுக்கு!”

“எனக்கொரு மனக்குறை தாபியீன்களே?”

“என்ன மனக்குறை?”

“ஸஹாபா வேண்டாம், தாபியீன் வேண்டாம், குறைந்தது நான் ஒரு சஹாபா அல் ஷிகாராக இருந்திருக்கலாமே என்கிற ஆவலாதிதான் எனக்கு!”

“மறுமை நாளில் இறைவனுக்கு அருகில் நபிகள் நாயகத்தையும் கூட்டத்தின் முன் வரிசையில் சஹாபாக்களையும், சகதாபியீன்களையும் நீயும் நானும் சந்திப்போம். மாஷா அல்லாஹ்!” தாபியீன்கள் கரைந்து மறைந்தனர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p58.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License