இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

70. பிறந்தநாள் பரிசு!


‘ஊறும் பிளட்’ பாடலை சீழ்க்கையடித்தபடி வீட்டுக்குள் பிரவேசித்தான் முகமது இலியாஸ்.

வயது16. 165 செமீ உயரம். ரோஜா நிறம். சுருள்சுருள் தலைகேசம். பத்தாம் வகுப்பு படிப்பவன். கருப்பு ஜீன்ஸும் கருப்பு டி சர்ட்டும் அணிந்திருந்தான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த அத்தா அவூப் ஹனீபா அம்மா ஷாஜாதி இருவரையும் நோக்கிச் சென்றான் இலியாஸ். இலியாஸ் அவர்களின் ஒரே மகன்.

“ஹாய் அத்தா! ஹாய் அம்மா!”

“சலாம் சொல்லி பழகு மகனே!”

“ஸாரி. இதுதான் எனக்கு கம்பர்டபிளா இருக்கு…”

“அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னா உன் நாக்கு சுளுக்கிக்குமா?” அத்தா.

“இன்னையிருந்தாவது சலாம் சொல்லி பழகு மகனே!” அம்மா.

“பார்ப்பம்!”

“டியூஷன் போய்ட்டு வந்தியா?”

“மக்கு பயலுகளுக்குத்தான் டியூஷன். எனக்கெதுக்கு டியூஷன் வச்சீங்க?”

“புத்திசாலி மேலும் புத்திசாலியாக!”


“என் படிப்பு விஷயத்தில் நீங்கள் செய்யும் அதிகபிரசங்கி தனங்கள் எனக்கு அறவே பிடிக்கல…”

“ப்ளஸ் டூ வரை பல்லைக் கடிச்சிக்க. நீ காலேஜ் போனவுடன் எல்லாத்தையும் ஈஸி பண்ணிடுவோம்!”

“விஷயத்துக்கு வருகிறேன். என் பிரண்ட் சந்துரு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கிருக்கான்!”

“அவனுக்கும் வயசு பதினாறு தானே ஆகும். டிரைவிங் லைசென்ஸ் 18 வயது பூர்த்தியானவுடன் தானே வாங்க முடியும்!”

“நானும் அவனும் பன்னண்டு வயசிலயிருந்தே பைக் ஓட்டுரோம்… நாங்கல்லாம் குட்டி அஜீத். நாங்கல்லாம் குட்டிவாசன்!”

“நொட்டோரியஸ் பாபுலாரிட்டிக்கு ஆசைப்படாதே!”

“டாடி! மம்மி! கடந்த இரண்டு வாரமா ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பத்திதான் தகவல்கள் சேகரிச்சிட்டு இருந்தேன். பஜாஜ் பல்சர், கேடி எம் டியூக் 390, டிவிஎஸ் அபாச்சி, ஹீரோ எக்ஸ்ட்ரீம், சுஜீகி கிஸ்ஸர், டிகாட்டி மற்றும் கபிரா மொபிலிட்டி பார்த்தேன். எதுவும் பிடிக்கல. கடைசியா கவசாகி நின்ஜா இஸட் எக்ஸ் – டென் ஆர் பார்த்தேன். சூப்பர் பைக். விலை இருபத்திரெண்டரை லட்சம்… வருகிற என் பெர்த் டேக்கு கிப்ட்டா வாங்கிக் குடுத்திருங்க!”

அவூப் ஹனீபா ஆணித்தரமாக மறுத்தார். “சான்ஸே இல்லை மகனே. பைக்கின் விலை ஒரு பிரச்சனை இல்லை. உன் பாதுகாப்பு தான் முக்கியப் பிரச்சனை. நீ காலேஜ்க்கு போனவுடன் சாதாரண பைக் வாங்கித் தருவேன்!”

“பாதுகாப்பு கீதுகாப்புன்னு என்ன உளர்றீங்க? வாங்கித் தர முடியுமா, முடியாதா?”

“ப்ளீஸ் சொன்னா கேளு மகனே. உனக்கு பதினெட்டு வயசானவுடனே உன்னை ஒரு டிரைவிங் ஸ்கூல்ல சேத்து முறையா டிரைவிங் கத்துக் கொடுத்து ட்ராபிக் ரூல்ஸ் டீச் பண்ணி லைசென்ஸ் வாங்கித்தரம். முதல்ல ஸ்கூட்டி. ஸ்கூட்டில நிதானமா போய் வா!” அம்மா.

