இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

14.திருமணப் பொருத்தம்


கவிக்கோ அப்துல் ரகுமான் நகர் பள்ளிவாசல்.

பள்ளிவாசலின் இடது பக்கம் ‘வெற்றிகரமான திருமணத்திற்கு ஆயத்தப்படுத்தும் இஸ்லாமிய ஆலோசனை மையம்’ என்கிற தனிக்கட்டடம் இருந்தது. தமிழுக்குக் கீழே ‘ப்ரீவெட்டிங் இஸ்லாமிக் கவுன்சலிங் சென்டர்’ என்கிற ஆங்கில நியான் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

கட்டடத்துக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் குலாம்நபி ஆசாத் நின்றிருந்தான். வயது 24, 170செமீ உயரம் சுருள் தலைகேசம். உடல் மொழியில் இளமை துள்ளாட்டம் போட்டது. நீலநிற ஜீன்ஸும் வெள்ளைநிற டிசர்ட்டும் அணிந்திருந்தான். அவனுடன் இரு உறவினர்கள் வந்திருந்தனர்.

தனது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார் முத்தவல்லி பாப்பாஜான் ஷாகுல்ஹமீது. இரும்புப் பெண்மணியான அவருக்கு வயது 65. 176செமீ உயரம் திராவிடநிறம் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை சமூகவியல், முதுகலைப் பட்டயப்படிப்பு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, முதுகலைபட்டய படிப்பு குற்றவியல் மற்றும் தடயஅறிவியல் விஞ்ஞானம், இளம்முனைவர் சமூகவியல் படித்து முடித்தவர். கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இந்தப் பத்து வருடங்களில்தான் ஏழெட்டுப் பட்டங்களைப் படித்துப் பெற்றார் பாப்பாஜான்.

கடந்த பத்து வருடங்களில் பாப்பாஜான் இருநூற்றுக்கும் மேற்பட்ட மணமகன்கள், மணமகள்களுக்குத் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை வழங்கி, அந்தத் திருமணங்களை உறுதிபடுத்தி இருக்கிறார்.


முத்தவல்லி அறை.

அறையில் இரு சிசிடிவி கேமிராக்கள். ஒன்று முத்தவல்லியின் இருக்கையிலிருந்து எதிராளி இருக்கை பார்வைக்கு. இன்னொன்று எதிராளி இருக்கை பார்வையிலிருந்து முத்தவல்லியின் இருக்கை பார்வைக்கு.

அறைக்குள் பிரவேசித்தான் குலாம் நபி ஆசாத். “அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி!”

“வஅலைக்கும் ஸலாம் ஆசாத். எதிரில் அமர்!”

அமர்ந்தான்.

“உனக்கும் ஜனாப் இஸ்மாயில் சேட் மகள் ருக்ஷானாபேகத்துக்கும் திருமணம் நடக்கப் போவதாகக் கேள்விபட்டேன். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் இல்லையா?”

“ஆமாம்!”

“இந்தத் திருமணம் திருமணத் தகவல் மையம் மூலம் நடக்கிறதா, உள்ளூர் தரகர் மூலம் நடக்கிறதா, உறவினர் மூலம் நடக்கிறதா ஆசாத்?”

“உள்ளூர் தரகர் மூலம்!”

“நீ என்ன படித்திருக்கிறாய்?”

“முதுகலை மின்னணுப் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறேன்!”

“என்னப் பணி செய்கிறாய்?”

‘ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக!”

“என்ன சம்பளம்?”

“மாதம் முப்பதாயிரம்!”

“உன் வருமானத் தகவலை மணமகள் வீட்டாரிடம் சொன்னாயா?’

“இன்னும் சொல்லவில்லை!”

“சொல். தரகர் உனக்கு சம்பளம் 75000 எனக் கூறியிருக்கலாம்!”

“வாய்ப்புண்டு”

“மணப்பெண் என்ன படித்திருக்கிறார்!”

“பிஎஸ்ஸி செவிலியர் படிப்பு”

“தற்சமயம் மணப்பெண் வேலை பார்க்கிறாரா?”

“இல்லை!”


