இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

15.ஸலவாத்


நூஜ்ரே மதீனா தனது பனிரெண்டு வயது மகள் பாத்திமா சப்ரினுடன் ஜுஆம்மா தொழுது முடித்தாள்.

துஆவின் முடிவில் ‘ஸல்லலாஹு வஅல முஹம்மது ஸல்லலாஹு அலைவ ஸல்லம்’ என ஸலவாத் ஓதினாள் நூரே மதினா.

உடன் சேர்ந்து ஸலவாத் ஓதினாள் சப்ரின்.

இருவரும் அவரவரின் தொழுகைக் கம்பளத்தை மடித்து வைத்தனர்.

பாத்திமா சப்ரின் அம்மாவின் கைகளைப் பணிவாய் பற்றிக் கொண்டாள்.

“நான் சில கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் அம்மா!”

“கேளு சப்ரின்”

“ஸலவாத்து என்றால் என்ன?”

“ஸலவாத்து என்றால் நபிகள் நாயகத்தின் மீதான பிரார்த்தனையும் வாழ்த்தும் எனப் பொருள்படும். ஸலவாத் என்பது ஸலாத்தின் பன்மை வடிவமாகும். அரபு மொழி வல்லுநர்கள் ஸலவாத் என்கிற வார்த்தையின் அர்த்தம் அந்த வார்த்தையை யார் பயன்படுத்துகின்றனர்? யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது? என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று கணிக்கின்றனர்!”

“அம்மா! நபிகள் நாயகம் இறைச்செய்தியை மக்களிடம் சேர்த்த தபால்காரர். அவருக்கு ஸலவாத் கூறவேண்டிய அவசியமில்லை என நம் மதத்தில் ஒரு பிரிவினர் கூறுகின்றனரே… அது சரியா?”

“நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் அரபு மக்களிடம் ஒரு அழகிய முன் மாதிரி மனிதராகத் திகழ்ந்தார். நபிகள் நாயகம் மூலமாக உலக மக்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் தனக்குத் தந்த அந்தப் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றினார் நபிகள் நாயகம். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும் குறைக்கவும் இல்லாமல் அப்படியே நம்மிடம் ஒப்டைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் உன்னத வழியை நமக்குக் காட்டினார். மக்கள் நேர்வழி அடைய எண்ணற்றத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார் நபிகள் நாயகம். நமது பெற்றோர் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட நபிகள் நாயகத்தின் மீது நாம் அன்பு வைப்பது நம் கடமை. அதன் ஒரு பகுதியாகவே நபிகள் நாயகத்தின் மீது வாழ்த்தும் பிரார்த்தனையும் ஓதி மகிழ்கிறோம்!”


“நபிகள் நாயகம் நம்மை விட படித்தரங்கள் உயர்ந்தவர். உயர்ந்தவருக்குத் தாழ்ந்தவர் வாழ்த்தும் பிரார்த்தனையும் சொல்லலாமா?”

“உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம், உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். இருவகை துஆகளையும் இஸ்லாம் வரவேற்கிறது!”

“நம்முடைய ஸலவாத்தால் நபிகள் நாயகத்துக்கு என்ன கிடைக்கும்?”

“சொர்க்கத்தில் வஸீலா என்கிற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கிறான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகிறேன். உங்கள் வாழ்த்தும் பிரார்த்தனையும் எனக்கு வஸீலா பதவி கிடைக்க உதவட்டும்’ என்கிறார் நபிகள் நாயகம்!”

“நான் இதுவரை இதனைக் கேள்விப்பட்டதில்லை!”

“நாம் நமக்காகச் செய்யும் பிரார்த்தனையை விட, நாம் பிறருக்காக செய்யும் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும். ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது ‘உமது துஆவில் நம்மை மறந்து விடாதீர்கள்!’ என நபிகள் நாயகம் அவரிடம் கேட்டிருக்கிறார்!”

