இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

63. ரோஸரி ஜெபமாலை


வகிதாவிடம் தூதஞ்சலில் வந்த திருமண அழைப்பிதழை கையளித்தேன்.

“ஆப்ரகாம் சாமுவல்ராஜ் வீட்டுத்திருமணம். மதுரையில் நவம்பர் பத்தாம் தேதி திருமணம். காலையில் திருமணம். மாலையில் வரவேற்பு. வரவேற்பு நிகழ்ச்சி என் தலைமையில்!”

“இன்னும் உங்க எழுத்துக்கள் மீது கிரேஸா இருக்ற வாசகர்கள் இருக்காங்களா?”

“ஆச்சரியமா சொல்றியா, வருத்தமா சொல்றியா?”

“ஆச்சரியமாகத்தான்… அந்த ஆப்ரகாம் சாமுவல்ராஜ் உங்களை ஒரு சினிமா நடிகரா நினைச்சிட்டாரா?”

“இந்த ஆராய்ச்சி எதுக்கு? அன்பும் அபிமானமும் கொண்டு அழைக்கிறார். போய் வருவோம். திருமணத்திற்கு வந்து போக நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்”

“நீங்கள் என்ன கேட்டீர்கள்?”

“ஒரு கிலோ அன்பு ஒரு கிலோ சகோதரத்துவம் ஒரு கிலோ மதுரைக்கார பாசம் எடுத்து வைக்கச் சொல்லி இருக்கிறேன்!”

“வாசகர் வீட்டுத்திருமணம். அன்பளிப்பு என்ன செய்வோம்?”

“அழைப்பிதழில் பார்த்தீர்களா? அன்னை மேரி படம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் இவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்… இவர்களின் இதயத்தை தொடுகிற மாதிரி நம் அன்பளிப்பு இருக்க வேண்டும்!” யோசித்தாள் வகிதா.


“என்னுடன் முனிஞ்சிபட்டியில் படித்த ஸ்டெல்லா என்கிற தோழி இருந்தாள் அல்லவா?”

“ஆமாம்… உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாள்!”

“அவளது லேடீஸ் பேக்கில் எப்போதுமே ஒரு ரோஸரி வைத்திருப்பாள்…”

“ரோஸரி என்றால் என்ன?”

“ரோஸரி என்றால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஜெபமாலை. இந்துக்கள் அவர்களின் தெய்வங்களின் பெயர்களை ஜெபிக்க ருத்ராட்ச மாலை, துளசிமணிமாலை, படிக மாலை, சங்குமணி மாலை, பவளமணி மாலை, வைஜந்தி மாலை, தாமரை மணிமாலை, நவரத்தின மாலை, சந்தன மாலை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவர். இஸ்லாமியர்களின் ஜெபமாலையை தஸ்பீஹ் மணிமாலை என்போம்!”

“ஓஹோ!”

“ரோஸரி 59 மணிகளால் ஆனது. கண்ணாடியால், மரத்தால், பிளாஸ்டிக்கால் ஆன மணிகளை நைலான் அல்லது பாலியெஸ்டர் இழைகளில் கோர்த்திருப்பர். நவரத்தினக்கற்கள், குன்றிமணி, செவ்வந்திக் கல், வெங்கச்சங்கல், கோமேதகக்கல், நவரத்தினகற்கள் மற்றும் விதைகளாலும் மணிகள் செய்வர். மணி மாலையுடன் கீழ் இணைப்பாக உலோகத்தால் செய்யப்பட்ட சிலுவை தொங்கும்…”

“ரோஸரி பத்தி இவ்வளவு விஷயங்கள் உனக்குத் தெரியுமா?” “நான்கு வகை ரோஸரிகள் உள்ளன… செவன் சாரோ ரோஸரி, ஜாய்ஸ் ஆப் மேரி ரோஸரி, பிரிஜிட்டைன் க்ரவுன் மற்றும் கிறிஸ்து மற்றும் கன்னிமேரியை கண்ணியப்படுத்தும் ரோஸரி!”

“ஓ!”

“வாரத்தின் ஏழுநாட்களும் ரோஸரி வைத்து நான்கு வித ஜெபிப்புகள் நடைபெறும். திங்கள், சனி மகிழ்ச்சி நிறைமறை உண்மைகள். துயர்மறை உண்மைகள் செவ்வாய் வெள்ளி. மகிமை நிறைமறை உண்மைகள் புதன் ஞாயிறு. ஒளிநிறை மறை உண்மைகள் வியாழக்கிழமை…”

“ஜெபம் ஜெபம் ஜெபம்…”

“மிகச்சிறிய ஜெபம்… ஹெய்ல் மேரி. தமிழில் அர்த்தம் ‘வாழ்க மரியா’ அல்லது ‘வாழ்க கன்னி மரியா’…”

“ஹெய்ல் மேரி!”

“ஒரு ஜெபம் கூறுகிறேன் கேளுங்கள். ‘மகிமை நிறைந்தவரே, மரியே வாழ்க! இறைவன் உன்னுடன் இருக்கிறார். பெண்களுள் மிக சிறந்தவராக நீரே வாழ்கிறீர்கள். உம்முடைய நற்செயல்களும் மிகவும் புனிதமானவை. கடவுளின் தாயாரே, பாவிகளாகிய எங்களுக்காக இப்போது இறப்பிலும் எங்கள் இறப்பு நேரத்திலும் இறைவனிடம் மன்றாடும்’…”

“குட்!”

கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக!


