இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

21. அக்கா தங்கச்சி கதை


அக்கா தங்கச்சிகளப் பத்தி நெறையக் கதைகள் இந்தப் பக்கத்துல வழங்கி வருது. வளர்ரபோது எல்லாரும் கள்ளங் கபடமில்லாமத்தான் வளர்றோம். அதுக்குப் பின்னால அவங்க அவங்க நடத்தையினாலயும் சூழலாயும் மாறிப் போறாங்க. அப்பறம் அவங்க மனசுல ஏற்றத்தாழ்வு வந்து பொறாமை போட்டின்னு தேவையில்லாத குணமெல்லாம் வந்து குடியேறி வாழ்க்கையே பொறட்டிப் போடுற அளவுக்குப் போயிடுது. இததெளிவாக்குற மாதிரி ஒரு கத புதுக்கோட்டை வட்டாரத்துல வழங்கி வருது.

ஒரு ஊருல அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரு இருந்தாங்க. பெரியவ நல்லவ. ஆனா சின்னவ பொறாமை புடிச்சவ. எல்லாம் தனக்கு மட்டுமே கெடைக்கணும்னு நெனைக்கக் கூடிய சுயநலக்காரி.

அக்காவைப் பக்கத்தூருல இருக்கற ஒரு விவசாயிக்கும் தங்கச்சிகாரிய அதே ஊருல நல்ல வசதி படைச்ச ஒருத்தருக்குமா அவங்க அப்பா கட்டிக் கொடுத்தாரு. அக்கா தங்கச்சிங்க ரெண்டுபேரும் ஒரே ஊருல அடுத்த அடுத்த தெருவுல இருந்தாங்க.

அக்காகாரி தங்கச்சிகாரி மேல ரொம்பப் பாசமா இருந்தாலும் தங்கச்சிகாரிக்கு அதுபுடிக்காது. ஏன்னா தன்னைவிட வசதி கொறைவா இருக்கறதால தன்னோட அக்காகாரியோட பேசினா தன்னோட கௌரவம் கொறைஞ்சி போயிடும்னு நெனச்சி அக்காகாரி வந்தா மொகங்குடுத்துப் பேசமாட்டா.

இவ இப்படி இருக்கறதப் பாத்த அக்காகாரி அதப் பெருசா எடுத்துக்கிடல. அக்காகாரி தன்னோட வீட்டுக்கு யாராவது வந்து ஒதவின்னோ பொருளோ கேட்டா ஒடனே அவங்களுக்குக் கொடுத்துருவா. ஆனா தங்கச்சிகாரி ரொம்பக் கருமி. எச்சிக்கையாலகூட காக்கையா வெரட்டமாட்டா.

அக்காகாரி தன்னோட வீட்டுக்கு வர்ரவங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து ஏழையாப் போயிட்டா. அப்படி ர்ப்ம்ப ஏழையாப் போனாலும் அக்காகாரி கஷ்டம்னு வந்து யாராவது எதாவது கேட்டாலும் அப்படியும் தன்னால முடிஞ்சதக் கொடுத்தா.

ஒருநாளு அக்காகாரியும் அவளோட புருஷனும் சாப்புடறதுக்கு எதுவும் இல்லாம பட்டினியாக் கெடந்தாங்க. யாருக்கிட்டயும் எதுவும் கேக்கறதுக்கும் அவங்களுக்குக் கூச்சம். பச்சத்தண்ணிய மோந்து குடிச்சிட்டு ஆண்டவன நெனச்சிக்கிட்டு படுத்திருந்தாங்க. அப்படியே பசிக் களைப்புல தூங்கிட்டாங்க.

