இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

60. இரும்புச்சங்கிலி


திறன்பேசியை உயிர்ப்பித்தாள் காலிதா பேகம். பத்து இலக்க எண்ணை அமுக்கினாள்.

எதிர்முனை , “அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா!”

“வஅலைக்கும் ஸலாம் ஆமீரா!”

“காலிதா பேகமும் ஆமீராவும் உடன்பிறந்த சகோதரிகள். காலிதா எட்டு வயது மூத்த அக்கா. ஆமீரா தங்கை. ஆமீரா பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறாள். உடன் பணிபுரிந்த லைஜால் ஜஹானை காதலித்து பெற்றோர் அனுமதியுடன் முந்தின வருடம் திருமணம் செய்து கொண்டாள். ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் லைஜால் ஜஹான் இறந்து போனான். ஆமீரா நான்கு மாதம் பத்து நாள் இத்தா முடித்து இரண்டு வாரங்கள் ஆகின்றன.

“அழுது அழுது கரைந்து கரைந்து கணவன் இறந்த சோகத்தைத் தொலைத்து விட்டாயா ஆமீரா?”

“இம்!”

“கனவில் உன் கணவர் வருகிறாரா?”

“சில தடவை!”

“டூட்டி ஜாய்ன் பண்ணி விட்டாயா?”

“விடுமுறையை இன்னும் ஒரு மாதம் நீடித்திருக்கிறேன்!”

“உனக்கு ஆறுதலாக நான் ஏதாவது செய்ய விரும்புகிறாயா?”

“ஆமாம்!”

“என்ன செய்ய வேண்டும் சொல் ஆமீரா!”

“அக்கா உன் வீட்டில் பத்து நாட்கள் தங்கி இளைப்பாற விரும்புகிறேன்!”


“தாராளமாக வா… நீ மயிலாடுதுறையில் அம்மாவுடன் இருக்கிறாய். நாங்கள் கோயம்புத்தூர் உக்கடத்தில் இருக்கிறோம். மதியம் 3:10க்கு ஜனசதாப்தியில் ஏறு. இரவு ஒன்பது முப்பதுக்கு கோவை வந்து விடலாம். நானும் மச்சானும் ஸ்டேஷன் வந்து உன்னை ரிசீவ் பண்ணிக் கொள்கிறோம். நாளைக்கு நீ வர்ற மாதிரி டிக்கெட் ரிசர்வ் பண்ணி உன் வாட்ஸ் அப்புக்கு அனுப்பவா?”

“சரி!” - கோயம்புத்தூர் தொடருந்துச் சந்திப்பில் இறங்கிய ஆமீராவை காரில் அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தனர் காலிதா- தாரிக் தம்பதிகள்.

“வாருங்கள்… மூவரும் இடியாப்பம் – பாயா சேர்ந்து சாப்பிடுவோம்!’

“நீ செய்தததை முதலில் உன் தங்கைக்குப் பரிமாறு. சாப்பிட்ட பின் அவள் உயிரோடு இருந்தால் நான் சாப்பிடுகிறேன்!”

“உங்கள் கருப்பு நகைச்சுவை ரசிக்கவில்லை… வாயை மூடுங்கள்..”

“கல்யாணத்துக்கு பின் சாப்பிடவும் கொட்டாவி விடவும் தான் வாய் திறந்திருக்கிறேன். நீ டொனால்ட் ட்ரம்ப். நான் ஒரு பாலஸ்தீன அனாதி…”

“அய்ய… ஓவரா பேசாதீங்க”

“பேசினால் என்ன செய்வ?”

“இங்க நீ புருஷனா இல்ல நான் புருஷனா?”

“ஏன் வாயை கிழிக்ற உரிமை புருஷன்களுக்கு மட்டும்தானா?”

“உன் வீடு சொந்தம் யாராவது நம் வீட்டுக்கு வந்து விட்டால் சின்னராசு உன்னைக் கைல பிடிக்க முடியாது!”

“உன் வீட்டு சொந்தம் வந்தால் நீ தலைவிரிச்சு ஆடுவ…”

“என்ன நீ வா போ போன்ற!”

