இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

61. கவ்வாலி


”இடி இசைக்கத் தொடங்கும் இரவு
ஆகாயம்
மின்னல் கீற்றுகள்
ஒளிக்கற்றைகளைப் பீய்ச்ச
சடசடத்து விழும் பெரும்
தூறல்களை
மழையின் பாடல்களாக
அனுப்பியதற்கு
பூமி என்ன கைமாறு
செய்துவிடப் போகிறதென
யாரும் எண்ண வேண்டாம்
உச்சம் பெரும்
சூபியின் நீர்த்தாண்டவம்
வானத்திற்கான சமர்ப்பணம்”

- வலங்கைமான் நூர்தீன்

வாசலின் அழைப்பு மணி சங்கீதமாய் சிணுங்கியது.

“யாராக இருந்தாலும் உள்ளே வரலாம்!” குரல் கொடுத்தார். யாஹ்யா கான். வயது 86. இஸ்லாமிய பாடகர் குறிப்பாக கவ்வாலி பாடுவதில் அற்புதர். பாடல்களை பெரும்பாலும் அவரே இயற்றுவார். தலையில் துணி தொப்பிஅணிந்த ஒரு வாலிபன் எட்டினான்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!”

“வஅலைக்கும் ஸலாம்… யார் நீ?”

“என் பெயர் கலீல் ஜிப்ரான். எனக்கு வயது 21. முதுகலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன். உங்களை பார்க்க சென்னையிலிருந்து நாகூருக்கு ஓடோடி வந்திருக்கிறேன்!” கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்ஸை நீட்டினான்.

வாங்கி தன்னருகில் வைத்தார் யாஹ்யா.

“வா… உனக்கு என்ன வேணும்?”


“கடந்த 10 வருடங்களாக கவ்வாலி பாடல்களை கேட்டு வருகிறேன். கேட்கும் போது அவை என் உயிரை உருக்கி விடுகின்றன. ஒவ்வொரு பாடலின் உச்சத்திலும் இறைவனை ஆலிங்கனம் செய்கிறேன். நிறைய சூபி பாடல்கள் எழுதியிருக்கும் உங்களுக்கு கவ்வாலி பற்றி நிறைய தெரியும் என யூகித்தேன். உங்களை நேரில் பார்த்து கவ்வாலி பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளியுற வந்திருக்கிறேன்!”

“வா… என் காலடியில் அமர்!”

அமர்ந்தான்.

“கலீல் ஜிப்ரான்!. தேனீர் அருந்தியபடி பேசுவோம்!”

தேனீர் வந்தது.

இருவரும் உறிஞ்சினர்.

“கலீல்! கவ்வால் என்கிற அரபி வார்த்தைக்கு பேசு அல்லது சொல் எனப் பொருள். கவ்வாலி என்பது மதபக்தியையும் கடவுளுக்கான ஆன்மிக நெருக்கத்தையும் தூண்டுவதற்காக சூபிகளால் நிகழ்த்தப்படும் ஒரு இசை வடிவம். சிஷ்டி சூபி பிரிவின் சமா என்கிற ஆன்மிக இசை நிகழ்ச்சிடன் தொடர்புடைய ஒரு இசை வடிவமே கவ்வாலி. ஓபரா பாடகர்கள் போல மென்மையான மேலண்ணத்தை மேலுயர்த்தி ஆழமான உள்வாய்க்குழி அகலமாக பாடுகிறார்கள் கவ்வாலி பாடகர்கள். கவ்வாலியின் ஒரிஜினல் வடிவம் பெர்ஷியாவில் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்திய, துருக்கிய, அரேபிய மற்றும் பாரசீக இசை மரபுகளின் கோர்வையை 13ஆம் நூற்றாண்டில் அமீர் குஸ்ரோ உருவாக்கினார்!”

“ஆஹா!”

“முகமது பாட்சா எனும் கவிஞர் எழுதிய ஒரு சூபி பாடலை பாடுகிறேன்... கேள்...”

“தாராளமாக பாடுங்கள்!”


“அல்லாஹு அல்லாஹ்
அல்லாஹு அல்லாஹ்
எம் துயரங்களைத்
தீர்க்கும் அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹு அல்லாஹ் யா
ரஹமத்துல்லாஹ்

சரணம் 1

புல்லென பூமியில் விழுந்து
கிடந்தோம்
மழையெனப் பொழிந்து தழுவிப்
படர்ந்தாய்
கல்லுக்குள் இருக்கின்ற
தேரைக்கும் நீதான்
சுவாசம் கொடுத்து இரையினை
அளித்தாய்

சரணம் 2

கனவுகள் கட்டியே கவிதையில்
வாழ்ந்தோம்
மறையினைக்காட்டிக்
கரையினில் சேர்த்தாய்
அண்ணர் முகமது ஸல்லெனும்
உயரிய தூதை
உலகுக் களித்து உயிர்ப்பையும்
கொடுத்தாய்.

சரணம் 3

குடையை பிரித்தோம் காற்றில்
பறந்தது
சிறகை விரிக்கும்
பறவைகளைக் கண்டு
உமது அருளை விரித்து
பறவைகளானோம்

கருணையளிப்பாய்
கண்ணொத்த ரஹ்மானே!”

கைத்தட்டி மகிழ்ந்தான் கலீல் ஜிப்ரான்.

