இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

81. மகனின் பணம்

மனைவி கையளித்த ஓட்ஸ் கஞ்சியைக் குடித்தார் ரிபாத் லத்தீப். வயது 67. திராவிட நிறம். சால்ட் அண்ட் பெப்பர் தலைக்கேசம். இடுங்கிய கண்கள். பாலஸ்தீன மூக்கு. மீசை இல்லாத மேலுதடு. முகத்தில் ஒய் வடிவில் வியாபித்திருக்கும் தாடி. முழங்காலுக்கும் கீழே நீண்ட ஜிப்பா பைஜாமா. தலையில் நிரந்தரமாய் ஒரு துணித் தொப்பி.

ரிபாத் லத்தீப் அரசு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

ரிபாத் லத்தீப் -சாஹிபா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். மூத்தது மகள். கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் கனடாவில் இருக்கிறாள்.

இளையவன் மகன். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கிறான்.

கோவை உக்கடத்தில் இரு மனைகள் வாங்கி நான்கு வீடுகளாய் கட்டியிருந்தான் மகன் இர்பான் இஷாக். ஒரு வீட்டில் பெற்றோரை இருக்கச் சொல்லிவிட்டு, மீதி மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தான். வாடகையை வசூல் பண்ணி மகனின் போஸ்டல் வங்கிக் கணக்கில் மாதாமாதம் போடச் சொல்லி இருந்தான் மகன்.

ரிபாத் லத்தீப்-சாஹிபா தம்பதியினரிடம் ஒரு பைசா சேமிப்பு இல்லை. பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பித் திருமணம் செய்துவித்து பேரக்குழந்தைகளை வளர்க்கும் விதமாய் தனது அனைத்து சம்பாத்தியத்தையும் செலவு செய்தார் லத்தீப். கணவர் குழந்தைகளுக்குச் செலவு செய்வதை முழு மனதுடன் அனுமதித்தாள் சாஹிபா.

இப்போது பிள்ளைகளுக்கு இறக்கை முளைத்து விட்டன.

அவர்கள் கைநிறையச் சம்பாதிக்கிறார்கள்.

பிள்ளைகளுக்குக் கல்வியும் பதவியும் அதிகாரமும் கொடுத்தது வீண் போகவில்லை. மகள் 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவாள். மகன் வருடாவருடம் இந்தியா வருவான்.


ஒரு வாரம் பத்து நாள் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சல். அந்தக் கொஞ்சல். ரிபாத் லத்தீப்- சாஹிபா தம்பதியினரின் 40 வருட உழைப்பை மகிமைப்படுத்தும்.

“நீ ஓட்ஸ் குடிச்சியா சாஹிபா?”

“குடிச்சிட்டேன். ஓட்ஸ் இன்னும் இரண்டு நாளைக்கு தான் வரும்!”

தலையாட்டினார் ரிபாத் லத்தீப்.

“சாப்பாட்டு அரிசி தீரப் போகுதுங்க!”

“இம்!”

“வீட்ல சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறி எதுவும் இல்லை. கேஸ் கூட தீரப் போகுது பதியனும்!”

“இம்!”

“எல்லாத்தையும் விட முக்கியமா நம்ம பிபி மற்றும் சுகர் மாத்திரைகள் தீரப் போகுது. இன்னையோட நோ ஸ்டாக்!”

“கைல எவ்வளவு ரூபா வச்சிருக்க!”

தனது மணிபர்ஸைக் கொட்டினாள் சாஹிபா. ஒரு பத்து ரூபாய் நோட்டு. ஒரு ஐந்து ரூபாய் நாணயம். இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் ஹேர்பின், ஊக்குகள்.

“உன் கணக்கில எவ்வளவு பணமிருக்கு பாரு!”

கைபேசியைத் திறந்து சோதித்தாள். ரூபாய் 56 இருந்தது.

“என் கணக்கில் எவ்வளவு பணமிருக்கு பாரு!”

கணவரின் கைபேசியைத் திறந்து சோதித்தாள். ரூபாய்108 இருந்தது.