“சண்டைன்னு வந்திட்டா சட்டை கிழியத்தான் செய்யும். நீ பெரிய மயிராண்டி. உன்னை ராஜா மஹாராஜா சக்கரவர்த்தின்னு கூப்பிடுவாங்க. போடா டேய்…’

“டேயா?”

“ஆமாண்டா டால்டா..”

அக்காளும் மச்சானும் உக்கிரமாகச் சண்டை போடுவதைக் கண்களைக் குறுக்கிப் பார்த்தாள் ஆமீரா.

“நிறுத்துங்க உங்க சண்டையை. உங்க சண்டையை பாக்கத்தான் என்னை மயிலாடுதுறையில் இருந்து வரவழைச்சீங்களா?”

“நீ கண்டுக்காம இரு ஆமீரா. கொடுக்றதை கொடுத்தாத்தான் இவன். குடம் கொண்டு தண்ணி எடுப்பான்… நாலு அறை அறைஞ்சாதான் அமுக்கிட்டு இருப்பான்னா நான் இவனை கும்மு கும்முன்னு கும்முட்டி வர்றேன்… சித்த பொறு!”

“நீ அடிக்றப்ப என் கை புளியங்கை பறிச்சுட்டு இருக்குமோ? வா… ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்திரலாம்!”

“பாய்ஜான்!” கத்தினாள் ஆமீரா.

“இதென்ன ரெண்டு பேரும் பேட்டை ரௌடிகள் மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க… பார்க்க அசிங்கமா இருக்கு!”

“உன் அக்காக்காரியை அடக்கு. என்கிட்ட வராதே!”

“ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கு. ரெண்டு பேரும் அடங்குங்க!”


“உங்க வீட்ல பொம்பளை பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளக்கல. விஷஜந்துக்களா வளத்திட்டாங்க!”

“உங்க சண்டைல எங்க பெற்றோரை இழுக்காதீங்க”

“எங்க சண்டைல நீ மூக்கை நீட்டாதே. எட்டி நின்று வேடிக்கை மட்டும் பாரு. (கணவனிடம் திரும்பி) உன்னை உன் பேரன்ட்ஸ் ஒழுக்கமா வளத்திருக்காங்களா? குளிச்சிட்டு ஈரத்துண்டை பெட்ல போட்ருவ. டூத் பேஸ்ட்டை பிதுக்கி ஈரோப்பியன் கிளாசெட் மேல வைச்சிருவ. வாசல்ல கால் செருப்பை ஆளுக்கொரு திசையா உதறி விட்ருவ… அழுக்கு ஜட்டிகளை வரவேற்பறைல போட்டு வச்சிருவ… சாப்பிட்ட தட்டை என்னைக்காவது கழுவி வச்சிருக்கியாடா?”

“அது எல்லாத்தையும் ஒழுங்கு பண்றது உன் வேலைடி.”

“பொண்டாட்டியா அல்லது உனக்கு கொத்தடிமையா நான்?”

“நான் இங்கு ஆயுள் தண்டனை கைதி. நீ ஜெயில் வார்டன். நான் இங்கு எல்கேஜி மாணவன். நீ பிரம்பு வைத்து மிரட்டும் டீச்சர். நான் சம்பாதிச்சுக் கொட்டனும் நீ விரும்புறப்ப எல்லாம் தாம்பத்யம் பண்ணனும். நீ எல்லாத்தையும் அனுபவிச்சிக்கிட்டு என் மேல குதிரை சவாரி போவ…”

“என்ன பெருசா சம்பாதிச்ச? என்ன சிறப்பா தாம்பத்யம் பண்ணின? வெளில சொன்னா வெட்கக் கேடு!”

“அக்கா! போதும்கா.. எனக்கு தலை வலிக்குது! உங்க சண்டை எப்பயாவதா அல்லது தினமா?”

“புருஷன்காரன் பக்கத்து தலையணைல படுத்திருக்ற நல்ல பாம்பு. தினமும் கொத்தத்தான் செய்வான். புருஷன்காரன் இடது ஜோல்னாப் பையில் கழைகூத்தாடும் சிம்பன்ஸி. தினமும் கடிக்கத் தான் செய்யும். திருமணம் ஒரு புலி சவாரி என்பது திருமணமான உனக்குத் தெரியாதா? கல்யாணத்தைக் கண்டுபிடிச்சவன் கைல கிடைச்சான் நாலு மிதி மிதிப்பேன்!”

