இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

59. எங்கேப் போகிறாய் மகனே...?


குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் முஹம்மது யூசுப். யூசுப்புக்கு வயது 21. உயரம் 170 செமீ. ரோஜா நிறம். சுருள்சுருள் தலை கேசம். உல்லாசம் நிரம்பிய கண்கள். எகிப்து மூக்கு இரத்தச் சிவப்பு உதடுகள். மெல்லிய மீசை.

பூத்துவாலையை களைந்து விட்டு கீழ் உள்ளாடை அணிந்து கொண்டான் யூசுப்.

யூசுப் இளங்கலை பௌதிகம் மூன்றாம் ஆண்டு படிப்பவன்.

உலர் சலவை செய்யப்பட்ட நீலநிற ஜீன்ஸும் வின்டேஜ் எலைட் போலோ டிசர்ட்டும் உடுத்திக் கொண்டான்.

தலைக்கு பிரில்கிரீம் தடவி வாரினான்.

வீக்டோடர்மரிக் வானிஷிங் கிரீம் பிதுக்கி முகத்தில் பூசிக் கொண்டான். அதன் மேல் கோகுல் சான்டல் வுட் பவுடர் ஒரு கோட் அடித்தான்.

ஐப்ரோ பென்சில் எடுத்து மீசையை அடர்த்தி பண்ணினான்.

ஆக்ஸ் எபக்ட் ஆப்டர் ஷேவ் லோஷன் எடுத்து இரு காது மடல்களுக்கு பின் ஒற்றினான்.

டியோடரன்ட் எடுத்து இரு அக்குள்களில் பீய்ச்சிக்கொண்டான்.

வாய்க்குள் மவுத் ரெபஷனர் தெளித்துக் கொண்டான்.

100 சதவீதம் சார்ஜ் ஏறிய திறன்பேசியை எடுத்து வாட்ஸ்அப் தகவலை சோதித்து திருப்தியாய் பேன்ட் பாக்கட்டுக்குள் செருகிக் கொண்டான்.

பர்ஸை பேன்ட்டின் பின் பாக்கட்டில் பதுக்கிக் கொண்டான்.

மெல்லியதாக “முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ இதில் பத்தி எரியாதோ” பாடலை விசிலடித்தபடி தனது படுக்கையறையை விட்டு வெளியேறினான் யூசுப்.


அம்மா அனீஸ் பாத்திமா குறுக்கிட்டாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும் யூசுப்!”

“வஅலைக்கும் ஸலாம். ஏம்மா வெளிய போறவன் பாதைல பூனை மாதிரி குறுக்கிடுற? என்ன வேணும் உனக்கு?”

“இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை காலேஜ்க்கு லீவு நாள் தானே… இன்னைக்கு கூட நீ காலைலயே வெளிய போகணுமா?”

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மம்மி. ஒரு 21 வயது யூத்துக்கு வெளி உலகத்ல ஆயிரம் வேலை இருக்கும். தடுக்காதே ஆர்வமாய் வேடிக்கை மட்டும் பார்!”

“அதெப்படி வேடிக்கை பாக்றது? வண்டி சரியான பாதைல போகுதான்னு நான் அடிக்கடி செக் செய்யத்தான் செய்வேன்!”

“வண்டி தாறுமாறு தக்காளிச்சோறுன்னு ஓடிட்டிருக்கு குறுக்கே வராதே!”

“உன்னுடைய அத்தா உனக்கு இரண்டு வயசாகும் போதே மஞ்சள் காமாலை வந்து மௌத்தா போய்ட்டார். ஒரு மகனை தன்னந்தனியா போராடி வளர்க்கும் சிங்கிள் மதர் நான். நான் உன்னைகண்காணிக்கவே செய்வேன்!”

“இப்ப உனக்கு என்னதான் வேணும்?”

“இப்ப நீ எங்க போற? மொதல்ல அதை சொல்லு…”

“எங்கே வேணாலும் போவேன்… அத உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!”

“நீ எங்கே போவேன்னு நான் சொல்றேன்.. உங்க அத்தாவுக்கு இரண்டு மனைவிகள். நான் இளைய தாரம். நீ மூத்ததாரத்துக்கு பிறந்த மகள் பர்வீனை பார்க்கப் போற!”

