இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

67. நகம் வெட்டும் நர்கீஸ்

பெண்கள் மதர்ஸா.

25‘x 20‘ சதுர அடியில் அந்த ஒற்றையறை மதர்ஸா இயங்கிக் கொண்டிருந்தது.

சுவற்றில் கரும்பலகை. தவிர மார்க்கம் தொடர்பான சார்ட்கள் தொங்க விடப்பட்டிருந்தன.

இரு ராக்குகளில் இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள்.

மூன்றுக்கும் மேற்பட்ட மரவிரிப்புகளில் திருக்குர்ஆன் அரபு மூலப் பிரதிகள்.

முப்பதுக்கு மேற்பட்ட ஹிஜாப் அணிந்த மாணவிகள் வீற்றிருந்தனர். வயது ஆறிலிருந்து 15க்குள்.

உஸ்தாத்பீ வராததால் மாணவிகள் லூட்டி அடித்துக் கொண்டிருந்தனர். சில மாணவிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து புரண்டு கொண்டிருந்தனர்.

ஹப்சா அலீனாவிடம் வினவினாள். “நீ லிப்ஸ்டிக்காடி போட்டிருக்க?”

“இல்லையே… இயற்கையாகவே என் உதடுகள் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி இருக்கும்!”

“அப்டின்னா நீ பேரழகி நாங்கல்லாம் சுமார் மூஞ்சி சொங்கிகள்னு சொல்ற?”

“நான் எங்க அப்படிச் சொன்னேன்?”

‘இரு. உன் உதடுகளை கீறி பாத்துடலாம்… இரத்தம் வருதா, லிப்ஸ்டிக் வருதான்னு…”

“தொட்டக் கையை உடைச்சிருவேன்!”

“அவ்வளவு ரௌடிப் பொண்ணாடி நீ? கரும்புக்கடை பொம்பளை தாதாவா நீ?”


“பக்கத்ல வராதே!”

“வருவேன்டி!”

மற்ற மாணவிகள் சண்டையிடும் இருவரை சூழ்ந்து கொண்டனர். ஹப்சா எட்டி அலீனாவின் உதடுகளைக் கீறினாள். துளி இரத்தம் பூத்தது.

உஸ்தாத்பீ மதர்ஸாவுக்குள் பிரவேசிக்க, மதர்ஸா மாணவிகள் அவரவர் இருக்கைக்கு ஓடிப் பதுங்கினர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஒஸ்தாத்பீ..”

“வஅலைக்கும் ஸலாம் செல்லங்களா, நா வரதுக்கு முன்னாடி இங்கே ஒரு உஹ்து போர் நடந்துக்கிட்ருந்துச்சு போல…”

அழுதபடி யே எழுந்தாள் அலீனா.

“ஒஸ்தாத்பீ. ஓஸ்தாத்பீ… ஹப்ஸா என் உதட்டைக் கிழிச்சிட்டா…”

“பக்கத்தில வா… பார்த்துவிட்டு சேவ்லான் ஒத்தினாள்.

“எந்திரிருச்சு வா ஹப்சா…”

“நீ தானே அலீனா உதடுகளை கிழிச்ச?”

“இல்லவே இல்ல… வேற யாரோ கிழிச்சதை நான் கிழிச்சதா சொல்ரா…”

உஸ்தாத்பீ ஒரு கணம் யோசித்தாள்.

“எல்லாரும் எந்திரிச்சு என்கிட்ட வாங்க!”

வந்தனர்.


“எங்க எல்லாரும் அவங்கவங்களோட இரண்டு கைகளை நகம் தெரியுற மாதிரி நீட்டுங்க!”

தயங்கித்தயங்கி நீட்டினர்.

சிலர் ஒற்றை விரல் நகத்தை மட்டும் நீளமாக வளர்த்திருந்தனர்.

சிலர் நகங்களில் அழுக்கு அப்பியிருந்தது.

சிலர் நகங்கள் கடிபட்டு ஒழுங்கீனமாய்.

முப்பது மாணவிகளில் ஒருத்தி கூட நகத்தைச் சீராக வெட்டிப் பராமரிக்கவில்லை.

“அடக்கழுதைகளா… ஒருத்தி கூட நகத்தைச் சுகாதாரமாக சீர்படுத்தவில்லையே… இனாயா… இதென்ன ஒற்றைவிரலில் நகம் வளர்க்கிறாய்?”

“இது வெங்காயநகம் ஒஸ்தாத்பி. வெங்காயம் உரிக்க வெள்ளைப் பூண்டு உரிக்க இந்த விரல்நகம்தான் பயன்படும்!”

“நைலா… உன் ஒற்றைவிரலில் ஏன் நகம் வளர்க்கிறாய்?”

“பேஷன் ஒஸ்தாத்பி…”

“நாற்பது நாட்களுக்கு ஒருமுறை நகங்களை வெட்ட இஸ்லாம் வற்புறுத்துகிறது. நாம் 40 நாட்கள் காத்திருக்க வேண்டாம். இரு வாரங்களுக்கு ஒரு முறை நகம் வெட்டலாம். நகங்களை வெட்டாமல் கடித்துத் துப்புவது சுகாதாரக் கேடான விஷயம். சுத்தம் ஈமானில் ஒரு பகுதி. ஒரு இஸ்லாமிய ஆண் அல்லது இஸ்லாமியப் பெண் எப்படி நகங்களை வெட்டி சுயசுத்தம் பேண வேண்டும் என்பதற்கு இஸ்லாம் பல ஒழுங்குகளைக் கூறியுள்ளது!”

