இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


7. துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள்

ஆர்னிகா மூன்று நாடுகள் பற்றிய தகவல் குறிப்புகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.

முதலில் துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள். மூன்றரை நாட்களில் முடிந்த வரை பார்ப்போம்.

1. குளோபல் வில்லேஜ் - கட்டணம் விடுமுறை நாட்களில் 30 திர்ஹாம் அல்லது 700 ரூபாய். வார நாட்கள் 575 ரூபாய். இது வருடம் முழுக்கத் திறந்திருக்காது. அக்டோபர் மாதத்தின் பின் பகுதியிலிருந்து மே மாதம் பின்பகுதி வரை தான் திறந்திருக்கும். அடுத்தத் திறப்பு அடுத்த அக்டோபர் மாதத்தின் பின்பகுதிதான்.

2. அபுதாபி அரைநாள் சுற்றுலா - ஒரு நபருக்கு ரூ2500 பார்க்கும் இடங்கள்:

அ) ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி

ஆ) பாரம்பரியக் கிராமம்

இ) எமிரேட்ஸ் அரண்மனை

ஈ) பேரீச்சம்பழம் அங்காடி

உ) பெர்ராரி வோர்ல்டு

ஊ) லோவர் அருங்காட்சியகம்

எ) பாப்ஸ் ஹிண்டு மந்திர்

3) இரவு - துபாய் டோவ் க்ரூஸ் படகு பயணம் மற்றும் விருந்து - தலைக்கு 2700 ரூபாய்

4) புர்ஜ் கலிபா - கட்டணம் ரூ 4200/-

5) டால்பினேரியம் - கட்டணம் தலைக்கு ரூ1161


6) இதிகாட் அருங்காட்சியகம் – தலைக்கு 600 ரூபாய்.

7) அல் பஹதி கோட்டை- ரூ70/-

8) துபாய் கோல்ட் சௌக் -இலவசம்

9) சேக் முஹமது சென்டர் -தலைக்கு 3000 ரூபாய்.

10) துபாய் கிரீக் துறைமுகம் - துறைமுகம் நுழைவு இலவசம்.

11) துபாய் பிரேம் - தலைக்கு 1161ரூபாய்.

12) பாம் ஜுமைரா கடற்கரை – இலவசம்.

13) துபாய் நீர்ஊற்று - தலைக்கு ரூ1566.

14) துபாய் அக்குவாரியம் – தலைக்கு ரூ 4624/-

15) ஓமர் பின் அல் கத்தாப் மசூதி -முஸ்லிம்கள் மட்டும் இலவசம்.

16) எதிர்கால அருங்காட்சியகம் - தலைக்கு ரூ3700/.

17) மிர்ரகிள் தோட்டம் –தலைக்கு ரூ 2000/-

18) துபாய் பழைய நகரம் – இலவசம்.

19) துபாய் பாலைவன சபாரி – 2500 ரூபாய்

20) துபாய் மால் - இலவசம்.


“ஸோ… துபாயில் நாம் பார்க்கக்கூடிய இடங்கள் இருபது!” என்றார் ஆர்னிகா.

“இருபது இடங்களுக்கும் நுழைவு கட்டணம் கணக்கு பார்த்தா அதுவே அம்பதாயிரம் அறுபதாயிரம் ரூபாய் ஆகுதே!”

“இந்த இருபது இடங்களில் ஏழெட்டு இடங்களை கட் செய்யலாம்!”

“ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக டாக்ஸி செலவு ஹெவியா இருக்கும்!”

“ உண்மைதான்!”

“துபாய் ட்ரிப்பில் நாம் கவனிக்க வேண்டிய நாலு விஷயங்கள் உள்ளன. ஒன்று நம் தங்குமிடம். காஸ்ட்லியாக இருக்கக்கூடாது. கேப்ஸ்யூல் அறைகள் சீப்பாக கிடைக்கும். இரண்டு, நம் உணவுச் செலவு. நோ நான்வெஜிடேரியன் ஃபுட். மூன்று, ட்ரான்ஸ்போர்டேஷன். அதற்கு சுமி உதவி தேவை. யாராவது தமிழ் டிரைவர்களை சுமி அமர்த்திக் கொடுத்தால் தேவலை. நான்கு, சுற்றிப் பார்க்கும் இடங்களின் நுழைவுச் சீட்டுகளைத் தேதி பிரித்து முன்னமே எடுத்து விட வேண்டும்.”