“ஸலவாத் என்பது நபிகள் நாயகத்தை இறைவனுக்குச் சமமாக வைத்துப் பார்ப்பதா?”

“தெய்வீக ஆசிர்வாதமே ஸலவாத். நபிகள் நாயகம் இறைத்தூதர் ஸ்தானத்தை விட ஒரு துளி உயர்ந்த ஸ்தானத்தையும் விரும்பவில்லை. தன்னை ஓவியமாக வரைவதையும் தடை செய்தார். ஈஸா நபிகளுக்கும் நபிகள் நாயகத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். இறைச்செய்தி திருக்குர்ஆன். நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஹதீஸ். நடமாடும் திருக்குர்ஆனாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது!”

“ஸலவாத்தை பற்றி ஹதீஸ் என்ன கூறுகிறது?”

“நாம் நபிகள் நாயகத்தின் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால், இறைவன் நம் மீது பத்துமுறை ஸலவாத் சொல்கிறான் (அதாவது பத்து நன்மைகள் அருள்கிறான்)

“வெள்ளிதோறும் நபிகள் நாயகத்தின் மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள் அது மலக்குகள் மூலம் நபிகள் நாயகத்திற்கு அறிவிக்கப்படுகிறது”

“பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை!”

“நபிகள் நாயகம் அவரது 63வது வயதில் இறந்து விட்டார். இறந்த பின் நாம் கூறும் ஸலவாத்கள் அவரை எப்படிப் போய்ச் சேரும் அம்மா?”

“நபிமார்களின் உடல்கள் அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கி விட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது. அதனால் நபிகள் நாயகம் மூமின்களின் ஸலவாத்களை தொடர்ந்து காதுறுவார்!”

“நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத் கூறுவது நபிகள் நாயகம் காலத்திலேயே இருந்ததா? தன் மீது ஸலவாத் கூறபடுவது பற்றி நபிகள் நாயகத்தின் கருத்து என்ன?”

“ஒரு சம்பவம் கூறுகிறேன் கேள். உபை இப்னு கஃப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் ஒரு கேள்வி கேட்டார். ‘இறைத்தூதரே! ஒரு நாளில் கால்பகுதி ஸலவாத் ஓதுதல் போதுமானதா?’


அதற்கு நபிகள் நாயகம் ‘உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிகப்படுத்துதல் உமக்குச் சிறந்தது’ என்றார். நபி தோழர் மீண்டும் ‘அப்படி என்றால் ஒருநாளில் அரைபகுதி ஸலவாத் ஓதுதல் போதுமானதா?’ என்றார்.

அதற்கு நபிகள் நாயகம் ‘உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிகப்படுத்துதல் உமக்குச் சிறந்தது’ எனப் பகர்ந்தார். மீண்டும் நபிதோழர் ‘ஒரு நாளில் முக்கால் பகுதி ஸலவாத் ஓதவா?’ என்றார். ‘உங்கள் விருப்பம் ஆனாலும் அதிகப்படுத்துதல் நமக்கு சிறந்தது’ என்றார் நபிகள் நாயகம். நான்காவது முறையாக நபிதோழர் ‘ஒருநாள் முழுக்க ஸலவாத் ஓதவா’ என்றார். அதற்கு நபிகள் நாயகம் ‘உமது கவலைகள் அகன்று பாவங்கள் மன்னிக்கப்படும்’ என முத்தாய்ப்பாக கூறி நபிதோழரின் சந்தேகத்தை போக்கினார்கள்!”

“ஸலவாத்கள் மொத்தம் எத்தனை இருக்கின்றன அம்மா!”

“நாற்பது வகை ஸலவாத்கள் உள்ளன சப்ரின்!”

“எந்த ஸலவாத் சிறப்பானது?”

“தொழுகையின் கடைசி அமர்வில் ஓதுகின்ற தரூதே இப்ராகீம் ஸலவாத் சிறப்பானது!”