அப்படிப் படுத்திருந்தவங்களோட கனவுல திடீர்னு ஒரு பெரியவரு வந்தாரு. வந்த பெரியவரு, ‘‘நீங்க கவலப் படாதீங்க... நல்லவங்க கஷ்டப்படறத பார்க்கறதுக்கு என்னால முடியாது. எல்லாருக்கும் ஒதவி செஞ்ச ஒங்களுக்கு நன் ஒதவி செய்யிறேன். நான் சொல்றத மட்டும் கவனமாக் கேட்டுக்கோங்க... ஒங்க வீட்டுக்கு நாளைக்குக் காலையில ஒரு வயசான பெரியவரு வருவாரு. அவரு வந்த ஒடனே நீங்க யோசிக்காம பெரிய ஒலக்கைய எடுத்து அவரோட மண்டையில அடிச்சிப்பாருங்க. அப்படி அடிச்ச ஒடனே அவரு தங்கச் சிலையா மாறி கீழ விழுவாரு. அந்தத் தங்கச் சிலைய எடுத்து வித்து நீங்க சந்தோஷமா இருங்க’’ அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.



திடீர்னு கண்ணுவிழிச்சிப் பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனும் அவங்க அவங்க பாத்த சொப்பனத்தை(கனவை) ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிட்டாங்க. கனவுல வந்த பெரியவரு ஆண்டவனாத்தான் இருக்கணும். அப்படி இல்லைன்னா ரெண்டுபேருக்கும் எப்படி ஒரேமாதிரி கனவு வந்திருக்கும்னு நெனச்சிக்கிட்டு அதிகாலையில எழுந்திருச்சி குளிச்சிட்டு சாமியக் கும்பிட்டுட்டு ஒலக்கைய வச்சிக்கிட்டு வாசலப் பாத்துக்கிட்டுக் காத்திருந்தாங்க.

பளபளன்னு விடிஞ்ச ஒடனே வயசான பெரியவரு ஒருத்தரு வந்து அக்காகாரியோட வீட்டுக்கு முன்னால வந்து நின்னாரு. அதப் பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனுக்கும் ரொம்ப ரொம்ப ஆச்சரியம். அக்காகாரி தன்னோட வீட்டுக்காரனுக்கிட்ட பெரிய ஒலக்கைய எடுத்துக் கொடுத்து அந்தப் பெரியவர் மண்டையில அடிங்கன்னு சொன்னா.

அவனும் எதைப் பத்தியும் யோசிக்காம கனவுல வந்த பெரியவர் சொன்னமாதிரியே நடு மண்டையில ஓங்கி அடிச்சான். அடிபட்ட அந்தப் பெரியவரு ஒடனே தங்கச் சிலையா மாறி கீழ விழுந்தாரு. அதப்பாத்த அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரனும் அந்தச் சிலைய வீட்டுக்குள்ளாறக் கொண்டுபோயி பத்திரப்படுத்திட்டாங்க.

அதுக்குப் பெறகு அந்தச் சிலையில இருந்து கொஞ்சங்கொஞ்சமாத் தங்கத்த எடுத்து வித்துட்டு தங்களுக்குத் தேவையானத வாங்கிக்கிட்டாங்க. அதோடுமட்டுமில்லாம நெலம்நீச்சுன்னு வசதியா வாழ்ந்து வந்தாங்க. தங்களோட வீட்டுக்கு வர்றவங்களுக்கும் வேணுங்கறதையும கொடுத்தாங்க.

அக்காகாரி வசதியா மாறுனதப் பாத்த தங்கச்சிகாரிக்குப் பொறுக்க முடியல. இத எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு நெனச்சி ஒடனே அக்காகாரி வீட்டுக்கு வந்தா. என்னைக்கும் வராத தங்கச்சிகாரி தன்னோட வீட்டுக்கு வந்ததப் பாத்த அக்காகாரி தங்கச்சிய கூப்புட்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்தா.

ஆனா, தங்கச்சிகாரி அக்காகாரிக்கிட்ட, ‘‘அக்கா ஒனக்கு ஏம்மேல பாசம்னா நான் கேக்குறதுக்கு மட்டும் பதிலச் சொல்லு. நீ எப்படி இந்தமாதிரி வசதியா வந்த? அந்த ரகசியத்த என்கிட்ட சொல்லு’’ அப்படீன்னு கேட்டா.