“சாஹிபா! சோறு தண்ணி இல்லாமக் கூட இருந்திரலாம். ஆனா மருந்து மாத்திரை இல்லாம நாம ஒருவேளை இருக்க முடியாது!”

“ஆமாங்க ஒருவேளை மாத்திரை ஸ்கிப் பண்ணினாலும் இதயம் படபடக்கும் கைகால்கள் வெலவெலக்கும் தலை தட்டாமாலை சுற்றும்!”

“என்ன பண்ணலாம்?”

பக்கத்து மாடி போர்ஷனின் வாடகைதாரர் வந்து அழைப்பு மணியை அமுக்கினார். கதவைத் திறந்து விட்டார் லத்தீப்.

அழகிய முகமன் பரிமாற்றம்.

பதினெட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி லத்தீப்பிடம் நீட்டினார் வாடகைதாரர். “இந்த மாச வாடகை பாய்!”

“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!”

“வரேன் பாய்!”

“வீட்ல வாடகைக்கு இருக்கிறதுல ஏதாவது ஆவலாதி இருக்கா?”

“இல்லை… புருஷன் பொண்டாட்டி நீங்க ரெண்டு பேரும்தான் மாறிமாறி வாடகை வீட்டுப் பிரச்சினைகளை ஹாண்டில் பண்றீங்களே… யூ ஆர் கிரேட்… அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்யட்டும்!’

“மகிழ்ச்சி!”

வாடகைதாரர் கிளம்பிப் போனார்.


மனைவி கையில் வாடகைப்பணத்தை கொடுத்தார் லத்தீப்.

“சாஹிபா! நம்ம இரண்டு மாத மருந்து மாத்திரைச் செலவுக்கு எவ்வளவு தேவை?”

“ஆறாயிரத்து அய்நூறு!”

“மீதி இரண்டாயிரத்து எரநூறு ரூபாய்க்கு அரிசி, பருப்பு, கேஸ் எல்லாம் வாங்கிடலாம்!”

பதைபதைத்தாள் சாஹிபா.

“என்ன காரியம் பண்றீங்க? இது மகன் வீட்டு வாடகைப் பணம், இதைச் செலவு பண்றது நம்ம சொந்த வீட்ல திருடுற மாதிரி!”

“திருடுறதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே சாஹிபா!”

“இதை நீங்க புதுசா செய்யல. கடந்த எட்டு மாதங்களாக மகன் வீட்டு வாடகைப் பணத்ல கை வைக்குறீங்க. அந்த வாடகைப் பணத்தையும் சேத்தா இதுவரைக்கும் நீங்க 58000 ரூபாய் கையாடல் பண்ணி இருக்கீங்க!”

“திருடுதல் கையாடல் என் வாழ்க்கையில் கிடையவே கிடையாது!”

“மகன் நம்பிக்கையா மூணு வீட்டு வாடகையை வசூலிக்கறப் பொறுப்பை நம்மகிட்ட ஒப்படைச்சிருக்கான். நாளைக்கே திடுதிடுப்னு இந்தியா வந்து இறங்கிக் கணக்கைப் பார்த்தான்னா நம்பள காரித் துப்பிருவான்!”

“வார்த்தைகளை அளந்து பேசு. எட்டு மாசத்திற்கு முன்னாடி வரைக்கும் பென்ஷன் வாங்கிட்டு இருந்தேன். நிதிநிலைச் சிக்கல் காரணமா பென்ஷன் தர்றதை முழுசும் நிப்பாட்டிட்டாங்க. நாங்க ஓய்வூதியர்கள் 631 பேர் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கோம்… பேச்சு வார்த்தை போய்க்கிட்டு இருக்கு. மீண்டும் பென்ஷன் வழங்குப்படும்னு உறுதியளிச்சிருக்காங்க. எட்டு மாத நிலுவை பென்ஷனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. பணம் வந்த மறுநொடி பணத்தை மகனின் போஸ்டல் கணக்கில் போட்ருவோம்!”

