இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

45.நாடோடி ராசா


ஒவ்வொருத்தரும் கெடைக்கிற வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கணும். அப்படிப் பயன்படுத்திக்கிறவங்க வாழ்க்கையில முன்னுக்கு வந்தர்றாங்க. அதுலயும் புத்திசாலி எந்தச் சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்கிறான். அவன் எதையும் வீணடிக்கிறது இல்ல. இதப்பத்தின ஒரு கத இந்த வட்டாரத்துல வழங்கி வருது.

ஒருத்தன் நாடோடியாத் திரிஞ்சிக்கிட்டு இருந்தான். ஒரு இடத்துல இருக்க மாட்டான். ஒவ்வொரு ஊராப் போயிக்கிட்டே இருப்பான். இப்படி இருக்கறதால அவன ஊருல உள்ளவங்க எல்லாரும் நாடோடின்னு அழைச்சாங்க.

இந்த நாடோடி விவரமானவன். எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்குவான். இப்படித்தான் ஒரு நாளு அவன் கால் போன போக்குல போய்க்கிட்டே இருந்தான். தன்னோட ஊரவிட்டுட்டு பல நாளு நடந்தே பல ஊருகளுக்குப் போயிட்டு ஒரு ஊருல வந்து தங்குனான்.

அந்த ஊருல அவனுக்கு யாரையும் தெரியாது. அவன் போன நேரம் ரொம்ப இருட்டிப் போச்சு. என்னடா செய்யிறதுன்னு பாத்தான். இருட்டுக்குள்ள போனா யாரையும் பாத்துப் பேச முடியாது காலையில விடிஞ்ச பெறகு போவோம்னு நெனச்சிக்கிட்டு ஊருக்கு வெளியில ரோட்டோரமா இருந்த ஆலமரத்து அடியில துண்ட விரிச்சிப் போட்டுப் படுத்துட்டான்.

நடந்து வந்த களைப்பும் பசியும் அவன வாட்டியதால அவன் நல்லா அசந்து தூங்கிட்டான். விடிகாலையில அவனச் சுத்தி ஒரே கூட்டமா இருந்துச்சு. அந்தக் கூட்டத்தோட சத்தத் கேட்டுட்டு கண்ண முழிச்சிப் பாத்தான். எதுக்காக நம்மள இவங்கள்ளாம் சுத்தி நிக்கிறாங்க அப்படீன்னு அவனுக்கே புரியாம இருந்துச்சு. தூக்கத்துல இருந்து எந்திருச்சி ஒக்காந்துக்கிட்டு அங்க உள்ளவங்களப் பாத்துக்கிட்டு இருந்தான்.

அப்ப அந்தக் கூட்டத்துல இருந்த ஒரு பெரியவரு, ‘‘தம்பி நீங்கதான் இந்த நாட்டுக்கு ராசா. இந்த நாட்டுக்கு ராசா இல்ல. அப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சோம். இந்த நாட்டுல உள்ளவங்கள்ள முக்கியமானவங்க எல்லாரும் சேந்து அதிகாலையில இந்த ஆலமரத்துக்கு வந்து பாப்போம் அப்பதைக்கு எங்க கண்ணுல யாரு மொத மொதல்ல தென்படுறாங்களோ அவங்கள இந்த நாட்டுக்கு ராசாவா ஆக்கிடுவோம். அதுமட்டுமில்ல. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த நாட்டுக்கு ரெண்டு வருஷம் வரைக்கும் ராசாவா இருப்பாரு. அதுக்குப் பெறகு அவர மேளதாளத்தோட பக்கத்துல இருக்கற தீவுல கொண்டுபோயி விட்டுட்டு வந்துருவோம். அந்தத் தீவுக்குப் போனவங்க யாரும் திரும்பி வரமுடியாது. அங்கேயே இருந்து செத்துப்போயிடுவாங்க. அதனால நாங்க திரும்பவும் இன்னொருத்தர இப்படி ராசாவாத் தேந்தெடுப்போம். அப்படித்தான் ஒன்னையும் ராசாவாத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வா எழுந்திரு. அரச பதவிய ஏத்துக்க’’ அப்படீன்னு சொன்னாரு.



அவனும் நிலைமைய யூகிச்சிக்கிட்டு சரி ரெண்டு வருஷந்தானே நாம ராசாவா இருந்து பாப்போம்னுட்டு எந்திருச்சி அவங்களோட அரண்மனைக்குக் கிளம்பினான். அவன ராசாவ பட்டாபிஷேகம் பண்ணி வச்சாங்க. அவன் சந்தோசமா இருந்தான். தன்னால முடிஞ்ச நல்ல காரியங்கள எல்லாம் மக்களுக்குச் செஞ்சான். இப்படியே விருவிருன்னு ரெண்டு வருஷம் ஓடிப் போயிருச்சு.

இவனத் தீவுக்கு அனுப்பி வைக்கிற நாளு வந்துருச்சி. அந்த நாட்டுல இருக்கற முக்கியமானவங்க எல்லாரும் சேர்ந்து அரண்மனைக்கு வந்தாங்க. வந்தவங்க அவனத் தீவுக்குக் கௌம்பச் சொன்னாங்க. அவனும் சரின்னுட்டு ரெம்பச் சந்தோஷமா அவங்க சொன்ன தீவுக்குக் கௌம்புனான். அவங்களுக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு.

