இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

62. எங்கும் நிறைந்த இறையோனே…!


ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம்.

ரங்ககிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கத்தார் ஏர்வேஸ் அலுமினியப் பறவையில் ஏறினார். அவருக்கு வயது 45. கடந்த 15 வருடங்களாக ஜெர்மனியில் டேட்டா சயின்டிஸ்ட்டாக பணிபுரிபவர்.

அவருடன் அவரின் மனைவி திகழன்பு இருந்தார். வயது 40. அவர் ஜெர்மனியின் மிகப்பெரிய மருத்துவமனையில் மெடிக்கல் கோடராக பணி புரிகிறார்.

தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உண்டு. மகன் விபிலேஷ் வயது14. மகள் தைவினி வயது பத்து.

கத்தார் ஏர்வேயில் டோஹா போய் இறங்கி, மலேஷியன் ஏர்லைன்ஸ் பிடித்து, கோலாலம்பூர் போய் இறங்கி, இன்டிகோவில் ஏறி சென்னை சர்வதேச விமான நிலையம் இறங்கி, அங்கிருந்து திருச்சிக்குப் பயணம்.

மொத்தம் பயண நேரம் 25 மணி நேரம் 45 நிமிடங்கள்.

கத்தார் ஏர்வேஸின் அலுமினியப் பறவை 32, 000 அடி உயரத்தில் மிதந்தது.

தைவினி வாய் திறந்தாள். “அப்பா! மூணு விமானங்கள் மாறி இந்தியாவில் எந்த இடத்தை பார்க்க போகிறோம்?”


“வங்காள விரிகுடாவின் அருகிலிருக்கும் நாகை மாவட்டத்தின் கடலோர நகரத்தில் அமைந்திருக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு போகிறோம். டிசம்பர் 14 ஆம் நாளிலிருந்து 28 வரையிலான 14 நாட்கள் கந்தூரி நடக்க இருக்கிறது. 14 நாட்களும் நாகூரில் தங்கி இருந்து சூபி பக்தி மழையில் நனைய இருக்கிறோம். திருச்சியிலிருந்து நாகூர் 139 கிமீ. ரயிலில் பயணித்து நாகூர் சேர்வோம். ஹோட்டல் கிராண்ட் நியாட்டில் இரண்டு அறைகள் புக் பண்ணியுள்ளோம். அம்மாவும் நானும் ஒரு அறை. நீயும் அண்ணனும் ஒரு அறை!”

“தர்கா என்றால் என்ன?”

“சூபிஞானிகளை அடக்கம் செய்த இடம், வழிபாட்டு தளமாக மாறுகிறது. தர்கா சர்வ மதத்தினருக்கான பிரார்த்தனைக் கூடம். தர்காக்கள் மத நல்லிணக்க வேடந்தாங்கல்கள்!”

“நாகூர் தர்காவில் எந்த சூபிஞானியை அடக்கம் செய்துள்ளார்கள் அப்பா?” குறுக்கிட்டான் விபிலேஷ்.

“சூபிஞானி நாகூர் சையத் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது இந்த தர்காவில் அடங்கியுள்ளார். இந்தத் தர்காவில் மஸ்ஜித் என்கிற தொழுமிடமும் இணைந்துள்ளது.

இந்தத் தர்கா இன்டோ- இஸ்லாமிக் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தங்கத்தகடு குவிமாடம் ஒன்றும் ஐந்து மினாராக்களும் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் ஆட்சி செய்த அச்சுதப்பா நாயக் என்கிற மன்னனுக்கு வந்த விசித்திர நோயை சூபிஞானி ஷாகுல் ஹமீது குணப்படுத்தி இருக்கிறார். தர்காவுக்குள் ஷிபா குண்டா என்கிற குளம் இருக்கிறது.

பக்தர்கள் அங்கு நீராடுவர். நாகூர் தர்கா 5 ஏக்கர் பரப்பளவு உள்ளது. நான்கு வாசல்கள் உள்ளன. தர்காவில் ஷாகுல் ஹமீது சூபி துறவியின் பேரர்களின் கல்லறைகளும் உள்ளன. பீர் மண்டபமும் தொழுமிடமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

“வாஞ்சூர் வழிபாட்டுத்தலமும், சிவாடி வழிபாட்டுத் தலமும் பிரதான தர்காவுக்கு வெளியே அமைந்துள்ளன. தர்காவையும் சூபி ஞானியையும் புகழ்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. திருக்கர்ண புராணம், நாகூர் புராணம், காஞ்சுல்காரமட்டு, நாகையந்தாதி அவற்றில் சில. நாகூர் தர்கா வக்பு வாரியத்துக்கு உட்பட்டது!”

