இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

76. யர்ஹமுகல்லாஹ்

உம்மு அபிஹா வாட்டர் ஹீட்டரை ஆன் பண்ணினாள்.

உம்முவுக்கு வயது 32. இளங்கலை பட்டப்படிப்பு படித்த இல்லதரசி. யாரையும் எதற்கும் கடிந்து கொள்ளாத மனேபாவம். உம்மு எதனைச் செய்தாலும் அதில் ஒரு நளினம் ஒளிந்திருக்கும். எளிமையான சமையல் என்றாலும் சுவையான சமையல் செய்வாள். உம்முவுக்கு எட்டு வயதில் மகள் ஆயிஷா ரின்ஷா இருக்கிறாள்.

மகளின் கேசத்திற்கு ஷாம்பு தடவி விட்டாள்.

புதிதாக ஒரு ஹமாம் சோப்பை பிரித்து அதற்குரிய டப்பாவில் போட்டாள்.

மகளின் மேலாடையைக் கழற்றினாள்.

சுடுநீருடன் குளிர்நீரை இதமாகக் கலந்தாள்.

ஸ்வீம்மியுடன் மகளைக் குளிக்க வைத்தாள்.

“அம்மா! எனக்குக் குளிக்கத் தெரியாதா? நீ என்னை கைக்குழந்தை மாதிரி ட்ரீட் பண்ற?”

“இன்னும் ரெண்டு மூணு வருஷம் உன்னைக் குளிக்க வைப்பேனா? அப்றம் நீ தான்…. குளியல் ஒரு சந்தோஷம். குளியல் ஒரு நாளின் செயல்பாடுகளைப் புத்துணர்ச்சியாக்குகிறது. குளியல் ஓர் அடிப்படை சுயசுத்தம்…”

குளித்து முடித்த மகளின் தலையைப் பூத்துவாலை வைத்துத் துவட்டி விட்டாள் உம்மு அபிஹா

சிறிதளவு தேங்காயெண்ணெய் எடுத்து துவட்டியத் தலையில் கோதி விட்டாள்.

ஆயிஷா ரின்ஷா தும்பினாள். ‘ஆ! ஹச்சூ!’

“மகளே! தும்மியவுடன் அல்ஹம்துலில்லாஹ் சொல்லு!”

“அல்ஹம்துலில்லாஹ்- சொல்லிட்டேன் இந்த வார்த்தைக்கு என்னம்மா அர்த்தம்?”

“எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்லது இறைவனுக்கு நன்றி என்று அர்த்தம். நீ அல்ஹம்துலில்லாஹ் சொன்ன பிறகு நான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்!”


“என்ன வார்த்தை?”

“யர்ஹமுகல்லாஹ் என கூற வேண்டும்!”

“அதற்கென்ன அர்த்தம்?”

“அல்லாஹ் உனக்குக் கருணை புரிவானாக - என அர்த்தம். இதோ உனக்கு மறு மொழி கூறுகிறேன். யர்ஹமுகல்லாஹ்!”

“ஓவ்!”

“நான் சொன்னதிற்கு மூன்றாவதாக நீ ‘யஹ்தீகுமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலகும்’ என கூற வேண்டும்!”

“அதற்கு என்ன அர்த்தம்?”

“அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலையைச் சீராக்குவானாக என பொருள்!”

“இஸ்லாம் தும்மலைப் பற்றி என்ன கூறுகிறது?”

“நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கிறான். கொட்டாவி விடுவதை உவப்பதில்லை. எனவே உங்களின் எவரேனும் தும்மி இறைவனைப் புகழ்ந்தால் அதனைச் செவியுறும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ‘யர்ஹமுகல்லாஹ்’ என மறுமொழி கூறுவது கடமையாகும். ஆனால் கொட்டாவியோ ஷைத்தானின் வழி வருவதாகும். எனவே உங்களில் எவருக்கேனும் தொழும் போது கொட்டாவி வந்தால் இயன்ற வரை அடக்கவும் வாயை மூடிக்கொள்ளவும் ஹாஹா என கூற வேண்டாம். இது ஷைத்தானின் செய்கையாகும் கொட்டாவி கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் - என்கிறார் நபிகள் நாயகம்!”

“ஓஹோ!”

“மூன்று முறை உங்கள் சகோதரின் தும்மலுக்கு மறுமொழி கூறுங்கள். அதற்கு மேல் அவர் தும்மினால் அவருக்கு சளி பிடித்திருக்கிறது என அர்த்தம் எனவும் நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்!”

“அம்மா! தும்மல் பற்றி விஞ்ஞானம் என்னம்மா கூறுகிறது?”

“மூக்கு அல்லது தொண்டையில் எரிச்சல் ஏற்படும் போது, அதனை நீக்குவதற்காக நுரையீரலில் இருந்து மூக்கு மற்றும் வாய் வழியாக வேகமாக வெளியேற்றப்படும் காற்றின் தன்னிச்சையான செயல்பாடே தும்மலாகும்!”

“எதனால் தும்மல் ஏற்படுகிறது என விஞ்ஞானம் சொல்கிறது?”

“எரிச்சலூட்டிகள், தூசி மற்றும் மகரந்த ஒவ்வாமை, நோய்த்தொற்றுகள், அதீத வெளிச்சம், காரமான உணவுகள் தும்மலுக்கு அடிப்படைக் காரணங்கள்…”

“புரிகிறது!”

“தும்மல் என்பது உடலின் ஒரு தற்காப்பு வழிமுறை மகளே…”

“தும்மல் நல்லதா கெட்டதா?”

“தும்மல் நல்லதும் கெட்டதும் இரண்டும் அடங்கியது. தொடர் தும்மல் கெடுதி…”

“தும்மலின் வேகம் என்ன?”