என்னடா எல்லாரும் அழுது பொலம்புவாங்க. இவன் மட்டும் அழுகவும் இல்ல ஒண்ணும் செய்யல. ரொம்ப சந்தோஷமாக் கௌம்புறான்னு நெனச்சிக்கிட்டு சரி இவன் ஏதோ பைத்தியக்காரன் போல இவனுக்கு அந்தத் தீவப் பத்தி தெரியாது போல இருக்கு. இவனக் கொண்டுபோயி விட்டுட்டு வந்துடுவோம்னு அவன ஒரு கப்பல்ல ஏத்திக்கிட்டு அவங்களும் ஏறிக்கிட்டு மேளதாளத்தோட கௌம்பினாங்க.

அந்தத் தீவும் வந்துருச்சி. இந்த நாடோடியாகிய மன்னனும் மேளதாளத்த ரசிச்சிகிட்டு வந்தான். கப்பல்ல இருந்து எறங்குனான். அந்த நாட்டோட முக்கியஸ்தர்களும் அவன் எறங்கறதப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அப்படி இறங்குறவன அந்தத் தீவுல இருக்கறவங்க எல்லாரும் வரவேற்றாங்க.

வந்தவங்களுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இந்தத் தீவுல ஆளரவமே இல்லாம இருக்கும். இப்ப இந்தத் தீவு சொர்க்கபுரியாவுள்ள இருக்கு. இத யாரு இப்படி மாத்துனான்னு புரியாம பேந்தப் பேந்த விழிச்சாங்க. இந்த நாடோடி ராசாவ அந்தத் தீவுல உள்ள மக்கள் வரவேற்று அழைச்சிக்கிட்டுப் போனாங்க. அந்த நாடோடி கப்பல்ல வந்தவங்களையும் அந்தத் தீவுக்கு அழைச்சான்.

அவங்களும் எறங்கிப் போயி அவங்கிட்ட நின்னு அந்தத் தீவப் பாத்தாங்க. அருமையான வீடுக, பெரிய அரண்மனை, அப்படி இப்படின்னு அந்தத் தீவு அப்படியொரு அழகா இருந்துச்சு. ஆச்சரியமாப் பாத்த அவங்களப் பாத்துட்டு அந்த நாடோடி ராசா, என்னங்க பாக்குறீங்க இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னுதானே நீங்க நெனக்கிறீங்க. நீங்க நெனக்கிற மாதிரி நான் ரெண்டு வருசமா வீணாப் பொழுதப் போக்கல. நீங்க அந்தத் தீவப் பத்தி என்கிட்டச் சொன்னவுடனேயே கைதிகளா சிறையில இருந்தவங்கள வச்சி இந்தத் தீவ சீர்படுத்தி வீடு அரண்மனையெல்லாம் கட்டவச்சி இங்க புதுசா ஒரு நாட்டையே உருவாக்கிட்டேன். இங்க வந்து உழைச்ச கைதிகள இங்க கொண்டுவந்து குடியேத்துனேன். இந்தத் தீவுக்கு வர விரும்பியவங்களயும் கொண்டுவந்து குடிவச்சேன். இது எல்லாம் ரெண்டு வருஷத்துல முடிச்சிட்டேன். அதனாலதான் நீங்க தீவுக்குக் கௌம்பு அப்படீன்னு சொன்னவுடனே நானும் சந்தோஷமாக் கௌம்புனேன். இதுக்கு முன்னால இருந்தவங்க எல்லாம் ரெண்டு வருஷத்தையும் நல்லா உண்ணுதின்னுட்டு மகிழ்ச்சியா இருந்து வீணாப் பொழுதப் போக்கிட்டு இங்க வந்து செத்துப் போனாங்க. ஆனா நான் அப்படி இல்லாம இந்தத் தீவுக்கு இரகசியமா ஒவ்வொரு முறையும் வந்து வந்து எல்லா வேலைகளையும் செஞ்சி முடிச்சிட்டேன். நாடோடியா இருந்த என்னைய இப்படி ராசாவா ஆக்குன ஒங்களுக்கு என்னோட நன்றி. நீங்க எல்லாரும் இங்க வந்து சந்தோஷமா இருந்துட்டுப் பெறகு ஒங்க நாட்டுக்குப் போங்கன்னு’’ சொன்னான்.



அவங்களும் ஆஹா இப்படியொரு ஆளா.. இந்தமாதிரி புத்திசாலிய நாம பாத்ததே இல்லியேன்னுட்டு, "ராசா ராசா நீங்க இந்தத் தீவுக்கு மட்டுமில்ல இனிமே எங்களோட நாட்டுக்கும் நீங்கதான் ராசாவா இருக்கோணும். ஒங்கள எங்களோட ராசாவா மீண்டும் தேர்ந்தெடுத்துட்டோம்னு’’ சொன்னாங்க. அவனும் சரின்னுட்டு அந்தத் தீவுல இருந்துக்கிட்டே அந்த நாட்டையும் ஆளா ஆரம்பிச்சிசான். நாடோடியாத் திரிஞ்சவன் தன்னோட புத்திசாலித்தனத்துனால தானும் நல்லா இருந்து தன்னைய நம்புனவங்களுக்கும் நல்லது செஞ்சான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1as.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License