“கவ்வாலிக்கென்று சில நிபந்தனைகள் உள்ளன. கவ்வாலி பாடல்களை குழந்தைகளோ, பெண்களோ பாடக்கூடாது. ஆனால் தற்போது பெண்கள் கவ்வாலி பாடுகின்றனர். கவ்வாலி பாடலில் அல்லாஹ்வின் நினைவே முக்கியம். பாடல் வரிகளில் ஆபாசமோ அநாகரீகமோ கூடவே கூடாது!”

சுவராசியமாக தலையாட்டினான் கலீல் ஜிப்ரான்.


“கவ்வாலி பாடல்களுக்கு இசைக்கருவிகள் கூடாது என்றிருந்தது. அந்த நிலை தற்போது மாறி ஹார்மோனியம், தபேலா, டோலக், கைதட்டல், கோரஸ் எல்லாம் கவ்வாலி பாட்டோடு பாட்டாக கலந்து விட்டன. கவ்வாலி பாடல்களில் கீழ்க்கண்ட ஐந்து அம்சங்கள் அவசியம் இருக்கும்.

1. பிரிவுத் துயர் ஏக்கம்.

2. பக்தியும் சரணாகதியும்.

3. வரம்புகளை மீறுதல்.

4. தெய்வீகத்தை காதலித்தல்.

5. பாடியதையே பாடியே பேரானந்த பரவசநிலை அடைதல்!”

“பேரானந்த நிலையை இப்போதே உணர்கிறேன் அத்தா!”

“மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள், தாளமுறை, கைத்தட்டல், உச்சஸ்தாயியில் குரல் ஆலாபனை கவ்வாலியின் பிரத்தியேக அம்சங்கள்!”

“கவ்வாலி பாடகர்களில் பிரபலமானவர்கள் சிலரை பட்டியலிடுங்களேன்!”

“கசல்களின ராஜா ஜக்ஜித் சிங், ஹரிஹரன், பங்கஜ் உதாஸ், தலத் அஜீஸ், பூபிந்தர் சிங், அனுப் ஜலோட்டா, பரிதா கானும், உஸ்தாத் மெஹந்தி ஹஸன் குலாம் அலி மற்றும் கசல்களின் ராணி பேகம் அக்தர்…”

“வாவ்!”

“முதல் பெண் கவ்வாலி பாடகி ஷகிலா பானோ போபாலி… ஐகான் பாடகர் நுஸ்ரத் பதே அலி கான் பாடிய ஒரு கவ்வாலியை பாடுகிறேன்… கேள்… இப்பாடலின் தமிழாக்கம் ரமீஸ் பிலாலி….

“அல்லாஹு அல்லாஹு அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு அல்லாஹு”

இந்த பூமி இல்லாத ஒரு காலத்தில்
இந்த உலகம் இல்லாத ஒரு காலத்தில்
நிலாவும் சூரியனும் இல்லாத காலத்தில்
இந்த வானம் இல்லாத காலத்தில்
இறைவனின் ரகசியம்
எவருக்கும் வெளிப்படாத அந்தக் காலத்தில்
எப்பொருளும் தோன்றாத அந்தக் காலத்தில்
நீ மட்டுமே இருந்தாய் என் இறைவனே.

“ஏகனே! உன்னை அன்றி வேறு இறைவன் இல்லை என்பதே உன் மகத்துவம்
நீயே என் நினைவு, நீயே என் உணர்வு, நீயே என் நாட்டமும் தேட்டமும்
நீயே என் விழியின் ஒளி, நீயே என் இதயத்தின் குரல்
இருந்ததும் நீயே, இருப்பதும் நீயே, இருக்கப் போவதும் நீயே…நீயே…”

“கவ்வாலி சொல்லித்தர பள்ளிகள் உண்டா அத்தா?”


“டெல்லி ஸ்கூல் ஆப் மியூசிக், சென்னையில் உள்ள கோம் மியூசிக் கன்சர்வேட்டரி, ஷங்கர் மகாதேவன் அகாடமி, பெங்களூரின் பாரத் சர்கம் கவ்வாலி சென்டர், பெங்களூரின் நிகிலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ம்யூசிக், ஹைதராபாத்தின் பன்சிலால் பத்ருல்லா ஸ்கூல் ஆப் ம்யூசிக் அண்ட் டான்ஸ் இவைகளில் எதாவது ஒன்றில் சேர்ந்து கவ்வாலி கற்றுக் கொள்ளலாம். டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவ்லியா தர்கா கவ்வாலி பாடகர்களின் வேடந்தாங்கலாக விளங்குகிறது. இது தவிர கவ்வாலி வொர்க் ஷாப்கள் உள்ளன. ஆன்லைனிலும் கவ்வாலி வகுப்புகள் நடக்கின்றன…”

“நான் அங்கெல்லாம் போக விரும்பவில்லை. வாராவாரம் சனி ஞாயிறு உங்களிடம் கவ்வாலி கற்றுக் கொள்ள வருகிறேன் கற்றுத் தருவீர்களா?”

சிரித்தார் யாஹ்யா கான்.

“கைகால் விலங்குகளை உருக்கி விடுவி
உருக்கினதை வாளாக மாற்று
ஒவ்வொரு போர்க்களத்தையும் வெற்றி பெறு
ஓ பக்தனே!”

- உரத்தக் குரலில் பாட ஆரம்பித்தார் யாஹ்யா கான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p61.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License