“போனா என்ன?”

“பர்வீன் உனக்கு மஹ்ரமான உறவுடா… அவளை நீ கல்யாணம் செஞ்சுக்க முடியாது!”

“மஹ்ரம் என்றால் என்ன?”

“இஸ்லாம் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ யாராரை திருமணம் செய்து கொள்ளலாம் யாராரை திருமணம் செய்து கொள்ளக் கூடாதுன்னு கட்டுப்பாடு விதிச்சிருக்கு…”

“ஓஹோ…’


“நான் சொல்றதை உன்னிப்பா கவனி. தாய், தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, அத்தை, மாமா, தந்தையின் சகோதரி, தந்தையின் சகோதரன், தாயின் சகோதரி, தாயின் சகோதரனை மணந்து கொள்ள கூடாது. உனது இரண்டு வயதுக்குள் உனக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் உனக்குத் தாயானவள். அவளை நீ மணந்து கொள்ளக் கூடாது. மனைவியின் தாய், மனைவியின் மகள் (முந்தைய கணவரின் மகள்) கணவனின் தந்தை, கணவனின் மகன் (முந்தைய மனைவியின் மகன்) மணந்து கொள்ளல் கூடாது. ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரி, அவளுடைய தாயின் சகோதரி அல்லது அவளுடைய தந்தையின் சகோதரியை ஒருசேர மணக்க முடிக்க முடியாது. பர்வீன் உனக்கு அக்கா முறை ஆகிறாள். அவளை மணமுடிக்கும் ஆசை இருந்தால் அதனை இப்போதேக் கை விடு!”

“இந்துக்களில் தாய் மாமனை எல்லாம் கட்டிக்கிறாங்களே!”

“நீ சார்ந்திருக்கும் மதக்கட்டுப்பாடுகளை மதி!”

“நான் பர்வீன் வீட்டுக்கு வெறும் டைம் பாஸிங்குக்காக போகிறேன்!”

“அப்படித்தான் ஆரம்பிக்கும் ஆனால் விபரீதமாக முடியும்!”

“சரி, நான் பர்வீன் வீட்டுக்குப் போகல….”

“நீ பர்வீன் வீட்டுக்கு மட்டுமா போற… ஷெகனாஸ் வீட்டுக்கும் தான் போற….”

“ஷெகனாஸ் எனக்கு மூத்த அக்கா மாதிரி. என்னை விட 15 வயது கூட. அவங்க வீட்டுக்கு போறதில என்ன தப்பு?”

“ஷெகனாஸ் கல்யாணம் ஆனவ. அவ புருஷன் பாரின்ல இருக்கான். அவன் சம்பாரிச்சு அனுப்ற பணத்தை எல்லாம் ஷெகனாஸ் ஆடம்பர செலவு பண்ரா. தவிர, ஷெகனாஸ்க்கு பல திருமண பந்தம் மீறிய உறவுகள் இருக்கிறதா பேசிக்கிராங்க!”

“அதனால!”

“தப்பு செய்ற பெண்ணுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. உன்னை வாரி சுருட்டி முழுங்கிடுவா. பசியாக இருக்கும் மலைப்பாம்பின் முன் ஊர்வலம் போகாதே!”

“அந்தக்காவுக்கு நான் ஒரு தம்பி அவ்வளவுதான்!”

“இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் என் முன் உரிக்காதே!”

“சரி, அங்கயும் போகல…”

“மூணாவதாக அந்த டுபாக்கூர் மேனா மினிக்கி தானா குலுக்கி அசாருதீன் வீட்டுக்கு போகாதே!”

“ஆம்பளைக்கு ஆம்பிளை என்னம்மா பிரச்சனை?”

“அவன் குடும்பமே கஞ்சா விக்குது. அவன் பொண்டாட்டி அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வர்றா. தினமலர்ல அடிக்கடி அவங்கள பத்தி ந்யூஸ் வருது. அசாருதீன் உனக்குக் கஞ்சாவை பழக்கி விட்ரப் போரான்!”

“அய்ய… அதெல்லாம் நான் பழக மாட்டேன்!”

