Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள்

நாங்குநேரி வாசஶ்ரீ


4.பிச்சையா ஓதுவார்

நேத்தைக்கு ஓதுவாரப்பத்தி சொல்லுதேம்னு சொன்னீயளே என மகராசியம்மாள் ஞாபகப்படுத்த சொல்லத் தொடங்கினாள் இசக்கி ஆச்சி.

இசக்கியம்மாள் முத்தத்தில வந்து உட்கார, அங்கு மகராசியம்மாள் வரவும் சரியா இருந்தது.

“என்ன மகராசி, இன்னைக்கு விரசா வந்துட்டியே, நான் இப்பத்தான் இங்கன வந்து உக்காந்தேன்’ என்று இசக்கியம்மாள் மகராசியிடம் சொன்னாள்.

“இன்னைக்கு காலையில வெறும் ரசத்தோட சமையல் முடிச்சாச்சு, அதான் வந்துட்டேன்”

“அப்படியா?” என்றபடி இசக்கியம்மள் தன் கதையைத் தொடங்கினாள்.

கிழக்குத் தெருவில இருக்கிற பிச்சையா ஐயா சிவன் கோவில்ல ஓதுவாரா இருந்தவரு.

தோடுடைய செவியன் ... ... ... ... ... அப்டினு அவர் தெனைக்கும் பாடிக்கிட்டேத் தான் போவாரு வருவாரு... அவர் நடந்து போகையில தெரு முக்கு ஊருணியில எரும மாடு குளிப்பாட்டிட்டு அது மேல ஏறி உக்காந்து ஓட்டிக்கிட்டு வருவானுகல்ல சேட்டக்கார பயலுக... அந்தப் பயலுவ கூட எறங்கி நின்னு மரியாதையாக் கும்பிடுவானுவ. மத்த யாரும் அந்தப் பயலுவ கிட்ட வம்பு வச்சிக்கிடமுடியாது. வச்சான் ஓஞ்சான் அவ்ளோதான். மாட்டோட வாலப் பைய முறுக்கி உட்ருவானுவ பெறகு மாடு தரிகெட்டு ஓடும்லா. உனக்குதான் தெரியுமே. மாடு தலதெரிக்க ஓடிச்சின்னா என்ன ஆவும்னு.

தெனைக்கும் அவரு அந்தப் பயலுவ கிட்ட சொல்லுவாரு. மாடுகள பின்பக்கத்தெரு வழியா ஓட்டிக்கிட்டுப் போங்கனு. இந்த வீதியில மாடுகள் போடுத சாணிய மிதிச்சிக்கிட்டுதான் சாமி பல்லாக்கு தூக்குதவங்க நடக்கவேண்டி கெடக்கு. அது போவ வாசல்ல போடுத கோலத்துமேல மோண்டு வச்சிட்டுப் போயிடுதுக. அதனால தான் சொல்லுதேன். பொறுமையா அவரு சொல்லிமுடிச்சவொடனேபயலுவ மேலயும் கீழயும் தலய ஆட்டிப்போட்டு மறுநாளும் அதையே செய்வானுவ. அவருக்குக் கோவம் வந்து நான் பாத்ததே கெடையாது. ஊர் முழுக்க நல்ல பேரு. அவரு வீடு கோவிலுக்கு பின்பக்கம் இருந்திச்சு...


அவரோட நல்ல கொணத்த மதிச்சி சில சமயம் பஞ்சாயத்து பண்ணுததுக்கும் கூப்பிடுவாக. எப்பமும் நாயமாத்தான் பேசுவாரு.

இசக்கியம்மாள் சொல்லச் சொல்ல மகராசியம்மாள் மனக்கண்முன் அந்தக் காட்சிகள் விரியத் தொடங்கின.

மீசய முறுக்கிட்டு நிக்குத ஒருத்தரு ஆரம்பிக்காரு.

இப்ப நாம பிச்சையா ஐயாவ நம்பி வந்துருக்கோம். ரெண்டு பக்கத்து நாயத்தக் கேட்ட பொறவு அவரு என்ன முடிவு சொன்னாலும் நாம ஏத்துக்கிடணும். எல்லாருக்கும் சம்மதம்னா ஆரம்பிக்கலாம்.

அனைவரும் சம்மதம் எனத் தலையாட்டுகின்றனர்.

நம்ம சண்முகம் மவ நல்லகண்ணுவும் அய்யாசாமி மவ தங்கமணியும் கோவிலுக்கு போயிருக்காவ. போன எடத்துல நல்லகண்ணுவோட சங்கிலிய அத்துட்டு ஓடிட்டான் இந்த மூக்கண்ணன். பொறத்தால அவன் நின்னதால இன்னாருனு அவளுக்குத் தெரியல. ஆனா தங்கமணி பாத்துட்டா. இப்பம் அவ சொன்னத வச்சி மூக்கண்ணனப் பிடிச்சி இங்க கூட்டியாந்திருக்கோம்.


இப்ப என்னடான்னா மூக்கண்ணனோட ஆத்தா அவன் வெவரங்கெட்டவன். சூதுவாது தெரியாது. அப்டியெல்லாம் செஞ்சிருக்கமாட்டான்னு அழுதா. மூணு பேரும் நம்ம ஊருதான். அதனால விசயத்த பதனமா தான் கேட்டுச்செய்யணும். இப்பம் ஐயா நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம்னு.

