இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள்

நாங்குநேரி வாசஶ்ரீ


5.தனிப்பிறவி

“ஏன் இசக்கி ஆச்சி என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி ஒரு கெழவி ஒத்தேல பொங்கித் தின்னுக்கிட்டு கெடக்குல்ல. எப்பமும் பொலம்பிக்கிட்டே கெடக்கும். ஒட்டு ஒறவு ஏதும் இல்லயோ...” மகராசியம்மாள் இசக்கியம்மாளிடம் கேட்டார்.

“மகராசி ஒண்ணு தெரிஞ்சுக்கிடு. ஒலகத்தையே உருட்டி கையில குடுத்தாலும் புத்திகெட்ட சுயநலங்களுக்கு அது பெரிய விசயமாத் தெரியாது. பொலம்பிக்கிட்டுத்தான் திரியுவாக. இது அவுக விதி. அவ கதையக் கேட்டாதான் நான் என்ன சொல்லுதேம்னு புரியும். அந்தக் கெழவிக்கு இப்பம் வயசுதொண்ணூத்திரெண்டு இருக்கும். என் கட்டாம்பட்டி பெரியாத்தாளோட ஒட்ட. அவுக பேரு வெங்காத்தா. என் ஆத்தா அவளப்பத்தி கதையாச் சொல்லும். வெங்காத்தா கலியாணம் முடிச்சு நல்லாத்தான் குடித்தனம் நடத்திச்சாம். பொறந்தவீட்டுப் பெருமையயேப் பாடிக்கிட்டுத் திரியுமாம். என் வீட்ல நான் அப்டி இருந்தேன், இப்டி இருந்தேன். இங்ஙன கொண்டு கட்டி வச்சிட்டாகளேன்னு அளப்பற பண்ணிக்கிட்டே இருக்கும்போல. அவ மாமியா நல்லவ. பெரிசா எடுத்துக்கிடல. ஒரே தெருவுல தனிக்குடித்தனம் வச்சி நல்லாப் பாத்துக்கிட்டா. இது அவ புருசன மாமியா வீட்டுக்கும் அவுக சொந்தபந்தம் வீட்டுக்கும் போவக்கூடாதுனு மிரட்டிக்கிட்டேத் திரியுமாம். நாலுவருசம் கழிச்சு அவளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்துச்சு. அதுக்குப்பொறவு எம்ப்பிள்ளைய உட்டா ஒலகத்துல இல்லனு ஆட்டிக்கிட்டு இருந்திருப்பா போல. அவ பிள்ளையும் பெரிசாகி கல்யாணம் முடிச்ச பொறவு திரும்ப வினை தொடங்கிருச்சு. கொஞ்சநாள்ல வெங்காத்தாவோட புருசன் இறந்துட்டாரு. பொறவு வேற கதியில்லாம மகன்கூட இருக்க வேண்டி வந்திச்சு.அப்பறம் என்ன நடந்திச்சு தெரியுமா...” என்று இசக்கியம்மாள் இழுக்க...

அவையெல்லாம் மகராசியின் மனக்கண்முன் விரியத் தொடங்கியது...

“ஏல நாம் பெத்த மவனே. எனக்கு உடுக்க சீலயே இல்ல. டவுண் கடைக்கு கூட்டிப்போயி எடுத்துக்குடு. என்னய மட்டும் கூட்டிக்கிட்டு போ. நீ கட்டிக்கிட்ட ராங்கி பிடிச்சவள கூட்டியாராத. உம் பொஞ்சாதிக்கு எங்கிட்ட மருவாதியே இல்ல. தெனைக்கும் நாய்க்கு சோறு வைக்கது கணக்கா வைக்கா. வீட்டுக்குள்ளார பொருந்தவே மாட்டேக்கு. அடுப்பு சோலி முடிஞ்சபொறவு அந்தாக்ல போட்டுட்டு பாடு பேசப் போயிடுதா. நம்ம வீட்டு விசயத்த நாலு வீட்டுக்குச் சொல்லலாமா. தப்பு இல்லயா. பொம்பளன்னா இப்டித்தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்குல்லா. அவ ஆத்தா அப்பன், அவள நல்லா வளக்கல. ஒனக்கு ஒரு புள்ள பொறந்துச்சுன்னா உன்னய வளத்தா மாரி என் ஆயுசுக்குள்ள வளத்து உட்டுருதேன்”

மொதல்ல அவ மவன் ஆஹா! என் ஆத்தாளுக்கு எம்மேல எம்புட்டுக் கரிசனம்னு சந்தோசப்பட்டான்.


