இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள்

நாங்குநேரி வாசஶ்ரீ


7.முள்ளு மூக்குத்தி

“ஏன் ஆச்சி நம்மூர் ஆசுபத்திரியில கொரோனானு ஒரு வியாதி இருக்குன்னு சந்தேகப்பட்டு ராசாத்தினு ஒருத்தங்கள சேத்துருக்காங்களாமே. உங்களுக்குத் தெரியுமா? அதனால நெறைய சட்டம் போடப்போவுதாங்களாம். இனிமே நம்ம திண்ணையில கூடி நின்னு பாடு பேசக்கூடாதாம். பிள்ளேளுவ அக்கம்பக்கத்தாரோட வெளையாடக் கூடாதாம். கைய நல்லா சோப்பு போட்டு கழுவணுமாம்...” மகராசியம்மாள் பேசத்தொடங்க தெருவில் போய்க்கொண்டிருந்த வெள்ளைச்சீல ஆச்சியும் சேர்ந்து கொண்டாள்.

ஆமா நானும் கேட்டேன். இனிமே நம்ம சனம் முழுக்க பாடையில வச்சு கட்டுதப்போ தாவாக்கட்டைய இழுத்துவச்சி துணி கட்டுவாங்கல்லா, அது கணக்கா கட்டிக்கிட்டுத் திரியும் போல...

வாச முன்ன நின்னுக்கிட்டு எதுக்கு வேண்டாத பேச்சு பேசுதீக. மூக்கு வாய துணியவச்சி பொத்தி கட்டிக்கிடணும். அவ்வளவுதான் இது மகராசி.

எனக்கு என்னாத்துக்கு வெட்டிப் பேச்சு ஆத்தா. நான் அந்தாக்ல போயி நம்ம சாமியாடி ஈஸ்வரிகிட்டேந்து திருநீறு வேங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேம். நீயும் பூசிக்கிடு. அது என்னம்போ நம்ம பூக்காரத் தெரு மாடசாமி மவன் பேசிக்கிட்டிருந்ததக் கேட்டேன். ஏதோ சீனானு தொல தேசத்துல ஒரு ஊரு இருக்காம்ல அங்க இருக்க சாமி கோவிச்சுக்கிட்டுது போல. நான்தான் இந்த ஒலகத்துலயே பெரிய சாமி. என்னயத்தான் எல்லாரும் கும்புடணும் அதத் தெரிஞ்சிக்கிடாம வேற வேற சாமியக் கும்பிட்டதால தீட்டுக் கிருமிய பரப்பி உட்டு சாபம் போடுதேம். எந்தச் சாமி உங்களக் காப்பாத்துதுனு பாக்கேம்னுச்சாம். அது போட்ட சாபந்தான் இப்டி கொள்ள நோயா வந்து நிக்குனு தலைவருங்கல்லாம் பேசிக்கிடுதாங்களாம்.. திருநீறு குடுத்துட்டு ஈஸ்வரி ஆத்தா கூட சொல்லிச்சு. நம்ம வாகையடி இசக்கியம்மன் அவ கனவுல வந்து சொன்ன விசயத்த.

இந்த ஒலகத்து சாமிங்க நாங்களெல்லாம் கூடிப் பேசினோம். அதுல எடுத்த முடிவுப்படி கதவடைச்சு அவுகவுக கோயிலுக்குள்ளார உக்காந்துக்கிட்டோம். பாக்கதுக்கு யாரும் வரவேண்டாம். வீட்டுக்குள்ளாரயே ஒரு மண்டலம் மஞ்சத் தண்ணி ஊத்திக்குளிச்சு சுத்தபத்தமா இருந்துக்கிடுங்க. வாச தாண்டி போனாவே தீட்டு ஒட்டிக்கிடும். வீட்டுக்கு வந்தபொறவு ஒண்ணுத்தயும் தொடாம துணி நனச்சி குளிக்கணும். அப்டிசெஞ்சீகன்னா அந்த சீனா பாம்பு அம்மன் கோவம் தணிஞ்சி பரப்பி உட்ட கிருமித்தீட்ட உறிஞ்சிக்கிடும். அதுக்குப்பொறவு நாங்க அவளக் கட்டிப்போட்டு ஒண்ணுஞ்செய்ய உடாம பண்ணிப்போடுவோம். சரியான பொறவு எல்லாரும் கூடி என் கோயில்முன்ன கொடை குடுங்கனு சொல்லிச்சாம். சரி ஆத்தா நான் வாரேம். நீங்களும் பதனமா சாமி சொன்னமேனிக்கு நடந்துக்கிடுங்க.

