இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

23.செவ்வாய்ச்சாமி


ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சாமியக் கும்புடுற வழக்கம் இன்றைக்கும் இருந்து வர்றது எல்லாருக்கும் தெரியும். அதுலயும் இந்தப் பக்கம் ஆடி மாசத்துல வர்ற செவ்வாய்க்கிழமையில பெண்கள் மட்டும் ஒண்ணாச் சேர்ந்து சாமி கும்புடுவாங்க. அதுக்குப் பேரு செவ்வாய்ச்சாமி கும்புடுறதுன்னு சொல்வாங்க. அதென்ன செவ்வாய்ச்சாமின்னு கேட்டா அதுக்கு ஒரு கதையச் சொல்றாங்க.

ஒரு ஊருல நல்ல செல்வாக்கோட ஒரு குடும்பம் இருந்துச்சு. அந்தக் குடும்பத்துல ஒரேயொரு பொம்பளப்புள்ள இருந்துச்சு. அந்தப் பொம்பளப் பிள்ளையோட ஏழு பேரு அண்ணந்தம்பிக இருந்தாங்க. அந்த ஏழு பேரும் அந்தப் பிள்ளையத் தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க. தங்கச்சி பேருல அத்தன பேரும் உசிரா இருந்தாங்க. இப்படி இருக்கற போது அவளும் பெரியவளானா.

அந்தப் பிள்ளையைப் பொண்ணு கேட்டு பல பக்கத்துல இருந்தும் பலபேரு வந்தாங்க. அந்த ஏழுபேரும் சீருசெனத்தியோட பக்கத்துல இருக்குற ஊருல ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்தானுக. அவனோட குடும்பம் நடுத்தரமானதுதான். ஆனா அவன் ரொம்ப நல்லவன். அதனாலேயே அவனுக்கு அந்தப் புள்ளைய அந்த ஏழு பேரும் கட்டிக் கொடுத்தானுக. அவனும் அந்தப் புள்ளைய நல்லாப் பாத்துக்கிட்டான். அண்ணந்தம்பிக ஏழு பேரும் கலியாணமும் பண்ணிக்கிட்டு ஒண்ணாவே வாழ்ந்தானுக. அவனுக நல்லா இருந்தாலும் அவங்க மனைவிங்க வந்த நேரமோ என்னமோ வீட்டுல இருந்த செல்வமெல்லாம் மெல்ல மெல்ல கொறையத் தொடங்கிடுச்சு.

தங்கச்சிகாரியக் கட்டுனவன் வீடு ரெம்ப ரெம்ப வளமையா மாறுச்சு. சாதாரணமா இருந்தவன் குடும்பம் பேரும் புகழுமா மாறுச்சு. ஆனா அதுக்கு நேரரெதிரா அந்த ஏழு அண்ணந் தம்பிகளோட குடும்பமும் வறுமையில வாடத் தொடங்கிடுச்சு...

அவனுகளும் கடுமையா ஒழைச்சாங்க. ஆனாலும், அவனுக குடும்ப ரொம்ப ரொம்ப வறுமையில தள்ளாடத் தொடங்கிடுச்சு. வறுமையில இருந்தாலும் அவனுக தங்கச்சிய மறக்காம அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சிக்கிட்டு வந்தாங்க. அவங்களோட தங்கச்சிகாரிக்கு அண்ணனுக குடும்பம் ரொம்ப கஷ்டப்படுதேன்னு ரொம்ப ரொம்ப வருத்தம். அவளும் தன்னால முடிஞ்ச ஒதவிகள அண்ணனுகளுக்குச் செஞ்சா. இருந்தாலும் அந்த ஒதவிகள்ளாம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆயிடிச்சி.



இருந்தாலும், அவளால சும்மா இருக்க முடியல. அப்போதைக்கு அவ வீட்டுக்கு ஔவையாருக் கௌவி வந்தாங்க. தன்னோட வீட்டுக்கு வந்த ஔவையார தங்கச்சிக்காரி நல்லாக் கவனிச்சிக்கிட்டா. ஔவையாரும் ரொம்ப சந்தோஷப்பட்டுப் போனாங்க. தங்கச்சிக்காரி தன்னோட அண்ணன்களோட நெலமைய எடுத்துச் சொன்னா.

அதையெல்லாம் கேட்ட ஔவையாரு அவளுக்கு செவ்வாச்சாமி கும்புடுறதப் பத்தியும் வெரதம் இருக்கறதப் பத்தியும் சொல்லிக் கொடுத்தாங்க. தங்கச்சிக்காரியும் தன்னோட அண்ணன் வீட்டுக்குப் போயி அண்ணன் பொண்டாட்டிங்களக் கூட்டிக்கிட்டு தன்னோட வீட்டுக்கு வந்தா.

அவங்க வந்த மாசம் ஆடிமாசமானதால ஔவையாரு சொன்னது மாதிரி சொல்லிக் கொடுத்து மாவ இடிச்சி யாருக்கும் தெரியாம தானும் அண்ணிகளும் சேர்ந்து ஔவையாரு சொன்ன சாமிக்குப் படைச்சிச் சாப்புட்டாங்க. இதே மாதிரி ஆடி மாசம் வந்த அத்தனை செவ்வாய்க்கிழமையும் வெரதம் இருந்து சாமியக் கும்பிட்டு வந்தாங்க.

அப்படி வந்ததால வெரதம் முடிஞ்ச நாள்ல இருந்து தங்கச்சிகாரியோட அண்ணனுக வீட்டுல செல்வம் வளம் கொழிக்கத் தொடங்கிடுச்சி. அண்ணன்கள் எல்லாரும் நல்ல செல்வத்தோட வாழத் தொடங்கினாங்க. அண்ணனுகளுக்கும் அவங்களோட மனைவிகளுக்கும் ரொம்பச் சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் தங்களோட தங்கச்சிதான்னு நெனச்சி தங்களோட தங்கச்சிய ரொம்பக் கொண்டாடுனாங்க.



ஔவையாரு சாமியக் கும்பிட்டதால செவ்வாய்க்கிழமை கும்புடுற சாமிக்கு ஔவையாரு சாமின்னு பேரு வச்சிட்டாங்க. செவ்வாச்சாமி கும்புடுறபோது யாரும் ஆம்பளங்க பாக்கக் கூடாது. அதோடு மட்டுமில்லாம சாமிக்குப் படைச்சத சாமி கும்புடுறவங்க மட்டுமே சாப்புடுவாங்க. யாருக்கும் கொடுக்கறது இல்லை. தங்கச்சிக்காரியும் அவளோட அண்ணன் பொண்டாட்டிகளும் செவ்வாச்சாமியக் கும்புட்டு செல்வத்தோட வாழ்ந்தாங்க. இன்னைக்கு வரைக்கும் இந்தச் செவ்வாச்சாமி கும்புடுற வழக்கம் இருந்துக்கிட்டு இருக்கு... உங்க ஊரிலும் இந்த ஔவையார் சாமியைக் கொழுக்கட்டை வச்சுக் கும்பிடுற பழக்கமிருக்கா...?

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1w.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License