இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

65. உமறுப்புலவர் வகையறா...!


என் இயற்பெயர் பி.ச. நாசர். பின்னாளில் அதிகாரப்பூர்வமாக ஆர்னிகா நாசர் ஆனேன். என் தந்தை பெயர் பி. சம்சுதீன். கால்பந்தாட்டத்திலும் இறகு பந்தாட்டத்திலும் சிறந்த விளையாட்டு வீரர். அத்துடன் அரசின் தலநிதிக் கணக்குத் துறையில் உதவித் தலைமைத் தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றியவர். இலக்கியம் படைக்கவோ வாசிக்கவோ செய்யாதவர். ஆனால் ஷேக்ஸ்பியரின் மீது அதிகமான காதல் கொண்டவர். இந்திப் பாடல்களை வெகுவாக ரசிப்பார். என் தம்பி தங்கைகள் நால்வருமே இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என கேட்டவர்கள். என் தந்தை வழி உறவினர்கள் யாருமே அதிகம் படிக்கவில்லை. படிப்பு அவர்களுக்கு எட்டிக்காய். விதிவிலக்காக என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் மகன்கள் படித்து அரசுப்பணி புரிந்தனர்.

என் தந்தையின் தந்தை பெயர் காட்டு பிச்சையப்பா இராவுத்தர். அவர் காலத்திலோ அவருக்கு முந்திய காலத்திலோ பாட்டனாரின் தலைமுறைகள் மலைவாழ் மக்களாய் இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் இஸ்லாமுக்கு வந்திருக்கிறார்கள். தந்தையின் தந்தைக்கு முந்திய தலைமுறை மனிதர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என் தாயின் பெயர் ரஹிமா. என் தந்தையை அவர் மணக்கும் போது அவருக்கு வயது 15. என் தந்தைக்கு வயது 32. என் தந்தைக்கு வலது காலை விட இடதுகால் சில அங்குலம் உயரக் குறைவு. என் தாய்க்கும் என் தந்தைக்கும் வயது வித்தியாசம் 17. இந்த இரண்டு விஷயங்களாலும் பெற்றோர் தினமும் சண்டை இட்டுக் கொண்டனர். என் தாய் இலக்கியம் படிக்க மாட்டார். நிறைய தமிழ் சினிமா பார்ப்பார். என் பெத்தம்மா (தாயின் தாய்) அழகிய குரல் வளம் கொண்டவர். ரோஜா நிறம் அமைந்தவர். கதைகள் நிறைய வாசிப்பார். ஆயிரக்கணக்கான கதைகள் பைண்டிங் சேர்த்து வைத்திருந்தார்.


அவருடைய சேகரிப்பிலிருந்து தான் எனக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஆயிரத்தோரு அராபிய இரவுகள், சிந்துபாத் கதை, ஈஷாப் கதைகள், வாண்டுமாமா, தமிழ்வாணன், என்னுடைய பெரியம்மா ,சாச்சிகள் யாருக்கும் இலக்கிய ஆர்வம் கிடையாது. இப்போதுதான் இந்தக்கதையின் முக்கியமான அறிமுகம் நடக்கப் போகிறது.

அது என் பெத்தம்மாவின் அம்மா. பெரிய பெத்தம்மா என அழைப்போம் பெரிய பெத்தம்மாவின் பெயர் தெரியாது. 135 செமீ உயரம். பழுத்த வெள்ளரிப்பழம் போல இருப்பார். மதுரை மேலூரில் வசித்தார். அபூர்வமான குரல் வளம். எனக்கு அப்போது வயது 12 இருக்கும். என் பெரிய பெத்தம்மாவுக்கு அப்போதே வயது 100ஐத் தாண்டி இருக்கும். நான் ஏராளமாய் வாசிப்பதை பெருமையாகக் கண்ணுறுவார். அத்துடன் இஸ்லாமியப் பெண்களுக்கு நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக திகழ்ந்ததும் அவருக்குப் பெருமகிழ்ச்சி. என்னுடைய பெயரை சங்கீதமாய் ‘நாஜரு’ என அழைப்பார். அவருடைய சுருக்குப்பையில் இருந்து இரண்டு பைசா, ஐந்து பைசா எடுத்து வாஞ்சையாய்க் கொடுப்பார். அவருக்கு ஜின்களுடன் சகவாசம் இருந்தது. இருட்டில் மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்து ஜின்களுடன் பேசிக் கொண்டு இருப்பார்.

ஒரு நாள் நான் என் சாச்சிகளுக்கு ஒரு கதை சொல்லி முடித்தேன். பெரியபெத்தா என்னை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

“ஒருநாள் நீ மிகப்பெரிய எழுத்தாளர் ஆவடா!”

“அது எப்படி உனக்கு தெரியும் பெரியபெத்தா?”

“நீ யாரோட வம்சம்னு நினைச்ச? உன்னோட எள்ளுஎள்ளு தாத்தன் யாருன்னு உனக்குத் தெரியுமாடா?”

“தெரியாது!”

“நாம உமறுப்புலவர் வகையறாடா…”

“உமறுப்புலவர் யாரு பெத்தா?”

