இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

66. மணப்பெண்ணின் பாதுகாவலர்


இமாம் மிகவும் மென்மையாக வாசல் கதவின் அழைப்பு மணியை மும்முறை அமுக்கினார்.

வீட்டுக்குள்ளிருந்து ஓர் அதிகாரக்குரல் எழுந்தது. “யாரு?”

“அஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்த மஹல்லாவின் இமாம் வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா?”

“வஅலைக்கும் ஸலாம். வாசல் கதவு வரை வந்துட்டீங்க. அப்றமும் உள்ள வரலாமான்னு என்ன கேள்வி? உள்ள வாங்க இமாம்!”

குரலுக்குரியவரின் பெயர் மாலிக் கபூர். வயது 55. மஹல்லாவின் மிகப்பெரிய பணக்காரர். தான் என்கிற அகந்தை கொண்டவர். துடுக்குத்தனமாகப் பேசுவார்.

இருகைகளையும் விரித்து பறவை போல அமர்ந்திருந்தார் மாலிக் கபூர்.

அவரின் எதிரில் அமர்ந்தார் இமாம்.

“நல்லா இருக்கீங்களா பாய்?”

“ஏன் - நான் நல்லா இல்லேன்னு சொன்னா என்னைத் தூக்கி நிறுத்தப் போறீங்களா இமாம்?”

“தூக்கி நிறுத்தவும் தலைகீழாய் குப்புறக் கவிழ்க்கவும் கூடியவன் இறைவனே…”

“என்ன விஷயமாக வந்தீர்கள் இமாம்?”

“உங்கள் வீட்டுப் பெண் ரோஸ்மின் பற்றிப் பேச வந்தேன்!”

“ரோஸ்மின் எங்கள் வீட்டுப்பெண் அல்ல எங்கள் வீட்டுவேலைக்காரி. அவள் எங்களுக்கு ஓர் அடிமைப்பெண் போல…”

“அப்படியா?”


“இருபது வருடங்களுக்கு முன் முச்சந்தியில் ஒரு நாற்பது நாள் பெண் குழந்தையைக் கண்டெடுத்தேன். அந்தக் குழந்தையை நாங்களே வளர்த்தோம். அவளுக்கு ரோஸ்மின் எனப் பெயர் வைத்தோம். ரோஸ்மின் என்பது ஒரு பெர்சியன் மற்றும் உருதுப்பெயர். ரோஸ்மின் என்றால் ரோஜா மலர்கள், அழகு, கனிவு, அன்பு, பரிசுத்தம், மென்மை என பொருள். ரோஸ்மினுக்கு அப்பா பெயராக என் பெயரை போட்டு பிறப்புச் சான்றிதழ் எடுத்தோம். ரோஸ்மினுக்கு ஐந்து வயதான போது ஐந்து கலிமாக்களைச் சொல்லிக் கொடுத்து இஸ்லாமியப் பெண்ணாக்கினோம். என் மகள்களுடன் சேர்ந்து ரோஸ்மினும் பள்ளிக்குப் போனாள் மதர்ஸாவுக்கும் போனாள். மொத்தத்தில் சகல வசதி வாய்ப்புகளும் நல்கப்பட்ட எங்கள் வீட்டின் ஆஸ்தான வேலைக்காரி ரோஸ்மின்… அவளைப்பற்றி நீங்க பேச வேண்டியதின் காரணம் என்ன?”

“மொஹபத்தான விஷயம்… நம்ம மஹல்லாவில் வசிக்கும் காசிமின் மகன் அன்சார் ஷேக்கை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவனுக்கு வயது 25. ஆள் பாக்க யூசுப்நபி மாதிரி அழகு. ஆர்க்கிடெக்ட்டாக இருக்கிறான். மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பான். அவன் ரோஸ்மினை வெளியில் எங்கேயோ பார்த்திருக்கிறான். சில தடவை சாதாரணமாக பேசி இருக்கிறான். அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவளை மணந்து கொள்ள விரும்புகிறான். நீங்கள் சம்மதித்துத் திருமணத்தை நடத்திக் கொடுத்தால் மகிழ்ச்சி!”

மாலிக் கபூரின் முகம் இருண்டது.

“ரோஸ்மினுக்கு கல்யாணமா?”

