இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

68. சபுர்


நகரப் பேருந்து கூடாரத்தில் ஹம்னாஃபிர்னாஸும் ஏகவள்ளியும் நின்றிருந்தனர். இருவரும் முதுகலை மனோதத்துவ இயல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள். ஹம்னா ஹிஜாப் அணிந்திருந்தாள். மாநிறம். மெல்லிய திரேகம். லேசர் கண்கள். குர்ஆனியம் தடவப்பட்ட வாய். வயது 22.

ஏகவள்ளி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இந்துப்பெண். தலைமுடியைப் பாப் பண்ணி இருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. கழுத்தில் பல்வர்ண பாசி மாலை. வலது கையில் வண்ண கண்ணாடி வளையல்கள். இடது கையில் கடிகாரம்.

இருவரும் படித்து வேலைக்கு போய் மக்களின் மனநலத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற உயரிய குறிக்கோள் உள்ளவர்கள். இருட்டுவதற்குள் கல்லூரியின் விடுதிக்குப் போய்ச் சேர வேண்டும். இரண்டு மணி நேரமாக நகரப் பேருந்துக்குக் காத்திருக்கிறார்கள்.

ஹம்னாஃபிர்னாஸ் அமைதியாக சாந்த சொரூபியாக நின்றிருந்தாள்.

ஏகவள்ளியோ காலில் வெந்நீர் கொட்டிக் கொண்டது போல பரபரத்தாள்.

“எங்க பஸ்ஸைக் காணம்? எங்க பஸ்ஸைக் காணம்? பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிற்கிறோமா? அல்லது டவுன் பஸ்காரங்க திடீர் ஸ்ட்ரைக் பண்ராங்களா? அல்லது பஸ் ஸ்டாப்ல ஹம்னாவும் வள்ளியும் நிப்பாள்க. அவள்களைப் பஸ் ஸ்டாப்ல பல மணிநேரம் நிறுத்தி வைப்போம்னு பஸ் டிப்போகாரன் செய்ற சதியா? டவுன் பஸ்களில் பெண்களின் இலவசப் பயணம் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஜட்ஜ்மென்ட் குடுத்திருச்சா?”

சிரித்தாள் ஹம்னா.

“சந்தேகம் அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?”

“அது இருக்கு ஆயிரம் சந்தேகம்!”


“யார் கண்டா? நாம வரதுக்கு சிலபல நிமிடங்களுக்கு முன்பே சில பல பஸ்கள் வந்து போயிருக்கலாம்… அல்லது பஸ்கள் வர்ற வழில ஏதாவது ட்ராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கலாம்… இங்கிருந்து நம்ம ஹாஸ்டல் நான்கைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்குமா? மெதுவா பொடி நடை நடந்து ஹாஸ்டலுக்கு போய் சேர்வோம்!”

“உன் கூட ரெண்டு வருஷமா படிக்கிறேன்… ஒரே ரூம்ல தங்கி இருக்கோம்… எப்டிடி சுனாமில நெத்திலி மீன் பிடிக்ற?”

“பஸ் வரல… அவ்வளவுதானே? வானமா இடிஞ்சு நம்ம தலை மேல விழுந்திருச்சு?”

“பஸ் விஷயம் இன்னைக்கி. இந்த இரண்டு வருஷத்தில முப்பது நாற்பது சம்பவங்கள் நடந்திருக்கு. அத்தனையிலும் அசாத்திய பொறுமை காட்ற?”

“அப்படியா?”

“ஒரு தடவை உன்னை தேள் கொட்டிருச்சு. நாங்களாயிருந்தா கூகொல்லைன்னு கத்திருப்போம். நீ அமைதியா பூ மாதிரி இருந்த. வாய்க்குள் எதையோ முணுமுணுத்த நாங்கதான் பதறிசிதறி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். சிரிச்சுக்கிட்டே ஊசி போட்டுக்கிட்ட…”

“சரி!”

“ஒரு தடவை ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்ட இருபது பேருக்கு புட் பாய்ஸன் ஆய்ருச்சு. ஃபுட் பாய்ஸன் ஆனதில நீயும் ஒருத்தி. சாந்த சொரூபியா டாய்லட்டுக்கு ஊர்வலம் போய் வந்துகிட்டு இருந்த. அப்பயும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்த. நாங்கதான் பதறிசிதறி உன்னையும் பாதிக்கப்பட்ட மத்தப் பெண்களையும் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணினோம்!”