“உங்களுக்கு பென்ஷன் மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. உங்க சக ஓய்வூதியர்களே அவநம்பிக்கையா பேசுராங்க!”

“வீட்ல இருந்துக்கிட்டு யூகத்தகவல் பேசாதே!”


“இந்த ஒம்பதாயிரம் பணத்தை மகனின் போஸ்டல் கணக்கில் போட்டுட்டு வாங்க. மருந்து மாத்திரை இல்லாம நாம செத்தாலும் சரி… மூணு நேரம் சாப்பிடுறதை விட்டுட்டு ஒரு நேரம் சாப்பிடுவோம்… கேஸ் அடுப்பு வேணாம் விறகடுப்பு யூஸ் பண்ணுவோம். உங்க வண்டியை யூஸ் பண்றதை விட்டுட்டு எங்கயும் நடந்து போங்க… நீங்க ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போங்க. நான் ஏதாவது வீட்டு வேலைக்குப் போறேன்!”

“நீ சொன்னதெல்லாம் செய்யலாம். இப்ப மருந்துக்கு போனில் ஆர்டர் பண்ணு!”

“நான் ஆர்டர் பண்ண மாட்டேன். நீங்க பண்ணிக்கங்க”

டெலிவரி பாய் ஆர்டர் பண்ணிய மருந்தை கொண்டு வந்து கொடுத்துப் பணத்தை பெற்றான். அரிசி, எண்ணெய், மளிகை சாமான் வாங்கி வந்தார் ரிபாத் லத்தீப்.

வீட்டு வாசலில் ஒரு வாடகை டாக்ஸி வந்து நின்றது.

அதிலிருந்து மகன் மருமகள் பேரக்குழந்தைகள் வந்திறங்கினர். பேரக்குழந்தைகளை கட்டிக் கொண்டார் ரிபாத் லத்தீப்.

“என்னப்பா திடீர்னு இந்தியா விசிட்?”

“என்னுடன் பணிபுரிபவரின் தங்கைக்கு ஊட்டியில் திருமணம். அட்டன்ட் பண்ண வந்தோம்!” மதிய உணவுக்குப் பிறகு வீட்டு வாடகைக் கணக்கு வழக்கை பார்த்தான் இர்பான் இஷாக்.

அம்மா முந்திக் கொண்டாள். “நீ கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். உன் வீட்டு வாடகைப் பணத்தில் அம்பத்தி எட்டாயிரம் ரூபாயை அத்தா எடுத்திருக்கிறார்… எங்களுக்குப் பென்ஷன் வரலப்பா! அத்தா வாட்ச்மேன் வேலைக்கு போய் எடுத்த பணத்தை திருப்பித் தந்திடுவார்!”

இரு கைகளை கட்டிக்கொண்டு தலைகுனிந்து நிற்கும் தந்தையை வெறித்தான் இஷாக். “நீயும் உனது செல்வமும் உனது தந்தைக்கே உரியவை என்கிறது இப்னு மாஜா அஹ்மத். ‘மகனின் பணத்தை தந்தை தேவைக்கு எடுக்கலாம். தந்தை தன் வறுமையினை போக்க மகனின் பணத்தை எடுக்கலாம். தந்தை எடுக்கும் பணம் மகனின் குடும்பச் செலவுகளை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்’ - என்கிறது இஸ்லாம். நான் என்ன அவ்வளவு நன்றி கெட்டவனா? நீங்க எதுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போகனும்? வாடகைப் பணத்ல மாசம் பத்தாயிரம் எடுத்துக்கங்க. பென்ஷன் மீண்டும் உங்களுக்கு வந்தாலும் வராட்டியும் மாசம் பத்தாயிரம் எடுத்துக்கலாம். கூடுதல் தேவை இருந்தாலும் எடுத்துக்கங்க… உங்க காலடில தான் என் சொர்க்கம் இருக்கிறது!”

பாசமாய் நட்ட மரத்திலிருந்து பழம் பழுத்தது. லத்தீப்பும் சாஹிபாவும் பழங்களை பறித்துப் புசித்தனர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p81.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License