இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

24.மனசுச் சுத்தம்


எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்னு எல்லாரும் சொல்வாங்க. மனசு நல்லா இருந்தா எல்லாம் நல்லாருக்கும். மனசு நல்லா இல்லைன்னா எந்தக் காரியமும் கெட்டுப் போகும். அதனால நல்ல மனசோட எதையும் செய்ய வேண்டும்னு சொல்வாங்க. இதைப் பத்தி ஒரு கதை வழக்கத்துல இருந்து வருது.

எங்க ஊருல இருந்து காவடி எடுத்துக்கிட்டு நடந்தே பழனிக்குப் போவாங்க. அந்தக் காலத்துல வழியில நெறையக் காடுகளைத் தாண்டி நடந்து போகணும். அப்படிப் போனவங்க சுத்த பத்தமா விரதம் இருந்து கோவிலுக்குப் போகணும். சுத்தபத்தமாப் போகலைன்னா காவடி எடுத்துக்கிட்டுப் போறவங்கள வழியில செந்நாயோ, புலியோ அடிச்சிக் கொன்னுடும். பழனிக்கு நடந்து போயிட்டு நடந்தே திரும்பி வரணும்.

முருகனோட அருள் இருந்தாத்தான் நல்லபடியாப் போயிட்டு நல்லபடியாத் திரும்பி வர முடியும். இல்லைன்னா பாதி வழியிலேயே இறந்து போயிடுவாங்க. இப்படித்தான் காவடி எடுத்துக்கிட்டுப் போறவங்க ரொம்பக் கட்டுப்பாட்டோட போவாங்க.

அண்ணந் தம்பிக ரெண்டு பேரு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் முருகன் மேல ரொம்ப பக்தி உள்ளவங்க. அவங்க ரெண்டு பேரும் பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கிட்டு கொஞ்சம் அரிசியையும் எடுத்துக்கிட்டுக் காவடியையும் தூக்கிக்கிட்டு பழனிக்கு நடந்து போனாங்க. ஏன்னா அந்தக் காலத்துல இப்ப உள்ளது மாதிரி கடைகள்ளாம் இருக்காது. அண்ணந் தம்பிகள்ள தம்பி சாப்பாட்டுல ரெம்பப் பிரியமா இருப்பான். அதுலயும் மீனுன்னா அவனுக்கு அலாதிப் பிரியம். மீன எங்கயாவது கண்டுட்டான்னா விடமாட்டான். அதைப் பிடிச்சிச் சாப்புடணும்னு துடியாத் துடிச்சிப் போயிடுவான். சாப்புட்டாத்தான் அவனுக்கு நிம்மதி.

அண்ணனும் தம்பியுமா ஒவ்வொரு ஊராக் கடந்து பழனிக்கு நடந்து போயிக்கிட்டே இருந்தாங்க. அப்படிப் போயிக்கிட்டு இருந்தப்ப ஒருநாளு ஒரு ஆத்து ஓடையக் கடந்து போக வேண்டிய சூழ்நிலை. அண்ணனும் தம்பியும் தைரியமா ஆத்து ஓடையில எறங்குனாங்க. அது கொஞ்சந்தான் தண்ணீ இருந்துச்சு. அதுனால பயமில்லாம கடந்தாங்க. அப்படிக் கடந்தபோது அந்த ஓடையில பெரிய பெரிய மீனுக துள்ளிக் குதிச்சுச்சு.

தம்பிகாரனுக்கு அந்த மீனுகளப் பாத்த ஒடனேயே புடுச்சிச் சாப்புடணும் போல இருந்தது. அவனும் ஆசைய அடக்கி அடக்கிப் பார்த்தான். அவனால முடியல. அண்ணனுக்கிட்டச் சொன்னாச் சண்டைக்கு வந்துடுவான்னும் பயம்.

அண்ணனுக்கு அந்த மீனுகளப் பாத்தவுடனேயே, ‘‘ஆஹா நம்ம தம்பி இந்த மீனப் பார்த்த உடனேயே வரமாட்டானே! ரெண்டு மீனையாவது பிடிச்சுச் சாப்புட்டாமல் வரமாட்டேன்னு சொல்வானேனு’’ நெனச்சுக்கிட்டே எதையும் கண்டுக்காம முன்னால போயிக்கிட்டே இருந்தான்.

