இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

79. சொர்க்கம் எப்படியிருக்கும்?

வானம் அல்லாத வானம்.

சூரியன் இல்லை, சந்திரன் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் இறைவனின் சிம்மாசனமான அர்ஷின் வெளிச்சம் சுவனம் முழுக்க சீராய் பரவியது. அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லாத அந்திமாலை வெளிச்சம்.

தூரத்தில் மாடமாளிகை, கூட கோபுர கோபுரங்களுடன் சொர்க்கம் மிதந்து கொண்டிருந்தது.

வெள்ளி, பொன், மரகதம், சன்னமுத்து, ஆணிமுத்து, மாணிக்கம் மற்றும் ஒளியாலான சொர்க்கத்திற்கு ஏழு சுவர்களும் எட்டு வாசல்களும் இருந்தன. சொர்க்கத்தில் 100 அந்தஸ்துகள். ஒவ்வொரு அந்தஸ்துக்கும் இடையில் 500 வருட பிரயாண தூரம். அகலம் ஏழு வானங்கள். ஏழு பூமிகள்.

எட்டு சொர்க்கங்களின் பெயர்களாவன;

நூருல் ஜவால், தாருஸ்ஸலாம், ஜன்னத்துல் மஃவா, ஜன்னத்துல் குல்து, ஜன்னத்துல் நகீம், ஜன்னத்துல் பிர்தௌஸ், ஜன்னத்துல் அதன், தாருல் கராம்

சொர்க்கத்தின் தரைப்பகுதி கற்பூரத்தால் மெழுகப்பட்டிருந்தது. சொர்க்கத்தின் மணல் குங்குமம் கலந்த கஸ்தூரியால் பொடிந்திருந்தது.

சொக்கவாசிகளுக்கு 70 அழகிய மானிடப் பெண்டிரும் ,30 ஹுருல்ஈன்களும் சொந்தமாக்கப்பட்டிருந்தனர். தினம் தினம் புதிய பெண்களும் அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு சொர்க்கவாசியின் மாளிகையிலும் 70 அறைகள் இருந்தன. அழகிய பெண்கள் தவிர, 70 ஆண் பணியாளர்களும், 70 பெண் பணியாளர்களும் சொர்க்கவாசிக்குச் சேவகம் செய்யக் காத்திருந்தனர்.

மாளிகையில் 70 வகை பானங்களும் 70 வகை உணவுகளும் சொர்க்கவாசிகளுக்காக காத்துக் கிடந்தன.


சொர்க்கவாசிக்கு திரை, மூப்பு, மலம், சிறுநீர், நித்திரை, மயக்கம், மறதி, வெறுப்பு, அலுப்பு, அச்சம், கவலை, பொறாமை மற்றும் நோய் கிடையாது.

சொர்க்கவாசிக்கு பசி கிடையாது. ஆனாலும் உண்ணலாம், பருகலாம். உண்டது பருகியது செரிமானமாகி நறுமணக் காற்றாய் வெளிப்படும்.

ஆண்களுக்கு இந்திரியம் வெளிப்படாது. ஆனால் புணர்ச்சி மனப்பிரியப்படி. புணரும் ஆண்கள் விரும்பினால் குழந்தைகள் உருவாகி உடனே பிறக்கும்.

சொர்க்கத்தின் மாடமாளிகையின் ஜன்னல் திறந்திருந்தால் அது பகல். மூடியிருந்தால் அது இரவு.

சமமான சீதோஷ்ண நிலை.

சொர்க்கத்தில் நாழிகைக்குறிப்பு, நாட்குறிப்பு, வாரக்குறிப்பு, மாதக் குறிப்பு மற்றும் வருடக்குறிப்பு உண்டு.

சொர்க்கவாசிகள் அனைவருக்கும் பொதுவான மொழி அரபு மொழி.

சொர்க்கவாசிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அழகிய முகமன் கூறிக் கொள்ளலாம்

குர்ஆன் சொர்க்கத்தில் தேவைப்படாது.

தொழுகை அவசியமில்லை.

சொர்க்கவாசிகள் அவரவர் தந்தை பெயருடன் இணைத்துக் கூப்பிடப்படுகிறார்.

சொர்க்கவாசிகள் இறைவனையும் நபிமார்களையும் விரும்பிய போது சந்திக்க முடியும்.

மலக்குகளுக்கு வழக்கமான இறைப்பணி. மலக்குகள் சொர்க்கவாசிகளுடன் பேச விரும்பினால் சொர்க்கவாசிகளின் அனுமதி பெற்றுப் பேசலாம்.

சொர்க்கவாசிகள் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு வாகனத்திலும் போகலாம், பறந்தும் போகலாம்.


சொர்க்கத்தில் ஏராளனமான நதிகள் உண்டு.

* நஹற் ரஹுமத்

* கௌதர் (ஆழம் 70000 காதம்)

* நஹருல் காபூர் (கற்பூர நதி)

* ரம்யான் * கஹ்ரு தஸ்னீம்

* ஸல்ஸபீல்.

தவிர, தேன் மது ஓடும் நதிகள் உண்டு.

தண்ணீர் கடல், தேன் கடல், பால் கடல் ஹவ்லு தடாகத்தில் சங்கமிக்கும்.

இதைத் தவிர ஆகாய நதிகளும் உண்டு.

சொர்க்கத்தில் மரங்கள் தலைகீழாக இருக்கும். பொன் வெள்ளி மரங்கள். கனி பறித்தால் புதுக்கனி உருவாகும். ஒவ்வொரு கனியிலும் ஆயிரம் கனிகளின் சுவைகள்.

