இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

48.பிரம்மா சொன்ன பொய்


தாழம்பூவை ஏன் தலையில வைக்க மாட்டங்க? யாருக்காவது தெரியுமா? அதப் பத்தின கதை ஒண்ணு புதுக்கோட்டை வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருது. அது ரொம்பச் சுவையான கதை.

ஒரு சமயம் திருமாலும் பிரம்மாவும் தங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டாங்க. அவங்க சண்டையால அனைத்து உலகத்தோட அமைதியும் கெட்டுக்கிட்டு இருந்துச்சு. இதப் பார்த்த ஈசுவரன் அவங்க சண்டை போடுற இடத்துக்கு வந்தாரு.

அவங்களப் பாத்து, “இங்க பாருங்க சண்டை போடுறத நிறுத்துங்க. ஒங்களால எல்லா உலகத்தோட அமைதியும் கெட்டுக்கிட்டு இருக்கு. ஒங்க சண்டைக்கான காரணத்தைச் சொல்லுங்க. அதைத் தீர்த்து வைக்க முடியுமான்னு பாக்கறேன்”னு சொன்னாரு.

இதக் கேட்ட ரெண்டுபேரும், “எங்களுக்குள்ள யாரு பெரியாளு? இதத் தீர்மானிக்கத்தான் இந்தச் சண்டை. நீங்க வெலகி நின்னு பாருங்க. எங்கள்ள யாரு செயிக்கிறாங்களோ அவங்கதான் பெரியவங்க. நீங்க போங்கன்னு சொல்லிட்டுச் சண்டை போடறதத் தொடர்ந்தாங்க...

இதக் கேட்ட ஈசுவரன், “இதுதான் ஒங்க பிரச்சனையா, இத நான் சுலபமாத் தீத்து வைக்கிறேன். நான் சொல்றதக் கேட்பீர்களா?”ன்னு கேட்டாரு. அதுக்கு ரெண்டு பேரும் சரின்னு சம்மதிச்சாங்க. சண்டைய விட்டுட்டு ஈசுவரங்கிட்ட வந்தாங்க.

ஈசுவரன் அவங்களப் பாத்து, “இங்க பாருங்க நான் இப்ப நெருப்பு வடிவத்துல நிக்கப் போறேன். என்னோட தலைமுடிய பிரம்மா நீங்க போயி பாக்கணும். அதுமாதிரி என்னோட காலடியத் திருமாலே நீங்க போயிப் பாக்கணும். யாரு பார்த்துட்டு சீக்கிரமாத் திரும்ப வர்ரீங்களோ அவங்கதான் பெரியவங்க. என்ன செய்யிறீங்களா?”ன்னு கேட்டாரு.

இதுக்கு பிரம்மனும் திருமாலும் சம்மதிச்சாங்க. திருமாலு பன்றி வடிவத்தை எடுத்துக்கிட்டு பூமியக் கொடைஞ்சி கொடைஞ்சி போயிக்கிட்டே இருக்காரு. அதே மாதிரி பிரம்மா அன்னப் பறவையோட வடிவத்தை எடுத்து ஈசுவரனோட திருமுடியப் பாக்கறதுக்குப் போனாரு.

இவங்க ரெண்டு பேரும் போறாங்க போறாங்க போயிக்கிட்டே இருக்காங்க. திருமாலால ரொம்பக் கீழ போக முடியல. அவரால ஒண்ணுஞ் செய்ய முடியல. அப்படியே வெளியில வந்து ஈசுவரனப் பாத்து, “ஒலகத்தைக் காக்கக் கூடிய ஈசுவரனே நான் தோத்துட்டேன். என்னால ஒங்களோட திருவடிகளைப் பார்க்க முடியல. நான் பெரியவன் இல்லன்னு ஒத்துக்கறேன்”னு சொன்னாரு.



இதக் கேட்ட ஈசுவரன், “பரவாயில்ல. நீங்க எப்போதும் போல எனக்குத் துணையா இருந்து இந்த உலகத்தைக் காத்துக்கிட்டு வாங்க”ன்னு சொன்னாரு. சரின்னுட்டுத் திருமாலு போயிட்டாரு.

அன்னப் பறவை வடிவத்தோட பறந்து போன பிரம்மன் போறாரு போறாரு போயிக்கிட்டே இருக்காரு. அவரால இறைவனோட திருமுடியப் பாக்க முடியல. அப்பப் பாத்து ஒரு தாழம்பூ கீழே வந்துக்கிட்டு இருந்துச்சு.

அந்தத் தாழம்பூவப் பார்த்த பிரம்மா, “ஏய் தாழம்பூவே நீயி எங்க இருந்து வர்ற?” அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு அந்தத் தாழம்பூ, “நான் ஈசுவரனோட திருமுடியில இருந்து வர்றேன்”னு சொன்னது.

அதுக்கு பிரம்மா, “ஆமா எப்பப் பொறப்புட்டே”ன்னுக் கேட்டாரு. தாழம்பூ, “நான் எப்பப் பொறப்புட்டேன்னு தெரியல. நாம்பாட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்”னு சொன்னது.

இதக் கேட்ட பிரம்மாவுக்கு குறுக்குப் புத்தி வேலை செஞ்சது. ஒடனே அவரு தாழம்பூவப் பாத்து, “ஏய் தாழம்பூவே, நான் ஈசுவரனோட திருமுடியப் பாத்துட்டேன். அதப் பாத்ததுக்கு நீதான் சாட்சி”ன்னு சொன்னாரு.

