இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

47.கடல் தண்ணீர் உப்பானது ஏன்?


கடல் தண்ணீர் ஏன் உப்புக் கரிக்குது தெரியுமா? அதப்பத்தி ஒரு கதை இந்த வட்டாரத்துல வழங்கி வருது.

அந்தக்காலத்துல ஒரு வியாபாரி இருந்தாரு. அவரு ஒவ்வொரு ஊருக்கும் போயி மக்களுக்கு வேணுங்கறத வாங்கிக்கிட்டுப் போயிக் கொடுத்துட்டு காச வாங்கிக்கிட்டு மறுபடி பொருள வாங்கி வித்துட்டு காச வாங்கிகிக்கிட்டு வருவாரு. இப்படி இருக்கற போது அவருகிட்ட ஒரு கிராமத்துல இருக்கற பெரியவரு ஒருத்தரு வந்து, “ஐயா ஐயா என்கிட்ட ஒங்கக் கிட்ட பொருளு வாங்குறதுக்கு ஏங்கிட்டக் காசு இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு பழங்காலத் திருகை ஒண்ணு இருக்கு. அத வச்சிக்கிட்டு இப்பதைக்குப் பொருளக் கொடுங்க. எனக்குப் பணங் கெடைச்சவுடனே திரும்ப வாங்கிக்கிறேன்னு” சொல்லிப் பொருள்களக் கேட்டாரு.

அந்த வியாபாரியும் அந்தப் பெரியவர் மேல எறக்கப்பட்டு “காசெல்லாம் வேண்டாம். பொருளத் தர்றேன். அதவச்சிக்கோங்க. ஒங்களுக்குப் பணம் எப்பக் கிடைக்குதோ அப்பத் தாங்கன்னு” சொல்லி அந்தத் திருகைய வாங்கிக்காமலேயே பொருளக் கொடுத்துவிட்டு வந்தாரு. அந்த வியாபாரியும் எல்லா ஊருக்கும் போயி பொருள்கள வித்துட்டு எப்பவும் அந்தக் கிராமத்து வழியா வருவாரு. அப்ப அந்தப் பெரியவரு பணம் தானா வந்து கொடுப்பாருன்னு நெனச்சிக்கிட்டே தன்னோட ஊருக்குப் போயிருவாரு.

இப்படிப் பல நாளு ஆயிருச்சு. அந்த வியாபாரி என்னடா அந்தப் பெரியவரு பணங் கொடுக்காம இருக்காரேன்னு நெனச்சிக்கிட்டு, அவரப் பாக்குறதுக்காக அவரோட வீட்டுக்குப் போனாரு. அங்கபோயிப் பாத்தா அந்தப் பெரியவரு ஒடம்புக்கு முடியாமப் படுத்திருந்தாரு. அதப் பாத்த ஒடனே அந்த வியாபாரிக்கு தர்ம சங்கடமாப் போயிருச்சு.

வியாபாரி வந்துருக்காருன்னு தெரிஞ்சவுடனேயே அந்தப் பெரியவரு அந்த வியாபாரிக்கிட்ட பக்கத்துல இருந்த திருகைய எடுத்துக் கொடுத்து, “ஐயா கோவிச்சுக்காதீங்க. என்கிட்ட பணமில்லை. ஒங்களப் பாத்து இந்தத் திருகையக் கொடுக்கலாம்னு நெனச்சேன். அதுவும் முடியாமப் போயிருச்சு. இப்ப இத வச்சிக்கோங்க. இது அதிர்ஷ்டமான திருகை. கேட்ட உடனே உப்பக் கொடுக்கும்”ன்னு சொல்லி அதுக்குரிய மந்திரத்தையும் சொல்லித் திருகையக் கொடுத்தாரு.

அந்த வியாபாரியும் அத வாங்கிக்கிட்டுப் போயி வீட்டுல வச்சி அதப் பார்த்துக் கொஞ்சம் உப்பக் கொடுன்னு கேட்டான். அதக் கேட்டவுடனேயே கரகரன்னு உப்பக் கொடுக்கத் தொடங்கிடுச்சு. திரும்ப மந்திரத்தச் சொன்னவுடனேயே அரக்கறத நிப்பாட்டிடுச்சு.



அதப் பாத்த அந்த வியாபாரிக்கு ஆச்சரியமாப் போயிருச்சு. அன்னையில இருந்து அந்த வியாபரி நெறைய உப்ப வரவழைச்சு வித்து நெறையப் பணம் சம்பாதிச்சான். அந்தப் பணத்தால பலருக்கும் ஒதவி செஞ்சி பேரும் புகழுமா இருந்தான்.