தம்பிகாரனால ஆவல அடக்க முடியல. மெதுவா தன்னோட ஆசைய அண்ணனுக்கிட்ட, ‘‘அண்ணா நல்ல மீனா இருக்குது. இதுல ரெண்டு மூணு மீனையாவது பிடிச்சுச் சாப்புடணும்போல இருக்குது. இந்த ஓடைக் கரையில இன்னைக்குத் தங்கி இந்த மீனப் புடிச்சிச் சாப்புட்டுட்டு பெறகு பழனிக்கு நடந்து போயிருவோம்னு’’ சொன்னான்.



அண்ணனுக்குக் கோவங் கோவமா வந்துருச்சு. ‘‘ஏன்டா கடுமையா வெரதம் இருந்து நாம பழனிக்குக் காவடி எடுத்துக்கிட்டுப் போறம். நீ என்னடான்னா இந்த மீனப் பாத்த உடனேயே அதப் பிடிச்சிச் சாப்புடணும்னு சொல்றியே! இது நல்லா இருக்காடா? பேசாம நாக்க அடக்கிக்கிட்டு வா. முருகனக் கும்பிட்டு வந்து பெறகு பாத்துக்கலாம்னு’’ சொன்னான்.

ஆனா, தம்பிகாரனுக்கு ஆசைய அடக்க முடியல. அவன் அண்ணனப் பாத்து, ‘‘நீ வேணாப் போயிக்கிட்டு இருண்ணே! நானு இந்த மீனப் பிடிச்சிக் கொழம்பு வச்சிச் சாப்புட்டுட்டு வர்றேன்னு’’ சொல்லிட்டு அந்த ஓடைக்கரையில காவடிய எறக்கி வச்சிட்டு கழுத்தில இருந்த மாலையைக் கழட்டி வச்சிட்டு மீனப் புடிக்கத் தயாராயிட்டான்.

அண்ணங்காரன் எவ்வளவோ தடுத்தும் அவன் கேக்கல. அதனால அண்ணங்காரன் தம்பிய விட்டுட்டுத் தனியா பழனிக்கு நடந்து போக ஆரம்பிச்சிட்டான். தம்பிகாரன் முருகன மனசாறக் கும்பிட்டான். ‘‘அப்பா முருகா… என்னால மீனு திங்கிற ஆசைய விட்டுற முடியல… என்னையக் காப்பாத்துறதும் நீதான். வாழ வைக்கிறதும் நீதான். நான் செய்யிறது தப்புன்னா என்னைய மன்னிச்சிடுன்னு’’ சொல்லிட்டு மீனப் புடிக்க ஆரம்பிச்சான்.

பெரிய பெரிய மீனு. நாலஞ்சுதப் பிடிச்சு. நறுக்கி அலசி கொழம்பு வச்சி அத அப்படியே ஒரு எலையில போட்டு முருகனுக்குப் படைச்சான். பெறகு முருகனுக்குப் படைச்ச சாப்பாட்ட முருகா இன்னைக்கு நீ கொடுத்த இந்தச் சாப்பாட்டச் சாப்புடுறேன். எனக்கிட்ட இருக்கறது எல்லாமே நீ கொடுக்கறதுதான். அதனால இந்த மீனையும் நீ எனக்குத் தந்ததா நெனச்சி ஒனக்குப் படைச்சிட்டுச் சாப்புடறேன். நீயும் இந்தச் சாப்பாட்ட ஏத்துக்கணும்’’ அப்படீன்னு வேண்டிக்கிட்டுச் சாப்புட்டான்.

நல்லாத் திருப்தியாச் சாப்புட்டு முடிச்சிட்டு மறுபடியும் அந்த ஓடையில குளிச்சிப்பிட்டு மாலையக் கழுத்துல போட்டுக்கிட்டுக் காவடியத் தூக்கிக்கிட்டு, ‘‘அரோகரா… அரோகரான்னு’’ சொல்லிக்கிட்டு வேக வேகமா நடந்து போனான்.

அவனுக்கு முன்னால போய்கிட்டிருந்த அண்ணங்காரன் தம்பி இப்பிடிப் பண்ணிப்பிட்டானேன்னு மனசுல நெனச்சிக்கிட்டே நடந்து போயிக்கிட்டிருந்தான். அப்படிப் போயிக்கிட்டு இருந்தபோது காலு போற அளவுக்குப் ஆழமான பள்ளம் ஒண்ணு இருந்துச்சு அதக் கவனிக்காம அவன் போனதால அதுக்குள்ளாற கால விட்டு காலு மூட்டு எறங்கிக்கிடுச்சு.