பொண்டாட்டி சொல்பேச்சு எதுவும் காதுல ஏறல. அவன் பொண்டாட்டி படிச்சவ. அதிகம் பேசமாட்டா. நாகரிகமா நடந்துக்கிடுவா. சொல்லிச் சொல்லிப் பாத்த அவ இது சரிப்பட்டு வாராதுன்னு பள்ளியூடத்துல டீச்சர் வேலைக்கு சேந்துட்டா. வேலைக்குப் போவ முன்னயும், போய் வந்த பொறவும் அவளேதான் வீட்டுச்சோலி பாக்கணும். வெங்காத்தா ஒரு சோலி பாக்கமாட்டா. மவன கைக்குள்ளார வச்சிக்கிடுதுக்காக எட்டுவியாதி சொல்லிக்கிட்டுத் திரியுவா. பொறவு அவுனுக்கு ஒரு மவன் பொறந்தான். அந்தப் பச்சப் பிள்ளயப் பாத்துக்கிடுததுக்கு வெங்காத்தா படுத்தின பாடு ஊர் முழுக்க பரவிப்போச்சு. பிள்ள அழுத நேரம் பாலக்காச்சி குடுக்க மாட்டா. யாரும் பள்ளியூடத்துக்குப் போயி தகவல் சொல்லி அவ மருமவ வந்து காச்சிக்குடுத்தா உண்டு. சாயங்காலம் மவன் கேட்டாம்னா எனக்கு மேல்வலி, கால்வலி, தலயச் சுத்துதுனு அவன ஆஸ்பத்திரிக்கு அலைக்கழிப்பா. ஒண்ணுமில்லன்னா நல்லா இருக்க பல்லுல வலினு சொல்லி பல் டாக்டர்கிட்ட கூட்டிப்போவச் சொல்லுவா. ஒரு கட்டத்துல இப்பம் என்னய என்ன செய்யச் சொல்லுதன்னு மவன் கேட்டப்போ குடியக் கெடுத்தவள உட்டுப்போட்டு பெத்த ஆத்தாகூட வந்துடு. ஆத்தா நான் இன்னிக்கு செத்துட்டேம்னா ஒனக்கு ஏன்னு கேக்க நாதி கெடையாது தெரிஞ்சுக்கோ. என்பாள். பத்து வருசமா மருமவளப்பத்தி எதுவுமே தெரிஞ்சுக்கிடாமயே ஆத்தா இப்டி திட்டிக்கிட்டே கெடக்கேன்னு அவன் வருத்தப்பட ஆரம்பிச்சான்.


அதோட நிக்காம வருசம் ஆவ ஆவ பிள்ளையோட பிஸ்கட் எடுத்து ஒளிச்சுவச்சு சாப்பிடவுடாம செய்யுதது, மருமவ சாப்பிட ஒக்காந்த நேரம்பாத்து எனக்கு ஒருவாய்ச் சோறு உள்ள போமாட்டேக்கு அவ எப்டித்தான் ஒருதட்டு சோத்த திங்காளோன்னு ஏசுதது அதிகமாகிக்கிட்டே போச்சு. இதையெல்லாம் பாத்து சலிச்சுப் போயி அவ பிள்ள அவள தனி வீட்டுல பக்கத்துலயே குடித்தனம் வச்சிட்டான். தெனைக்கும் அவுக வீட்லேந்து மூணு வேளச் சாப்பாடு போவும். அவ பேசுததக் காதுலயே போட்டுக்கிடமாட்டான். அவளுக்கு வேண்டியதச்செய்வான்.

இப்பமும் அது நடந்துக்கிட்டுதான் இருக்கு. அவன் அடுத்ததெருவுல இருக்கான். அவனுக்கு ரெண்டு புள்ளேளுவ. யார் மேலயும் கெழவிக்குப் பாசம் கெடையாது. எப்பமும் கரிச்சுக்கொட்டிக்கிட்டேக் கெடக்கும். மருமவ வந்து இருபது வருசம் ஆனாலும் அவள நேத்தைக்கு வந்தவன்னு தான் சொல்லும். ஒருவகையில இந்த மாரி பிறவிங்க யார்கிட்டயும் ஒட்டாம தனியா இருக்கதான் விரும்புவாக. சமூகத்துக்காக கலியாணம் முடிச்ச இவுகளுக்கு புருசன், பிள்ளேளுவனு உறவுக வந்தாலும் யார் கூடயும் ஒட்டமுடியாது. இந்த மாரி குடும்பத்துக்காக தன்னய அர்ப்பணிச்சிக்கிடுத குணம் இல்லாதவங்க கலியாணம் செஞ்சிக்கிடாம படிச்சு பெரிய பதவியில வந்தாங்கன்னா அது அவங்களுக்குப் பொருத்தமா இருக்கும் போல. இல்ல ஒண்ணு மவனப் பைத்தியமா ஆக்கிவுட்டுருவாக, அல்லது மருமவ விட்டாபோதும்னு அவ வீட்டுக்குப் போயிடுவா.


ஆமா ஆச்சி. எப்பமும் அவ மருமவளக் கொறசொல்லி பொலம்பிக்கிட்டே கெடப்பா. நான் கூட பரிதாபப்பட்டேன். இப்பந்தானே உண்ம தெரியுது. உங்ககூட பேசுததுல நெறைய பேரோட உண்மை நிறம் தெரிய வருது. தெனைக்கும் இந்தமாரி இங்ஙனகூடி இருக்கவுகளப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதச் சொல்லுங்க. அப்பந்தான் என்னய மாரி வெளியூர்க்காரவுகளுக்கு எருக்கம்பாலுக்கும் மாட்டுப்பாலுக்கும் வித்தியாசம் புரியும் இசக்கி ஆச்சியை உற்சாகப்படுத்தினாள் மகராசியம்மாள்.

(இசக்கி ஆச்சியின் கதைகள் இன்னும் இருக்குது...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/esakki/p5.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License