Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

49.நாரதரை விட உயர்ந்தவர்


எல்லாத்துக்கும் நாந்தான் பெரியவன்னு நாம நெனச்சிக்கிட்டு இருக்கக் கூடாது. அவ்வாறு நெனக்கிறது தவறு. என்னாலதான் எல்லாம் முடியும்னு நெனக்கவும் கூடாது. நம்மைவிடத் திறமையானவங்க இங்க இருக்கறாங்க. இதப்பத்தி விளக்கறமாதிரி ஒரு கதை ஒண்ணு இருக்கு.

நாரதரு திரிலோக சஞ்சாரி. அவரு ஒரு இடத்துலகூட நிக்காம ஒவ்வொரு இடமாப் போயிக்கிட்டு வருவாரு. அப்படிப் போறபோது அவரு வாய் ஓயாமா ஓம் நமோ நாராயணாயன்னு சொல்லிக்கிட்டேத் திரிவாரு. இப்படி சொல்லிக்கிட்டேத் திரிஞ்சிக்கிட்டு இருக்கறபோது அவரோட மனசுக்குள்ளாற ஒரு எண்ணம் வந்துருச்சு.

இந்த ஒலகத்துலேயே நாமதான் இறைவனோட பேரச் சொல்லிச் சொல்லித் திரியறோம். நம்மைத் தவிர வேற யாரும் நம்ம மாதிரிச் சொல்றதே இல்லைன்னு ஒரு அகங்காரமான எண்ணம் வந்துருச்சு. இந்த எண்ணத்தோடேயே நாரதர் கடவுளப் பாக்கப் போனாரு. கடவுளப் பாத்து வணங்கிவிட்டு இறைவனைப் பார்த்தார்.

தன்னைப் பார்த்த நாரதரப் பார்த்துக் கடவுள், ”என்ன நாரதா இன்றைக்கு நீ ரெம்ப ரெம்ப சந்தோஷமா இருக்கியே? எதாச்சும் காரணம் இருக்குதான்னு?” கேட்டாரு.

அதுக்கு நாரதரு, ”ஆமாம் இறைவனே! என்னைப் போன்ற பாக்கியசாலிகள் உலகத்துல யாருமே இல்லை. நான் மட்டும்தான் ஒங்க பேர வாய் ஓயாமல் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்”னு சொன்னாரு.

அதக் கேட்ட பகவான் சிரிச்சிக்கிட்டே, ”அப்படியா? ஆச்சரியமா இருக்கே? சரி பூலோகத்துக்குப் போயி நான் சொல்ற ஆளப் போயிப் பாத்துட்டு அவரோட ரெண்டு நாளு இருந்துட்டு வா... அதுக்குப் பிறகு அங்க என்ன நடந்ததுன்னு ஏங்கிட்ட வந்து சொல்லு”ன்னு சொன்னாரு.

நாரதரும் சரின்னுட்டு கடவுள் சொன்னது போல பூலோகத்துக்கு வந்து அவரு சொன்ன ஆள சாதாரணமான ஆளுமாதிரிப் போயிப் பாத்தாரு. அந்தாளு இவரப் பாத்துட்டு, ”ஊருக்குப் புதுசா. என்னோட எங்க வீட்டுல தங்கிட்டுப் பெறகு போங்கன்னு” சொன்னாரு.

சரின்னு சொல்லிட்டு நாரதரும் அந்த ஆளோட தங்குனாரு. நாரதரு போன நேரம் சாயந்தரம். கொஞ்சநேரத்துல சாப்பிட ஒக்காந்தாங்க. அப்ப அந்த ஆளு, ”இறைவனே எனக்குச் சோறுபோட்டு காப்பாத்துற ஒனக்கு நன்றின்னு” சொல்லிட்டு ஓம் நமோ நாராயணாயன்னு சொல்லிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சாரு.

சாப்புட்ட ஒடனே ரெண்டுபேரும் தூங்கப் போனாங்க. அப்ப அந்த ஆளு பாயில ஒக்காந்துக்கிட்டு, ”இறைவனே! இன்னக்கி இன்னின்ன வேலை செஞ்சேன். இதுஇது எனக்குக் கெடைச்சது. எல்லாம் ஒன்னோட கருணையினால்தான் கெடைச்சது. என்னைய இன்னக்கிப் பூராவும் காப்பாத்துனதுக்கு ஒனக்கு நன்றியத் தெரிவிச்சிக்கிறேன்னு” சொல்லிட்டு, ”ஓம் நமோ நாராயணாய”ன்னு இறைவனோட பேரச் சொல்லிட்டுத் தூங்கிட்டாரு.



மறுபடியும் காலையில எழுந்திருச்சாரு. படுக்கைய விட்டு எழுந்திருச்ச பெறகு, முகத்தக் கழுவிக்கிட்டு, “இறைவனோட பேரைச் சொல்லிட்டு, இறைவனே இன்றையப் பொருடுது ஒன்னால நல்லதா இருக்கணும்” அப்படீன்னு சொல்லிக்கிட்டே போயி சாமியக் கும்பிட்டு்டு, வயலுக்குப் போனாரு.

