இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

78. பதிலி மோதினார்

ஷெகனாஸ் கார்டன்.

ஏழாவது தெருவில் அப்துல்சுபானின் குடும்பம் இரண்டரை சென்ட் பரப்பளவில் வீடு கட்டிக் குடியிருந்தது.

தரைத்தளத்தில் இரட்டைப் படுக்கையறைகளுடன் கூடிய ஒரு போர்ஷன்.

முதல்தளத்தில் இரட்டைப் படுக்கையறைகளுடன் கூடிய இன்னொரு போர்ஷன்.

இரண்டாவது தளத்தில் ஒரு போர்ஷனைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் சுபான்.

சுபானுக்கு வயது 52. ஐம்பது கிலோவில் செய்யப்பட்ட கெச்சலான திரேகம். முகவாயில் மட்டும் நீண்டிருக்கும் தாடி. பிறந்த ஊர் காங்கேயம். கேரளாவில் பெண் எடுத்து மலையாள மாப்பிள்ளையாகிப் போனார். உருது முஸ்லிம். அவரது தமிழ் உச்சரிப்பு சற்றே வித்தியாசமாக இருக்கும். அதிகம் படிக்காதவர். பிறருக்கு உதவிகள் செய்து அங்கீகாரம் பெற விரும்புபவர். மனைவி மீது காதலாகி கசிந்துருகுபவர். ஜோடியாக இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கோவையிலிருந்து பாலக்காடு பயணித்து காலை டிபன் சாப்பிடுவர்.

இரு மகன்கள். மூத்தவன் லண்டனில் மருத்துவம் படிக்கிறான். இளையவன் ப்ளஸ் டூ படிக்கிறான்.

சுபான் ஐவேளை தொழுகையாளி.

ஷெகனாஸ் கார்டனில் வீடு கட்டிக் குடியிருப்பதற்கு முன் ஒப்பணக்கார வீதியில் குடியிருந்தார்.

ஷெகனாஸ் கார்டனின் சுற்றுப்புறத்தில் ஏழெட்டுப் பள்ளிவாசல்கள் இருந்தன.

தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி, ஜாக் பள்ளி, சுன்னத் ஜமாஅத் பள்ளி இப்படி பல பிரிவுகளில் பல பள்ளிவாசல்கள்.


ஒரு பச்சைக்கிளி பல மரங்களுக்குப் பறந்து சென்று இளைப்பாறுவது போல சுபான் எல்லாப் பள்ளிவாசல்களிலும் போய் தொழுவார்.

பள்ளிவாசல் இமாம், மோதினார் மற்றும் நிர்வாகிகளுடன் நல்லுறவு பேணுவார். தொழுகையாளிகளுடன் நட்புறவு பாராட்டுவார்.

- வழக்கம் போல இரண்டாவது தளத்தின் கொத்தனார் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சுபான்.

அவரது கைபேசி சிணுங்கியது.

லண்டனில் படிக்கும் மகன் அழைக்கிறான்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!” படிப்பைப் பற்றியும், மகனின் புது நண்பர்கள் பற்றியும் விடுதி உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் பற்றியும் விசாரித்தார்.

பின் “மஞ்சூ!” என உரக்கக் குரல் கொடுத்தார்.

மனைவி ஓடி வந்தார்.

மனைவியிடம் கைபேசியைக் கொடுத்தார். அம்மாவும் மகனும் அளவளாவிக் கொண்டனர்.

மகன் பேசி முடிக்க, மீண்டும் கைபேசி அழைத்தது. மனைவி கைபேசியைக் கணவரிடம் கொடுத்து “யாரோ கூப்பிடுராங்க பாருங்க!”

கைபேசியை வாங்கினார்.

ரோஸ் கார்டன் கௌஸர் பள்ளி முத்தவல்லிதான் அழைக்கிறார்.


“அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”

“வஅலைக்கும் ஸலாம் முத்தவல்லி!”

“நல்லாயிருக்கீங்களா?”

“நல்லாயிருக்கேன் நீங்க நல்லாயிருக்கீங்களா?”

“அல்லாஹ்வின் கருணையால் நலம்!”

“என்ன விஷயம் முத்தவல்லி?”

“பாய்! நம்ம பள்ளி 100 பேர் மட்டுமே தொழக்கூடிய சிறுபள்ளி. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பள்ளியை டெவலப் பண்ணி வருகிறோம்”

“சரி!”

“நம்ம பள்ளியில் மோதினார் ஒரு அஸ்ஸாம்காரர். சின்ன வயது. அவரின் பெயர் உஸ்மான். அவருக்குச் சொந்த ஊரில் கல்யாணம். ஒரு மாத விடுமுறையில் அஸ்ஸாம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்!”

“சரி!”


“தற்சமயம் பள்ளியில் பாங்கு சொல்ல ஆள் இல்லை. பாங்கு சொல்லத் தெரிந்த யாரையாவது எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா? தற்காலிகமா ஒரு மாசத்துக்கு மட்டும். லுஹரும் அஸரும் மட்டும் பாங்கு சொன்னால் போதும். மீதி மூன்று நேரத் தொழுகைகளுக்கான பாங்குகளை சொல்ல வேறு நபர்கள் பார்த்து விட்டேன்!”