“நன்கு கவனியுங்கள். திருமணத்திற்குப் பின் வேலைபார்க்கப் போவதில்லை என மணமகள் முடிவெடுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், வேலைக்குப் போயேத் தீருவேன் என மணப்பெண் முடிவெடுத்திருந்தால் மழுப்பலாக பதில் சொல்லாமல் தெளிவாக முடிவெடுங்கள். பொய் வாக்குறுதி ஆபத்தானது. என்னைக் கேட்டால் பெண்கள் மார்க்கத்தை மீறாமல் தாராளமாக வேலைக்குப் போய் வரலாம். ஹிஜாப் அணிந்து கொண்டு லாரியே ஓட்டலாம்!”

“திருமணத்திற்கு பின் மணப்பெண் வேலைக்குப் போகக்கூடாது என என் பெற்றோர் கூறுகின்றனர். வேலைக்குப் போவேன் என மணமகளும், வேலைக்கு அனுப்புவோம் என பெண்ணின் பெற்றோரும் கூறுகின்றனர்!”

“வாழப்போவது நீதானே? மனைவியை வேலைக்கு அனுப்பக்கூடாது என்றால், படிக்காத பெண்ணை மனைவியாக வரித்துக்கொள். முட்டல் மோதல்களுடன் திருமணத்திற்குள் பிரவேசிக்காதே. திருமணம் என்பது ஒரு இணை ஆண் - பெண்ணின் சங்கமம். இந்துக்கள் திருமணத்தை ஒரு தர்மமாகக் கருதுகின்றனர். முஸ்லிம்கள் திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியத் திருமணங்கள் பாலியல் உறவுகளைச் சட்டபூர்வமாக்குவதற்கும், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கும் போடப்படும் ஒப்பந்தங்கள் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்!”

தலையாட்டினான் குலாம் நபி ஆசாத்.

“மணமகளை நேரில் பார்த்தாயா?”

“ஒருமுறை நேரில் பார்த்தேன்!”

“பேசினாயா?”

“என்னைப் பிடிக்கிறதா என கேட்டேன், மௌனமாகத் தலையசைத்தாள்!”

“உனக்குப் பெண் தோழிகள் உண்டா?”

“படித்த இடத்திலும் பணியிடத்திலும் உண்டு!”

“யாரையும் காதலிக்கிறாயா?”

“இல்லை!”

“மனைவி சினிமா நடிகை மாதிரி இருக்க வேண்டும் எனக் கற்பனை செய்திருக்கிறாயா?”

“இல்லை!”

“இஸ்லாமியத் திருமணங்களில் மூன்று நிலைகள் உள்ளன ஆசாத். ஒன்று சட்ட நிலை. ஒப்பந்தத்தைப் போலவே ஒரு முன்மொழிவு. இருதரப்பு சம்மதம் முக்கியம். மோசடி, வற்புறுத்தல், பலாத்காரம், செல்வாக்கு மூலம் சம்மதம் பெறக்கூடாது. ஒரு இளம் பெண்ணைப் பாதுகாவலர் திருமணம் செய்து கொண்டால், முதிர்ந்த வயதில் திருமணத்தை நிராகரிக்க இளம் வயதுப் பெண்ணுக்கு உரிமை உண்டு. மார்க்கத்துக்கு உட்பட்டு மணமகன் - மணமகள் விருப்பத்திற்கேற்ப நிக்காஹ் நாமா எழுதப்படலாம்”

“உண்மைதான் முத்தவல்லி!”

“இரண்டு சமூக நிலைகள். இஸ்லாமியத் திருமணங்கள் இல்லற வாழ்வைத் தொடங்க, மனைவி, குழந்தைகளைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள மனித இனத்தை நிலைநிறுத்த கற்பு, இருவரிடத்திலும் அன்பு, பாசம், அமைதி பெற நடத்தப்படுகின்றன!”

“ஆம்!”


“மூன்றாவதாக சமய நிலை. இஸ்லாமியத் திருமணங்கள் சமய ரீதியாக ‘இபாதத்’ அல்லது ஒருபக்தி செயலாகக் கருதப்படும். மனைவி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஏற்கும் தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருமணம் அவசியம் என்றார் நபிகள் நாயகம். சமூகத்தை அசுத்தம் மற்றும் ஒழுக்கக் கேட்டிலிருந்து நிக்காஹ் காப்பாற்றுகிறது.

“நான் நன்கு அறிவேன்!”