“அப்பா! ஒரு தர்மசங்கடமான கேள்வி!”

“என்ன?”

“நாம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். ஷாகுல் ஹமீது சூபி ஞானி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். நாம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தர்காவை தரிசிக்கப் போனால் நம்ம சாமி நம்ம கண்ணைக் குத்தாதா?’

சிரித்தார் ரங்ககிருஷ்ணன்.


“சூபிகளும், சித்தர்களும் ஒரே கிளையில் பூத்த இரு மலர்கள். தர்காவைத் தரிசிக்க வரும் மக்களில் 60 சதவீதத்தினர் இந்துக்களே. நீ எந்த மதத்தினனாக இருந்தாலும் உன் நேர்மையான பக்தி இறைவன் எந்த வடிவத்தில் இருந்தாலும் போய்ச் சேரும். குழந்தை இல்லாத உன் தாத்தா நாகூர் ஆண்டவருக்கு நேர்ந்துதான் என்னைப் பெற்றார். நான் முதல் குழந்தை நாகூர் ஆண்டவருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டவன்!”

“இந்து- முஸ்லிம் பிரிவினை இப்போது தலைவிரித்தாடுகிறதே… நீங்கள் எப்படி இஸ்லாமின் மீது தனிக் காதலாய் இருக்கிறீர்கள்?”

“மூன்று காரணங்கள். ஒன்று இசைதேவன் நாகூர் ஹனிபா பாடல்கள். அவரது குரல் காந்தர்வக் குரல். அவரது குரலோடு ஓரளவு ஒத்து போவது கண்டசாலா குரல். நாகூர் ஹனிபா பாடல்கள் இந்து மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் இணைத்த மணிப்புறா சிறகு விரிப்பு. இரண்டாவது காரணம், ஏபி நாகராஜன் படங்கள். திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற படங்கள் மூலம் இந்து மதத்தை இஸ்லாமியர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார் நாகராஜன். மூன்றாவது எல் ஆர் ஈஸ்வரியின் மாரியம்மன் பாடல்கள்!”

“ஓவ்!”

“எனக்கு அதீக் உசைன்கான், நிஷா அஜீஜி, அல்டாப்ராஜா, முனவர் மாசூம் மற்றும் ஹம்ஸர் ஹயாத் கவாலி பாடகர்களின் பாடல்கள் மிகமிகப் பிடிக்கும்!”

“நாகூர் தர்காவில் பிரசாதம் தருவார்களா?”

“நாகூர் தர்கா சன்னதியில் ஜியாரத் செய்யும் போது ரோஜாப் பூ, மல்லிகைப்பூ, வெற்றிலை தப்ரூக் தருவார்கள். கலர்கலர் பூந்திகள் பாத்தியா ஓதுபவர்கள் விநியோகிப்பது உண்டு!”

“நாகூரின் சிறப்பான பத்து விஷயங்கள் சொல்லுங்கள் அப்பா!”

“நாகூர் ஒரு இயற்கைத் துறைமுகம். கப்பல் கட்டும் தொழிலும், நெசவுத் தொழிலும் நடந்த பாரம்பரிய ஊர். நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர் நாகூர் குலாம் காதிர் நாவலர் பிறந்த ஊர். அரசியல், ஆன்மிகம், இலக்கியம், பாரம்பரியப் பண்பாடுகள், பழங்கால வரலாற்றுத் தகவல்கள், வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த ஊர் நாகூர். நாகூரில் நாகூர்வாடா, பீப் பக்கோடா, தம்ரூட் அல்வா, தொதல் அல்வா, லேகிய அல்வா, புரோட்டா பேமஸ்…”

“நாகூர் ஹனிபா போல அவருக்கு பின் பாடிய பாடகர்கள் பலர் இருப்பார்களே?”