வயல்ல கடுமையா வேலை பாத்தாரு. மறுபடியும் காலையில சாப்புட ஆரம்பிச்சாரு. அப்பவும் சாப்பாட்டுக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு இறைவனோட பேரைச் சொல்லிட்டுச் சாப்புட்டாரு. அதே மாதிரி சாயந்தரம் வயல் வேலை முடிஞ்சி திரும்பவும் வீட்டுக்கு வந்தாரு.

வீட்டுக்கு வந்தவரு இறைவனோட பேரைச் சொல்லிட்டு முன்னால என்ன செஞ்சாரோ அதேமாதிரி செஞ்சாரு. இதைப் பாத்துக்கிட்டு இருந்த நாரதருக்கு வெறுப்பு வந்துருச்சு. ச்சே இதப் போயி பெருசா இறைவன் சொன்னாரு. இங்க பாத்தா ஒண்ணுமில்லைன்னு மனசுக்குள்ளாற நெனச்சுக்கிட்டே அந்த ஆளுகிட்ட சொல்லிக்கிட்டு கடவுளப் பாக்குறதுக்குப் போனாரு.

அங்கபோயி கடவுளப் பாத்துட்டு நடந்ததச் சொல்லிட்டு, “என்னய மாதிரி சொல்வாருன்னு பாத்தா அந்த ஆளு ஒங்கபேர ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவைதான் சொன்னாரு. இதுக்காக அவர தலையில தூக்கி வச்சிக்கிட்டுக் கொண்டாடுறீகன்னு” சொன்னாரு.

அதக் கேட்ட கடவுளு, சரி நீயி சொல்றது அப்பறம் இருக்கட்டும். இங்க வா. இந்தக் கிண்ணத்துல இருக்குற எண்ணெய எடுத்துக்கிட்டு இந்த ஒலகத்தை நீ சுத்திக்கிட்டு வரணும். ஒரு சொட்டுக் கூட இந்தக் கிண்ணத்துல இருக்கற எண்ணெய் கீழ சிந்தக் கூடாதுன்னு’’ சொல்லிநாரதர அனுப்பி வச்சாரு.

இதென்ன பிரமாதமா நான்போயிட்டு வர்றேன்னு இறைவனுக்கிட்ட இருந்த எண்ணெய்க்கிண்ணத்தை வாங்கிக்கிட்டு ஒலகத்தைச் சுத்த ஆரம்பிச்சாரு. எண்ணெய் தளும்பிக்கிட்டு இருந்துச்சு. ஒரு சொட்டுக் கீழ விழாம கவனமா ஒலகத்தைச் சுத்திக்கிட்டு வந்தாரு நாரதரு. ஒருவழியாக் ஒலகத்தைச் சுத்திக்கிட்டு வந்து கடவுளுக்கிட்ட அந்த எண்ணெய்க் கிண்ணத்தை வச்சாரு.

இறைவன் நாதரப் பாத்துட்டு, “என்ன நாரதா எத்தனை முறை என்னோட பேசச் சொன்ன. வாய் ஓயாமா என்னோட பேரைச் சொன்னியா?ன்னு’ கேட்டாரு. அதுக்கு நாரதரு, ”பகவானே எப்படி முடியும். அந்தக் கிண்ணத்துல இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கீழ சிந்தக் கூடாதுன்னு சொன்னீங்கள்ள. அதனால அதுலயே என்னோட கவனத்தை அந்தக் கிண்ணத்துலயே வச்சித் தொலைச்சுட்டேன். அதனால ஒங்க பேரை ஒரு முறை கூட என்னால சொல்ல முடியலன்னு” சொன்னாரு.



அதக் கேட்ட பகவான், “பாத்துக்கிட்டியா ஒன்னையவிட அந்த குடும்பஸ்த்தன்தான் உயர்ந்தவன். தன்னோட கடுமையான குடும்ப வேலைகள்ளையும் என்னைய நெனச்சிக்கிட்டே ஏம்பேரச் சொல்லிட்டுத்தான் எதையும் செய்யிறான். ஆனா நீயி எண்ணைய் கீழ சிந்திவிடமா இருக்கிறதுக்காக என்னோட பேரைச் சொல்லல. அதனால ஒன்னைய விட அந்தக் குடும்பஸ்தான் ஒசந்தவன்னு” சொன்னாரு.

இதைக் கேட்ட நாரதரு வெட்கப்பட்டுத் தலை குனிஞ்சாரு. பகவானப் பாத்துட்டு, “கடவுளே என்னைய மன்னிச்சுருங்க. தலைக்கனமாப் பேசிட்டேன். என்னயவிட அந்த குடும்பஸ்தன்தான் ஒசந்தவன்னு தெரிஞ்சிக்கிட்டேன்னு” சொன்னாரு. தன்னோட கஷ்டமான நேரங்கள்லயும் இறைவனை எவன் நெனைக்கிறானோ அவன்தான் உயர்ந்தவன்னு எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1aw.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License