“என்னம்மா, அத்தா கூட நடிக்றியா?”

“நீ எங்களுக்கு ஒரே பய்யன். எங்க எதிர்காலமே நீதானடா. உன் பாதுகாப்பை யோசிக்காம நாங்க தாம்தூம்னு முடிவெடுக்க முடியுமா?”

“ஹெல்மெட், நீ கார்ட், எல்போ கார்ட் எல்லாம் போட்டுக்கிட்டு தான் வண்டி ஓட்டப்போரேன்… பாதுகாப்பு பாதுகாப்புன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லாதீங்க… நீங்க இன்னும் ஒரு வாரத்ல எனக்கு நான் கேட்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கித் தரணும்!”

“முடியாதுப்பா…”

“வாங்கித் தரலேன்னா நடக்றதே வேற…”

“என்ன பண்ணுவ?”


“என்ன பண்ணுவேன்னு வெளிப்படையா சொல்ல மாட்டேன்… பெர்த்டே அன்னைக்கி ஸ்போர்ட்ஸ் பைக் சாவியை நீங்க என்கிட்ட ஒப்படைக்கனும்!”

“சொன்னா கேளு… இலியாஸ் ப்ளீஸ்!”

“கெஞ்சினா மிஞ்சுவீங்க மிஞ்சுனா கெஞ்சுவீங்க… கெடு கொடுத்திட்டேன்… வாங்கிக் குடுக்கலேன்னா வீபரீத விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்க!”

விருட்டென்று வெளியேறினான் முகமது இலியாஸ்.

“ஏங்க அவன் பேசுற விதம் திகிலா இருக்கு. மெதுவா ஓட்டனும் நம்ம நகருக்குள்ள ஓட்டனும்ன்ற கண்டிசனோட அவன் கேக்ற ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கிக்குடுத்திருங்க!”

“எமோஷனல் பிளாக்மெயில் பண்றான்… இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்க மாட்டேன்! நீ போய் உன் வேலையை பார். அவனை செல்லம் கொடுத்து கெடுக்கறதே நீதான்!”

பிறந்த நாள் நெருங்க நெருங்க முகமது இலியாஸின் நடவடிக்கைகள் உக்கிரமாயின. வீட்டிலுள்ள உடையும் பொருட்களைப் போட்டு உடைத்தான். கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து அத்தாவை வாய்க்குள் திட்டினான். சரிவர சாப்பிடாமல் அடம்பிடித்தான்.

பிறந்தநாள் வந்தது.

ஒரு வங்கிச் சான்றிதழை நீட்டினார் அத்தா. “இருபத்தியைஞ்சு லட்ச ரூபாயை உன் பெயர்ல பிக்ஸட் டெபாசிட் போட்டிருக்கேன். 18 வயசு பூர்த்தியானதும் பணத்தை எடுத்து நீ விரும்பின பைக்கை வாங்கிக்கலாம். இது எங்க பிறந்தநாள் பரிசு!”

வாங்கி சுக்குநூறாக கிழித்து போட்டான் இலியாஸ்.

மொட்டைமாடிக்கு பேய்த்தனமாக ஓடி ஆழ தரைக்கு குதித்து இரத்த வெள்ளத்தில் சிதறினான்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முகமது இலியாஸின் உடலை அவனது பெற்றோரிடம் அரசு மருத்துவமனை ஒப்படைத்தது.

தந்தையும் தாயும் அழுது அழுது வீங்கி வெம்பி முட்டி மோதி கதறி சிதறி வறண்டிருந்தனர்.

உறவினர் கூட்டம் ஒப்பாரி வைத்தது.

சில உறவினர்கள் இலியாஸின் பெற்றோரை சபித்தனர். “கோடி கோடியா பணம் வச்சிருந்தும் பிசினாரிதனம் தேவையா? பர்த்டே கிப்ட்டா ஒரே மகன் பைக்தானே கேட்டான்? வாங்கிக் குடுத்திருக்கலாமில்ல? இப்ப ஒரே மகனை இழந்துட்டு வாய்லயும் வயித்லயும் அடிச்சிக்கிட்டா எப்படி?”

முகமது இலியாஸ் குளிப்பாட்டப்பட்டு கபன் துணி அணிவிக்கப்பட்டு சந்தூக்கில் வைக்கப்பட்டான்.