“சொன்னால் ஆச்சரியப்படுவாய் மணிக்கு 160 கிமீ வேகம்…”

“தும்மலின் போது கண்களை மூடிக்கொள்ள வேண்டுமா? அல்லது கண்களை திறந்து வைக்கலாமா?”


“தும்மலின் போது ஆட்டோமேட்டிக்காக கண்கள் மூடிக்கொள்ளும். கண்களைத் திறந்து கொண்டு தும்முவது ஆபத்தானது!”

“தும்மலை அடக்கினால் என்னவாகும்?”

“நல்ல கேள்வி இது. தும்மலை அடக்கினால் காதில் அழுத்தம், சைனஸ் தொற்று மற்றும் கழுத்து எலும்பு காயம் ஏற்படும்!”

“அம்மா! ஒருவர் தும்மி விட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறினால் நாம் மறுமொழியாக ‘யர்ஹமுகல்லாஹ்’ கூற வேண்டும் சரி. தும்மினவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறாவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?”

“தும்மியவர் இறைவனைப் புகழாவிட்டால் நாமும் அவருக்கு மறுமொழி கூறத் தேவையில்லை என நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்!”

“நபிகள் நாயகம் எப்படித் தும்முவார்?”

“நபிகள் நாயகம் அவர்களுக்குத் தும்மல் வந்தால் தன்னுடைய இரு கையாலோ அல்லது துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு தங்களின் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள்!”

“கிரேட்!”

“நபிகள் நாயகத்துடன் இருக்கும் போது சில யூதர்கள் வேண்டுமென்றே தும்மி அதற்கு நபிகள் நாயகம் ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறுகிறாரா என நோட்டமிடுவர். ஆனால் நபிகள் நாயகம் ‘அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்துவானாக மேலும் அல்லாஹ் உங்களின் மனதைச் சீர்திருத்துவானாக’ எனக் கூறுவார்!”

“நெத்தியடி!”

“ஆம்!”

“தும்முவதில் உலக சாதனை உண்டா?”

“உண்டுண்டு. டோனா கிரிபித்ஸ் என்பவர் தொடர்ந்து 976 நாட்கள் தும்மியிருக்கிறார். ஒரே வருடத்தில் 10 லட்சம் தடவை தும்மி இருக்கிறார்!”


“அம்மாடி! நான் தப்பிச்சேன்….”

“அல்ஹம்துலில்லாஹ்’ என்கிற வார்த்தையை நல்ல மற்றும் கெட்டச் சூழ்நிலைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தை சூரா அல் பாத்தியாவில் உள்ளது!”

“கொட்டாவி பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது அம்மா?”

“முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு இடையில் கொட்டாவி விடுதல் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு நரம்பியல் இயற்பியல் தழுவலாகும்!”

“சரி!”

“கொட்டாவி மூளையைக் குளிர்விக்கிறது. விழிப்புணர்வை அதிகரிக்கிறது. சலிப்பு அல்லது சோர்வை அகற்றுகிறது. கொட்டாவி மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்பி செல்களைத் தூண்டி மூளையின் வெப்பநிலையைச் சீராக்குகிறது. கொட்டாவி என்பது ஒரு தன்னியக்க எதிர்வினை. கொட்டாவி சமூகத் தொடர்புகளின் ஒரு பகுதி. கொட்டாவி தூக்கத்தை குறிக்கும் சமிக்ஞைகளுடன் தொடர்புடையது. ஒருவரிலிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியது. அடிக்கடி கொட்டாவி எதிர்மறை மருத்துவநிலையின் அறிகுறி. கல்லீரல் அழற்சி காரணமாகக் கூட கொட்டாவி வரலாம்”

“கொட்டாவி விடும் போது கண்ணீர் வருமா?”

“கொட்டாவி விடும்போது முகத்தசைகள் சுருங்குவதால் கண்ணீரைச் சுரக்கும் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்பட்டுக் கண்ணீர் வெளியேறுகிறது!”

“கொட்டாவி வரும்போது ஒரு முஸ்லிம் என்ன செய்ய வேண்டும்?”

“இயன்ற வரை அடக்க முயற்சி செய்ய வேண்டும். வாயை இடது கையால் மூட வேண்டும். மேலே ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்’ எனக் கூற வேண்டும்!”

“இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்?”

“அல்லாஹ்வைத் தவிர வேற சக்தி இல்லை எனப் பொருள்…”

“சரி!”

“மொத்தத்தில் மகளே! அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். ஆனால் கொட்டாவியை வெறுக்கிறான். தொழுகையின் போது கொட்டாவியை அடக்க வேண்டும். கொட்டாவி வந்தால் ‘ஷைத்தான் இடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என கூறுவது நபிகள் நாயகம் வழிமுறை அல்ல. ஆகவே, அதனைக் கூற வேண்டாம். கொட்டாவி நல்லது என விஞ்ஞானம் கூறுகிறது. கொட்டாவி கெட்டது என இஸ்லாம் கூறுகிறது. சில சமயம் இஸ்லாமை அறிவால் பார்க்காதே நம்பிக்கையாய் பார்…. இஸ்லாம் தித்திக்கும்!”

உம்மி அபிஹா தும்மினாள். தும்மலுக்கு பின் ‘அல்ஹம்துல்லாஹ்’ என்றாள். மகள் ஆயிஷா ரின்ஷா ‘யர்ஹமுகல்லாஹ்’ கூறினாள். அதற்கு உம்மு ‘யஹ்தீகுமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலகும்’ மறுமொழி கூறினாள்.

மலக்குகள் உற்சாகமாக தும்மினர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p76.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License