இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


10. முஸ்லிம் பெயர் இல்லையே...!

நாங்கள் இந்த மூன்று நாடுகள் பயணத்திற்குத் திட்டமிடும் போதேச் சில உறவினர்களும் சில நண்பர்களும் கீழ்க்கண்டக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

• ஹஜ் யாத்திரை அல்லது உம்ரா ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது போய் வரவேண்டும். உம்ராவை சிறப்பாக நிறைவேற்றாமல் உம்ராவுக்கு முன்னும் உம்ராவுக்குப் பின்னும் மற்ற நாடுகள் பயணம் ஏன்? (ஒரு முஸ்லிம் மாரல் போலீஸ் நாங்கள் உம்ரா நிறைவேற்றிய பிறகு முகநூலில் பதிவிட்ட சில ஒளிப்படங்களைப் பார்த்துக் கோபமுற்று இவர் உம்ரா போய் வந்தததை பயணக் கட்டுரையாய் எழுதினால் இவரது வீட்டின் முன் நின்று தீக்குளிப்பேன் எனச் சூளுரைத்தார்)

• உம்ரா போய் வந்த பின் தனியாக ஒரு தடவை துபாய்க்கும் தனியாக ஒரு தடவை எகிப்துக்கும் போய் வரலாமே?

• ட்ராவல் ஏஜென்ஸிகள் துணையில்லாமல் மூன்று நாடுகள் பயணம் தற்கொலைக்குச் சமம். உன் கணவருக்கு வயது 65, உனக்கு வயது 62. சீனியர் சிட்டிசன் வயதில் சாகசம் தேவையா?

• ஏஜென்ஸி மூலம் வெளிநாட்டுப் பயணம் போகும் போது, ஒரு குழுவாய்ப் போவோம். குழுவாய்ப் போவது ஒரு கொண்டாட்ட மனநிலை. அதனை ஒத்தைக் குரங்காய் போய் இழக்கலாமா?

• காசு மிச்சம் பிடிக்கப் பார்த்து, கூடுதல் செலவு செய்து விட்டு வந்து நிற்கப் போகிறீர்கள். சேம் சேம் பப்பி ஷேம்.

கடந்த பத்து வருடங்களில் நானும் ஆர்னிகாவும் இந்தியாவில் சுற்றாத இடமே இல்லை.

பூரி ஜகன்னாதர் கோயில், கொனார்க் சூரியனார் கோவில், புத்தகயா, நாளந்தாப் பல்கலைக்கழகம், யுவான்சுவாங் மியூசியம், ஜெய்ப்பூர், உதய்பூர், பிகானீர், குஜராத், மேகாலயா, கேரளாவின் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா, மதுரா, ரிஷிகேஷ், காஷ்மீர் மற்றும் ஜம்மு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபர் தீவு, ஹிமாச்சல பிரதேஷ், எங்குமே எங்களுக்கு சிறு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. எல்லாம் இறைவன் பார்த்துப்பான் என்கிற நம்பிக்கை அல்லது நல்லதே நடக்கும் என்கிற பாசிடிவ் சித்தாந்தம்.


எங்களுக்கு வயதாகிவிட்டது. தனித்தனியாக நாடுகளைச் சுற்றிப் பார்க்க இனி ஆயுள் போதாது.

மகனிடமோ மகளிடமோ பணம் பெறக்கூடாது. அவர்களேக் கொடுத்தாலும் கூட வாங்கக் கூடாது.

ஒரு பயணம் போவது என்றால், அனைவரிடம் விசாரிப்பார் ஆர்னிகா. ஆனால் தனது சொந்த முடிவின்படி தான் பயணம் மேற்கொள்வார்.

அவர் ஜாடி என்றால் நான் மூடி.

அவர் என்ன சொன்னாலும் கட்டுப்படுவேன்.

ரயிலில் போகும் போது யாருடனும் அரசியல் பேச மாட்டார். எளிமையான சாப்பாடு. எளிமையான தங்குமிடம். வாகனம் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ. இரவு ரயில் பயணம்.

அதிகாலையில் பார்க்க வேண்டிய ஊருக்குப் போய்விட்டோம் என்றால் ரூம் போட மாட்டார். ரயில் நிலையத்திலேயேக் குளித்து, புத்தாடை உடுத்தி பயணச் சுமையை கிளாக் ரூமில் வைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவோம்.

அதே இரவில் அடுத்த ஊருக்கு ரயில் பயணம்.

அடுத்த நாள் காலையில் அடுத்த ஊர் சேரல். குளியல். பயணச் சுமையை கிளாக் ரூமில் பாதுகாத்தல் ஊர் சுற்றல்.

இப்படி நூறு நகரங்களை ஒரு நாள் ஒரு நாள் சுற்றுலாக்களாகச் சுற்றி வந்திருக்கிறோம்.

எங்களிருவருக்கும் லோயர் பர்த் எப்போதும் கிடைக்கும்.


என்னை நன்கு தூங்கச் சொல்லிவிட்டு ஆர்னிகா விழித்துக் கொண்டே வருவார். காரணம் ஒன்று பயணச் சுமை பாதுகாப்பு. நாங்கள் இறங்க வேண்டிய நேரம் அதிகாலை 3 மணியாக இருந்து இருவரும் அசந்து தூங்கிவிட்டால் என்னாவது என்கிற முன்னெச்சரிக்கை. ஊர் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னமே ஆர்னிகா இறங்கத் தயாராகி விடுவார். கம்பார்ட்மென்ட் வாசலில் நின்று ஸ்டேஷன் வரக் காத்திருப்பார். ரயில் நின்றவுடன் மெதுவாகத் தடுக்கில் கால் வைத்து இறங்குவார். அவசரமாய் இறங்கி நடை மேடையில் பல்டி அடித்து விடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்ச்சி அவருக்கு.