“ஆமா!”

“நீ ஹிஜாப் போடுறது பிடிக்காத ஆசிரியர் உனக்கு இன்டர்னல் மார்க்ல இருபதை குறைச்சுப் போட்டார். நாங்களா இருந்தா சாமியாடி இருப்போம். ஆசிரியரை திட்டித் தீர்த்திருப்போம். அப்பயும் நீ அமைதியா இருந்த வாய்க்குள் எதையோ முணுமுணுத்த…”

முறுவலித்தாள் ஹம்னாஃபிர்னாஸ்.

“நாம ஒரு தடவை மனநல மருத்துவமனை விசிட் போனோம். நாம போனது நாப்பது பேரு. ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் குறிப்பா உன்னை பார்த்து ஓடிவந்து உன் கையை கடிச்சிட்டார். நீ அவரின் தலையைத் தடவிக் கொடுத்து ‘உன்னை யாராவது துன்புறுத்தினார்களா?’ என பரிவுடன் விசாரித்தாய். அத்துடன் வாய்க்குள் எதனையோ முணுமுணுத்தாய்… நாங்கதான் உன்னை டாக்டர்கிட்ட கூட்டிப்போய் கடிகாயத்தை கழுவி மருந்திட்டு ஊசி போட்டோம்…”

“சரி!”


“ஒரு தடவை வகுப்பில் ஆசிரியர். ‘நபிகள் நாயகம் பிறக்காது இருந்திருந்தால் இஸ்லாம் தோன்றியிருக்காது. இஸ்லாம் தோன்றி இருக்காவிட்டால் உலக மக்கள் அமைதியாக இருந்திருப்பர்’ என்றார். வகுப்பறை நிச்சலனமாக இருந்தது. நீ எழுந்து ‘உங்களின் வார்த்தை வெறுப்பரசியலின் விளைவு. இஸ்லாம்தான் தனிமனித ஒழுக்கம், உணவு சுகாதாரம், ஈகை, உண்ணாவிரதத்தால் உடல் மனத் தூய்மை, பெண்களுக்கான சம உரிமை போன்றவற்றை உலக மக்களிடம் தக்க வைத்து வருகிறது. மதங்களிடம் குறைபாடு இல்லை. அதனை பின்பற்றும் மக்களில் சிலருக்குத்தான் குறைபாடு இருக்கிறது. உங்களுக்கு எதிர்க்கருத்து கூறியதற்கு மன்னிக்கவும்’ எனக் கூறி அமர்ந்தாய். வகுப்பு மொத்தமும் கைதட்டியது. அப்போதும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தாய்!”

“கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். வன்முறை கூடாது!”

“கடந்த இரண்டு வருடங்களில் நீ உன் அம்மாவிடமும் உறவினர்களிடமும் முஸ்லிம் தோழிகளிடமும் பேசுவாய். பேசும்போது அவர்கள் உன்னிடம் குடும்பப் பிரச்சனைகளைக் கூறி ஆறுதல் தேடுவார்கள். ஆறுதல் கூற வேண்டிய நீ ‘சபுர் செய்ங்கம்மா…’ ‘சபுர் செய்ங்க பெரித்தா’ ‘சபுர் செய் தோழி’ என்பாய்… எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் சபுர் செய்வது என்றால் சபுர் என்பது மந்திர வார்த்தையா? இரண்டு மணி நேரமா டவுன்பஸ் வராம இருக்றதுக்கு கூட நீ சபுர்தான் செய்திருப்பாய்… சபுர் என்றால் என்ன?”

“நடைமேடையில் நடந்து கொண்டே பேசுவோமா?”

“சரி!”

நடக்க ஆரம்பித்தனர்.

“சபுர் என்பது அரபி வார்த்தை. பொறுமை, சகிப்புத்தன்மை, மனஉறுதி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை சபுர் என்கிற ஒற்றை வார்த்தை அர்த்தப்படுத்துகிறது…”

“ஓஹோ!”

