இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

20.பைத்துல் மால்


ஆயிஷா நகர். இரண்டாவது குறுக்கு வீதி. இலக்கம் 61.

ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி ஸ்டாண்டிட்டார். ஜியாவுதீன் முகமது. மூட்டிய நண்டு மார்க் லுங்கி கட்டி இடுப்பில் சுருட்டி விட்டிருந்தார். கைலியின் கீழ்ப்பகுதி கணுக்காலுக்கு மேலே. சந்தனநிற ஜிப்பா. தலையில் வெள்ளைநிற துணித்தொப்பி. கண்களில் சுருமா. மீசை இல்லாத மருதாணி பூசிய தாடி.

“யா அல்லாஹ்I” என ஆலாபித்தார்.

வாசலின் அழைப்பு மணியை அமுக்கினார். கதவு திறந்து கொண்டது. “அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளே வரலாமா?” மூன்று தடவை கேட்டார்.

“வஅலைக்கும் ஸலாம்… உள்ள வாங்கI” ஒரு குரல் வரவேற்றது.

300 சதுர அடியில் அந்த வீடு அமைந்திருந்தது. சிறு தடுக்கு மறைப்பில் சமையலறை வரவேற்பறை படுக்கையறை எல்லாம் ஒரே அறைக்குள். உள்சுவர்கள் புகையடித்து கறுத்திருந்தன.

“நீங்கதான் யூசுப் சித்தீக்கா?”

“ஆமாம்I”

கரண்டியுடன் நின்றிருந்த பெண்ணை பார்த்து “இவங்க உங்க மனைவியா?”

“ஆமாம்… உக்காருங்க..” ஒரு உடைந்த பிளாஸ்டிக் சேரை போட்டார் யூசுப் சித்தீக். ஜியாவுதீன் முகமது அமர்ந்தார்.


“உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகுது?”

“இருபது வருஷம்”

“சொந்த ஊர்?”

“தேவகோட்டை… கோயம்புத்தூர் வந்து பதினைஞ்சு வருஷமாகுது”

“உங்களுக்கு எத்னி குழந்தைகள்?”

“ஒரே பையன்தான்… வயசு பதினெட்டு ஆகுது. பெயர் சையத் அமீர். ப்ளஸ்டூ முடிச்சிருக்கான்”

“என்ன மார்க்?”

“எண்பத்தியஞ்சு சதவீதம் எடுத்திருக்கான்”

“இப்ப அவன் எங்கே?”

“என் மனைவி சமோசா தயாரிப்பா… தினம் ஆயிரம் சமோசா ரெடி பண்ணி மொத்த வியாபாரிக்கு கொடுத்திருவோம்.. அரநூறு போ கிடைக்கும்.. சரக்கை டெலிவரி பண்ண மகன் சைக்கிள்ல போயிருக்கான். நான் தள்ளுவண்டில வாழைப்பழம் விக்றேன்”

“இது சொந்தவீடா வாடகை வீடா?”

“வாடகைவீடுதான். வாடகை மூவாயிரம் ரூபா…”

“எந்த பள்ளிக்கு தொழப் போவீங்க?”

“ஆயிஷா நகர் அஞ்சாவது குறுக்கு வீதில இருக்ற பள்ளிக்குதான் தொழப் போவேன்”

“பள்ளிக்கு மாதாமாதம் சந்தா தொகை கட்றீங்களா?”

“மாசம் நூறு ரூபா கட்ரோம்…’

“உங்க மகன் தொழுவானா?’

“தொழுவான் பாய்I”

“உங்களுக்குக் குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம் உண்டா?”

“அய்யய்யோ.. அதெல்லாம் எனக்கு அறவே ஆகாது”

“சரி மறைக்காம சொல்லுங்க... உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு?”

“வொய்ப்போட பத்து பவுன் நகையை வித்துத்தான் சமோசா வியாபாரம் பண்ரோம். எங்களுக்கு வேற கடன் கிடையாது. சிக்கனமான வாழ்க்கை எங்க வாழ்க்கை”

“நீங்க என்ன படிச்சீங்க?”