இதப் பாத்த அவனோட வியாபாரம் பாத்த அந்த வியாபாரியோட கூட்டாளி எப்படி இவனுக்குப் பணங்காசு சேந்துச்சு. இவன் நம்மளவிட பேரும் புகழுமா இருக்கானே. இதனோட ரகசியத்தைத் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சிக்கிட்டு தன்னோட நண்பனுக்குத் தெரியாம உளவு பாத்தான். அப்பத்தான் அவனுக்கு அந்தத் திருகையோட தன்மை தெரிஞ்சது. உப்ப அரைச்சுத்தான்னு சொன்னதக் கேட்டதையும் நிப்பாட்டுன்னு சொன்னதையும் கேட்டுட்டு எப்படியாவது இந்தத் திருகையத் திருடிக்கிடடுப் போயி நாம பெரியாளா ஆகணும்னு நெனச்சான்.

மறுநாளு அந்த வியாபாரி தன்னோட நண்பன் குடும்பத்தோட வெளியூரு போயிருக்கறதத் தெரிஞ்சிக்கிட்டு அந்தத் திருகை மாதிரி இருக்கற இன்னொரு திருகைய வாங்கிக் கொண்டு வந்து அவனோட வீட்டுல வச்சிப்பிட்டு அந்த மந்திரத் திருகையத் தூக்கிக்கிட்டுப் போயிட்டான்.

தான் இங்க இருந்தா தன்னோட நண்பன் கண்டுபிடிச்சி தன்ன உண்டு இல்லைன்னு பண்ணிப்பிடுவான்னு நெனச்ச அந்த நட்புத் துரோகி தன்னோட பொருள்களை எல்லாத்தையும் தனக்குச் சொந்தமான கப்பல்ல ஏத்திக்கிட்டு பல பொருள்களையும் வாங்கிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயி உப்ப வரவழைச்சு வித்துட்டுத் திரும்பவும் இந்த ஊருக்கு வந்துருவோம். அப்படி வந்தா இவனுக்குத் தெரியாதுன்னு நெனச்சான்.

தன்னோட மனைவிக்கிட்ட தான் வெளிநாட்டுல கப்பல்ல சரக்குகள ஏத்திக்கிட்டுப் போயி வித்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனான். அவங்கூட அவனோட வேலை செய்யிறவங்களும் கிளம்பினாங்க. கப்பல் நடுக்கடல்ல போயிக்கிட்டிருந்தபோது திருகையத் திருடுன வியாபாரிக்குப் பசி வந்துருச்சு.

தன்னோட வேலையாளப் பாத்து சாப்பாடு போடச் சொன்னான். சாப்பாட்டு முன்னால ஒக்காந்து சாப்பிட்ட அவன் சாப்பாட்டுல உப்பு இல்லைன்னு தெரிஞ்சி வேலையாளுகக்கிட்ட உப்ப எடுத்துக்கிட்டு வாங்கடான்னு சொன்னான். ஆனா அவங்க, “நாங்க உப்ப எடுத்து வைக்க மறந்துட்டோம்”ன்னு சொன்னாங்க.

அவனுக்கு ஒடனே தன்னோட கொண்டு வந்த திருகை ஞாபகத்துக்கு வந்தது. ஒடனே வேக வேகமாப் போயி அவன் திருகை இருந்த அறைக்குள்ளாற ஒக்காந்து திருகையப் பாத்து உப்புத்தான்னு மந்திரத்தைச் சொன்னான்.

திருகையில இருந்து உப்பா வர ஆரம்பிச்சிருச்சு. திருகைய நிப்பாட்டணும்னு நெனச்சான். ஆனா அவனுக்கு அந்தத் திருகைய நிப்பாட்டுற மந்திரம் மறந்து போயிருச்சு. திருகையே நிப்பாட்டு நிப்பாட்டுன்னு கத்துனான். ஆனா திருகை அரச்சு அரச்சு உப்ப வெளியில தள்ளுச்சு. கொஞ்ச நேரத்துக்குள்ளாற அந்த அறையே உப்பால நெறஞ்சிருச்சு. அவனால அறைய விட்டு வெளியில வரமுடியல. உப்பு அவனப் போட்டு மூடிருச்சு.



ஐயோ, நல்லவனா இருந்த என்னோட நண்பனுக்கு நான் துரோகம் செஞ்சேன். அந்தத் துரோகம் இப்ப எனக்கு வெனையா மாறிடுச்சேன்னு நெனச்சிக்கிட்டே உயிர விட்டான். அவன் வந்த கப்பலும் கொஞ்சங் கொஞ்சமா மூழ்கிடுச்சு.

ஆனா அந்தத் திருகை உப்ப மட்டும் அரச்சு அரச்சுத் தள்ளிக்கிட்டே இருந்துச்சு. அதனால நல்ல தண்ணியா இருந்த கடலுத் தண்ணி உப்புக் கரிக்கத் தொடங்கிடுச்சு. திருகை உப்ப இன்னைக்கும் அரச்சிக்கிட்டு இருக்கறதாலதான் இப்பவும் கடல் தண்ணி உப்புக் கரிக்குதாம்.

ஓ! அதனாலதான் கடல் தண்ணீர் உப்பாயிருக்குதா?

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1au.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License