அவனால நடக்க முடியல. மெதுவா மெதுவா ஒரு காலால விந்தி விந்தி நடந்தான். அப்ப தம்பிகாரன் வேக வேகமா நடந்து வந்து அண்ணனைத் தொட்டுட்டான். அண்ணனைப் பாத்த தம்பிக்கு மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு. மெதுவாக் கைத்தாங்கலா அண்ணனைக் கூட்டிக்கிட்டு தம்பிகாரன் நடந்தான்.

அவங்க பல நாள் கழிச்சு பழனிமலையில ஏறி முருகன வந்து கும்பிட்டாங்க. அப்படிக் கும்பிட்டவங்களுக்கு முருகன் அருள் கொடுத்தார். அதுலயும் தம்பிகாரனுக்குத்தான் முருகனோட அருள் ஒடனே கெடச்சது. அண்ணனுக்கு அதுக்கும் பெறகுதான் கெடச்சது. அதைப் பாத்த அண்ணங்காரனுக்கு அழுகை அழுகையா வந்துச்சு.

அவன் முருகனப் பாத்து, ‘‘தெய்வமே ஒன்னையே நெனச்சிக்கிட்டு வந்த என்னோட கால ஒடச்சி இப்படி நடக்க முடியாமப் பண்ணிட்டியே... ஆனா அசுத்தம் பண்ணிட்ட என்னோட தம்பிக்கு ஒடனடியா அருளக் கொடுத்துட்டியே? இது ஒனக்கே நல்லாருக்கா?’’ அப்படீன்னு கேட்டான்.



அவனோட மனக்கொறையக் கேட்ட முருகன், ‘‘அப்பா ஓந்தம்பி செஞ்சதுல எதுவும் தப்பு இல்ல. அவன் என்னைக் கும்பிட்டுட்டு எனக்குப் படைச்சிட்டுத்தான் சாப்புட்டான். எல்லா நேரத்திலயும் அவன் என்னைய நெனச்சிக்கிட்டே இருந்தான். ஆனா நீ எப்பப் பாத்தாலும் மத்தவங்களப் பத்தித்தான் நெனச்சிக்கிட்டு இருந்தே. என்ன நெனக்கிறது குறைவா இருந்தது. ஒன்னோட கவனமெல்லாம் என்னைய விட்டுச் சிதறிப் போயிருச்சு. அதனாலதான் ஒனக்கு இந்த லேசான தண்டனைய மட்டும் கொடுத்தேன்’’ அப்பவும் ஒன்னோட தம்பி என்னைய நெனச்சிக்கிட்டு ஒன்னையும் சேத்தே கூட்டிக்கிட்டு வந்தான். அதனால அவனுக்கு ஒடனே அருள் கொடுத்தேன். எவன் என்னை முழுசா நம்புறானோ அவனுக்கு ஒடனே நான் அருள் கொடுத்துருவேன்னு’’ சொன்னார்.

அதைக் கேட்ட அண்ணங்காரன், ‘‘ஆ... ஹாஹா... என்னோட தம்பி மீனப் புடிச்சிச் சாப்புட்டு வர்றேன்னு சொல்றபோது அவனோட கஷ்டத்தைப் பகிர்ந்துக்காம நான்பாட்டுக்கு அவன விட்டுட்டுக் கிளம்பிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறுன்னு முருகனே எனக்குக் காட்டிக் கொடுத்துட்டான். இனிமே இந்த மாதிரியான இழிசெயலைச் செய்யக் கூடாதுன்னு’’ முடிவு செஞ்சிட்டு முருகனோட விபூதிய எடுத்துக் கால்ல தம்பியத் தடவச் சொன்னான். தம்பியும் அவனோட கால்ல முருகன நெனச்சி விபூதியப் பூசிவிட்டான். என்ன ஆச்சரியம் ஒடனே கால் சரியாயிடுச்சு. ரெண்டுபேரும் முருகனக் கும்பிட்டுட்டுத் திரும்பவும் பொடிநடையா நடந்து ஊருக்கு வந்து சேந்தாங்க.

ஊருக்குள்ளாற முருகனோட அருள எல்லாருக்கிட்டேயும் சொல்லிச் சொல்லி வாழ்ந்தாங்க. மனசு சுத்தமா இருந்தா இறைவன் எல்லாத்தையும் கொடுப்பாங்கறதுக்கு அவங்களோட வாழ்க்கையே ஒரு உதாரணமா இன்றைக்கு வரைக்கும் இந்தக் கதை வழக்கத்துல இருந்து வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1x.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License