“எட்டாவது”

“உங்க மனைவி?”

“ஆறாவது படிச்சிருக்கா…”

“ப்ளஸ்டூவோட உங்க பையன் படிப்பை நிறுத்திட்டு சமோசா வியாபாரத்ல முழுசா எறக்க வேண்டியதுதானே?”

“எண்ணெய் பிசுக்கும் கரும்புகையும் எங்களோடு போகட்டும். எங்க பையனைப் படிக்க வைப்போம். கல்வியும் பதவியும் அதிகாரமும்தான் முஸ்லிம்களின் இறக்கை”


“என்ன படிக்க வைக்கப் போறீங்க?”

“இளங்கலை மருத்துவப் பரிசோதனை கூட தொழில்நுட்பம் படிக்க ஆசைப்படுரான். எங்க மகன். மூன்று வருட கோர்ஸ். வருஷம் ஒரு லட்சம் பீஸ். படிச்சு முடிச்சவுடனே வேலை கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு லட்சத்திலிருந்து நாலு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்”

“நுழைவுத்தேர்வு எழுதனுமில்ல?”

“நெஸ்ட் அல்லது செட் அல்லது சியூஇடி எழுதனும்.. எழுதி பாஸ் பண்ணிட்டான்… அட்மிஷன் கார்டும் வந்திருச்சு. பணம் கட்டச் சொல்லி... இந்த மாசம் 31ஆம் தேதி கடைசித்தேதி. அதுக்குள்ள பணம் கட்டலேன்னா அட்மிஷன் கேன்ஸலாகி விடும்”

“யார்கிட்டயும் பணம் கேட்டிருக்கீங்களா?”

“சொந்தம் பந்தம் நட்புவட்டத்திலக் கேட்டுப் பார்த்தோம். பெரிய தொகைன்ன உடனே ஓடி ஒளியுராங்க.” யூசுப் சித்தீக் அழுதார்.

“சமோசா தயாரிச்சு டெலிவரி பண்ற முதலாளிகிட்ட கேட்டு பாத்தீங்களா?”

“ஆயிரம் ரெண்டாயிரம் தரலாம். அதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாதுன்றார்’

“பைத்துல் மால்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“இல்லை”

“முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக ஒரு மஹல்லாவில் உருவாக்கப்படும் நிதி நிறுவனமே பைத்துல் மால் ஆகும். இதனைப் பணத்துடைய வீடு அல்லது பொதுக்கருவூலம் என்றும் சொல்வர்.

பைத்துல்மால் என்கிற சொற்பிரயோகம் முதலாம் கலீபா அபூபக்கர் ரலி காலத்திலேயே வழக்கத்துக்கு வந்துவிட்டது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ஸனஹ் என்ற இடத்தில் பைத்துல் மால் நிறுவப்பட்டு மதீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பைத்துல் மாலின் அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம்தான். இஸ்லாமிய மக்களை வட்டி என்கிற சைத்தானிடமிருந்து விடுவிக்கிறது. பைத்துல் மால். மாணவர்களுக்கு கல்விநிதி உதவி, நோயாளிகளுக்கு மருத்துவச் செலவு, அனாதைக் குழந்தை பராமரிப்பு, சிறைவாசி குடும்பங்களுக்கு நிதிஉதவி, முதிர்கன்னி பெண்களுக்கு திருமண உதவி செய்கிறது”

“நம்ம மஹல்லால பைத்துல் மால் இருக்கா?”

“என்ன கேள்வி கேக்றீங்க பாய்.. தமிழ்நாட்டிலுள்ள அறுபது சதவீதம் பள்ளிவாசல்களில் பைத்துல்மால் நிறுவப்பட்டுள்ளது”

“பைத்துல் மாலுக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது?”