சிறிது நேரத்தில் அனைவரும் நடந்து சிவன் கோவில் வாசலை அடைகின்றனர்.

இந்த வாசப்படியில நான் மூணுமட்டம் கற்பூரத்தக் கொளுத்திப் போடுதேன். ஒவ்வொருத்தரா கற்பூரத்த அணச்சி சத்தியம் செய்யணும். நான் சொல்லுததெல்லாம் உண்மதான்னு. அப்டி யாரும் பொய்ச்சத்தியம் செஞ்சீங்கன்னா சிவன் உங்க சொத்து பூரா அழிச்சி பண்டாரமா தெருல அலைய உட்ருவாரு பாத்துக்கிடுங்க. மூணு புள்ளைங்களும் ஒருமட்டம் அவுகவுக அப்பன் ஆத்தாள் கிட்ட பேசிட்டு பெறகு சத்தியம் பண்ண வாங்க. இது பிச்சையா ஐயா.

மொத ரெண்டு பிள்ளைகளும் சத்தியம் செய்யுதுங்க. மூக்கண்ணன் மட்டும் நட்டமா நிக்கான். அவன் ஆத்தா அழுதுகிட்டே கீழ விழுந்து ஒத்துக்கிடுதா. எம்மவன் தெரியாம செஞ்சிட்டான். மன்னிச்சிக்கிடுங்க. நான் சங்கிலியக் கொண்டுவந்து குடுத்துடுதேன்னு.

இவ்ளோ நல்ல மனுசரான இவருக்கு என்ன கதி வந்திச்சி தெரியுமா? இசக்கியம்மாள் சொல்ல, அதத்தான் சொல்லுங்களேன் என்றாள் மகராசியம்மாள்.

இவரோட ஒத்த புள்ள படிப்பு சரியா வராம டவுண் கம்பெனியில போய் வேலைக்குச் சேர்ந்தான். அது அடமானத்துக்குப் பணம் கொடுக்குற கம்பெனி போல. அங்க நெளிவு சுளிவு கத்துக்கிட்டு வந்து இந்த ஊருல அவன் அப்பாக்கு இருக்க நல்ல பேர ஒபயோகிச்சி அடமானம் வச்சிக்குடுக்கேன்னு நாலுபேருகிட்டேந்து இருநூறு களஞ்சி நகைய வாங்கிட்டு டவுணுக்குப் போனவன் திரும்பவே இல்ல. வந்தவுகளுக்குப் பதில் சொல்ல முடியாம மானப்பட்டு ஐயாவும் அவரு பொஞ்சாதியும் மருந்து குடிச்சி செத்தே போயிட்டாங்க.

திருடிட்டுப் போனவன் எங்க போயி என்ன செஞ்சானோ தெரியல இப்பம் நாப்பது வருசத்துக்குப் பொறவு கெழவனா வந்து இந்த ஊருலதான் இருக்கான். அவ்ளோ நல்லவரு தம்மவன ஏன் சரியா வளக்கலனு நீ யோசிக்கலாம். அது அவரு சம்சாரத்தோட தப்பு. பிள்ளைங்க நாம என்னசொல்லிக் கொடுக்கோமோ அதப் படிச்சிக்கிடும். அந்தப் பய சின்னவனா இருக்கையில இங்ஙனதான் கோலிக்கா வெளையாடுவான். அப்பம் யாரும் உட்டுட்டுப் போன கோலிக்கா அவனுக்குக் கெடச்சிச்சின்னா அத எடுத்து வச்சிக்கிட்டு தன்னோடுதுனு சொல்லிடுவான். மொதத் தடவ அவன் அப்டி அதிகமா கொண்டு வரையில அவன் ஆத்தா பாத்து நான் வேங்கிக் குடுக்காதப்போ இது எப்டி வந்திச்சின்னு கேட்டிருந்தான்னா அந்தப் பழக்கம் கெட்டதுனு புரிஞ்சிருக்கும். இப்டி சின்ன வயசில சின்னச்சின்னதா ஆரம்பிச்சதுதான் தனக்குத் தேவையான பொருள் அடுத்தவங்கிட்ட இருந்திச்சின்னா அத எடுத்துவச்சிக்கிடுதது தப்பில்லன்னு தோணிப்போச்சு.

ஊர்முழுக்க பேசிக்கிட்டுத் திரிஞ்ச ஐயாவும் தம் பிள்ளைகிட்ட உக்காந்து பேசி வெளையாடல. அதனால வந்த வினைதான் இது.


இப்பம் புரிஞ்சிதா. நான் தலவிதினு சொன்னதப்பத்தி. இப்பம் அவன் என்ன வேல செய்யுதான் தெரியுமா. அவன் அப்பா ஓதுவாரா இருந்த அதே கோயில கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துத வேலதான். கண்ணு போன பொறவு சூரிய நமஸ்காரம் செய்யுததுனு சொல்லுவாக இல்ல, அதுகணக்கா இப்பம் ஆடி அடங்குத வயசுல அவனுக்குப் புத்தி தெளிஞ்சிட்டுது. நல்லவனா வாழ மொனையுதான்.

சரி ஆச்சி. வானம் இருண்டுகிட்டு வருது. காஞ்ச துணியெடுத்து உள்ளார போடணும். நான் வாரேன் என்றபடி அங்கிருந்து எழுந்து சென்றாள் மகராசியம்மாள்.

(இசக்கி ஆச்சியின் கதைகள் இன்னும் இருக்குது...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/esakki/p4.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License