நமது தேசத்தின் அதிபதிகளுக்காவும், அதிகாரம் வகிப்பவர் எல்லாருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. வியாதியஸ்தர், உபத்திரவப்படுவோர், துக்கப்படுவோர், மரணத் தருவாயிலிருப்போர் அனைவருக்காவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. ஏழைகள், பட்டினியாயிருப்போர், அனாதைகள், விதவைகள், உபத்திரப்படுவோர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. அந்தகாரத்தினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகத்துவங்களைக் காண்பிக்கும் பொருட்டாக, நமக்காகவும், கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை பண்ணும் யாவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. கர்த்தாவே, கிருபையாயிரும்.!



“கொஞ்சம் பெரிய ஜெபம் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள். விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லா வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியிடமிருந்து பிறந்தவர். பொந்திய பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். எங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியானவரை நம்புகிறேன். புனித கத்தோலிக்க திருஅவையை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன். தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்…”

“இயேசுவைக் கடவுளின் குமாரராக கிறிஸ்தவ மதத்தில் வழிபடுகின்றனர். நாமோ கிறிஸ்துவை ஈஸா நபி என்கிறோம். அவர் கடவுளின் மகனல்ல இறைச்செய்தியை மனித சமுதாயத்திற்கு பரப்ப வந்த நபி என்கிறோம்” நான்.

“அவரவர் நம்பிக்கை அவரவருக்கு” வகிதா.

“உலகின் ஜனத்தொகை 800 கோடி. எட்டுநூறு கோடியில் 260 கோடி பேர் கிறிஸ்துவர்கள். கிறிஸ்துவர்களில் பல உட்பிரிவுகள் உண்டு. உலக அளவில் இஸ்லாமியர் ஜனத்தொகை 200 கோடி. யூதர்களின் ஜனத்தொகை ஒன்றரைக் கோடி…” நான்.

“ஜனத்தொகை கணக்கு எதற்கு?” வகிதா.

“உலகின் ஜனத்தொகையில் 32.5 சதவீதம் கிறிஸ்தவர்கள். 25 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என புள்ளி விவரம் கூறுகிறேன்!” நான்.

“மீதி 42. 5 சதவீத மக்கள் 7000 மதங்களை சேர்ந்தவர்கள்…”

“இந்து மக்கள் உலக அளவில் 120 கோடி இருக்கிறார்கள். அவர்கள் உலக ஜனத்தொகையில் 15 சதவீதம்…”

“இம்மூவரும் ஒற்றுமையாக இருந்தால் பூமி சுபிட்சமடையும்…” வகிதா.

“மேரேஜ் கிப்ட் வால்கிளாக் வாங்கித் தருவாங்க. காசு உள்ளவங்க வெள்ளி டம்ளர் பிரசன்ட் பண்ணுவாங்க…”

“நாம இரண்டாயிரம் ரூபா பிரசன்ட் பண்ணுவோமா?”

“பணம் வேண்டாம்!”

“நம்மின் கல்யாணப்பரிசு அவர்களின் ஆன்மிக உணர்வை வருடிக் கொடுக்க வேண்டும்!”

“தமிழ் மொழிபெயர்ப்பு பைபிள் பிரசன்ட் பண்ணுவோமா?”

“ஐஎப்டி சகோதரர் மாதிரி குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு கொடேன்… கல்யாணத்ல வந்தும் உன் இஸ்லாமை பரப்புறியான்னு கிண்டலிப்பாங்க…”

“நீயே சொல்லேன்… என்ன பிரசன்ட் பண்ணலாம்னு நீயே சொல்லேன்!”

“அமேஸான் அல்லது பிளிப்கார்ட்டில் தரமான ரோஸரி விலைக்கு கிடைக்கும். மாப்பிள்ளைக்கு கறுப்புமணிகள் கோர்த்த ரோஸரி 1000 ரூ விலையில். மணப்பெண்ணுக்கு 1000 ரூபா விலையில் பிங்க் நிற ரோஸரி பரிசளிப்போம்…”

“மொத்தம் இரண்டாயிரம் செலவாகும் இல்லையா?”

“நம் வாழ்நாள் முழுக்க மத நல்லிணக்கம் வலியுறுத்திதான் இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதி வருகிறோம். நாம் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என தஸ்பீஹ் மணி மாலை வைத்து திக்கிர் எடுக்கிறோம். கிறிஸ்தவர்களோ ‘வாழ்க கன்னி மரியா’ என ரோஸரி வைத்து ஜெபிக்கின்றனர். இந்து மக்களோ ருத்ராட்ச மாலை வைத்து ‘ஓம் நமச்சிவாயா’ என ஜெபிக்கின்றனர். பக்தி ஆத்மார்த்தமாய் இருந்தால் எல்லா ஜெபிப்புகளும் பெயரிலி இறைவனைத்தான் போய் சேரும். ஐ லவ் இஸ்லாம் ஸேம் டைம் ஐ ஹானர் ஆல் அதர் ரிலிஜென்ஸ்!” என்றாள் வகிதா.


“ஓகே… ரோஸரி ரெண்டு செட் அமேஸானில் ஆர்டர் பண்ணுவோம்!”

மணமகன் ஃபுல் சூட்டில் மணமகள் வெள்ளைநிற தேவதை கவுனில். நானும் வகிதாவும் கண்ணாடிப்பேழைகளில் இருந்த ரோஸரி ஜெபமாலைகளை கையளித்து மணமக்களை வாழ்த்தினோம்.

“நூறாண்டு ஆனந்தப் பெருவாழ்வு வாழ உங்கள் கர்த்தர் உங்களுக்கு அருள் புரியட்டும்!”

“வாழ்க கன்னி மரியா!” கோரஸ் குரல் எழுந்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p63.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License