இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


5. செலவுக்குப் பணம்

நிலாமகன் கைபேசியில் அழைத்தான்.

“அம்மா!”

“என்னடா?”

“மூன்று நாடுகள் பயணம் போறீங்களே… செலவுக்குப் பணம் தேவைன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா?”

“எங்க பென்ஷன் பணம் வச்சுச் சமாளிச்சுக்குவம். பிள்ளைகளுக்குக் கொடுக்கணுமேத் தவிர, அவங்ககிட்டயிருந்து வாங்கக் கூடாது!”

“அவசரத் தேவைக்கு வாங்கிக்கங்க. அப்றம் திருப்பிக் கொடுங்க!”

“இப்ப என்ன செய்யனும்ன்ற?”

“நீங்க சொல்லித்தானே ஜெயப்ரியால சீட்டு போட்டேன்!”

“ஆமா மூணு லட்ச ரூபாச் சீட்டு…”

“இன்னும் நாலே மாதத்ல முடியப் போகுது. இப்ப அந்தச் சீட்டை அப்பா எடுத்தார்னா இரண்டரை லட்சம் ரூபா குறைஞ்சது கிடைக்கும். நானே இன்னொரு சீட்டும் போட்டுக்கிட்டு இருக்கிறதாலே ஜாமீன் கேட்க மாட்டான். சீட்டை எடுங்க. மாதம் பதினைஞ்சாயிரம் வீதம் திருப்பிக் கொடுங்க! நாளை மறுநாள் ஏலம்!”

“ஏலம் எடுக்க சிதம்பரத்துக்குப் போகனுமோ?”

“தேவை இல்லை. கிளை அலுவலகம் கோவை காந்திபுரத்ல இருக்கு. ஏலம் காலை 11 மணிக்கு. ஆன்லைன்ல போய் ஜாய்ன்ட் பண்ணிக்கலாம்!”

“உன் சீட்டுக்கு அப்பா போனா ஒத்துப்பாங்களா?”

“நான் ஏஜன்ட் ராஜசேகருக்கு தகவல் தெரிவிச்சிடுரேன். அப்பா போகும் போது ஆதார் கார்டு எடுத்திட்டு போகச் சொல்லு”

“அப்பா ஒத்துக்கிடனுமே…”

“நைசா சொல்லுங்க கேப்பார்!”


“நீ சொல்லக் கூடாதா?”

“இரண்டு ஆண் சிங்கங்கள் நட்பு பாராட்டாது!”

“பேச்சுவாக்குல உங்க ரெண்டு பேரையும் சிங்கம்னு வர்ணிச்சிக்குற?”

“சரி, நீங்க பெண் சிங்கம். என் பொண்டாட்டி ஒரு பெண் சிங்கம். என் மகன் அர்ஹான் ஒரு குட்டிச் சிங்கம். நாம ஒரு சிங்கம் குடும்பம் போதுமா?”

“கற்பனை பண்ணிப் பார்க்கப் பயமா இருக்கு. நீங்கல்லாம் சிங்கமா இருந்துட்டு போங்க. நான் பசுமாடா இருந்துக்கிரேன்!”

‘‘எனக்குக் கல்கத்தால சாப்பாடே பிடிக்கல. ஒத்தைக் குரங்கா இருக்றது வேற பிடிக்கவே இல்லை. தினம் குறைஞ்சது ஐம்பது பேஷன்ட் பார்த்திட்டு சக்கையா வாடகை வீட்ல வந்து விழுரேன். அதுக்கு ஏதாவது வழி செய்யும்மா!”

“டூர் போய்ட்டு வந்து பேசி ஒரு தீர்வை கொண்டு வர்றேன். தவிர உனக்கும் பஹிமாவுக்கும் இரண்டாவது குழந்தை பிறக்கட்டும்…”

“நீயும் உன் புருஷனும் ஜோடியா சேந்து இருக்கீங்களே மகனும் மருமகளும் பிரிஞ்சு ஆளுக்கொரு திசைல வாழனுமா?”

“ஓவரா பேசாதே. விருந்தினர் மாளிகையில் ரெண்டு கிழங்கள் சேந்து வசிக்கற மாதிரி நானும் உன் அப்பாவும் இருக்கிறோம்.. அபவாதம் பேசாதே!”

“சரிவிடும்மா… போனை வக்கிறேன்!”

“நேரத்துக்குச் சாப்பிடுடா… பை…” திறன்பேசியை வைத்தேன்.