ஜனாஸா பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பள்ளி இமாம் வெளியே வந்தார். “எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். தற்கொலை செஞ்சுகிட்ட ஒரு விடலை சிறுவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த மாட்டேன்!”

“என்ன இமாம், புதுக்குண்டை தூக்கிப் போடுறீங்க?”


“உலகில் வருடாவருடம் 740000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு 43 நொடிக்கும் ஒருவர் தற்கொலை. நம் நாட்டில் இளைஞர்கள் உயிரிழப்புக்கு 16 சதவீதம் தற்கொலை காரணமாகிறது. ஒன்பது சதவீதம் பேர் இதய ரத்தக்குழாய் பாதிப்புகளாலும் ஏழுசதவீதம் பேர் செரிமான நோய்களாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைக்கு முழுக்க முழுக்க எதிரான மதம் இஸ்லாம். பெற்றோர் பைக் வாங்கித்தரலைன்னு தற்கொலை செய்து கொண்ட இந்த விடலைப் பையன் ஒரு தற்குறி. இவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த என் மனம் ஒப்பவில்லை!”

“தற்கொலை செய்து கொண்ட முஸ்லிமுக்கு ஜனாஸா தொழுகை தொழக்கூடாதுன்னு மார்க்கத் தடை நம்ம இஸ்லாமல இருக்கா?”

“கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் ஜனாஸா தொழுகைக்கும் தற்கொலை செய்து கொண்டவரின் ஜனாஸா தொழுகைக்கும் நபிகள் நாயகம் செல்லவில்லையே?”

“அவர் செல்லவில்லை சரி மற்றவர்களை அவர் தடுத்தாரா?”

“ஒருவர் காயத்தின் வலியால் பொறுமை இழந்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட போது ‘எனது அடியார் தன்னைத் தானே கொலை செய்து கொள்வதில் அவசரப்பட்டார் எனவே அவருக்கு சுவனத்தை நான் ஹராமாக்கி விட்டேன்’ என அல்லாஹ் கூறுகிறான் ”


“இமாம்! ஒரு வஹாபி போல நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாக பிறந்த அனைவருக்கும் ஜனாஸா தொழுகையின் மீது உரிமை உண்டு. தற்கொலை செய்து மௌத்தான சிறுவனின் நடத்தைக்கு மறுமை நாளில் தகுந்த நியாயத் தீர்ப்பு வழங்குவான் இறைவன். நாம் ஜனாஸா தொழுகை நடத்திய பல முஸ்லிம்கள் வட்டி வாங்கியவர்கள், போதை பொருள் விற்றவர்கள், மார்க்கத்திற்கு முரணாக நடந்தவர்கள். அவர்களின் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்தீர்களா? மகனைப் பறி கொடுத்து நிற்கும் பெற்றோருக்கு ஆறுதலாக நம் செய்கை இருக்கட்டும். சிறுவனுக்கான ஜனாஸா தொழுகையில் அறியா சிறுவனின் செயலை மன்னிக்க இறைவனை வேண்டுவோம்…”

இமாம் மனம் இரங்கினார்.

“இருங்கள்… மற்ற இமாம்களிடம் இதுபற்றி அபிப்ராயம் கேக்கிறேன்!”

கைபேசியில் வினவினார்.

“இமாம்களாகிய நமக்கே மறுமை நாளில் என்ன தீர்ப்பளிப்பான் இறைவன் என நமக்கே தெரியாது. சிறுவனின் தற்கொலையில் நீங்கள் தீர்ப்பு வழங்காதீர்கள். ஜனாஸா தொழுகை தொழ வையுங்கள்!”

நான்கு ரக்காத் ஜனாஸா தொழுகையில் மஹல்லா மக்கள் சிறுவன் முகமது இலியாஸின் பாவத்தை மன்னிக்க அதிகம் அதிகம் இறைஞ்சினர்.

முகமது இலியாஸின் ரூஹு பெற்றோரின் முன் மன்றாடியது.

“கட்டுக்கடங்கா இளமையின் அறியாமையால் நான் செய்த தவற்றை மன்னியுங்கள். இறைவனிடமும் எனக்கான பாவமன்னிப்பைக் கேட்டு இரவும் பகலும் பிரார்த்தியுங்கள்!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p70.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License