“ஓ… சொல்லாத விஷயமே இல்லை போலும். மிதமிஞ்சியக் கட்டுப்பாடுகள் மீறவே…”

“கட்டுப்பாடுகள் என்று இதனைச் சொல்லக்கூடாது. கைடன்ஸ் அல்லது ஆலோசனை என கூறலாம். மருந்து கசக்கத்தான் செய்யும்!”

“நகம் வெட்டுறதை பற்றி இஸ்லாம் என்னென்ன சொல்லுது ஒஸ்தாத்பி… எல்லாவற்றையும் சொல்லுங்க!”

“நகம் வெட்டுறதை வாரத்தின் எல்லா நாட்களிலும் செய்யக் கூடாது”

“எந்த நாளில் வெட்டலாம்?”

“வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டி அழகான ஆடை அணிந்து நறுமணம் பூசிக்கொண்டு ஜும்ஆ தொழலாம் என உலமாக்கள் கூறுகின்றனர். சிலர் வியாழக்கிழமை நகம் வெட்ட உகந்த நாள் என்கின்றனர். இன்னும் சிலர் அவரவர் தேர்வுக்குரிய காரியம் என்கின்றனர். என்னைக் கேட்டால் வாராவாரம் வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு செல்வதற்கும் முன் நகங்களை வெட்டி சீர் செய்வது உத்தமம் என்பேன்!”

“மாதவிடாய் காலத்தில் தலை சீவல், நகம் வெட்டல், குளித்தல் கூடுமா?”

“கூடும்!”

“ நகம் வெட்டுவதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்?”

“நகம் வெட்டும் ஒருவன் அல்லது ஒருத்தி முதலில் இரு கைகளிலும் வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் கால்களில் ஆரம்பிக்க வேண்டும். கைகளில் நகம் வெட்டுவதை முதலில் வலது கையில் தொடங்க வேண்டும். முதலில் வலது கையின் ஆள்காட்டி விரல். இரண்டாவதாக நடுவிரல். மூன்றாவதாக மோதிர விரல். நான்காவதாக சுண்டு விரல். ஐந்தாவதாக கட்டைவிரல்.

“வலது கையின் நகம் வெட்டிய பின் இடது கையிலும் மேற் சொன்ன விதத்தில் நகம் வெட்ட வேண்டும். அதனையடுத்து வலது கால் கடைசியாக இடது கால் இதுவே நகம் வெட்டுவதற்கு ஸுன்னத்தான முறையாகும்!”

“வெட்டிய நகங்களை என்ன செய்ய வேண்டும்?”


“கண்ணாடிக் கூண்டில் வைத்து கண்காட்சி நடத்து. வெட்டிய நகங்களை அலங்கோலமாக அப்படியே போட்டு வைக்கக்கூடாது. நகங்களைப் பொட்டலமாய்க் கட்டிப் புதைத்து விடவேண்டும்..”

“நகங்கள் வெட்டுதல் ஒளுவை முறிக்குமா?”

“முறிக்காது!”

“நகங்கள் வெட்டுவதைப் பற்றி வேறென்னென்ன விஷயங்கள் உள்ளன ஒஸ்தாத்பி…”

“நகம் வெட்டும் விஷயத்தில் இஸ்லாமிய மக்களிடையே பல மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. அவையாவன 1. இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது. 2. வீட்டில் வைத்து நகம் வெட்டுதல் தரித்திரம். 3. வெட்டியநகங்களை புதைக்கும் போது கலிமா சொல்லி அல்லது குர்ஆன் ஓதி புதைக்க வேண்டும் 4. ஒழுங்கு முறைப்படி நகம் வெட்டினால் நகம் வெட்டியவரின் செல்வம் பெருகும். இதற்கு ஒரு நபிமொழி உண்டு. ‘நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாதததை புதிதாக எவன் உருவாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’

“குர்பானி கொடுப்பவர் நகம் வெட்டலாமா?”

“நல்ல கேள்வி இது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடி நகத்தை வெட்ட வேண்டாம் - என நபிகள் நாயகம் கூறியுள்ளார்!”

“ஹஜ் போறவங்க நகம் வெட்டலாமா?”

“இஹ்ராம் ஆடை அணிவதற்கு முன் நகம் முடிகளை களைய வேண்டும் என எந்த நபி மொழியும் கூறவில்லை. ஆனால் இஹ்ராமுக்கு பிறகு இவற்றைக் களைதல் சிறப்பு…”

“முப்பது நோன்புகள் வைக்கும் போது நகம் வெட்டலாமா?”


“உண்ணாமலும் பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பதுதான் நோன்பாகும். இவை தவிர மார்க்கத்தில் தீமை என சொல்லப்படுகிற காரியங்களை தவிர்த்து, ஏனையக் காரியங்களைச் செய்வது குற்றமல்ல. நகம் வெட்டலாம்?”

“கடைசி கேள்வி ஒஸ்தாத்பி.”

“கேள்!”

“இஸ்லாமியப் பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் அல்லது மருதாணி போடுவது கூடுமா, கூடாதா?”

“நீர் ஊடுருவக் கூடிய ஹலாலான நெயில் பாலிஷ்களை இஸ்லாமியப் பெண்கள் போடலாம். சாதாரண நெயில் பாலிஷ் என்றால் தொழுகைக்கு முன் அகற்றுவது நல்லது. பெண்கள் கை முன்னங்கை கால் முன்னங்கால்களில் மருதாணி இட்டுக் கொள்ளலாம்! ஆண்கள் தலைமுடியில் மருதாணி தடவலாம்!” எனக்கூறிய உஸ்தாத்பீவியின் கைகளிலும் மருதாணி டாலடித்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p67.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License