ஜெயப்பிரியா அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பினார் ஆர்னிகா.

வரும்போதே அவர் முகம் இறுகியிருந்தது.

உங்களுக்கெல்லாம் 32 பல்லும் தெரியும்படி சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆர்னிகாவைத்தான் தெரியும்.

எனக்கு மட்டும்தான் உக்கிரம் தெறிக்கும் கோப முகங்கள் ஆயிரம் காட்டுவார்.


கல்யாணமான ஆரம்பக் கட்டத்தில் பயந்து நடுங்கி இருக்கிறேன். இப்போது பழகிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பணிபுரியும் போது காலையில் மஸ்டர்ரோல் எடுத்துத் திரும்பும் போதும் மாலையில் மஸ்டர்ரோல் எடுத்துத் திரும்பும் போதும் அவர் முகம் அதகளமாய் இருக்கும். குடித்துவிட்டுக் கலாட்டா செய்வார் ஒரு ஊழியர். தகுந்த விடுமுறை விண்ணப்பம் இல்லாமல் நீண்ட நாட்கள் பணிக்கு வராது பின் பணிக்கு திரும்பியிருக்கும் ஊழியர் சங்க பொறுப்பாளருடன் வந்து உரண்டை இழுப்பார்.

ஆர்னிகாவின் 35 வருடப் பணிக்காலம் ஆர்னிகாவைப் பொறுத்த வரை ஒரு கெட்ட கனவு போல. கெட்ட கனவுதான் அவருக்கு சோறு போட்டது. பல அனுபவங்களைத் தந்து எழுத்தாளராக மெருகேற்றியது.

ஆர்னிகா நாசரின் இடிதாங்கி நான். எத்தனை இடிகள் விழுந்தாலும் அதனை ஆழத்திற்கு கடத்தி விடுவேன். எங்களின் 35 வருட பொறுமைதான் இன்று ஓய்வூதியம் வழங்குகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில்தான் ஆர்னிகா பிரச்சனைகள் இல்லாமல் கதைகள் எழுதுகிறார். அவருக்கு தற்போதைய வாழும் காலம் தான் பொற்காலம்.

மதுரையில் பிறந்தார். திண்டுக்கல்லில் வளர்ந்தார். தஞ்சை பூண்டிபுஷ்பத்திலும் காந்திகிராமத்திலும் படித்தார். சிதம்பரத்தில் வேலை பார்த்தார். கோவையில் இளைப்பாறுகிறார். கோவை பாரம்பரியத்தின் தொன்மையையும் நகரத்தின் வசதிகளையும் உள்ளடக்கிய முப்பது சதவீத ஊட்டி.

தினம் மூன்று மணி நேரம் எழுதுவார். தினம் மூன்று மணி நேரம் தகவல் குறிப்புகள் எடுப்பார். தினம் இரண்டு மணி நேரம் கேஜி சினிமாவிலோ ஓடிடிகளிலோ சினிமா பார்ப்பார். வாரத்துக்கு ஒரு நாள் காய்கறி வாங்கி வருவது மட்டுமே அவர் வேலை. வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழப் போய் விடுவார். மனாஸ் கார்டனின் தலைவராக இருந்து நகரின் மேம்பாட்டுக்காக சில மணி நேரம் செலவு செய்வார்.

“சீட்டு என்னாச்சுப்பா?”

“சீட்டை எடுக்கல!”

“ஏன்?”

“இரண்டு லட்சத்தி எழுபத்திரெண்டாயிரத்துக்கு சீட்டு எனக்குச் சாதகமாக முடியுற வேளை ஒருத்தன் புகுந்துட்டான்!”

“என்ன பண்ணினான்?”

“தாறுமாறா ஏலம் கேட்டான். இரண்டே கால் லட்சம் வரை வந்திட்டான். ஏலத்தை ரொம்பத் தள்ளி எடுத்து மகனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்ரக் கூடாதுன்னு எண்ணி ஏலத்திலிருந்து விலகிட்டேன்!”

நொடி யோசித்தேன்.

“நீங்க செஞ்சது சரிதான். என்கிட்ட வேற ஐடியா இருக்கு!”

“என்ன?”

“நமக்கு பென்ஷன் டெபாசிட் ஆகிற பேங்க் அண்ணாமலைநகரில் இருக்கும் இண்டியன் பேங்க். அங்க ஒரு பென்ஷன் லோன்போடுங்க?”

“பென்ஷன் லோன் போட்டு உம்ரா போகலாமா?”