ஹஜ் யாத்திரையை அல்லது உம்ராவை ட்ராவல் ஏஜென்ஸிகள் முழு வியாபாரம் ஆக்கி விட்டன. ஏஜென்ஸிகள் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுகின்றனர்.

உம்ரா போக 15 நாட்கள் தேவையில்லை. ஆறு நாட்கள் போதும் என்பது ஆர்னிகா எண்ணம்.

இன்டர்நெட் யுகத்தில் ஒரு கிழவனும் ஒரு கிழவியும் தனியாகப் பயணம் போவது ஒன்றும் பிரம்ம வித்தை அல்ல. சரியான திட்டமிடல் இருந்தால் போதும் நிலவுக்கும் ஒரு சீனியர் சிட்டிசன் ஜோடி தனியே போய் வரலாம் என்பார் ஆர்னிகா.

“ஆர்னிகா உம்ரா ட்ரிப்பை பைனலைஸ் பண்ணு!”

ஜாஸ்மினிடம் கலந்து பேசி பின்வரும் நிகழ்ச்சி நிரல் வடிவமைத்தார்.

23 01 2025 இரவு ஜெத்தாவில் இருந்து மெக்காவுக்குச் செல்லுதல். நள்ளிரவில் மெக்காவின் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தல். விடியற்காலை காபா தரிசனம் +முதல் உம்ரா.

இரண்டாவது நாள் இரண்டாவது உம்ரா.

மூன்றாவது நாள் மூன்றாவது உம்ரா.

மூன்றாவது நாள் இரவு மதினா சேருதல்.

நான்காவது நாள் மதினாவில் ஜியாரத்

ஐந்தாம் நாள் தாயிப் அல்லது ஜெத்தா.

ஜெத்தா என்றால் ஐந்தாவது நாள் மாலை கெய்ரோவுக்கு விமானம் ஏறுதல்.


“ஆர்னிகா! உம்ரா நிறைவேற்றுவதற்கான சடங்குகள் நமக்குத் தெரியாது. சொல்லித் தர ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவை. இரண்டாவது காபாவின் முன் நம் இஸ்லாமிய நீதிக் கதை தொகுப்பு 22 கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள் வெளியிட ஒரு மக்கத்துப் பிரபலம் தேவை!”

“இரண்டையும் செய்து கொடுக்க மக்கத்தில் வசிக்கும் ஆன்மீக வழிகாட்டி பைரோஸ்கான் உதவுவார். அவரிடம் பேசி விட்டேன்!”

“நல்லது. மெக்காவில் மூன்று நாட்கள் தங்க விடுதி மதினாவில் ஒரு நாள் தங்க விடுதி தாயிப் அல்லது ஜெத்தாவில் ஒருநாள் தங்க விடுதி முன்பதிவு செய்ய வேண்டும்…!”

ஜாஸ்மினிடம் பேசினார்.

ஜாஸ்மின் மெக்காவில் தங்க ஒரு விடுதி அறையை முன் பதிவு செய்து கொடுத்தார்.

அஸாரின் ஹோட்டல் 2

அல் அஜிஜியா வடக்கு

அல்-ஐம்ஐம்மி தெரு

அல் பத் மசூதி முன்புறம்


மதீனாவில் தங்கக் கீழ்க்கண்ட விடுதி அறையை முன்பதிவு செய்து கொடுத்தார்.

ஹாஸ்டல் 35 / அஸ்சலாம் சாலை / 42315 / மதீனா / சௌதி அரேபியா ஜெத்தாவில் தங்கக் கீழ்க்கண்ட விடுதி அறையை முன்பதிவு செய்து கொடுத்தார் ஜாஸ்மின். ஹிரா தெருவில் அந்த விடுதி அமைந்திருந்தது.

ஹோட்டலின் பெயர் காரவான் ஜெத்தா ஹோட்டல்.

வாடகை ஒரு இரவுக்கு ரூ3055/-

“என்னம்மா… மெக்கா மதீனா ஜெத்தாவில் அறை புக் பண்ணி இருக்கிறாயே… பணம் ஏதாவது கட்டினாயா?”

“இல்லை. ரூம் செக் இன் பண்ணும் போது கட்டினால் போதும்!”

“நல்லது!”

“தாயிப் போறதா சொன்னீங்க… இப்ப ஜெத்தான்னு மாத்திட்டீங்க!”

“தாயிப் போயிட்டு அன்றே ஜெத்தா ஏர்போர்ட் வருவது மிக கடினம். தவிர தாயிப் ஒரு நாள் விசிட் ரொம்ப காஸ்ட்லி!”

- அக்பர் ட்ராவல் ஏஜென்ஸி. ஆர்னிகாவுக்கும் எனக்கும் உம்ரா விசா அப்ளை பண்ணினோம்.

ஏஜென்ஸி நண்பர் ஆர்னிகாவை மேலும் கீழும் பார்த்தார்.

“என்ன சார்?”

“அதென்ன ஆர்னிகா நாசர்? ஆர்னிகான்றது முஸ்லிம் பெயர் இல்லையே?”

“ஆர்னிகா என்றால் மருத்துவக் குணம் கொண்ட ஹோமியோபதி மலர். 28 வருடங்களுக்கு முன்னமே என் பெயரை ஆர்னிகா நாசர் என மாற்றிக் கொண்டேன்!”

“ஒரு விஷயம் சொன்னா கோபிச்சுக்கக் கூடாது!”

“என்ன?”

“ஆர்னிகா நாசர் இஸ்லாமிய பெயர் இல்லை என்பதற்காக உங்க உம்ரா விசா ரிஜெக்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது!”

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p10.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License