“நோய், துன்பம், இழப்பை, அமைதியுடன் தாங்கிக் கொள்வது சபுர். இயற்கையான உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி இறைவனுக்குள் பொருந்தும் கட்டுப்பாடே சபுர். இறைவனுக்கான சரியான பாதையில் தொடர்ந்து பயணித்து சோதனையில் உறுதியாய் நிற்கும் விடாமுயற்சியே சபுர். பொறுமை ஒரு அருட்கொடை. பொறுமைதான் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் மிகப்பெரிய செல்வம். பொறுமையாக இருப்பவருக்கு இறைவன். சொர்க்கத்தில் வீடு கட்டி தருவான்.

“ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஆசையாக வளர்த்த பெற்றோர் ஒருவரின் குழந்தை இறந்து போகிறது. இறைவன் குழந்தையின் உயிரை எடுத்த மலக்கிடம் வினவுகிறான். ‘அடியானின் குழந்தை உயிரை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா?’ மலக்

‘ஆமாம்’ என்றது.

‘அடியானின் இதயக்கனியை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா?’ மலக்

‘ஆமாம்’ என்றது.

‘குழந்தை இறந்த துக்கத்தில் அடியான் என்னை திட்டினானா?’

‘அப்போதும் அவன் உன்னை புகழ்ந்தான். நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்றான் என்றது மலக்.

உடனே இறைவன் ‘அந்த அடியானுக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டி அந்த வீட்டுக்குப் புகழ்ச்சியின் வீடு என பெயரிடுங்கள்’ என்கிறான்…”

“அருமையாகக் கூறினாய்”


“சபுர் என்பது இறைவனின் மீதான முழுமையான நம்பிக்கையையும் அவனது திட்டத்தின் மீதான உறுதியையும் காட்டுகிறது. நற்செயல்களை செய்ய தேவையான ஆற்றலை தருவது சபுர். கட்டுபடுத்த முடியாத சூழ்நிலைகளை இறைவனின் விருப்பமாக ஏற்றல் சபுர். அல்-சபுர் என்பது இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அந்தப் பெயருக்கு மிகுந்த பொறுமையாளர் என பொருள். பொறுமையாளனாக இருக்கும் இறைவன் தனது படைப்புகளின் பொறுமையையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கிறான்.

“ ‘சபூர்’ என்கிற இன்னொரு வார்த்தை இருக்கிறது. தோரா, இன்ஜீல் போன்று தாவூத் நபிகளுக்கு அருளப்பட்ட வேதமே சபூராகும்!”

“ஒவ்வொரு பிரச்சனைக்குப் பின்னும் ஏதோ முணுமுணுப்பாயே… அதென்ன?”

“அது துஆ. தமிழில் பிரார்த்தனை. ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்னும் ‘கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் யாருமில்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என துஆ ஓதுவேன்…”

“நீ சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டதைச் சுருக்கமாகச் சொல்லவா?”

“சொல்!”

“இறைவனின் கட்டளைகளை உறுதியாக நிறைவேற்றல். தடை செய்யப்பட்ட பாவங்களைத் தவிர்த்து சுயக்கட்டுப்பாடுடன் இருத்தல், துன்பம் பேரழிவுகளை சகித்துக் கொள்ளுதல். இவை மூன்றுமே சபுர் எனப்படும்!”

இருவரும் பேசிக்கொண்டே விடுதியை அடைந்தனர்.


வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடப் போன இருவரையும் விடுதி வார்டன் இடைமறித்தார்.

“இரண்டு கழுதைகளும் ஏன் லேட்?”

“டவுன்பஸ் வரல!”

“நொண்டிச்சாக்கு. கையெழுத்துப் போடுங்க. ஆனா லேட்டா வந்த உங்க ரெண்டு பேருக்கும் இரவு சாப்பாடு கிடையாது!”

“நல்லது வார்டனம்மா. சாப்பாட்டுக்கு பதில் ஐஸ் வாட்டர் குடிச்சு சபுர் பண்ணிக்கிரம்... நைட் மெஸ்ல போடுற வறட்டு சப்பாத்தி மேல இறைவன் எங்க பெயர் எழுதல… தட்ஸ்ஆல்!” என்றாள் ஏகவள்ளி.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p68.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License