“ஆம். முகவை சீனி முஹம்மது, காஞ்சிபுரம் சலாவுதீன், தரங்கம்பாடி சாகுல் ஹமீது, திருச்சி எஸ் எம் யூசுப், நெல்லை அபுல் பராகத், நெல்லை அபுபக்கர், மதுரை ராஜா முஹம்மது, நாகூர் ஹெச். ஏ. ரகுமான், இறையன்பன் குத்தூஸ், நாகூர் ஜெக்கரியா, டிஎஸ் கென்னடி, மலேசியா செய்யது அலி, இலங்கை எம்.எஸ்.கமால், இலங்கை ஆஷிக் முதலியோர் இசைமுரசு பாணியில் பாடுபவர்கள்…”

“நாகூர் ஹனிபாவுக்கு மகன் மகள் இருப்பார்களே அவர்களில் யாராவது அப்பாவைப் போல பாடுகிறார்களா?”

“நாகூர் ஹனிபா மகன் நாசர் தனிகுரலில் பாடுவார். ஆனால் அவர் மேடைகளில் பாட விரும்புவதில்லை!”

“நாகூர் ஹனிபாவின் பூர்வீக வீடு எங்குள்ளது?”

“கௌதியா பள்ளிக்கு பக்கத்தில் உள்ள நூர்ஷா தைக்கால் தெருவில் உள்ளது. மகன் நாசர் வசிக்கிறார். இப்போது அந்தத் தெரு நாகூர் ஹனிபா தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!”

“சூப்பர்!”

“அந்தக் காலத்தில் ரஹீமா சுவீட் ஸ்டால் அல்வாவும் ரபீக் ஸ்வீட் ஸ்டால் அல்வாவும் பேமஸ். எத்தனையோப் புரோட்டா கடைகள் இருந்தாலும் பாபா பாய் கடை புரோட்டா தனி டேஸ்ட்!”

“அப்படியா?”

“மிகமிக முக்கியமான விஷயம். நாகூரில் கடந்த நூறு வருடங்களாக கௌதியா சங்கம் இயங்கி வருகிறது. ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி, மதரஸா என இம்மைக்கும் மறுமைக்கான கல்வியைப் போதிக்கும் மாபெரும் போதிமரம் இது. நாகூர் ஹனிபாவைப் பாடகராக அரங்கேற்றியதும் இந்த சங்கம்தான். பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் இலக்கியவாதிகளின் வேடந்தாங்கல் இது!”

“முழுமையான தகவல்களுக்கு நன்றி அப்பா!”

- திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ரயில் ஏறினர். விடுதி அறைக்குத் திரும்பிக் குளித்தனர். நால்வரும் தர்காவைத் தரிசித்தனர். மயிலிறகால் நால்வரின் தலை வருடப்பட்டது. நூறு புறாக்களை வாங்கிப் பறக்க விட்டார் ரங்ககிருஷ்ணன்.

சந்தனத் தேரோட்டம், புனிதக் கொடியேற்றம். ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ரங்ககிருஷ்ணன் குடும்பத்தினர். தொழுவதையும் குர்ஆன் ஓதுவதையும் கண்ணுற்றனர், காதுற்றனர். தம்ரூட் அல்வா தின்றனர். கறிக் குழம்பில் ஊறவைத்த புரோட்டா விழுங்கினர்.


தினம் இரவுகளில் ஹவாலி பாடல் கேட்டனர். ஹவாலி பாடகர்களுக்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளைப் பரிசளித்தார் ரங்ககிருஷ்ணன்.

ரங்ககிருஷ்ணன் மொட்டை போட்டுக் குளத்தில் குளித்தார்.

நாகூர் ஹனிபாவின் மகன் நாசரை சந்தித்து ‘மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா?’ பாடலை பாடச் சொல்லி ரங்ககிருஷ்ணன் குடும்பத்தார் கேட்டனர்.

சூபி பாடல் அச்சுப் பிரதிகளை, ஆடியோக்களை வாங்கினர்.

மொத்தத்தில் 14 நாட்களில் சூபித்துவ ஆன்மிக கடலில் மூழ்கி திளைத்தது ரங்ககிருஷ்ணன் குடும்பம்.

ஒரு தொழுகையாளி வினவினார், “அடுத்து எப்ப வருவீங்க மிஸ்டர் ரங்ககிருஷ்ணன்?”

“இன்ஷா அல்லாஹ்… 2028 ஆம் ஆண்டி வருவோம்!”

இந்துமத விழுமியங்களும் இஸ்லாமிய மத விழுமியங்களும் கைகோர்த்து நடனமாடி குலவை இட்டன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p62.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License