“பொதுவாக பைத்துல் மால்களுக்கு ஜக்காத், போரில் தோற்றவரின் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு, புதையல் கிடைத்தால் அதில் ஐந்தில் ஒரு பங்கு, அன்பளிப்பு, நன்கொடைகள், வஸியத் செய்யப்பட்ட சொத்துகள், வரி, உரிமையாளர் இல்லாத பொருட்கள், வாரிசு இல்லாதோரின் சொத்துகள், அபராதம் வழியாக வருமானம் ஒரு காலத்தில் வந்தது. இப்பொழுது மேற்சொன்னவற்றில் பாதி வழிகளில் வருகிறது...”

“ஓஹோ”

“நம் ஜமாஅத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். நாம் பைத்துல் மால் நிறுவி எட்டு வருடங்கள் ஆகின்றன. பைத்துல் மாலுக்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரு நிதி ஆலோசகர்கள் உள்ளனர். நம் பைத்துல் மாலின் வங்கி இருப்பு ஐம்பது லட்சம். வருடத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை தகுதியான ஏழைகளுக்கு பைத்துல்மால் பணஉதவி செய்கிறது. சிலருக்குக் கடன்கள் கொடுக்கிறார்கள். இரண்டு சாட்சிகளுடன் கூடிய கடன் பத்திரம்… ஒரு லட்சம் கடன் வாங்கினால் மாதம் ஐயாயிரம் வீதம் 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும்…”

“நல்ல சிஸ்டமாயிருக்கே…”

“பைத்துல் மால்கள் நடத்துவதிலும் சில இடங்களில் தில்லுமுல்லுகள் நடக்கின்றன. பைத்துல் மால்கள் நூறு சதவீதம் வெற்றி பெற்றால் இஸ்லாமிய வங்கிகள் வெகுசீக்கிரம் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும். நம் பைத்துல் மாலில் ஒரு லட்சம் அழகிய கடன் வாங்கி மாதம் ஐயாயிரம் வீதம் இருபது மாதங்கள் திருப்பிச் செலுத்துங்களேன்..”

“மாதம் இரண்டாயிரம் கட்டலாம் அய்யாயிரம் கட்ட முடியாதுI”

மகன் சையத் அமீர். வீட்டுக்குள் பிரவேசித்தான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“சரி உங்களுக்கு வருடாவருடம். ஒரு லட்ச ரூபாயை ஜக்காத் தொகையிலிருந்து தர வேண்டியதுதான்”

“எங்களுக்கு ஜக்காத் கொடுப்பதைப் போட்டோ எடுத்து பத்திரிகைல போடுவீங்களா? இன்னார் பையனுக்குக் கல்வி கட்டணம் செலுத்தி உள்ளோம்னு பள்ளிவாசல் ஒலிபெருக்கில அறிவிப்பீங்களா?”

“மாட்டோம்… பைத்துல்மாலிடம் நீங்கள் பணம் பெறுவது பரமரகசியமாய்ப் பாதுகாக்கப்படும்”


“நீங்கள் சொன்னால் பைத்துல்மால் கேட்டு என் மகனுக்குக் கல்விக் கட்டணம் தருவார்களா?”

“கட்டாயம் தருவார்கள்”

“உங்களுக்குப் பத்து சதவீத கமிஷன் தரவேண்டி இருக்குமோ?”

ஜியாவுதீன் முகமது சிரித்தார். “அல்லாஹ் எனக்கு தேவையானதைக் கொடுத்திருக்கிறான் பைத்துல் மால் பணத்துக்கு ஆசைப்படமாட்டேன்”

“பைத்துல் மாலில் நீங்கள் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள் பாய்?”

“ஸ்பை... உளவாளி… பைத்துல் மால் நிதிஉதவிக்கு தகுதியானவர்களை உளவு பார்த்து பொருத்தமான ஏழைகளுக்கு சிபாரிசு செய்வதே என் வேலை. சையத் அமீர். நீ படித்து முடித்து வேலைக்கு போன பின் பத்து ஏழை முஸ்லிம்களைக் கை தூக்கி விடு… செய்வாயா?”

“இறைவனின் மீது ஆணையாகச் செய்வேன் பாய்” என்றான் சையத் அமீர்.

மேடுகளும் பள்ளங்களும் இல்லாத சரிசமர் சமவெளியாகட்டும்... முஸ்லிம் சமுதாயம்...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p20.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License