அவள் சென்றவுடன் இசக்கி ஆச்சி ஆரம்பித்தாள். என்ன மகராசி ஆச்சரியமா இருக்கா. இந்த ஊர்ல இப்டித்தான் எல்லாத்துக்கும் அவுகவுகளுக்குப் புடிச்ச சாமிய காரணம் காட்டி உட்ருவாங்க. இப்பம் கொஞ்சம் முன்ன குளத்து முக்கு அனுமார் கோவில் பூசாரி சொல்லிட்டுப் போனாரு. ஆச்சி அனுமார் கோவிச்சுண்டுட்டார். அதான் முகக்கவசம் போட்டு எல்லாரும் பாக்கறதுக்கு தன்னய மாதிரியே இருக்கணும்னு நெனச்சி இந்த வியாதிய பரப்பி உட்ருக்கார். அவர நெனச்சி எல்லாரும் வியாழக்கிழமைதோறும் பாராயணம் பண்ணினேள்னா வியாதி உலகத்த விட்டே போயி ஷேமமா இருப்பேள்னு. சரி அத விடு. ஆஸ்பத்திரியில கெடக்கது முள்ளு மூக்கியா, நெல்லு நொறுக்கியா.

என்ன ஆச்சி உங்க ஊர் பட்டப்பெயர் வித்தியாசமாவில்ல இருக்கு. ஏதோ முள்ளு மூக்குனுதான் சொன்னாங்க. ஏன் ஆச்சி அவங்க மூக்கு கூர்மையா இருக்குமோ.


அட அது இல்ல மகராசியென இசக்கி ஆச்சி கதை சொல்ல மகராசியின் முன் கதை விரியத் தொடங்கியது...

ராசாத்தி சின்னப்புள்ளயா இருக்கையில பள்ளிக்கூடத்துல நடந்த கதை. ஜெயானு ஒரு டீச்சரம்மா வேலைக்கு சேந்த புதுசு. அது பக்கத்து டவுண்லேந்து வேலைக்கு வந்து போய்க்கிட்டிருந்துச்சு. இந்த ஊர்ல பெரும்பாலும் பிள்ளைங்களுக்கு சாமி பேரு தானே வைப்பாங்க. அதால அந்தம்மாளுக்கு கூப்பிடதுதுல சங்கடம் இருந்துச்சு போல. அவுங்க பேரோட சேத்து இனிசியலையும் சொல்லி கூப்பிடுவாகளாம். எம் லெச்சுமி இங்க வா. எல் லெச்சுமி அங்க போன்னு. அப்பம் இந்த ரெண்டு ராசாத்தியும் ஒரே வகுப்புல படிச்சிக்கிட்டு இருந்தாக போல. ஒருத்தியோட அப்பா பேர் பொன்னையா. இன்னொருத்தி அப்பா பேர் பெரியசாமி. அதனால ஜெயா டீச்சர் எப்பம் பி ராசாத்தினு கூப்பிட்டாலும் மாத்தி மாத்தி வந்து நிப்பாளுக போல. மத்த பிள்ளேளும் பி பி னு கேலி பண்ணி சிரிக்காங்கனு சொல்லி ரெண்டும் ஒப்பாரி வச்சிருக்கு. உடுவாளுங்களா ஆத்தாக்காரிங்க. பள்ளியூடத்துக்குப் போயி கொற சொல்லியிருக்காங்க. அந்த டீச்சரம்மா பயந்து போயி வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கிட்டுப் போயிடுச்சு.


அந்தா கெடக்குல்ல அடிபம்பு மேடை. அங்ஙன தான் முன்ன சனமெல்லாம் மாடுகட்டி போர் அடிக்கும். அறுத்துப் பரப்பின நெல்கட்டுமேல மாடுகளநடக்க உடுவாக. அதுல முக்காவாசி நெல்மணி உதுந்து போவும்.மிச்சம் மீதி இருக்கத கொத்து கொத்தா எடுத்து கையால துணி துவைக்கது கணக்கா அடிச்சுப் பிரிப்பாக. பின்ன பிரிஞ்ச நெல்லு மணிய முறத்துல அள்ளி நின்னுக்கிட்டே காத்து வீசுததிசையில அசைச்சு அசைச்சு தூத்துவாங்க. அப்பந்தான் பதர் பிரிஞ்சி தள்ளிப் போய் விழுகும். இதையெல்லாம் நீ எங்க பாத்திருக்கப் போற. உனக்கு தான் வயக்காடு வாசனையே இல்லையே. இருந்தாலும் வெள்ளாம பாக்கவமெல்லாம் பெரும்பாலும் எந்திரத்த வச்சி சுளுவாசெய்ய ஆரம்பிச்சுட்டான்...