மரங்களின் பெயர்களாவன-

சித்ரத்துல் முக்கஹா, ஸஜ்ரத்து குல்து

வஜரத்துத் தூபா எட்டு சொர்க்கங்களிலும் குடைவிரித்திருக்கும். அர்ஷின் கால் வரை பரவி இருக்கும்.

சித்ரத்துல் முன்தஹா - இலந்தை மரம்.


சொர்க்கத்தில் குதிரை, மாடு, ஆடு, மான், மரை மற்றும் முயல் உண்டு. சொர்க்கம் முழுமையும் இசையும் பாடல்களும் வியாபித்து நிற்கும். பறவைகள் பாடும். ஹுருல்ஈன்கள் பாடுவர். மலக்குகள் பாடுவர். நபி தாவூது பாடுவார். குர்ஆன் ஆயத்துகளும் ஸபூர் வேதமும் பாடு பொருள்.

சொர்க்கத்து ஹுருல்ஈன் பெண்கள் பாதம் முதல் முழங்கால் வரை குங்குமத்தாலும் மார்பு வரை கஸ்தூரியாலும் கழுத்து வரை அம்பராலும் உச்சிவரை கற்பூரத்தாலும் ஆனவர்கள்.

அவர்களிடம் முத்தின் வெண்மை, மரகதத்தின் பசுமை, மாணிக்கத்தின் சிவப்பு மற்றும் புஷ்பராகத்தின் மஞ்சள் குடியிருக்கும்.

அவர்களின் வாய் உமிழ்நீர் கடலில் விழுந்தால் கடல் நீர் முழுமையும் அமிர்தமாகும். ஹுருல்ஈன் பெண்களின் மார்பில் அவர்களது கணவன் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

சொர்க்கத்தின் ஒரு மாளிகையில் கணவர் ஷபியுல்லா மனைவி ஜெஸிரா மகள் பர்ஹான் நவாஸ் மருமகள் நைஸா கதீஜா பேரன்கள் அஸ்ரப் மற்றும் கரீமுல் ஹக் இருந்தனர்.

எல்லோருக்கும் வயது 33.

“அத்தா ஒரு சந்தேகம்!”

“என்ன?”

“சொக்கத்தில் நாம் எத்தனை வருடங்கள் இருப்போம்?”

“சொர்க்கம் ஒரு முடிவற்ற நிரந்தரம் மகனே!”

“மீண்டும் ஒரு பூமி உருவாக்கப்பட்டு மனிதர்கள் நன்மை தீமை செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் ஒரு மறுமை நாள் வைத்து அவர்களுக்கு சொர்க்கம், நரகம் பரிசளிக்கப்படுமா?”

“இல்லை!”

“நமக்கு முன்பின் சந்ததியினரில் சொர்க்கவாசிகளை நேரில் போய்ச் சந்தித்து வருவோமா?”

“வரும் திங்கட்கிழமை செல்வோம் மகனே!”

“இன்று வெள்ளிக்கிழமை சந்தைக்குச் செல்வோமா?”

“செல்வோம். சந்தை கோலாகலமாக இருக்கும். சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை. ஆடல் பாடல் கொண்டாட்டம் குதூகலம் அங்கு நிறைந்திருக்கும்!”

“அங்கு பொருள் வாங்கப் பணம் தேவையா?”

“பூமியில் நாம் செய்த நன்மைகளே பணம். நன்மைதான் சுவனத்து சந்தையில் பண்டமாற்று!”

ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தைக்கு பறந்தது.

90 அடி உயர ஆதம் நபி நின்றிருந்தார். ஈஸா, யூசுப், மூஸா, ஹாரூன் நபிகள் ஒருவரின் தோளில் ஒருவர் கைபோட்டபடி கோரஸாய் ஒரு பாடல் பாடினர்.


சந்தையின் பிரமாண்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கோடிக்கணக்கான சொர்க்கவாசிகள் வந்து போன வண்ணம் இருந்தனர்.

சொர்க்கவாசிகள் வாங்கி வந்த பொருளை எடுத்துச் செல்ல மலக்குகள் உதவினர். சில சொர்க்கவாசிகள் விரும்பிய முகத்தை வாங்கி அணிந்து கொண்டனர்.

மீனின் ஈரலை சுவைத்தபடி நின்றிருந்தான் ஷபியுல்லா.

சந்தையின் ஒரு கடைக்குள் ஷபியுல்லாவின் குடும்பம் பிரவேசித்தது.

“என்ன வேண்டும் உங்களுக்கு?” கடைக்காரர் கேட்டார்.

பேரன் அஸ்ரப் குறும்பு புன்னகை வெடித்தான்.

“100 கிராம் எலிப் புழுக்கை மிட்டாய்!”

அவ்வளவுதான் சொர்க்கத்தின் ஒட்டுமொத்தச் சந்தையும் அல்லோலகல்லோலப்பட்டது.

சொர்க்கவாசிகளும் நபிமார்களும் மலக்குமார்களும் கூடி விவாதித்தனர்.

கடைசியில் விஷயம் இறைவனுக்குப் போயிற்று. “அஸ்ரப் கேட்டது சிறுசிறு சீரக மிட்டாய்களை!”

சீரகமிட்டாய் அஸ்ரப்புக்கு வழங்கப்பட்டது.

நபிகள் நாயகம் ஒரு கொத்து சீரக மிட்டாய்களை வாய்க்குள் போட்டு மென்றார்.

“ஆஹா! எல்லாப்புகழும் இறைவனுக்கே!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p79.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License