“ஏன் ரோஸ்மினுக்கு நிக்காஹ் நடக்கக் கூடாதா? இருபது வயதுப் பெண்ணுக்கு நிக்காஹ் எல்லா மஹல்லாக்களிலும் நடப்பது தானே?”

“ரோஸ்மின் எங்கள் வீட்டுப் பெண் மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அவள் எங்கள் வீட்டு வேலைக்காரியே… நாங்கள் சாப்பிட்ட பின் தான் அவள் சாப்பிடுவாள். என் மகள் உடுத்திய பழையஆடைகளைத் தான் அவள் உடுத்துவாள். இரு படுக்கையறைகளுக்கு இடையே ஆன தரையில் கோரைப்பாய் விரித்து படுப்பாள். அவளுக்கு மாத சம்பளம் இவ்வளவு என நிர்ணயித்து அவளது வங்கிக் கணக்கில் போட்டு வருகிறேன். அவள் மௌத்தாகும் வரை எங்கள் வீட்டில் ஊழியம் செய்ய வேண்டியது தான்!”

“கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பேசுங்கள் பாய்!”


“விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் போல ஒரு அனாதைக்கழுதைக்கு ரோஸ்மின் எனப் பெயர் வைத்திருக்கிறேன். நாளைக்கு அவளின் பெற்றோர், குழந்தையைத் திரும்பிக் கேட்டால் ரோஸ்மினை அவர்களிடம் கையளிப்போம். ரோஸ்மினின் பெயர் முனியம்மா அல்லது குப்பம்மா என மாறிவிடும். வெள்ளைத்தோலைப் பார்த்து மயங்கி விட்டான் அந்த இன்ஜினியர் பய. இப்ப அழகைப் பார்த்து மயங்கிக் கட்டுவான்க. ஆனா, ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாளில் தீர்ந்துவிடும். அப்றம் வரதட்சணை கொண்டு வரலன்னு அவளை அடிச்சு விரட்டி விட்ருவான். இது தேவையா?”

“அன்சார் ஷேக் மன உறுதியா இருக்கிறான். அவனின் காதல் நூறு வருடம் செல்லுபடி ஆகும்!”

“அன்சார் ஷேக்கின் பெற்றோர் என்ன சொல்ராங்க?”

“மகனின் விருப்பம்தான் அவங்க விருப்பமும். ரோஸ்மினிடம் ஷேக்கின் அம்மா பலமுறை பேசியிருக்கிறார்…”

“நான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ரோஸ்மினின் கையை அன்சார் ஷேக்கின கைகளில் பிடித்துக் கொடுத்து ஊரை விட்டு ஓடுங்கன்னு சொல்லனுமா நான்?”

“நீங்கதானே ரோஸ்மினின் வளர்ப்பு அத்தா… நீங்கள் ‘வலி’யாக இருந்து இந்தத் திருமணத்தை நடத்திக் கொடுங்கள்!”

“ஒரு பெண் இன்னொரு பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடக் கூடாது. தன்னுடைய திருமணத்தை தானே ஒரு பெண் நடக்கவும் கூடாது. தன் திருமணத்தைத் தானே நடத்தும் பெண் விபச்சாரியாகக் கருதப்படுவாள். ‘வலி’யின் அனுமதியில்லாமல் ஒரு பெண்ணின் திருமணம் நடந்தால் அந்த திருமணம் செல்லாது. அந்தத் திருமணம் செல்லாது என்கிறார் நபிகள் நாயகம்…”

“ஓஹோ!”

“வலியாக யாரார் இருக்கலாம் இமாம்?’

“வலி என்றால் பாதுகாவலர் சட்டப்பூர்வ உதவியாளர். வலி ஒரு பெண்ணின் தந்தையாக, சகோதரனாக, தாய் மாமனாக, தாத்தாவாக, இமாமாக, ஆன்மீகத் தலைவராக, ஆட்சியாளராக இருக்கலாம்!”

“நான் வலி அல்ல இமாம்!”

“பின்னே?”

“ரோஸ்மினை இருபது வருடம் வளர்த்திருக்கிறேன். 55 வயதாகியும் இளமையாக இருக்கிறேன். கை நிறையப் பணமும் இருக்கிறது. மனைவியும் ஆட்சேபிக்க மாட்டாள். நானே ரோஸ்மினை இரண்டாவது மனைவியாக வரித்துக்கொள்ளப் போகிறேன். இந்த மஹல்லா இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் அவளை ஆசை நாயகியாக வைத்துக் கொள்வேன்!”