“பன்னியோட சேந்த கன்னுக்குட்டியும் டேஷ் தின்னும்டா மகனே!”

“வேற எங்கங்கே போகக்கூடாதுன்னு நீயே சொல்லிடு…”

“ஆறு பொம்பிளைப்பிள்ளைகராங்க வீட்டுக்கு போகாதே!”

“ஏன்?”

“25, 22, 19, 17, 13 வயசுகள்ல பொண்ணுக சமஞ்சு கிடக்குதுக அந்த வீட்ல. ஆறு பெண் குழந்தைகளை பெத்துட்டு பொறுப்பில்லாம குடிச்சிட்டு திரியுரான் அவங்கப்பன். ஆறில ஒண்ணுக்கு கூட கல்யாணம் ஆகல. நீ ஏதாவது ஒரு குறுகுறுப்புல அவங்க வீட்டுக்குப் போய் வந்தேன்னா உன்னை கபக்குன்று பிடிச்சு போட்ருவாங்க. அவங்களை நான் இழிவா பேசல. நீ அவங்க வீட்ல ஒருத்திய நிக்காஹ் பண்ணினா மீதி அஞ்சு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பு உன் தலை மேல விழும். காலம் பூராவும் நீ போராடிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை வரும்!”

“நீ ரொம்ப சுயநலக்காரி அம்மா!”

“இருந்துட்டு போறேன் மீதியையும் கேளு…”

“சொல்லித் தொலை அம்மா!”

“நீ மாலிக் வீட்டுக்கு போகாதே!”

“மாலிக்குக்கு என்ன குறை? மாலிக்கு ஒரு பெரும் பணக்காரர். அவருக்கு ஒரே மகள். அவருக்கு மருமகனாக கொடுத்து வச்சிருக்கனும்!”

“பொறுடா. நாம சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். மாலிக் ஒரு வஹாபி. வஹாபிக்கும் சுன்னத் ஜமாஅத்துக்கும் ஒருபோதும் ஒத்து வராதுடா மகனே!”

“வஹாபிஸம் என்றால் என்ன?”

“பதினெட்டாம் நூற்றாண்டில் இப்னு அப்துல் வஹாப்பால் நிறுவப்பட்ட இஸ்லாமிய இயக்கம் வஹாபிஸமாகும். வஹாபிஸம் தீவிரவாதப் போக்கு உடையது. இஸ்லாமுக்குள் பிளைவுகளை ஏற்படுத்துகிறது. வஹாபிஸம் நவீன கண்டுபிடிப்புகளை எதிர்க்கிறது. வஹாபிஸம் நபித்தோழர்களின் வழி மொழிகளை பின்பற்றுகிறது”

பெருமூச்சு விட்டான் முஹம்மது யூசுப்.


“நான் அறிவுரை சொன்னால் கேட்க மாட்டாய் ஒரு நபிமொழி சொல்கிறேன் கேள்… ‘கால்கள் செய்யும் விபச்சாரம் தவறான உறவைத்தேடி அடி எடுத்து வைப்பதாகும்’ என்கிறது நூல் முஸ்லிம் 5165… நீ தவறான திசையில் கால் வைக்கும் போதெல்லாம் இந்த ஹதீஸை நினை. இந்த ஹதீஸ் உன்னை காக்கும். இப்போது நீ போகலாம்!”

பைக்கை ஸ்டார்ட் செய்தான் முஹம்மது யூசுப்.

அவனின் முன் தவறான பாதைகள் நீண்டன.

திருமணம் செய்யக்கூடாத உறவு முறை பெண்ணிருக்கும் சாலை - திருமணபந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் பெண் இருக்கும் சாலை - போதை பொருள் விற்பனையகம் - ஆறு மகள் வீடு இருக்கும் சாலை - கொள்கை ரீதியாய் முரண்பட்டவர் இருக்கும் வீட்டின் சாலை.

நேர் வழியா, கால்களால் விபச்சாரமா?

நபிமொழி ஜெயித்தது.

பள்ளிவாசலுடன் இணைந்த இஸ்லாமிய நூலகத்தின் முன் பைக்கை நிறுத்தி ஸ்டாண்டிட்டான் முஹம்மது யூசுப்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p59.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License