இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

46.உலகத்திலே மோசமானது எது?


ஊருல ஒரு பெரிய சாமியாரு இருந்தாரு. அவரு ரெம்ப நல்லவரு. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனப்பாரு. தன்னால மத்தவங்களுக்கு எப்படியெல்லாம் ஒதவி செய்ய முடியும்ணு நெனச்சி இறைவனக் கும்பிட்டுக்கிட்டு வாழ்ந்தாரு. அவரையும் அந்த ஊருக்காரவுங்களும் பக்கத்து ஊருகள்ல இருந்தவங்களும் கண்கண்ட தெய்வமா நெனச்சி வாழ்ந்துக்கிட்டு வந்தாங்க.

இப்படி இருக்கையில பக்கத்து ஊருக்குப் புதுசா ஒருத்தன் வந்தான். அவன் பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்ததால எல்லாரையும் அவன் மட்டமா நெனச்சான். அவன் நல்லாப் படிச்சவங்கறதால அவன அந்த ஊருல இருந்தவங்க எல்லாரும் நல்லா மதிச்சாங்க. ஆனா அவந்தான் மத்தவங்கள மதிக்காம ஆணவத்தோடு நடந்துக்கிட்டான்.

எல்லாரும் பக்கத்தூரு சாமியாரப் பத்தி ரெம்ப உயர்வாப் பேசுனது இவனோட காதுலயும் விழுந்துச்சு. இப்படி ரெம்பப் புகழ்ற அந்தச் சாமியாரப் போயிப் பாக்கணும்னு அவனும் முடிவு செஞ்சான். மறுநாளு அவன் அந்தச் சாமியாரப் பாக்குறதுக்குப் போனான்.

சாமியாரு அவன அன்போட வரவேற்று பக்கத்துல ஒக்கார வச்சிப் பேசிக்கிட்டிருந்தாரு. அவன் சாமியாரப் பாத்து சில கேள்விகளக் கேட்டுக்கிட்டே இருந்தான். சாமியாரும் சலிக்காம புன்னகை தவழும் முகத்தோடவும் அன்போடவும் பதிலச் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

ஆனா அவன் தான்தான் எல்லாரையும் விட ரெம்பப் படிச்சவன். உயர்ந்தவன்னு நெனச்சிக்கிட்டே சாமியாருகிட்டப் பேசிக்கிட்டு இருந்தான். அதச் சாமியாரும் கவனிச்சிக்கிட்டே இருந்தாரு. அவன் சாமியாருக்கு எல்லாந் தெரியுமா? இல்ல எல்லாந் தெரிஞ்சமாதிரி அவரு நடந்துக்கிறாரா?ன்னு நெனச்சிக்கிட்டு அவர மட்டந்தட்டுவோம்னு, ‘‘இந்த உலகத்துலேயே உயர்ந்தவரு யாரு? அதேமாதிரி இந்த உலகத்துலேயே தாழ்ந்தவரு யாரு? சொல்லுங்கன்னு’’ கேட்டான்.

அந்தக் கேள்வியக் கேட்ட சாமியாரு, ‘‘உன்னோட கேள்விக்குப் பதில் தேவைன்னா நாஞ் சொல்றதச் செஞ்சிக்கிட்டு வான்னு’’ சொன்னாரு. அதுக்கு அந்தப் பயலும் ‘‘சரி சொல்லுங்க செய்துகிட்டு வர்றேன்னு’’ சொன்னான்.

‘‘ஒன்னைய விட மோசமான ஒன்ன ஏம்முன்னாடி கொண்டு வந்து வையி. இன்னக்குள்ளாற நீயி இதச் செய்யணும். போயி ஒன்னவிட மோசமானதக் கொண்டு வான்னு’’ சொன்னாரு சாமியாரு. இது என்ன பெரிய விஷயமா? இப்பவே போயி கொண்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வேகமாப் போனான்.