“பின்னாடி மாசங்கள்ல வர்ற நம்ம பென்ஷனை நாம முன்னாடி வாங்கிக்கிட்டு உம்ரா போரோம்.. அல்லாஹ் மன்னிச்சிருவான்!”

“லோன் வாங்கலாம். அதுக்கு ஒரு ஜாமீன்தாரர் வேணும். தவிர உன் கையெழுத்தும் தேவை!”

“ஒரு ஜாமீன்தாரர் ரெடி பண்றது ரொம்ப கஷ்டமா?”

“ஓய்வு பெற்ற பிறகு எனக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை. நான் அங்கு ஒரு அந்நியன்”

“உங்க பிரண்டு எக்ஸ்ரே டெக்னீஷியன் மனோகரனை ஜாமீன் தாரராக பிடி ஆர்னிகா!”


“முதல்ல போன்ல பேசி கேக்ரேன்!”

“நீங்களும் அவரும் நூறு கதை பேசி இருப்பீங்க. தீ தித்திக்கும் தீ அவர் சொன்ன கதைதானே? இன்னும் பேஸ்புக்ல ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டுத் தானே இருக்கீங்க?”

“முன்ன மாதிரி இல்ல. இப்பல்லாம் ஷுரிட்டி போட ஆயிரம் கண்டிஷன்கள் வந்து விட்டன. அவருக்கு மொதல்ல எல்ஜிபிலிட்டி இருக்கான்னு கேக்கனும்!”

“கேளுங்க!”

மாலையில் ஆர்னிகா மனேகரனுக்கு போன் செய்தார். மனோகரன் ஒரு எக்ஸ்ரே டெக்னீஷியன் என்றாலும் பத்து பல் மருத்துவர்களுக்கு சமமான மருத்துவ அறிவைப் பெற்றவர். செய்யும் வேலையில் போதை கொண்ட வொர்க்கஹாலிக்.

மனோகரனும் ஆர்னிகாவும் பேசிக் கொள்வதை நான் காது கொடுத்துக் கேட்கவில்லை. எனக்கு அது அனாவசியம். ஜாமீன்தாரர் கையெழுத்து போட அவர் வருகிறாரா இல்லையா என்பதே அதிமுக்கியம்.

கைபேசியை வைத்தார் ஆர்னிகா.

“ஜாமீன்தாரர் கையெழுத்து போட ஒத்துக்கிட்டார். பென்ஷன் பேமென்ட் ஆர்டர் வைத்திருந்தால் தான் பென்ஷன் லோன் கிடைக்குமாம். அதைத் தயார் பண்ணச் சொன்னார். முதலில் நான் மட்டும் ஜே செக்சன் போய் பிபிஓ ரெடி பண்ணிட்டு வரேன். அடுத்த வாரம் லோன் வாங்கப் போவோம்!”

அடுத்த நான்கு நாட்களில் பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் ரெடி பண்ணி விட்டார் ஆர்னிகா.

மருமகளைப் பார்த்துக் கொள்ள சம்பந்தியம்மா வந்துவிட்டார். நானும் ஆர்னிகாவும் சிதம்பரத்துக்கு கிளம்பினோம்.

ஒரு கற்றைத்தாள்களில் ஆர்னிகா, மனோகரன், குடும்ப ஓய்வூதியம் வாங்க தகுதி பெற்ற நான் கையெழுத்து இட்டோம்.


நான்கு இலட்ச ரூபாய்க்கு லோன் சாங்ஷன் ஆகியது.

மறுநாள் காலை பணம் ஆர்னிகாவின் வங்கிகணக்கில் கிரிடிட் ஆகும் என்றார்கள்.

நானும் ஆர்னிகாவும் கோவை திரும்பினோம்.

வங்கியில் பணம் போடப்பட்டதற்கான குறும்செய்தி வரக் காத்திருந்தோம். மாலை மூன்று மணி வரை காத்திருந்தோம்.

பின் ஆர்னிகா வங்கி மேலாளருக்குப் போன் செய்தார்.

“சாரி சார். உங்க லோன் ரிஜெக்ட்ட். உங்க மனைவி வகிதா நாசரின் ஆதார் கார்டில் அலிமா என்கிற பெயர் ஓவர்லாப் ஆகிறது. உங்கள் மனைவியின் பெயரை ஆதார் கார்டில் சரி செய்துவிட்டு லோன் கேட்க வாருங்கள்…”

ஆர்னிகா முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p5.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License