“என்னைச் சாப்பிட விடுவீங்களா இல்ல விடிய விடிய நான் ஸ்டாப் சண்டை போடப் போறீங்களா?”

“இருடா.. உன்னை அப்றமா பாத்துக்கிரேன். நீ குளிச்சிட்டு வந்து சாப்பிடும்மா..”

“நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள இங்க ஒண்ணும் ஆய்டாதே?”

“நோ கேரன்டி… நீ குளிச்சிட்டு வா.. இந்த முண்டம் கர்ருபுர்ருன்னு ஏதாவது முணங்கிக்கிட்டுத் தான் இருக்கும். நானும் பதில் வசவை முணங்கிக்கிட்டு தான் இருப்பேன்…”

குளித்துவிட்டு திரும்பினாள் ஆமீரா. அக்காளும் மச்சானும் பிரகாஷ்ராஜ் போல கோட்டா சீனிவாசராவ் போல ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.

“உங்க சண்டைக்கு நடுவே எனக்குச் சாப்பிடயே பிடிக்கல…”

“அவன் மூஞ்சுபக்கம் திரும்பாம வயிறார சாப்பிடு ஆமீரா!”

“புருஷன் பொண்டாட்டி சண்டை உங்க வீட்ல மட்டும் தானா? உலகம் பூராவுமா?”

“புருஷன்க இஸ்ரேல்ன்னா பொண்டாட்டிக பாலஸ்தீனர்கள். புருஷன் குண்டு போடாத நாளில்லை. சைத்தானின் மனித வடிவம் ஆண்கள்!”

சாப்பிட்டு முடித்தாள் ஆமீரா. தாரிக் ஒரு அறையிலும், அக்காள் தங்கை ஒரு அறையிலும் படுத்துக் கொண்டனர்.


- விடிந்ததும். ஆமீரா, “அக்கா! நான் ஊருக்கு கிளம்புறேன்… பை தி பை நீயும் பாய்ஜானும் போட்ட நடிப்பு சண்டை சூப்பர். நீங்களிருவரும் என் முன் எதற்காகச் சண்டை போட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஹதீஸ்தான் உங்க நாடகச் சண்டைக்கு அடிப்படை. ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டால் அனாதைக் குழந்தைக்கு முன் கொஞ்சாதீர்கள். ஏழைகளின் முன் வைத்து உங்களுடைய செல்வம் பற்றிப் பெருமை பேசாதீர்கள். அதேபோல் விதவைகளின் முன்னில் வைத்து உங்கள் மனைவியை அன்பு பாராட்டாதீர்கள்!’ என்கிறார் நபிகள் நாயகம். உங்க சண்டையை பார்த்து நான் ‘சீச்சீ இந்த பழம் புளிக்கும்’ எனக்கூறி ஓடும் நரியாக வேண்டும் என விரும்புனீர்கள் இல்லையா? ஒரு திருமணத்தில் இருக்கும் நல்லது கெட்டதுகளை நான் நன்கு அறிவேன். மேரேஜ் இஸ் எ நெசசரி ஈவில். என் கணவரின் வருட பாத்தியா முடிந்த பின் நான் கட்டாயம் மறுமணம் செய்து கொள்வேன். நீங்கள் சண்டை என நினைத்துப் போட்ட சண்டையில் டன் கணக்கில் காதல் ரசம்தான் சொட்டியது!”

அக்கா காலிதா பேகம் பாய்ந்து ஆமீராவை கட்டிக் கொண்டாள்.

“நோ மோர் பொய் சண்டை. நீ இருடி என் செல்லக்கன்னுக்குட்டி” என்றவள் கணவன் பக்கம் திரும்பி, “அக்கா தங்கச்சி பாசத்தை பார்த்து கண் வைக்காம எட்டிப் போடா சைத்தானே!” காதலாய் வசவினாள்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p60.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License