அப்படிப் போனவன் நம்மளவிட மோசமானது எதுன்னு யோசிச்சான். அவனோட காலடியில இருந்த புல்லப் பாத்துட்டு நம்மள விட மோசமானது இந்தப் புல்லுதானன்னு நெனச்சிக்கிட்டு அந்தப் புல்லப் புடுங்கறதுக்குப் போனான்.

அப்ப அந்தப் புல்லு அவனப் பாத்துட்டு, ‘‘எதுக்கு என்னய வந்து புடுங்குற? காரணத்தச் சொல்லுன்னு’’ கேட்டது. அதுக்கு அவன், ‘‘இந்த ஒலகத்துல என்னயவிட மோசமானது நீதான் அதனாலதான் ஒன்னையப் புடுங்கப் போறன்னு’’ சொன்னான்.

அதக் கேட்ட புல்லு, ‘‘ஏய் நிறுத்துடா.. ஒன்னயவிட நான் மோசம்னு எப்படி நீ சொல்லலாம். ஒலகத்துலயே உயர்ந்தவன்னு நான்தான். ஏந்தெரியுமா, ஆண்டவன் படைச்ச ஆடு, மாடு, கோழி முயல்னு எல்லாத்தோட பசியையும் நான் போக்குறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் பிறருக்கு ஒதவி செய்றேன். என்னையப் போயி ஒன்னவிட ரெம்ப மோசமானவன்னு நீயி சொல்ற. நீ என்னையத் தொடாத. என்னத் தொட்டியினா அது பாவம். அந்தப் பாவம் என்ன வந்து சேரப்பிடாது. பேசாமாப் போயிருன்னு’’ சொன்னதக் கேட்ட அந்தப் பையன்,

‘‘ச்சே ஒரு புல்லு நம்மளவிட ஒசந்ததா? சரி இதவிட ரொம்ப மோசமான எதுன்னு தேடிப் போவோம்னு’’ நெனச்சிக்கிட்டு மரம், செடி, கொடி, பறவை, புழு, பூச்சின்னு கண்ணுல படற எதையும் விடா அவையெல்லாம் தன்னைவிட ரெம்ப மோசம்னு நெனச்சி அதுகல எடுக்கப் போனபோது அதுக எல்லாம், ‘‘நாங்க எங்களால முடிஞ்சத மத்தவ உயிருங்களுக்குச் செஞ்சிக்கிட்டு இருக்கோம் அதனால எங்களவிட நீயிதான் மோசமானவன் எங்களத் தொடாமப் போயிரு. எங்க கிட்ட வராதன்னு’’ சொல்லிருச்சுக.

இவனுக்குப் பெருத்த அவமானாமாப் போயிருச்சு. என்னடா இது இந்த ஒலகத்துல நம்மள மோசமானதே இல்லையோன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தான். பொழுதும் வேற முடியிற நெலையில இருந்ததால சாமியாரு சொன்னத ஒடனே கொண்டுக்கிட்டுப் போகணும்னு பரபரத்தான் அந்தப் பய. அப்ப அவனோட மனசுக்குள்ளாற ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துருச்சு.

பக்கத்துல மனுசனோட கழிவான ஆயி கெடந்துச்சு. அவன் ஒடனே ஒரு ஓட்டாஞ்சில்ல எடுத்துக்கிட்டுப் போயி இந்த ஒலகத்துலேயே இந்த மனுசக் கழிவுதான் நம்மளவிட மோசம். ஏன்னா இதப்பாத்த ஒடனே மனுசங்க எல்லாரும் மொகத்தச் சுளிச்சிக்கிட்டும், மூக்கப் பொத்திக்கிட்டும் போறாங்க. அதனால இதுதான் மோசமா இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு அத ஓட்டாஞ்சில்லுல எடுக்கறதுக்குப் போனான்.