“சீறாப்புராணம் என்கிற மெஹா காவியத்தை எழுதியவர். அவர் பிறந்தது எட்டயபுரத்துக்கு அருகில் இருக்கும் நாகலாபுரத்தில். பிறந்த வருடம் 4.12.1642. அவர் ஒரு தமிழ் முஸ்லிம் ராவுத்தர். உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார். உமறுப்புலவரின் இயற்பெயர் உமறுகத்தாப் அல்லது சையத் காதர்!”

“அப்படியா?’

“உமறுப்புலவரை சீதக்காதி என்கிற வள்ளல் ஆதரித்தார். உமறுப்புலவர் எட்டையாபுரம் ஜமீனின் அரசவைக் கவிஞராக இருந்தார்.”

“சீறாப்புராணம் என்றால் என்ன?”


“நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை 5027 கவிதைகளில் எழுதியுள்ளார் உமறுப்புலவர். சீறாப்புராணம் மூன்று காண்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, விலாதத்து காண்டம் (பிறப்பியல் காண்டம்), இரண்டு நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்), மூன்று, ஹிஜ்ரத்து காண்டம். (மதினாவுக்கு இடம் பெயர்ந்த காண்டம்), எனக்கு சீறாப்புராணம் மனப்பாடமாகத் தெரியும்!”

“எங்கே பாடிக்காட்டு பெத்தா!”

பெத்தம்மா பாடினார்.

நபிகள் நாயகம் பாலைவனத்தில் புழுதி பறக்க ஒட்டகத்தில் சவாரித்தார். அவருக்கு பின் மற்ற ஒட்டகங்களுடன் நபித்தோழர்கள் பின் தொடர்ந்தனர்.

“மயிர் கூச்செரிகிறது பெத்தா!”

‘உமறுப்புலவர் முத்துமொழி மாலை, சேரகத்தி திருமணக் கவிதைகள் மற்றும் சீதக்காதி நொண்டி நாடகம் முதலியவற்றையும் எழுதினார்!”

“உமறுப்புலவர் பாக்க எப்படி இருப்பார்?”

“அவர் காலத்தில் போட்டோ ஏது? கையால வரைஞ்ச படங்கள் தான் இருக்கும். பெரிய கருப்புத் தொப்பி. தீட்சண்யமான கண்கள். பெரிய பெரிய காதுகள். மாநிறம். அழகிய மீசைதாடி. கழுத்து வரை பொத்தான் இடப்பட்ட சட்டை. சுருக்கமாக அவர் வயசானா நீ அவரை மாதிரி தான் இருப்ப…”

“எத்னி வயசில மௌத்தாய் போனார்?”

“அறுபது வயசில…”

அவர் யோசித்து நிமிர்ந்தார். “இப்ப கிபி 1973. நீ 1960 ஆம் ஆண்டில பிறந்த உனக்கும் உமறுப்புலவருக்கும் 270 ஆண்டுகள் வித்தியாசம். அவர் உன் 13 அல்லது 15 ஆவது தலைமுறை தாத்தா!”

சட்டைக் காலரை உயர்த்திக்கொண்டேன்.

சிறிது காலத்தில் பெரிய பெத்தா மௌத்தானார்.

என் பால்ய நண்பன் இர்ஷாத்திடம் இதனை கூறிய போது பவர் கிளாஸ் வழியாக என்னை உறுத்தான். “வாங்க குட்டி உமறுப்புலவரே!”

“கிண்டல் பண்றியா?”

“உமறுப் புலவரின் கடைசி வாரிசு பி.எப். நசீரிடம் உமறுப் புலவரின் வெளியிடப்படாத கவிதைகள் மேனுஸ்கிரிப்ட் இருந்ததாக கூறுவர்!”

“ஓ!”


“ஆர்னிகா! இப்ப உனக்கு 65வயசாகுது. ஒரு இரண்டு வருஷம் முயற்சி பண்ணயிருந்தா உன்னோட ஆணிவேரைத் தேடிக் கண்டு பிடிச்சிருக்கலாமே நீ?”

“ஒன்று, தேட சோம்பேறித்தனம். தேடிப் பார்க்கும் போது உண்மையில் நான் உமறுப்புலவரின் வாரிசு இல்லை எனத் தெரிந்தால் ஒரு மித் கலைந்து விடும். வெட் இட் பி ஆஸ் இட் இஸ்…”

- மனைவியுடன் எட்டயபுரம் கிளம்பினேன்.

உமறுப்புலவர் மணிமண்டபம். “அஸ்ஸலாமு அலைக்கும். எள்ளு எள்ளு அப்பா. நான் உங்களைப்போல எழுத்தில் பரிபூரணமடைய இறைவனிடம் பரிந்துரையுங்கள்!”

என்னுடைய பேனாவை எடுத்து உமறுப்புலவரின் கபுரில் வைத்தேன்.

மீண்டும் பேனாவை எடுத்தபோது பேனாவில் சந்தனம் பூசியிருந்தது. மண்டபம் முழுக்க மரிக்கொழுந்து வாசனை மூண்டது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p65.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License