“நாற்பதுவகை ஸலவாத்களின் பட்டியல் கூறு அம்மா”

“சில முக்கியமான ஸலவாத்களை கூறுகிறேன். நூரனியா ஸலவாத், முனஜ்ஜியா ஸலவாத், சையதினா அலி ஸலவாத், ஸாயித் ஸலவாத், ஜவ்ஹரத் அல் கமால் ஸலவாத், ஸலாத்துன் நாரியா, ஸலவாத் இமாம் ஸபி, அல் அஸகந்தாரி ஸலவாத், தாருத் ஸிபா, உலுல் அஸ்ம், ஸலாத் ஐ திபியா இன்னும் பல ஸலவாத்கள் உள்ளன. நபிகள் நாயகத்தை கனவில் காண ஒரு ஸலவாத் இருக்கிறது. அதனை 71முறை ஓதினால் நபிகள் நாயகம் கனவில் வருவார். நோய் குணமாக ஒரு ஸலவாத் இருக்கிறது!”

“தரூதே இப்ராகீம் ஸலவாத் கூறுங்கள் அம்மா!”

“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லாய்த்த அலா இப்ராஹிம் வஅலா ஆல இப்ராஹிம் இன்னக்க ஹமீதும் மஜித். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆல முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹிம் வஅலா ஆலி இப்ராஹிம் இன்னக்க ஹமீதும் மஜித்!’

“இரண்டு ஸலவாத்களை தமிழில் மொழிபெயர்த்து கூறுங்கள் அம்மா!”

“ஓ இறைவனே! நபிகள் மீதான பிரார்த்தனைகளை வாழ்த்துகளை அங்கீகரிப்பாயாக. உன் வேலைக்காரன் உன் இறைத்தூதன் உன் இறைச் செய்தியாளன் அமைதியையும் வாழ்த்தையும் எல்லா நேரங்களிலும் எல்லா கணங்களிலும் பெறுவாராக!”

“ஓ அல்லாஹ் எங்கள் முகமது நபியை ஆசிர்வதியும். அவரே இதற்குமுன் மூடியிருந்த முத்திரையிட்ட ஆன்மிகப் புதிர்களை விடுவித்தவர். அவரே உண்மையால் உண்மையை ஜெபிக்க வைத்தவர். எங்களுடைய இறைப் பாதைக்கு அவரே வழிகாட்டி அவரது குடும்பத்தாரை இரட்சி. அதுவே நபிகள் நாயகத்தின் உன்னதத்திற்குப் பெருமை சேர்க்கும்!”

“என்னுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தீர்கள் நன்றி அம்மா!”

“விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்தது இஸ்லாம் இங்கு ஏன்? எதற்கு? எப்படி? - என கேள்விகள் கேட்டுத் தகுந்த பதில்கள் பெறலாம்!”

“உண்மைதான் அம்மா!”

“கேள்விகள் கேட்ககேட்கப் பதில்கள் பெறப்பெற உன் அறிவு விசாலமாகும். மதச்சடங்குகளை அர்த்தப்பூர்வமாய் உணர்ந்து செய்வது சாலச்சிறந்தது!”

“பிரில்லியன்ட்!”

“ஸல்லாஹு வஅலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைவ ஸல்லம்…” என ஓதத் தொடங்கினாள் அம்மா.

தானும் ஓதத் தொடங்கினாள் பாத்திமா சப்ரின்.


ஸலவாத் ஓதும் கோரஸ் பூமிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. டெஸிபல் சிறிதும் தேயாமல்.

நொடிக்கு நொடி ஸலவாத்தின் டெஸிபல் கூடிக்கொண்டேதான் போகிறது!

சொர்க்கத்தின் வஸீலா பதவி நபிகள் நாயகத்துக்குத்தான் என அல்லாஹ் சொல்லாமல் சொல்லிக் கருணை சிரிப்பு பூக்கிறான்!

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p15.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License