கதையப் பாதியில உட்டுப்போட்டு வேற என்னம்போ சொல்லுதீயளே. ராசாத்தி பத்தி சொல்லுங்க உசுப்பேத்தினாள் மகராசி.


அட. நான் கதையத்தான் சொல்லுதேன். போர் அடிக்க எடத்துல எப்பமும் ரெண்டு ராசாத்தியும் நிப்பாளுங்க. ஒருத்திக்குத்தான் எப்பமும் நொறுக்கதுக்கு நெல்லு வேணுமே. அப்டி ஒருநாள் நிக்கையில ஒருத்தி சொல்லியிருக்கா என் ஆத்தா எப்பமும் மூக்கு குத்திக்கோன்னு கரச்சல் குடுத்துக்கிட்டேயிருக்கா. ரொம்ப வலிக்குமோன்னு ரோசனையா இருக்கு. நம்ம தங்கஆசாரிகிட்ட கேட்டப்போ அவரு சிரிச்சிக்கிட்டே சொல்லுதாரு ஒண்ணும் பிரச்சினையில்ல, நான் மூக்கு குத்தி உட்ட பொறவு வேப்பங்குச்சிய சொருகி உடுவேம். எண்ண தடவி புண்ணு சரியான பெறகு ஊமுள் வாரியக்கட்ட குச்சிய மூக்கு ஓட்டைக்குள்ளார தெனைக்கும் உட்டு எடுக்கணும். அப்பந்தான் தண்டு பெரிசா இருக்க மூக்குத்தியப் போடமுடியும்னு. அப்பம் முக்குவீட்டுல நல்லகண்ணுனு ஒருத்தியிருந்தா அவ சொல்லியிருக்கா. அடக் கிருக்கி. ஓட்ட போடுததுக்கு எதுக்கு ஆசாரிகிட்ட போவணும். இந்தா நிக்குல்ல மரம் இதிலேந்து ஒடமுள்ள பிச்சி குத்திக்கிடவேண்டியதுதானேன்னு. அவ பேச்சுக்குச் சொல்லப்போக, இந்தப்புள்ள நெசமாவே முள்ள பிச்சிக்கிட்டுப் போயி தெப்பக்கொளத்துத் தண்ணியில மொகத்தப்பாத்து மூக்கு குத்திக்கிட்டு வந்திருச்சு. பொறவு அங்கிருந்த சனமெல்லாம் அவளப் புடிச்சு எருக்க எலய ஒடிச்சு அதோட பாலத் தடவி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்காக. மறுநாள் அவ வகுப்புப் பிள்ளைங்கள்ல ஒருத்தி நம்ம ராசாத்தி ஒட முள்ள வச்சி தனக்குத்தானே மூக்குகுத்திக்கிட்டானு பெருமையா சொல்ல அவளுக்கு முள்ளு மூக்குத்தினு பெயரே வச்சிட்டாங்க. இன்னொருத்தி எப்பம்பாத்தாலும் நொறுக்குத்தீனிக்குப் பதிலா நெல்ல வாயில போட்டு அரைச்சுக்கிட்டே கெடக்கதால அவளுக்கு நெல்லு நொறுக்கினு பெயர் வந்துபோச்சு. ரெண்டுபேரும் கலியாணம் முடிஞ்சு இதே ஊர்லதான் இருக்காளுக. இப்பம் புரியுதா அந்த முள்ளு மூக்குத்தி ராசாத்தியதான் சுருக்கி முள்ளு மூக்கினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அவளுக்கு ஒண்ணும் ஆவாது. தைரியசாலி. வயிரம் பாஞ்ச ஒடம்பு.

சரி ஆத்தா. பேசிக்கிட்டேயிருந்தா சோலி ஒண்ணும் ஆவாது. நாளையிலேந்து நாமளும் நடவாசல்ல உக்காந்து பேச வேணாம். எங்க வீட்டுக் கொட்டில்ல உக்காந்து பேசலாம். சரி போய் நல்லா சோப்புபோட்டு கையக்கழுவு. சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் இசக்கி ஆச்சி.

(இசக்கி ஆச்சியின் கதைகள் இன்னும் இருக்குது...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/esakki/p7.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License