இதக்கேட்ட தாழம்பூவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. “நீங்க யாரு? நீங்க ஈசனோட திருமுடியப் பார்க்கலே? அப்பறம் எப்படிப் பார்த்ததா நான் சொல்றது? நான் சொல்ல மாட்டேன். என்னைய விட்டுருங்க”ன்னு சொன்னது.

பிரம்மாவுக்குக் கோபம் வந்துருச்சு, அவரு தன்னோட சுய உருவத்தைக் காட்டி, ‘‘ஏய், பூவே நான்தான் இந்த உலகத்தப் படைக்கிற பிரம்மா. நான் சொல்லறத நீ கேக்கணும். ஈசங்கிட்ட போறப்ப நான் சொன்னதைச் சொல்லணும். அப்படிச் சொல்லலைன்னா ஒன்ன அழிச்சிருவேன்”னு சொன்னாரு.

பிரம்மனை நேரில பார்த்த தாழம்பூவுக்கு கைகாலெல்லாம் ஒதறலு எடுத்துருச்சு. அடேயப்பா! நமக்கெதுக்கு இந்தப் பொல்லாப்பு. நம்மைப் படைச்சவரே இப்படிச் சொல்லச் சொல்லாருன்னா நாம எப்படிச் சொல்ல மாட்டேன்னு சொல்றதுன்னு நெனச்சிக்கிட்டு வர்றது வரட்டும்னு, “சரி சொல்றேன்”னு சொன்னது.

பிரம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். தாழம்பூவக் கூட்டிக்கிட்டு சர்...ருன்னு கீழ இறங்கினாரு. இறங்கின உடனே ஈசுவரனப் பாத்துக் கும்புடு போட்டுட்டு, “சாமி நான் ஒங்களோட திருமுடியப் பாத்துட்டேன். அதுக்கு இந்தத் தாழம்பூதான் சாட்சி”ன்னு சொன்னாரு.

ஈசுவரன் அந்தத் தாழம்பூவப் பாத்து, “இது உண்மையா?”ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தத் தாழம்பூ, “ஈசனே, நான் சத்தியமாப் பாத்தேன். இவரு ஒங்களோட திருமுடியப் பாத்தாரு”ன்னு பொய்சத்தியம் செஞ்சது.

ஈசுவரனுக்குப் பொல்லாத கோபம் வந்துருச்சு, அவரு பிரம்மாவப் பாத்து, “இந்த உலகத்தைப் படைச்ச ஈசுவரங்கிட்டயேப் பொய் சொல்றீங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா பொய் சொல்வீங்க? இந்தத் தைரியம் ஒங்களுக்கு எப்படி வந்துச்சு?ன்னு அவங்கள அதட்டிக் கேட்டார்.

பிரம்மாவுக்கு பயம் வந்துருச்சு. இருந்தாலும் பயத்தை வெளியில காட்டிக்காம, “ஈசனே நான் சத்தியமா ஒங்களோட திருமுடியப் பாத்தேன். அதுக்கு இந்தத் தாழம்பூதான் சாட்சி’’ அப்படீன்னாரு. ஈசனுக்குப் பயங்கரக் கோபம். தாழம்பூவைப் பாத்து, “ஏய் தாழம்பூவே உண்மையச் சொல்லு இல்லைன்னா உன்னை எரிச்சிடுவேன்”னு சொன்னாரு. அதுக்குமேல தாழம்பூவால உண்மையச் சொல்லாம இருக்க முடியல. ஈசுவரங்கிட்ட, “ஈசுவரா நான் பொய் சொல்லிட்டேன். என்னய மிரட்டி இந்தப் பிரம்மாதான் பொய் சொல்லச் சொன்னாரு. பிரம்மா உங்களோட திருமுடியப் பார்க்கல”ன்னு சொல்லிருச்சு.



ஈசுவரன் பிரம்மாவைப் பாத்து, “படைக்கிற கடவுளான நீங்களே பொய் சொல்லலாமா? பொய் சொன்னதால இனிமே ஒங்களுக்கு இந்த உலகத்துல எங்கேயும் கோயிலே கெடையாது. ஒங்களுக்காக எங்கேயும் கோயிலக் கட்டி மக்கள் வழிபடமாட்டாங்க”ன்னு சாபம் கொடுத்துட்டாரு. பிரம்மா நொந்து போயிட்டாரு. இதனாலதான் பிரம்மாவுக்கு எங்கேயும் தனியாக் கோயிலே கெடையாது.

தாழம்பூவப் பாத்த ஈசுவரன், “தாழம்பூவே நீ என் தலையில இருந்து வந்துட்டு பொய் சொன்னதால உன்னைப் பெண்கள் யாரும் தலையில வச்சிக்க மாட்டாங்க. இறைவனுக்கும் உன்னைப் படைக்க மாட்டாங்க. உன்னோட இதழ்களுக்குள்ளாற பூ நாகம் வாழும். போயிரு”ன்னு சொல்லி சாபங் கொடுத்தாரு. தாழம்பூ பேசாம அழுதுகிட்டு தான் பொய் சொன்னதுக்குத் தக்க தண்டனை கெடச்சிருச்சு. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்னு நெனச்சிக்கிட்டுப் போயிருச்சு.

அன்னையில இருந்து தாழம்பூவ யாரும் பெண்கள் தங்களோட தலையில வச்சிக்கிறது இல்லை. தாழம்பூவுல ரொம்பச் சின்ன பூ நாகம் இருக்குது. இறைவனுக்கும் அந்தப் பூவ வச்சிப் படைக்கிறது இல்ல.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1av.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License