அப்துல் சுபான் பாய் மனதிற்குள் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன. மானசீகமாகத்தானே பாங்கு சொல்வது போல கற்பனித்து குதூகலித்தார் சுபான்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நானே பாங்கு சொல்றேன் முத்தவல்லி!”

“குறைந்தபட்சம் உங்க பாங்கை ஆயிரம் பேர் கேட்பார்கள். கோபித்துக் கொள்ளக்கூடாது. சரியாக பாங்கு சொல்வீர்களா?”

“வீட்டில் நான்கைந்து ரிகர்சல்கள் எடுத்துக் கொண்டு வந்து அசத்தி விடுகிறேன்!”

“நீங்கள் பாங்கு சொல்வதற்கு ஊதியம் எதுவும் கிடையாது பாய்!”

“நான் கேட்டேனா? இறைப்பணிக்கு எதற்கு ஊதியம்? நான் ரெடி… இன்றைக்கே பாங்கு சொல்ல ஆரம்பிக்கவா?”

“இன்றைய லுஹரிலிருந்து பாங்கு சொல்வதை ஆரம்பிங்க பாய்!’”

“சரி!’”

“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!’”

தொடர்பு அறுந்தது. மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அரேபிய நடனம் டப்கேயும் கலீகியும் ஆட ஆரம்பித்தார் சுபான்.

“கைய விடுங்க யாராவது பாக்கப் போராங்க. என்ன விஷயம் இந்த சந்தோஷம்?”

“ரோஸ் கார்டன் பள்ளில அதான் சொல்லப் போறேன்!’”

“ஐந்து வேளை தொழுகைகளுக்கும் ஐந்து வெவ்வேறு பாங்குகள்தானே?”


“ஐந்து தொழுகைகளுக்கான அதான்கள் ஐந்து தனித்துவமான பாணிகளில் அல்லது மக்காம்களில் ஓதப்படுகிறது.

பஜ்ர் எனப்படும் அதிகாலை பாங்கு சூரிய உதயத்திற்கு முன்பாக இதமாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும் வகையில் உயர்ந்த சுருதியில் ஓதப்படும் ஒரு விழிப்பூட்டும் மெல்லிசை. இதனை ‘ஸபா’ என்பர்.

லுஹர் எனப்படும் நண்பகல் பாங்கு வேலைநாளின் உச்சகட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக ஒரு கம்பீரமான மற்றும் பிரம்மாண்டமான தாளத்தைப் பின்பற்றுகிறது. இதனை ‘ஓக்லே’ என்பர்.

அஸர் எனப்படும் பிற்பகல் பாங்கு மந்தநிலையைப் போக்க ஆற்றல் மிக்க மற்றும் எழுச்சியூட்டும் மெல்லிசை பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘இகிந்தி’ என்பர்.

மஹ்ரிப் எனப்படும் சூரிய அஸ்தமன பாங்கு பகலிருந்து அந்திக்கு மாறும் நிலையை பிரதிபலிக்கும் வகையில் சற்றே மெதுவான மென்மையான பாணியில் பாடப்படுகிறது. இதனை ‘அசஷம்’ என்பர்.

இஷா எனப்படும் இரவு பாங்கு கம்பீரமான ஆழ்ந்த மற்றும் சிந்தனைக்குரிய தொனியில் ஒலித்து நாளின் முடிவை உணர்த்தி விசுவாசிகளை உறக்கத்திற்கு தயார்படுத்துகிறது. இதனை ‘யத்ஸீ’ என்பர்…”

சுமார் ஒரு மணி நேரம் கிப்லா திசை நோக்கி பாங்கு சொல்லி ரிகர்சல் செய்தார் சுபான்.

பள்ளியின் ஒலிபெருக்கியின் முன் நின்று லுஹருக்கான பாங்கைக் கூறினார். இரு காது துவாரங்களையும் இரு பெருவிரல்களால் அழுந்த மூடிக் கொண்டார்.

“அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். (முகத்தை வலப்பக்கம் திருப்பி) தொழுகைக்கு வாருங்கள் தொழுகைக்கு வாருங்கள் (முகத்தை இடப்பக்கம் திருப்பி) வெற்றிக்கு வாருங்கள் வெற்றிக்கு வாருங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை!”

அதானுக்கு பிறகு பாங்கு துஆ ஓதினார் சுபான். மஹல்லா மக்கள் சுபானின் குரல் இனிமையில் மயங்கிப் போயினர்.

தொழுகை முடிந்ததும் நூற்றுக்கணக்கான தொழுகையாளிகள் முத்தவல்லியைச் சூழ்ந்து கொண்டனர். “பாங்கு சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க முத்தவல்லி!”

கனத்த யோசனைக்கு பிறகு முத்தவல்லி தலையாட்டினார்.

பாங்கு சொல்ல விரும்பும் மஹல்லாவாசிகளின் பெயர்களைச் சுருட்டிக் கண்ணாடிப் பாட்டிலில் போட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்ந்தெடுத்து பாங்கு சொல்ல அனுமதித்தார் முத்தல்லி.

-அஸ்ஸாம் மோதினார் பணிக்குத் திரும்பிய பிறகும் திருவுளசீட்டுக் குலுக்கல் முறையில் பாங்கு தொடர்கிறது.

நபித்தோழர் ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள் அரைக்கண் மூடி நூற்றுக்கணக்கான பாங்குகளை ரசித்தார்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p78.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License