அதக்கேட்ட அக்காகாரி தங்கச்சியோட நச்சரிப்புப் பொறுக்க முடியாம நடந்தத அப்படியே சொன்னா. தங்கச்சிகாரிக்குப் பேராசை அதிகமாயிடிச்சி. அவ ஒடனே தன்னோட வீட்டுக்குப் பொறப்பட்டு வந்து தன்னோட வீட்டுக்காரனுகிட்ட சொன்னா. அதுக்கு அவன், ‘‘நாமளும் சாமியக் கும்புட்டுட்டுப் படுப்போம். கடவுளு நம்மளோட கனவுல வந்து ஏதாவது சொல்றாரான்னு பாப்போம்னு’’ சொன்னான்.

ரெண்டுபேரும் சாமியக் கும்புட்டுட்டுப் படுத்தாங்க. ஆனா அவங்களுக்குத் தூக்கமும் வர்ல. கனவும் வரல. இருந்தாலும் தங்கச்சிகாரி தன்னோட புருஷங்காரனுகிட்ட, ‘‘ஏங்கனவுல சாமி வந்து ஒங்க வீட்டுக்கு நாளைக்குக் காலையில பிச்ச கேட்டு வர்ற பெரியவர ஒலக்கையால மண்டையில அடிங்க அவரு தங்கச்சிலையா மாறி விழுவாரு. அந்தச் சிலையத் தூக்கி நீங்க வச்சிக்கிடுங்க.ன்னு சொன்னாரு’’ அப்படீன்னு சொன்னா.

அவளோட புருஷனும் சரி இன்னக்கிக் காலையில நம்ம வீட்டுக்கு வர்ர வயசான பெரியவர மண்டையில அடிச்சித் தங்கச்சிலைய எடுத்துக்குவோம்னு சொல்லிட்டு அதிகாலையில ஏந்திருச்சி குளிச்சிட்டு வந்து ஒலக்கைய வச்சிக்கிட்டுக் காத்திருந்தான்.

தங்கச்சிகாரியும் புருஷன் பக்கத்துல காத்துக்கிட்டு இருந்தா. பொழுதும் விடிஞ்சிருச்சு. கொஞ்ச நேரத்துல ஒரு வயசான பெரியவரு, ‘‘அம்மா பசிக்குதும்மா... கொஞ்சம் சோறு இருந்தாப் போடுங்கம்மான்னு’’ கேட்டாரு. அதக்கேட்ட தங்கச்சிகாரி தன்னோட புருஷங்கிட்ட, ‘‘யோசிக்காமப் போயி ஒலக்கய எடுத்து அந்தப் பெரியவரோட நடு மண்டையில ஓங்கி ஒரு போடு போடுங்க... போங்க அந்தாளு போயிருவாரு... போங்க போங்கன்னு’’ அவனப் போகச்சொன்னா.



அவனும் வேகவேகமாப் போயி அந்தப் பெரியவரோட மண்டையில ஓங்கி அடிச்சான். அந்த அடி தாங்க முடியாம மண்டை பொளந்துபோயி இரத்தம் பெருகக் கீழ விழுந்து செத்துப்போயிட்டாரு. அந்தப் பெரியவரோட சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்துல இருக்கறவங்க ஓடியாந்து பாத்தாங்க பெரியவர ஒலக்கையால அடிச்சுக் கொன்ன தங்கச்சிகாரியயையும் அவளோட வீட்டுக்காரனையும் புடிச்சிக்கிட்டுப் போயி அந்த ஊரு ராசாக்கிட்ட ஒப்படைச்சாங்க. அந்த ராசா அவங்க சொன்னதக் கேட்டு, அவங்களுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு. இவங்கள இப்படியே விட்டுட்டோம்னா எல்லாரையும் அடிச்சே கொன்னுபுடுவாங்கன்னு சொல்லி அவங்கள வெட்டுப்பாறைக்குக் கொண்டு போயி வெட்டிக் கொல்லச் சொன்னாரு.

தங்கச்சிகாரியும் அவளோட வீட்டுக்காரனும் மனசு நொந்துபோயி அழுதுகிட்டே போனாங்க. பொறாமையும் ஆசையும் அவங்களோட வாழ்க்கையையே அழிச்சிருச்சி. அவங்களோட முடிவ அவங்களாகவே தேடிக்கிட்டாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1u.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License