“ரோஸ்மின் உங்களது தகாத ஆசைக்கு உடன்பட மாட்டாள்!”

“ரோஸ்மினுக்கு வலியாக இருந்து அவளின் திருமணத்தை நடத்திக் கொடுக்க என்னை மீறி யாரும் வர மாட்டார்கள். வந்தால் உயிரோடு திரும்ப மாட்டார்கள்!”

“வலி என்பவர் நல்ல மனநிலையுள்ளவராக வயது வந்தவராக மூமினாக இருக்க வேண்டும். மாலிக்கி, ஷாபி, ஹன்பலி பிரிவினரின் திருமணங்களில் பெண்களுக்கு ‘வலி’ இருக்க வேண்டும். ஹனபி பிரிவினரில் மட்டும் மணப்பெண்ணுக்கு ‘வலி’ தேவையில்லை. பண்ணையார் மனோபாவத்தோடு பேசாதீர்கள். ஜமாஅத் போலீஸில் புகார் செய்து உங்களை லாக்கப்பில் அடைக்கும்!”

“இமாம்! மணப்பெண்ணால் தான் விரும்பிய வலியை நியமிக்க முடியாது. ரோஸ்மினை மணந்து கொள்ள விரும்பும் அன்சார் ஷேக்கும் வலியாக முடியாது!”

“உங்களிடம் நெகடிவிட்டி அதிகம். ‘வலி’ என்பவர் மணப்பெண்ணின் விருப்பங்களை பாதுகாப்பவர். மணப்பெண்ணை உணர்வுரீதியாக பொருளாதார ரீதியாக ஆன்மீக ரீதியாக வலியே பாதுகாப்பார்!”

“அப்படி யாரந்த சூப்பர்மேன் வலி நம்ம மஹல்லால எனக்குத் தெரியாம…”


“ஓர் இஸ்லாமிய திருமணத்திற்கு வலியின் சம்மதம், இரு சாட்சிகள், மணமகன் மணமகள் வாய்வழி ஒப்புதல், மஹர்தொகை நிர்ணயிப்பு முக்கியம். வலி யாரென்று இப்போது சொல்ல மாட்டேன்… வெயிட் அண்ட் ஸி பாய்!”

“ரோஸ்மினை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டால் எப்படி அவள் கல்யாணம் நடக்கும்?” இமாம் ஜிப்பா பாக்கட்டிலிருந்து திறன்பேசியை கையில் எடுத்தார்.

“ஒரு கொடூரனின் பேச்சை அப்படிக்கப்படியே பதிவு செய்து விட்டேன்!”

வாசலுக்கு திரும்பினார் இமாம்.

“டிசிபி கொஞ்சம் வாங்க!”

உதவி போலீஸ் கமிஷனர் சபானா பர்வீன் வெளிப்பட்டார். அவருக்குப் பின் பெரிய போலீஸ் படை.

“என்ன என்ன நடக்குது இங்க?”

“வாய மூடுங்க (உள்ளே தலையை நீட்டி) ரோஸ்மின்! வெளியே வாம்மா!” என்றார் டிசிபி முழு நிலா போல வெளிப்பட்டாள் ரோஸ்மின்.

“நீ ரோஸ்மினா?”

“ஆம்!”


“ஐந்து கலிமாக்களை சொல்!” சொன்னாள்.

“அன்சார் ஷேக்கை மணந்து கொள்ள உனக்கு சம்மதமா?”

“சம்மதம் சம்மதம் சம்மதம்!”

“உனக்கு வலியாக ஓய்வு பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜ் அக்பர் அலி இருப்பார் இருந்து உன் திருமணத்தை ஜாம்ஜாம் என்று நடத்திக் கொடுப்பார்!”

“நன்றி!” ஆனந்தக்கண்ணீர் வடித்தாள் ரோஸ்மின்.

-அன்சார் ஷேக் –ரோஸ்மின திருமணம் மஹல்லா பள்ளிவாசலில் நடந்தது.

திருமணத்தில் இரகசியமாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர் ரோஸ்மினின் பெற்றோர்.

“பாத்திமா நாச்சியார் போல வாழ் இஸ்லாம் தத்தெடுத்த மகளே!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p66.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License