“இஸ்லாமியத் திருமணங்களில் ஒரு தரப்பினர், ஒரு திட்டத்தை முன் வைக்க, மற்றொரு தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். சுன்னி முஸ்லிம்கள் திருமணத்தில் இரு ஆண் சாட்சிகள் தேவை. ஆண் சாட்சிகள் இல்லை என்றால் இருபெண் சாட்சிகள். ஷியா முஸ்லிம்களுக்கு சாட்சி தேவையில்லை . வளர்ப்புத்தாய், வளர்ப்புச் சகோதரி, தாய் அல்லது பாட்டி, மகள் அல்லது பேத்தி, மருமகள், மனைவியின் தாய், மகள், தந்தையின் மனைவி, மகனின் மனைவியை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்யக் கூடாது. நான்கில் ஒரு மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் ஐந்தாவது மனைவி கூடாது”

“மணப்பெண் என் உறவுக்காரப் பெண் அல்ல...”

“இஸ்லாமியத் திருமணங்கள் தொடர்பாக மூன்று சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. ஒன்று, முஸ்லிம் திருமணத்தைக் கலைக்கும் சட்டம் 1939. இரண்டு, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1986, மூன்று, முஸ்லிம் பெண் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019. முத்தலாக் சொல்வதை இஸ்லாமும் ஏற்கவில்லை. இந்தியத் தண்டனை சட்டமும் ஏற்கவில்லை. முத்தலாக் சொல்லும் ஆணுக்கு அபராதமும் மூன்று வருடத் தண்டனையும் உண்டு!”

“தலாக் என்கிற வார்த்தையை செலக்டிவ் அம்னேஷியாவில் மறந்து விடுகிறேன்!”

“நாலு மாதம் உடலுறவிலிருந்து விலகி நிற்பேன் என சத்தியம் செய்யாதே. மனைவியைத் தாய் மற்றும் மற்ற பெண்களுடன் ஒப்பிடாதே. விவாகரத்து செய்யும் உரிமையை மனைவிக்கு விட்டுக்கொடு. ஆணாதிக்கவாதியாக மனைவியை அடிமை போல் நடத்தாதே. உறவு முறையில் எதிர்பார்ப்புகளைக் குறை. மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தால், அவளின் சில நல்ல குணங்களுக்காக காதலி. உதவிப்பேராசிரியர் பதவியை நீயும், செவிலியர் பதவியை உன் மனைவியும் கழற்றி வைத்துவிட்டு, கருத்து வேறுபாடு இல்லாமல் நல்ல கணவன் மனைவியாக வீட்டுக்குள் வாழுங்கள். இப்போதைய முஸ்லிம் ஆண்கள் ஒரு திருமணத்திற்கு மேல் செய்வதில்லை. இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. பெண் குழந்தைகளைப் படிக்க வை. இல்லற வாழ்வில் திருப்திப்படு. திருமணப்பந்தம் மீறிய உறவுகளில் சிக்கி விடாதே, குடிப்பழக்கம் புகைபிடிக்கும் பழக்கம் போதை பழக்கத்திலிருந்து ஒதுங்கி நில்...”’

“அப்படியேச் செய்கிறேன் முத்தவல்லி!”

“இறைவனின் அருளால் உன் மற்றும் ருக்ஷானா பேகத்தின் திருமண வாழ்க்கை மாபெரும் வெற்றியடையட்டும்!”


மதியம் இரண்டு மணி. மணமகள் ருக்ஷானாபேகம் வந்தாள். அழகிய முகமன்கள் பரிமாற்றம். மணமகனுடன் முத்தவல்லி நடத்திய நிகழ்பட உரையாடல் மணமகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.

ருக்ஷானாவிடம் நூறுகேள்விகள் கேட்டு, நூறு திருப்தியான பதில்கள் பெற்றார் முத்தவல்லி.

“ஆயிஷா (ரலி) அவர்களும், நபிகள் நாயகமும் வாழ்ந்த வாழ்க்கை போலொரு வாழ்க்கையை நீங்களிருவரும் வாழ்வீராக! ஆமீன் ஆமீன் ரப்பில் ஆலமீன்!”

முத்தவல்லி கண்கலங்கினார்.

‘இது மாதிரியான நிகழ்பட உரையாடல் வசதி என் மகள் காலத்தில் இருந்திருந்தால், என் மகள் ஒரு துன்பமயமான இல்லற வாழ்க்கையில் உழன்றிருக்க மாட்டாளே. இனி எந்த இஸ்லாமியத் திருமணமும் கலந்தாலோசனைகளுக்குப் பிறகு நடைபெறட்டும்”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p14.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License