திறன்பேசி சிணுங்கியது.

எதிர்முனையில் சுமி.

“வணக்கம் மாமி!”

“வணக்கம் சுமி!”

“இன்னும் இரண்டு வாரத்தில் என் அத்தை பையன் சுமேஷுக்கு கொச்சினில் திருமணம். இன்விடேஷன் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். நீங்களும் மாமாவும் ஷோரனூர் வந்து விடுங்கள். காரில் கொச்சின் போய்விடலாம். அப்படியே உங்கள் டூர் பற்றியும் பேசலாம்!”

“ஓகே சுமி!”

சுமேஷ் கல்யாணத்துக்கு நான் மட்டும் போய் வந்தேன்.

“என்ன திருமணம் நல்லபடியா முடிஞ்சதா?”

“முடிந்தது!”

“லவ் மேரேஜா?”

“இல்லை அரேஞ்டு மேரேஜ்தான்!”

“நல்லா கவனிச்சிட்டாங்களா?”

“ஓ. சுரேஷின் அம்மாஸ்தானத்தில் நின்று திருமணத்தை நடத்தி கொடுத்தேன். எனக்குப் புடவையெல்லாம் பரிசளித்தார்கள்!”

“ஓஹோ!”

“எல்லோரும் மாமா வரலையா மாமா வரலையான்னு கேட்டாங்க!”

“மகிழ்ச்சி!”

“சுந்தரம் நல்லா இருக்காரா?”

“நல்லா இருக்கார் வாயைத் திறந்தா மகன் மகள் பெருமைதான்!”

“சுந்தரத்தின் மனைவி கடும் உழைப்பாளி. அவரால் தான் சுந்தரத்தின் குடும்பம் தலைநிமிர்ந்தது. சுந்தரத்தின் அண்ணன் ஸ்ரீதருக்கும் எனக்கும்தான் ஆகாது. யூனியன் மோதல். சுந்தரத்தின் மகன் சஜி கெட்டிக்காரன். அவன் வீட்டில் தங்கிதான் மும்பை முழுக்க சுற்றி பார்த்தோம்.. பொதுவாக கேரளாக்காரர்கள் அன்பானவர்கள் நட்பை பராமரிப்பவர்கள்…”

“உங்களுக்கு ஒரு திடுக்கிடும் ந்யூஸ் கொண்டு வந்திருக்கிறேன்!”

“என்ன?”

“சுமி துபாய் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஒன்ஸ் பார் ஆல் ஷோரனூர் வந்துட்டாளாம். தமிழ் டிரைவர்ஸ் கான்டாக்ட் எல்லாம் கைவசம் இல்லையாம்…”


ஒரு மாதிரி சிரித்தார் ஆர்னிகா.

“என்ன சிரிக்கறீங்க?”

“நாம எதை செய்ய தொடங்கினாலும் தடங்கல்கள் அடுக்கடுக்கா வந்து நிற்கும். தடங்கலை தாவி குதித்து போகனும்!”

“துபாய் விசா நாம் நேரடியா அப்ளை பண்ண வேண்டாம் கோயம்புத்தூர் அக்பர் டிராவல்ஸ் மூலம் செய்வது நல்லது என சுமி கூறினாள்!”

“சரி!”

இரவு எட்டு மணிக்கு மகள் ஜாஸ்மினுக்கு வாட்ஸ்அப் கால் பண்ணினேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஸ்!”

“வஅலைக்கும் ஸலாம் அம்மா. டூர் விஷயம் என்னாச்சு?”