அப்ப அந்த மனிதக் கழிவான மலம் அவனப் பார்த்துப் பேச ஆரம்பிச்சிருச்சு. ‘‘டேய் அப்படியே நில்லு. என்னையத் தொடாதே. என்னோட இந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம். ஒங்கக்கிட்ட இருந்து வர்றதுக்கு முன்னால நான் எல்லாரும் விரும்பக் கூடிய உணவா இருந்தேன். நீங்க அதச் சாப்பிட்ட பின்னால எல்லாரும் அருவருக்கக் கூடிய ஒன்னா மாறிட்டோம். இப்பக் கூட நான் வண்டு, புழு, பூச்சிகளுக்கு உணவா ஆயிருவேன். திரும்பவும் நீயி என்னத் தொட்டியினா இதவிடக் கேவலமா மாறிப்போயிருவேன். என்னயத் தொடரதுக்கு ஒனக்கு அருகத இல்லை’’ அப்படீன்னு சொன்னது.

அதக்கேட்ட அந்தப் பய வெலவெலத்துப் போயிட்டான். என்னடா தன்னைவிடக் மோசமானதுன்னு எதை நெனச்சமோ அதுவே இப்படி நம்மளக் கேவலமாப் பேசிப்புட்டுது. அப்ப இந்த உலகத்துலேயே ரெம்ப ரெம்ப மோசமானது இந்த மனுசப் பிறவிதானா? ஐயோ இது தெரியாமா நான் மத்தவங்களக் கேவலமா நெனச்சனே! எவ்வளவு ஆணவமா நான் இருந்துட்டேன். எல்லாப் பொருளும் மத்தவங்களுக்கு ஏதோ ஒரு வகையில ஒதவியா இருக்கு. ஆனா இந்த மனுசங்களாகிய நாங்க ஏதாவது ஒரு வகையில மத்தவங்களுக்கு உபத்திரவம் கொடுத்துக்கிட்டு இருக்கமே. இன்னக்கி முழுதும் தேடியும் மனுசனவிடக் கேவலமானதக் கண்டுபிடிக்க முடியலையேன்னு’’ நெனச்சிக்கிட்ட அந்தப் பய சாமியாரப் பாக்கறதுக்காகப் போனான்.

அந்தப் பயலப் பாத்த சாமியாரு, ‘‘என்ன தம்பி நான் சொன்னதக் கொண்டுட்டு வந்துட்டீங்களா? எங்க கொடுங்க’’ அப்படீன்னு சொன்னாரு. அதுக்கு அவன், ‘‘நான் தோத்துப் போயிட்டேன் சாமி. என்னய மன்னிச்சிருங்க. இந்த மனிசப் பிறவியவிட மோசமானது எதுன்னே எனக்குத் தெரியலன்னு’’ சொல்லி நடந்ததெல்லாம் சொல்லிட்டு அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டான்.



அதக் கேட்ட சாமியாரு, ‘‘தம்பி வருத்தப்படாதீங்க. நாம மத்தவங்களுக்கு ஒதவி செய்யிறதுக்காகவும் பயன்படுறதுக்காகவும்தான் ஆண்டவனால படைக்கப்பட்டுருக்கோம். நாம மத்தவங்களுக்குப் பயன்படுறது மாதிரி வாழ்ந்தா மனிதப்பிறவி மாதிரி ஒசந்தது எதுவுமே இல்லை. உலகத்துலயே ரொம்ப ஒசந்தவனும் மனுசந்தான். ரொம்ப மோசமானவனும் மனுசந்தான். அவனோட நடத்தைதான் அவனை ஒயரவும் வைக்குது. கீழானவனாவும் ஆக்குது. இதப் புரிஞ்சிக்கோங்க’’ அப்படீன்னு சொன்னாரு.

அவரோட பேச்சக் கேட்ட அந்தப் பய ஆணவத்தைக் கைவிட்டுட்டு மத்தவங்கள மதிச்சி ஒதவியா வாழ்வேன்னு முடிவு செஞ்சிட்டுக் கிளம்பினான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1at.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License