சுமியை முழுக்க நம்பி ஏமாற்றம் அடைந்ததை விவரித்தேன்.

“துபாய்க்கு அவ கூப்பிடும் போதெல்லாம் நீங்க போகல. அவ வேலையை ரிசைன் பண்ணிட்டு வர்ற நேரமா பாத்து துபாய் போனா அவ என்ன செய்வா? விடுங்கம்மா.. உங்க டூரை இனி நான் பார்த்துக்கிரேன்!”

“என்னடி சொல்ற? நீ மெக்சிகோவில் உக்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணுவ?”

“எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இல்லாத ட்ராவல்ஸ் அனுபவங்களா? மெக்சிகோவிலிருந்து தனி ஆளா கிளம்பி மூணு விமானங்கள் மாறி இந்தியா வந்து மெக்ஸிகோ திரும்பலையா நான்? என் கணவர் ஒரு கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட்!”

“ஆமாம்!”

“20.01.2025 மாலை துபாய் போறீங்க. 23 .01.2025 மாலை ஜெத்தா கிளம்புறீங்க. இதுக்குள்ள நீங்க துபாய்ல என்னென்ன இடங்கள் பார்க்கலாம்? எங்கு தங்கலாம்? ஈஸி ட்ரான்ஸ்போர்ட்டேஷன் எப்படி பண்ணலாம்? மொத்தமா ஒரு அட்டவணை தயார் பண்ணுறேன். முதல் நாள் இரவு குளோபல் வில்லேஜ். இரண்டாம் நாள் அரை நாள் அபுதாபி டூர். இரவு துபாய் க்ரூஸ் சபாரி. மூன்றாம் நாள் ஒரு நான்கு இடங்கள்.

நான்காவது நாள் ஒரு மூன்று இடங்கள். நான்காவது நாள் மூன்றாவது இடம் பார்த்து முடித்த பின் நேராக துபாய் விமான நிலையம். ஓகே?”

“ஓகே ஜாஸ்!”

“அபுதாபி டூர், டோவ் குரூஸ், டெசர்ட் சபாரி இதெல்லாம் தனியார் ஏஜென்சிதான் அரேன்ஞ் பண்ணி தருவாங்க. மூணையும் முதல்ல புக் பண்ணிடுறேன்!”

“சரி!”

“மீதி டூரிஸ்ட் ஸ்பாட் எல்லாம் அதிகாரப்பூர்வ வெப் சைட்டுகளுக்கு போய் உங்க ரெண்டு பேருக்கும் என்ட்ரி டிக்கெட் புக் பண்றேன்!”

“ரைட்டோ!”

“துபாய் பிரேம் போனீங்கன்னா புர்ஜ் கலீபா வேண்டாம். துபாய் மால் பார்த்துட்டு இறங்கி சைடுல வந்தீங்கன்னா புர்ஜ் கலீபாவையுடன் துபாய் பவுண்டைனையும் பக்கத்தில் பக்கம் பார்க்கலாம். புர்ஜ் கலீபா, துபாய் பவுன்டைன் முன்னாடி நின்று நீங்க ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்கங்க. ரெண்டு பேருக்கும் சேத்து பத்தாயிரம் மிச்சமாகும்!”

“அப்படியேச் செய்றேன்!”

“சுமி சொன்ன மாதிரி நாளைக்கு காலை அக்பர் டிராவல்ஸ் போங்க. துபாய் விசா அப்ளை பண்ணுங்க. நான் டிக்கெட் புக் பண்றதுக்கு முன்னாடி ஸ்கிரீன்ஷாட்ஸ் அனுப்புறேன். அப்பா ஓகே சொன்ன பிறகு டிக்கெட் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன்!”

நானும் ஆர்னிகாவும் அக்பர் டிராவல்ஸ் பிரவேசித்தோம். தென்காசி கருணைராஜா காத்தமன் நபி மகன் ஷேக்கின் சாயலில் ஒருவர் எங்களை வரவேற்றார். சுற்றுலாவுக்கான முதல் கதவு திறந்தது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p7.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License